லியஹோனா
கிறிஸ்து மீண்டும் வருவதற்கு முன், அவரை நம்புதல்
ஏப்ரல் 2024


“கிறிஸ்து மீண்டும் வருவதற்கு முன், அவரை நம்புதல்” இளைஞரின் பெலனுக்காக, ஏப். 2024.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஏப்ரல் 2024

யாரோம்

கிறிஸ்து மீண்டும் வருவதற்கு முன், அவரை நம்புதல்

இரட்சகர் வருவதற்கு முன்பு நேபியர்களுக்கு விசுவாசம் இருந்தது, அவர் மீண்டும் வருவதற்கு முன்பு நாம் விசுவாசம் வைத்திருக்க முடியும்

படம்
நேபியருக்கு இயேசு கிறிஸ்து தரிசனமாகுதல்

இரட்சகர் பூமிக்கு வருவதற்கு முன்பேஅவரை நம்புவது எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பூர்வகால நேபியர்கள் “மேசியாவை எதிர்நோக்கி, அவர் ஏற்கனவே வந்ததைப்போல அவரில் விசுவாசிக்கவேண்டுமென்றும்” செய்ய வேண்டியிருந்தது(யாரோம் 1:11)

இன்று, இயேசு கிறிஸ்து வாழ்ந்தார், இறந்தார், உயிர்த்தெழுந்தார் என்று சாட்சியமளிக்கும் வேத மற்றும் வரலாற்று பதிவுகள் நம்மிடம் உள்ளன. ஏற்கனவே வந்த ஒரு இரட்சகரை நாம் நம்புகிறோம். மேலும் மீண்டும் வரப்போகும் இரட்சகரையும் நம்புகிறோம்.

இயேசு கிறிஸ்து வருவதற்கு முன், நேபியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்:

படம்
பென்யமின் ராஜாவும் அவருடைய மனைவியும் ஜெபித்தல்

அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்

கிறிஸ்து வருவாரென்று விசுவாசிப்பவர்கள் எவரோ அவர்களே தங்களின் பாவங்களுக்காக மன்னிப்பை பெற்று, அவர் தங்களுக்குள்ளே அப்போதே வந்திருந்ததைப்போல மிகுந்த சந்தோஷத்தினால் களிகூருவார்கள்(மோசியா 3:13முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது)

படம்
ஏனோஸ்

தங்களுக்கு மன்னிப்பை பெற்றுக்கொள்ளுங்கள்

“அங்கே ஒரு சத்தம் எனக்கு உண்டாகி: ஏனோஸே, உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன. … ஆகையால், என் குற்ற உணர்ச்சி துடைக்கப்பட்டது. நான் சொன்னேன்: கர்த்தரே, இது எப்படி நிறைவேறியது? “அவர் என்னை நோக்கி: நீ முன்னே கேட்டும் கண்டுமிராத, கிறிஸ்துவிலே விசுவாசித்ததினிமித்தமே என்றார். அவர் மாம்சத்திலே தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு அநேக வருஷங்கள் கடந்து செல்லும்; …உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, என்றார்.”(ஏனோஸ் 1: 5-8முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது)

படம்
யாக்கோபு பிரசிங்கித்தல்

அற்புதங்களை நிகழ்த்துதல்.

“கிறிஸ்துவை அறிந்திருந்தோம் என்றும், அவர் வருகைக்கு அநேக வருஷங்களுக்கு முன்னமே அவரின் மகிமையில் நம்பிக்கை வைத்திருந்தோம். … மெய்யாகவேஇயேசுவின் நாமத்தினால் கட்டளையிட்டால் மலைகளும், சமுத்திரத்தின் அலைகளும், மரங்களும் நமக்குக் கீழ்ப்படிகின்றன(யாக்கோபு 4: 4-6முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது)

படம்
மரோனி தகடுகளின் மேல் எழுதுதல்

வெளிப்படுதலைப் பெறுதல்

“கிறிஸ்து வருவதற்கு முன்கூட்டியே, திரையினுள் இருந்த தடுக்கப்படமுடியாத, மிகவும் விசுவாசமுடைய அநேகர் , தங்களின் கண்களால் நிச்சயமாகவே கண்டார்கள்.”ஏத்தேர் 12:19முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது)

இயேசு கிறிஸ்து மீண்டும் வருவதற்கு முன்,நாம்விசுவாசிக்க முடியும்:

(நேப்பியர்களை போல).மன்னியுங்கள், தங்களுக்கு மன்னிப்பை பெற்றுக்கொள்ளுங்கள், அற்புதங்களைச் செய்யுங்கள், வெளிப்பாட்டைப் பெறுங்கள்.

