வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101


பாகம் 101

டிசம்பர் 16 மற்றும் 17 1833ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த நேரத்தில் மிசௌரியில் கூடிய பரிசுத்தவான்கள் மகா துன்புறுத்தலில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஜாக்சன் மாகாணத்திலுள்ள அவர்களுடைய வீடுகளிலிருந்து கலகக்கும்பல் அவர்களை விரட்டியடித்து, பரிசுத்தவான்களில் சிலர் வான் புரன், லாபயட்டி மற்றும் ரே மாகாணங்களில் குடியேற முயற்சித்தனர், ஆனால் துன்புறுத்தல் அவர்களைத் தொடர்ந்தது. அந்த நேரத்தில் பரிசுத்தவான்களின் முக்கிய திரள் மிசௌரியிலுள்ள கிளே கவுன்டியிலிருந்தது. சபையின் தனிப்பட்டவர்களுக்கிருந்த மரண அச்சுறுத்தல்கள் அநேகம். வீட்டு அறைக்கலன்களையும், ஆடைகளையும், கால்நடைகளையும், பிற சொந்த சொத்துக்களையும் ஜாக்சன் மாகாணத்திலுள்ள பரிசுத்தவான்கள். இழந்தார்கள்; அநேகமான அவர்களுடைய பயிர்கள் அழிக்கப்பட்டன.

1–8, அவர்களுடைய மீறுதல்களினிமித்தம் பரிசுத்தவான்கள் தண்டிக்கப்பட்டு உபத்திரவப்பட்டார்கள்; 9–15, தேசங்களின்மேல் கர்த்தரின் ஆக்கினை விழும், ஆனால் அவருடைய ஜனங்கள் கூட்டிச்சேர்க்கப்பட்டு ஆறுதல் அளிக்கப்படுவார்கள்; 16–21, சீயோனும் அவளுடைய பிணையங்களும் ஸ்தாபிக்கப்படும்; 22–31, ஆயிரம் வருஷத்தின்போது வாழ்வின் தன்மை அமைக்கப்படுகிறது; 32–42, பரிசுத்தவான்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், பின்னர் பலனடைவார்கள்; 43–62, பிரபு மற்றும் ஒலிவ மரங்களின் உவமை, உபத்திரவங்களையும் இறுதியாக சீயோனின் மீட்பையும் குறிப்பிடுகிறது; 63–75, பரிசுத்தவான்கள் தொடர்ந்து ஒன்றுகூடவேண்டும்; 76–80, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டத்தை கர்த்தர் ஸ்தாபித்தார்; 81–101, பெண் மற்றும் அநீதியான நீதிபதியின் உவமையின்படி பரிசுத்தவான்கள் துயரங்களைக் களைய, வேண்டுதல் செய்யவேண்டும்.

1 உபத்திரவப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, தங்களுடைய சுதந்தரங்களின் தேசத்திலிருந்து விரட்டப்பட்ட உங்களுடைய சகோதரர்களைக் குறித்து மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,

2 உபத்திரவங்கள் அவர்களுக்கு ஏற்பட கர்த்தராகிய நான் விட்டுவிட்டேன், இதனால் அவர்களுடைய மீறுதல்களினிமித்தம் அவர்கள் உபத்திரவப்படுத்தப்பட்டார்கள்;

3 இருந்தும் அவர்களை நான் சொந்தமாக்கிக் கொள்வேன், நான் என்னுடைய அணிகலன் போன்றோரை சேர்க்க வருகிறபோது அந்த நாளிலே அவர்கள் என்னுடையவர்களாவார்கள்.

4 ஆகவே, தன்னுடைய ஒரே குமாரனை பலிகொடுக்கும்படி கட்டளையிடப்பட்ட ஆபிரகாமைப்போல அவர்கள் தண்டிக்கப்பட்டு, சோதிக்கப்படவேண்டும்.

