2010–2019
வாஞ்சை
ஏப்ரல் 2011


வாஞ்சை

“நமது நித்திய இலக்கை அடைய, ஒரு நித்தியமானவராக ஆக தேவையான குணங்களுக்காக நாம் வாஞ்சித்து பிரயாசப்படுவோம்.

வாஞ்சையின்முக்கியத்துவத்தைப் பற்றி பேச நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நாம் உண்மையில் என்ன வாஞ்சிக்கிறோம், நமது மிக முக்கியமான ஆசைகளை எப்படி மதிப்பிடுகிறோம் என்பதைத் தீர்மானிக்க நாம் ஒவ்வொருவரும் நம் இதயங்களைத் தேடுவோம் என்று நம்புகிறேன்.

வாஞ்சைகள் நம் முன்னுரிமைகள் மீது அதிகாரம் செலுத்துகின்றன, முன்னுரிமைகள் நம் தேர்வுகளை வடிவமைக்கின்றன, மற்றும் தேர்வுகள் நம் செயல்களைத் தீர்மானிக்கின்றன. அவற்றின்படி நாம் செயல்படும் வாஞ்சைகள் தான் நமது மாற்றத்தையும், நமது சாதனையையும், நாம் ஆவதையும் தீர்மானிக்கிறது.

முதலில் நான் சில பொதுவான வாஞ்சைகளைப் பற்றி பேசுகிறேன். மனிதர்களாகிய நமக்கு சில அடிப்படை சரீர பிரகார தேவைகள் உள்ளன. இந்த தேவைகளை திருப்திசெய்யும் வாஞ்சைகள் நமது தேர்வுகளை நிர்ப்பந்திக்கின்றன, மற்றும் நம் செயல்களைத் தீர்மானிக்கின்றன. நாம் சில சமயங்களில் மற்ற வாஞ்சைகளை முக்கியமானதாகக் கருதி எப்படி இந்த வாஞ்சைகளை மீறுகிறோம் என்பதை மூன்று உதாரணங்கள் செயலில் காட்டும்.

முதலாவது, உணவு. நமக்கு உணவுக்கான அடிப்படை தேவை உள்ளது, ஆனால் சிறிது நேரத்திற்கு அந்த வாஞ்சை உபவாசம் இருக்கும் வலுவான வாஞ்சையால் மீறப்படலாம்.

இரண்டாவது, உறைவிடம். ஒரு 12 வயது சிறுவனாக நான் காடுகளில் ஒரு இரவைக் கழிக்க ஒரு சாரணர் தேவையை நிறைவேற்றுவதற்கான எனது அதிக வாஞ்சையின் காரணமாக உறைவிடம் குறித்த வாஞ்சையை எதிர்த்தேன். தங்குமிடம் அமைப்பதற்கும், நாம் காணக்கூடிய இயற்கை பொருட்களிலிருந்து பழமையான படுக்கையை உருவாக்குவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்த, வசதியான கூடாரங்களை விட்டு வெளியேறிய பல சிறுவர்களில் நானும் ஒருவன்.

மூன்றாவது, தூக்கம். இந்த அடிப்படை வாஞ்சை கூட அதிக முக்கியமான ஆசையால் தற்காலிகமாக மீறப்படலாம். யூட்டா தேசிய காவல்படையில் ஒரு இளம் சிப்பாயாக, ஒரு போர் அனுபவமிக்க அதிகாரியிடமிருந்து இதுபற்றிய ஒரு உதாரணத்தைக் கற்றுக்கொண்டேன்.

