வேதங்கள்
மரோனி 5


அதிகாரம் 5

திருவிருந்து திராட்சை ரசத்தை ஆசீர்வதித்து வழங்குதலுக்குரிய முறை விவரிக்கப்படுதல். ஏறக்குறைய கி.பி. 401–421.

1 திராட்சை ரசத்தை ஆசீர்வதித்து வழங்கும் முறை – இதோ, அவர்கள் பாத்திரத்தை எடுத்துச் சொன்னதாவது:

2 நித்திய பிதாவாகிய தேவனே, இந்த திராட்சை ரசத்தை பானம் பண்ணுகிற யாவருடைய ஆத்துமாக்களுக்காவும், அவர்களுக்காக சிந்தப்பட்ட உமது குமாரனுடைய இரத்தத்தின் நினைவுகூருதலில் அவர்கள் இதைச் செய்யும்படியாகவும், அவருடைய ஆவியை அவர்கள் தங்களோடே கொண்டிருக்கும்படி அவரை எப்பொழுதும் நினைவுகூருகிறார்கள் என்று, நித்திய பிதாவாகிய தேவனே, உம்மிடத்தில் அவர்கள் சாட்சி பகரும்படியாகவும், இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.