5 ஏனெனில் தண்டனையில் நிலைத்திராமல், ஆனால் என்னை மறுதலிக்கிற அனைவரும் பரிசுத்தமாக்கப்பட முடியாது.

6 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அங்கே முரண்பாடுகளும், பிணக்குகளும், பொறாமைகளும், சண்டைகளும், இச்சையான மற்றும் அபகரிக்கும் ஆசைகளும் அவர்களுக்கு மத்தியிலே இருந்தன; ஆகவே இந்தக்காரியங்களினால் அவர்கள் அவர்களுடைய சுதந்தரங்களை அசுசிப்படுத்திக்கொண்டார்கள்.

7 அவர்களுடைய தேவனின் சத்தத்தைக் கேட்க அவர்கள் தாமதித்தார்கள், ஆகவே, அவர்களுடைய துன்பத்தின் நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்பதிலும், அவர்களுக்கு பதிலளிக்கவும் தாமதமாயிருக்கிறார்.

8 அவர்களுடைய சமாதானத்தின் நாளில் என்னுடைய ஆலோசனையை அவர்கள் அசட்டை பண்ணினார்கள், ஆனால் அவர்களின் துன்பத்தின் நாளில் தேவையினிமித்தம் என்னைத் தேடினார்கள்.

9 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்களுடைய பாவங்களிருப்பினும், அவர்கள் மீது என்னுடைய உள்ளம் இரக்கத்தால் நிறைந்தது. முழுவதுமாக அவர்களை நான் தள்ளிவிட மாட்டேன்; கோபத்தின் நாளில் இரக்கத்தை நான் நினைவுகூருவேன்.

10 என்னுடைய ஜனங்களின் சார்பாகவும் என்னுடைய ஆக்கினையின் பட்டயத்தை நான் விழப்பண்ணுவேன் என்று நான் ஆணையிட்டேன், மற்றும் நான் உங்களுக்குக் கொடுத்த ஒரு முந்தைய கட்டளையால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும், நான் சொன்னபடியே சம்பவிக்கும்.

11 சகல தேசங்கள் மேலும் என்னுடைய ஆக்கினை சீக்கிரமே அளவில்லாமல் ஊற்றப்படும், அவர்களுடைய அக்கிரமத்தின் பாத்திரம் நிறையும்போது இதை நான் செய்வேன்.

12 அந்நாளிலே காவல் கோபுரத்தின் மேலே காணப்படுகிற யாவரும், அல்லது வேறு வார்த்தைகளில் எனில், என்னுடைய சகல இஸ்ரவேல் இரட்சிக்கப்படும்.

13 சிதறடிக்கப்பட்ட அவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்.

14 துக்கித்தவர்கள் யாவரும் ஆறுதல் படுத்தப்படுவார்கள்.

15 என்னுடைய நாமத்தினிமித்தம் தங்களுடைய ஜீவனைக் கொடுத்த யாவரும் கிரீடம் சூட்டப்படுவார்கள்.

16 ஆகவே, சீயோனைக் குறித்து உங்களுடைய இருதயங்கள் ஆறுதலடைவதாக; ஏனெனில் சகல மாம்சமும் என்னுடைய கைகளிலிருக்கிறது, நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்.

17 அவளுடைய பிள்ளைகள் சிதறடிக்கப்பட்டாலும், சீயோன் அவளுடைய இடத்திலிருந்து நகராது.

18 நிலைத்திருப்பவர்களும், இருதயத்தில் சுத்தமுள்ளவர்களும் திரும்புவார்கள், சீயோனின் பாழான ஸ்தலங்களில் கட்டும்படியாக, நித்திய சந்தோஷத்தின் பாடல்களைப் பாடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் தங்களுடைய சுதந்தரங்களுக்கு வருவார்கள்.

19 தீர்க்கதரிசிகள் சொன்ன இந்தக் காரியங்கள் யாவும் நிறைவேறும்.