கொரியப் போரின் ஆரம்ப மாதங்களில், ஒரு ரிச்ஃபீல்ட் யூட்டா தேசிய காவல் ஆயுதப் படை யுத்தத்துக்கு அழைக்கப்பட்டது. கேப்டன் ரே காக்ஸ் கட்டுப்பாட்டிலிருந்த இந்த படை சுமார் 40 மார்மன் ஆண்களைக் கொண்டிருந்தது. கூடுதல் பயிற்சி மற்றும் பிற இடங்களில் இருந்து மற்றும் இருப்புப் படைகள் சேர்க்கப்பட்ட பிறகு, அவர்கள் கொரியாவுக்கு அனுப்பப்பட்டனர், அங்கு அவர்கள் அந்த யுத்தத்தின் மிகக் கடுமையான போரை எதிர்கொண்டனர். பிற கள பீரங்கி படைகளை முறியடித்து அழித்த தாக்குதலைப்போல ஒரு போரில் அவர்கள் நூற்றுக்கணக்கான எதிரி காலாட்படையின் நேரடி தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தூக்கத்தின் வாஞ்சையை வெல்வதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஒரு முக்கியமான இரவில், எதிரி பீரங்கி படையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த முன்பகுதி வழியே பின் பகுதிகளுக்கு ஊடுருவியபோது, படைத்தலைவன் டெலிபோன் இணைப்புகளை தனது கூடாரத்திற்குள் இணைத்து, இரவு முழுவதும் ஒவ்வொரு மணிநேரமும் அவனை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைக்க உத்தரவிட்டான். இது வீரர்களை விழித்திருக்க வைத்தது, ஆனால் கேப்டன் காக்ஸ் தூக்கத்துக்கு பல தடங்கல்களை ஏற்படுத்தின. “நீங்கள் அதை எப்படிச் செய்ய முடிந்தது?” நான் அவரைக் கேட்டேன். அவரது பதில் அதிகபட்ச வாஞ்சையின் வல்லமையைக் காட்டுகிறது.

“நாங்கள் எப்போதாவது வீட்டிற்குச் சென்றால், எங்கள் சிறிய நகரத்தில் தெருக்களில் அந்தப் பையன்களின் பெற்றோரைச் சந்திப்பேன் என்று எனக்குத் தெரியும், . அவனது தளபதியாக நான் எதையாவது செய்யத் தவறியதால் அவர்களுடைய மகன் வீட்டுக்கு வரவில்லை என்றால் நான் அவர்களை எதிர்கொள்ள விரும்பவில்லை.”.1

முன்னுரிமைகள் மற்றும் செயல்கள் மீதான அதிகபட்ச வாஞ்சையின் வல்லமைக்கு என்னவொரு உதாரணம்! பெற்றோர்கள், சபைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களாக—நலனுக்குப் பொறுப்பான நம் அனைவருக்கும் எவ்வளவு வல்லமை வாய்ந்த உதாரணம்!

அந்த படவிளக்கத்தின் முடிவாக, அதிகாலையில் அவரது கிட்டத்தட்ட தூக்கமில்லாத இரவைத் தொடர்ந்து, கேப்டன் காக்ஸ் தனது ஆட்களை எதிரி காலாட்படை மீது எதிர் தாக்குதல் நடத்த வழிநடத்தினார். அவர்கள் 800 கைதிகளை சிறைபிடித்துக்கொண்டார்கள் மற்றும் இரண்டு பேர் மட்டுமே காயமடைந்தனர். காக்ஸ் துணிச்சலுக்காக கவுரவிக்கப்பட்டார், மேலும் அவரது படை அதன் அசாதாரண வீரத்திற்காக ஜனாதிபதி பதக்கம் பெற்றது. மேலும், ஏலமனின் துடிப்பான போர்வீரர்களைப் போல (ஆல்மா 57: 25-26 பார்க்கவும்), அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர்.2

மார்மன் புத்தகத்தில் வாஞ்சையின் முக்கியத்துவம் குறித்த பல போதனைகள் உள்ளன.

கர்த்தரிடம் பல மணிநேரம் கெஞ்சிய பிறகு, ஏனோஸ் தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக சொல்லப்பட்டான். அவன் பின்னர் “[அவனது] சகோதரர்களின் நலனுக்கேதுவன ஒரு வாஞ்சையை உணர ஆரம்பித்தான்” (ஏனோஸ் 1:9). அவன் எழுதினான், “அதிகக் கருத்தோடு நான் பிரயாசமாய் ஜெபித்த பின்னர் கர்த்தர் என்னை நோக்கி, உன் விசுவாசத்தினிமித்தம் உன் விருப்பங்களின்படியே உனக்கு நான் அருளுவேன் என்றார்” (வசனம் 12). வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதத்திற்கு முந்தைய மூன்று அத்தியாவசியங்களைக் கவனியுங்கள்: வாஞ்சை, பிரயாசம் மற்றும் விசுவாசம்.