படம்
சபையில் இளைஞன் பாடுதல்

அவருடைய வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்துவோம்.

நமது உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்க முயலும்போது, ​ சிலஸ்டியல் ராஜ்யத்தில் வாழ நாம் ஆயத்தமாகிறோம். “ஏனெனில் இதோ, இந்த ஜீவியம் மனுஷருக்குத் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படும் ஒரு காலமாயிருக்கிறது; ஆம், இதோ, இந்த ஜீவியத்தின் நாள், மனுஷர் தங்கள் பிரயாசங்களைச் செய்யும் நாளாயிருக்கிறது.”(ஆல்மா 34:32)

படம்
ஆலயத்தின் முன் இளைஞர்கள்

அவருடைய வருகைக்காக உலகை ஆயத்தப்படுத்துங்கள்.

“இவ்வுலகின் மகத்துவமான வேலையான - இஸ்ரவேலை கூட்டி சேர்ப்பதில் ஒரு பகுதியாக இருக்க, தலைவர் ரசல் எம். நெல்சன் நம்மை அழைத்துள்ளார். “நமது பரலோக பிதா தன் அநேக மிக உத்தமமான ஆவிகளை வைத்திருக்கிறார், இந்த கடைசி கட்டத்துக்கு, ஒருவேளை நாம் அவரது அருமையான குழு என சொல்லலாம். அந்த உத்தமமான ஆவிகளான, அந்த அருமையான வீரர்கள், அந்த கதாநாயகர்கள், நீங்கள்!”1

படம்
இளம் பெண்கள் அணைத்துக்கொள்ளுதல்

கடினமான காலங்களில் நம்பிக்கையுடன் இருங்கள்.

இரட்சகர் மீண்டும் வரும்போது, ​​நீதிமான்கள் சமாதானமாக வாழ்வார்கள். இரட்சகர் ஆட்சி புரிவார், அநீதி சீர் செய்யப்படும். “‘ஏனெனில் கர்த்தர் அவர்களின் நடுவிலிருப்பார், அவருடைய மகிமை அவர்கள் மேலிருக்கும், அவர் அவர்களின் ராஜாவாயும் அவர்களின் பிரமாணத்தைக் கொடுப்பவராயுமிருப்பார்’ (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:59–59.).”

படம்
இளம் பெண்கள்

உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

எல்லா மனுஷர்களும் உயிர்த்தெழுவார்கள் நாம் பரிபூரண, அழியாத சரீரங்களைப் பெறுவோம். மரித்த அன்புக்குரியவர்களை மீண்டும் பார்க்கலாம். ஆவியும் சரீரமும், அவைகளுடைய பரிபூரண அமைப்பிலே மறுபடியும் சேர்க்கப்படும். இப்பொழுது நாம் இருப்பதுபோன்று அவயவமும், கணுக்களும், அவைகளுடைய பரிபூரண வடிவத்திலே மறுபடியும் சேர்க்கப்படும்;(ஆல்மா 11:43).

படம்
நேபியருக்கு இயேசு தரிசனமாகுதல்

பூர்வகால நேபியர்கள் இரட்சகர் வருவதற்கு முன்பு அவரை நம்பினர். இரட்சகர் மீண்டும்வருவார் என்று நாம் விசுவாசிக்க முடியும்—“[நாம்] [அவரை] வானத்தின் மேகங்களில், வல்லமையுடனும் மகத்தான மகிமை உடையவராகக் காண்போம்”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:44;அப்போஸ்தலர் 1:11ஐயும் பார்க்கவும்). அவர் மீண்டும் வருவார் என்று தெரிந்துகொள்வது இன்று நீங்கள் செய்யப்போவதை எவ்வாறு மாற்றும்?

குறிப்பு

  1. Russell M. Nelson, “Hope of Israel” (worldwide youth devotional, June 3, 2018), Gospel Library.