20 இதோ, என்னுடைய பரிசுத்தவான்களின் கூடிவருதலின் பணிக்காக நான் ஏற்பாடு செய்ததைவிட வேறு எந்த இடமும் அங்கே ஏற்பாடு செய்யப்படவில்லை; நான் ஏற்பாடு செய்ததைவிட அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற வேறு எந்த இடமும் இருக்காது,

21 அந்த நாள் வரும்வரை அவர்களுக்கு எந்த இடமுமிருக்காது, பின்னர் அவர்களுக்காக நான் ஏற்பாடு செய்யப்போகிற பிற இடங்கள் உண்டு, சீயோனின் திரைகளுக்காக அல்லது பலத்திற்காக அவைகள் பிணையங்கள் என அழைக்கப்படும்.

22 இதோ, என்னுடைய நாமத்தில் அழைத்து, என்னுடைய நித்திய சுவிசேஷத்தின்படி தொழுதுகொள்கிற யாவரும் ஒன்றுகூடி பரிசுத்த ஸ்தலங்களில் நிற்கவேண்டும் என்பது எனது சித்தமாகும்;

23 வரப்போகிற வெளிப்படுத்தலுக்கு ஆயத்தப்பட்டு, பூமியை மூடியிருக்கிற என்னுடைய ஆசரிப்புக்கூடாரத்தில் என்னுடைய ஆலயத்தை மூடியிருக்கிற திரை எடுக்கப்பட்டு, சகல மாம்சங்களும் ஒன்றுகூடி என்னைக் காணும்.

24 மனுஷனுக்குரிய அல்லது பூமியின் மீதெங்கும் வாழ்கிற வெளியின் மிருகங்களுக்குரிய, அல்லது ஆகாயத்தின் பறவைகளுக்குரிய, அல்லது சமுத்திரத்தின் மச்சத்திற்குரிய அழிவுள்ளவை யாவும் சுட்டெரிக்கப்படும்;

25 மேலும் பஞ்ச பூதங்கள் யாவும் கொடிய வெப்பத்தால் உருகிப்போகும்; பூமி முழுவதும் என்னுடைய அறிவும் மகிமையும் வாசம்செய்யும்படியாக சகலமும் புதிதாகும்.

26 அந்த நாளிலே மனுஷனின் பகையும், மிருகங்களின் பகையும், ஆம், எல்லா மாம்சத்தின் பகையும் என்னுடைய முகத்திற்கு முன்பாக இராமல் ஒழிந்து போகும்.

27 அந்த நாளிலே எந்த மனுஷனும் எதைக்கேட்டாலும் அது அவனுக்குக் கொடுக்கப்படும்.

28 அந்த நாளிலே எந்த மனுஷனையும் சோதிக்க சாத்தானுக்கு அதிகாரமிருக்காது.

29 மரணமில்லாததால் அங்கே துக்கமிருக்காது.

30 அந்த நாளிலே ஒரு பாலகன் அவன் முதிர்வயதாகும் வரை மரிக்கமாட்டான்; அவனுடைய ஜீவியகாலம் ஒரு மரத்தின் ஆயுள் காலத்தைப் போன்றிருக்கும்;

31 அவன் மரிக்கும்போது சொல்லப்போனால் பூமியில் அவன் உறங்கமாட்டான், ஆனால் இமைப்பொழுதிலே மாற்றப்பட்டு, எடுத்துக் கொள்ளப்பட்டு அவனுடைய இளைப்பாறுதல் மகிமை பொருந்தியதாயிருக்கும்.

32 ஆம், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அந்நாளிலே கர்த்தர் வரும்போது,

33 கடந்துபோன காரியங்களையும், எந்த மனுஷனும் அறிந்திராத காரியங்களையும், அது உண்டாக்கப்பட்ட பூமியின் காரியங்களையும், நோக்கத்தையும் அதிலுள்ள முடிவையும்,

34 விலையேறப்பெற்ற காரியங்களையும், மேலேயுள்ள காரியங்களையும், கீழேயுள்ள காரியங்களையும், வானத்திலும் பூமியிலுமுள்ள காரியங்களையும் சகல காரியங்களையும் அவர் வெளிப்படுத்துவார்.