விசுவாசத்தைப் பற்றிய தனது பிரசங்கத்தில், “இந்த ஆசை [நம்மில்] வேலை செய்ய அனுமதித்தால்”விசுவாசம் “வாஞ்சையைக் காட்டிலும் அதிகமானதாக இல்லையென்றாலும் தொடங்கலாம்” என்று ஆல்மா போதிக்கிறான்(ஆல்மா 32:27).

வாஞ்சை பற்றிய மற்றொரு சிறந்த போதனை, குறிப்பாக நமது இறுதி ஆசை என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி, ஊழியக்காரனாகிய ஆரோன் கற்பித்த லாமானிய ராஜாவின் அனுபவத்தில் நிகழ்கிறது. ஆரோனின் போதனை அவனது ஆர்வத்தை ஈர்த்தபோது, ராஜா கேட்டான், “நான் தேவனால் ஜெனிப்பிக்கப்பட்டு,”மற்றும் “இந்த நித்திய ஜீவன் பெறும்படிக்கு என்ன செய்ய வேண்டும்?” (ஆல்மா 22:15). ஆரோன் பதிலளித்தான், “நீர் இக்காரியத்தை வாஞ்சிக்கிறதுண்டானால், நீர் தேவனுக்கு முன்பாக பணிந்து, உம் பாவங்கள் அனைத்திலுமிருந்து மனந்திரும்பி, நீர் பெற்றுக்கொள்வீர் என்ற நிச்சயத்தோடு தேவனுக்கு முன்பாகப் பணிந்து, விசுவாசத்தோடே அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்வீரானால், நீர் விரும்புகிற நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வீர்” (வசனம் 16)

ராஜா அவ்வாறே செய்து, “வல்லமையான ஜெபத்தில் அறிவித்தான், நான் உம்மை அறிந்து … கடைசி நாளில் இரட்சிக்கப்பட என் பாவங்கள் அனைத்தையும் மாற்றிப்போடுவேன்” (வசனம் 18). அந்த அர்ப்பணிப்பு மற்றும் அவனது இறுதி வாஞ்சையை அடையாளம் காண்பதன் மூலம், அவனுடைய ஜெபம் அற்புதமாக பதிலளிக்கப்பட்டது.

தீர்க்கதரிசி ஆல்மா அனைத்து ஜனமும் மனந்திரும்ப வேண்டும் என்று மிகவும் வாஞ்சித்தான், ஆனால் இதற்கு தேவைப்படும் நிச்சயமான வல்லமையை அவன் வாஞ்சிக்கக்கூடாது என்பதை அவன் புரிந்துகொண்டான், , “ஒரு நியாயமான தேவன் … மனுஷருடைய வாஞ்சை மரணத்திற்குள்ளானதோ, ஜீவனுக்கேற்றதோ என்பதைப் பொறுத்து அவர் அருளுவார்” என்ற முடிவுக்கு வந்தான். (ஆல்மா 29:4). அதேபோல, தற்கால வெளிப்பாட்டில் கர்த்தர் “அவர்களின் கிரியைகளின்படியும், அவர்களின் இருதயத்தின் வாஞ்சைகளின்படியும் எல்லா மனிதர்களையும் நியாயந்தீர்ப்பார்” என்று அறிவிக்கிறார் (கோ&.உ 137: 9).

நாம் நிஜமாகவே எதை வாஞ்சிக்கிறோம் என்பதற்கு இந்த மாபெரும் முக்கியத்துவத்தை நம் நித்திய நியாயாதிபதி இணைக்க நாம் உண்மையாக ஆயத்தமாயிருக்கிறோமா?

பல வசனங்கள் நாம் வாஞ்சிப்பதை நாம் நாடுவன பற்றி பேசுகின்றன. “அதிகாலமே என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள், கைவிடப்படுவதில்லை” (கோ.&உ 88:83). “சிறந்த வரங்களையே நாடுங்கள்” (கோ.&உ 46:8). “கருத்தாய் தேடுகிறவன் கண்டடைவான்” (1 நேபி0 10:19). “என்னிடம் நெருங்கி வாருங்கள், நான் உங்களிடம் நெருங்கி வருவேன்; என்னை கருத்தாய் தேடுங்கள், நீங்கள் என்னைக் கண்டுபிடிப்பீர்கள்; கேளுங்கள், நீங்கள் பெறுவீர்கள்; தட்டுங்கள், அது உங்களுக்கு திறக்கப்படும்” (கோ.&உ 88:63).

நித்திய விஷயங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க நமது வாஞ்சைகளை மீண்டும் அனுசரிப்பது எளிதல்ல. நாம் அனைவரும் சொத்து, பிரபலம், பெருமை மற்றும் வல்லமை என்ற உலகின் நால்வரை வாஞ்சிக்க சோதிக்கப்படுகிறோம். நாம் இவற்றை வாஞ்சிக்கலாம், ஆனால் அவற்றை நமது உயர்ந்த முன்னுரிமைகளாக ஆக்கக்கூடாது.

சொத்துக்களைப் பெற வேண்டும் என்ற அதிக விருப்பம் உடையவர்கள் பொருள்முதல்வாதத்தின் வலையில் விழுகிறார்கள். அவர்கள் “இவ்வுலகத்தினுடைய ஜஸ்வரியத்தையோ, வீணானவைகளையோ தேடிப்போகாதே” என்ற எச்சரிக்கைக்கு செவிகொடுக்க தவறுகிறார்கள்” (ஆல்மா 39:14; மேலும் யாக்கோபு 2:18பார்க்கவும்).

பிரபலம் அல்லது அதிகாரத்தை விரும்புபவர்கள், தலைவன் மரோனியின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும், அவனுடைய சேவை “அதிகாரத்திற்காக” அல்லது “உலகின் கனத்துக்காக”இல்லை (ஆல்மா 60:36).

வாஞ்சைகளை நாம் எவ்வாறு மேம்படுத்துகிறோம்? ஆரோன் ரால்ஸ்டனை தூண்டிய நெருக்கடி சிலருக்கு இருக்கும்,3 ஆனால் அவரது அனுபவம் வாஞ்சைகளை மேம்படுத்துவது பற்றி ஒரு மதிப்புமிக்க பாடம் அளிக்கிறது. ரால்ஸ்டன் தெற்கு யூட்டாவில் ஒரு தொலைதூர பள்ளத்தாக்கில் நடந்து சென்றபோது, 800 பவுண்டுகள் (360 கிலோ) பாறை திடீரென பெயர்ந்து விழுந்ததில் அவரது வலது கை சிக்கியது. ஐந்து தனிமையான நாட்கள் அவர் தன்னை விடுவிக்க போராடினார். அவர் தைரியமிழந்து மரணத்தை ஏற்கவிருந்தபோது, மூன்று வயது சிறுவன் தன்னை நோக்கி ஓடிவந்து இடது கையால் தூக்குவது போன்று ஒரு தரிசனம் கண்டார். இதை தனது வருங்கால மகன் பற்றிய தரிசனம் மற்றும் அவர் இன்னும் வாழ முடியும் என்ற உறுதியைப் புரிந்துகொண்ட ரால்ஸ்டன் தைரியத்தை வரவழைத்து, தனது வலிமை தீரும் முன் தனது உயிரைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுத்தார். அவர், சிக்கியிருந்த வலது கையில் இரண்டு எலும்புகளை உடைத்து, பின்னர் அந்த கையை வெட்டி எடுக்க அவரது கருவியில் இருந்த கத்தியைப் பயன்படுத்தினார். பின்னர் அவர் உதவிக்காக ஐந்து மைல்கள் (8 கிமீ) நடக்க பெலனைப் பெற்றார்.4 அதிகப்படியான வாஞ்சையின் வல்லமைக்கு என்னவொரு உதாரணம்! நாம் என்னவாக ஆக முடியும் என்ற பார்வை நமக்கு இருக்கும்போது, நமது விருப்பமும், செயல்படும் சக்தியும் பெரிதும் அதிகரிக்கும்.

நம்மில் பெரும்பாலோர் இதுபோன்ற தீவிர நெருக்கடியை எதிர்கொள்ள மாட்டோம், ஆனால் நம் நித்திய இலக்கை நோக்கி முன்னேறுவதைத் தடுக்கும் சாத்தியமான பொறிகளை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம். நம்முடைய நேர்மையான ஆசைகள் போதுமான அளவு தீவிரமானதாக இருந்தால், அவை நம் நித்திய முன்னேற்றத்தைத் தடுக்கும் அடிமைத்தனங்கள் மற்றும் பிற பாவ அழுத்தங்கள் மற்றும் முன்னுரிமைகளிலிருந்து விடுபட்டு நம்மை தவிர்த்துக் கொள்ள நம்மைத் தூண்டும்.

நீதியான வாஞ்சைகள் மேலோட்டமாகவோ, மனக்கிளர்ச்சியாகவோ அல்லது தற்காலிகமாகவோ இருக்க முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவை இதயப்பூர்வமாகவும், அசையாமலும், நிரந்தரமாகவும் இருக்க வேண்டும். மிகவும் தூண்டப்பட்டு, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் விவரித்த அந்த நிலையை நாம் தேடுவோம், அப்போது நாம் “[நம் வாழ்வின்] தீமைகளை வென்று, பாவத்திற்கான ஒவ்வொரு விருப்பத்தையும் இழந்துவிட்டோம்.”5 இது மிகவும் தனிப்பட்ட முடிவு. மூப்பர் நீல் ஏ. மேக்ஸ்வெல் கூறியது போல்:

“ஜனங்கள் ‘பாவத்தின் மீதான விருப்பத்தை இழந்துவிட்டார்கள்’ என்று விவரிக்கப்படும் போது, தேவனை அறியும் பொருட்டு ‘[அவர்களது] எல்லா பாவங்களையும் விட்டுவிடுவதற்கு’ தயாராக இருப்பதன் மூலம் அந்த தவறான ஆசைகளை இழக்க வேண்டுமென்று அவர்களே, அவர்கள் மட்டுமே முடிவு செய்தார்கள்.”

“ஆகையால், காலப்போக்கில் நாம் எதை உறுதியாக வாஞ்சிக்கிறோமோ, அதுவாகவே இறுதியில் நாம் ஆவோம், அதையே நித்தியத்தில் நாம் பெறுவோம்.”6

“பாவத்திற்கான ஒவ்வொரு விருப்பத்தையும் இழக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, நித்திய ஜீவனுக்கு இன்னும் அதிகம் தேவை. “நமது நித்திய இலக்கை அடைய, ஒரு நித்தியமானவராக ஆக தேவையான குணங்களுக்காக நாம் வாஞ்சித்து பிரயாசப்படுவோம். … உதாரணமாக, நித்திய மனிதர்கள் தங்களுக்கு அநீதி இழைத்த அனைவரையும் மன்னிக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் நலனை தங்களுக்கு முன்னால் வைக்கிறார்கள். மேலும் அவர்கள் தேவனின் பிள்ளைகள் அனைவரையும் நேசிக்கிறார்கள். இது மிகவும் கடினமானதாகத் தோன்றினால், நிச்சயமாக நம்மில் எவருக்கும் இது எளிதானது அல்ல , அப்படியானால், நாம் அத்தகைய குணங்களுக்கான விருப்பத்துடன் ஆரம்பித்து, நம்முடைய அன்புக்குரிய பரலோக பிதாவை நம்முடைய உணர்வுகளுக்கு உதவுமாறு அழைக்க வேண்டும். மார்மன் புத்தகம் “தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுகிறவர்களாய் இருக்கிற, யாவர் மேலும் அவர் அருளி இந்த அன்பினால் நிரப்பப்படவும், பிதாவிடத்தில் இருதயத்தின் முழு நோக்கத்துடனும் ஜெபியுங்கள்” என நமக்குப் போதிக்கிறது (மரோனி 7:48).

அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும்—தற்போது திருமணமானவர்கள் மற்றும் தனியாக இருப்பவர்கள் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு வாஞ்சையின் இறுதி உதாரணத்துடன் நான் முடிக்கிறேன். நித்தியத்திற்கான திருமணத்தை பாதுகாக்க அனைவரும் விரும்பி தீவிரமாக வேலை செய்ய வேண்டும். ஏற்கெனவே ஆலய திருமணம் செய்தவர்கள் அதைப் பாதுகாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். திருமணமாகாதவர்கள் ஆலய திருமணத்தை வாஞ்சித்து அதைப் பெற முன்னுரிமை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். திருமணம் மற்றும் குழந்தைகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தை குறைவாக மதிப்பிடும் நித்திய பொய்யான அரசியல், ஆனால் அக்கருத்தை இளைஞர்கள் மற்றும் இளம் தனிநபர்கள் எதிர்க்க வேண்டும்.7

தனியான ஆண்களே, ஒரு தனியான சகோதரி எழுதிய இந்தக் கடிதத்தில் உள்ள சவாலை தயவுசெய்து கருத்தில் கொள்ளுங்கள். “அவள் ஒரு தகுதியான துணையை உண்மையாக தேடும் தேவனின் நீதியுள்ள மகள்களுக்காக, ஆனால் ஆண்கள் பரலோக பிதாவின் இந்த அற்புதமான, சிறந்த மகள்களைத் தேடுவதும், பழகுவதும் அவர்களின் பொறுப்பா இல்லையா என்று கண்மூடித்தனமாகவும் குழப்பமாகவும் இருப்பதுபோல் தெரிகிறது. அவர்கள் கர்த்தரின் இல்லத்தில் பரிசுத்த உடன்படிக்கைகளை செய்ய தயாராக இருக்கிறார்கள்” என கெஞ்சினார். அவள் முடித்தாள், “இங்கே பல தனியான எல்டிஎஸ் ஆண்கள் மகிழ்ச்சியுடன் வெளியே சென்று களிக்கிறா்கள், மற்றும் பழகி சுற்றித் திரிகிறார்கள், ஆனால் ஒரு பெண்ணுக்கு எந்தவிதமாகவும் ஒப்புக் கொடுக்க முற்றிலும் விரும்புவதில்லை.”8

ஆர்வத்துடன் தேடும் சில இளைஞர்கள் தகுதியான திருமணம் மற்றும் பிள்ளைகள் அல்லது பிற உலகப்பிரகார சிறப்புகளுக்கான ஆசைகளை விட மிகக் குறைந்த மதிப்பைக் கொண்ட சில இளம் பெண்கள் இருப்பதை நான் சேர்க்க விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீதியான ஆசைகள் தேவை, அது அவர்களை நித்திய ஜீவனுக்கு இட்டுச் செல்லும்.

வாஞ்சைகள் நம் முன்னுரிமைகளை அதிகாரம் செய்கின்றன, முன்னுரிமைகள் நம் தேர்வுகளை வடிவமைக்கின்றன, தேர்வுகள் நம்முடைய நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றன என்பதை நினைவில் கொள்வோம். கூடுதலாக, நம்முடைய செயல்களும், வாஞ்சைகளுமே நம்மை உண்மையான நண்பராகவோ, திறமையான ஆசிரியராகவோ அல்லது நித்திய ஜீவனுக்கு தகுதி பெற்றவராகவோ ஆக்க காரணமாகின்றன.

இயேசுகிறிஸ்துவின் அன்பு, அவருடைய போதனைகள் மற்றும் அவருடைய பாவநிவர்த்தி எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது என நான் சாட்சியமளிக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அவரைப் போல ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன், அதனால் ஒரு நாள் நாம் அவருடைய மகிழ்ச்சியின் முழுமையைப் பெற அவருடைய சமூகத்துக்கு திரும்ப முடியும். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

  1. Ray Cox, interview by author, Aug. 1, 1985, Mount Pleasant, Utah, confirming what he told me in Provo, Utah, circa 1953.

  2. Richard C. Roberts, Legacy: The History of the Utah National Guard (2003), 307–14; “Self-Propelled Task Force,” National Guardsman, May 1971, back cover; Miracle at Kapyong: The Story of the 213th (film produced by Southern Utah University, 2002) பார்க்கவும்.

  3. Aron Ralston, Between a Rock and a Hard Place (2004) பார்க்கவும்.

  4. Ralston, Between a Rock and a Hard Place, 248.

  5. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 211 பார்க்கவும்.

  6. Neal A. Maxwell, “According to the Desire of [Our] Hearts,” Ensign, Nov. 1996, 22, 21.

  7. Julie B. Beck, “Teaching the Doctrine of the Family,” Liahona, Mar. 2011, 32–37; Ensign, Mar. 2011, 12–17.

  8. கடிதம், செப். 14, 2006.