35 என்னுடைய நாமத்திற்காக துன்புறுத்தலுக்குள்ளாகி, விசுவாசத்தில் நிலைத்திருப்பவர்கள் அனைவரும், எனது நிமித்தமாக தங்களுடைய ஜீவனைக்கொடுக்க அவர்கள் அழைக்கப்பட்டாலும்கூட, இந்த சகல மகிமையிலும் பங்கேற்பார்கள்.

36 ஆகவே, மரணத்திற்கும்கூட பயப்படாதிருங்கள்; ஏனெனில் இந்த உலகத்தில் உங்களுடைய சந்தோஷம் பூரணமாயில்லை, ஆனால் என்னில் உங்களுடைய சந்தோஷம் பூரணமாயிருக்கிறது.

37 ஆகவே, உங்களுடைய சரீரத்தைக் குறித்தும், உங்களுடைய சரீரத்தின் ஜீவனைக் குறித்தும் கவலைப்படாதிருங்கள்; ஆனால் ஆத்துமாவைக் குறித்தும் ஆத்துமாவின் ஜீவனைக் குறித்தும் கவலைப்படுங்கள்.

38 உங்களுடைய பொறுமையினால் உங்களுடைய ஆத்துமாக்களைக் காத்துக் கொள்ளும்படியாக, எப்பொழுதும் கர்த்தரின் முகத்தை நாடுங்கள், நீங்கள் நித்திய ஜீவனை அடைவீர்கள்.

39 மனுஷர்கள் என்னுடைய நித்திய சுவிசேஷத்திற்கு அழைக்கப்பட்டு ஒரு நித்திய உடன்படிக்கையுடன் உடன்படிக்கை செய்யும்போது, அவர்கள் பூமிக்கு உப்பாகவும் மனுஷர்களுக்கு சாரமாகவும் கருதப்படுவார்கள்.

40 மனுஷர்களுக்கு சாரமாயிருப்பதற்காக அவர்கள் அழைக்கப்படுவார்கள்; ஆகவே, பூமியின் அந்த உப்பானது சாரமற்றுப்போனால், இதோ, அது வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.

41 இதோ, சீயோனின் பிள்ளைகளைக் குறித்த ஞானம் இதிலே விளங்கும், அநேகருக்கு, ஆனால் யாவருக்குமல்ல; மீறியவர்களாக அவர்கள் காணப்பட்டார்கள், ஆகவே அவர்கள் தண்டிக்கப்படுவது அவசியமாயிருக்கிறது,

42 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

43 இப்பொழுது, சீயோனின் மீட்ப்பைக் குறித்து என்னுடைய சித்தத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக, நான் உங்களுக்கு ஒரு உவமையைக் காட்டுவேன்.

44 பிரபு ஒருவனுக்கு மிக நல்ல நிலமிருந்தது; அவனுடைய வேலைக்காரர்களுக்கு அவன் சொன்னான், என்னுடைய திராட்சைத் தோட்டத்திற்கு, இந்த மிக நல்ல நிலத்திற்குச் சென்று பன்னிரண்டு ஒலிவ மரங்களை நடுங்கள்;

45 அவைகளைச் சுற்றி காவற்காரர்களை ஏற்பாடு செய்யுங்கள், ஒருவன் நிலத்தை சுற்றிலும் கண்காணிக்க, கோபுரத்தின்மேல் ஒரு காவற்காரனிருக்க என்னுடைய ஒலிவ மரங்கள் முறிக்கப்படாமலிருக்க, சத்துரு கொள்ளையிட வந்து, என்னுடைய திராட்சைத் தோட்டத்தின் கனியை அவர்களோடு எடுத்துப் போகாதிருக்கும்படியாக, ஒரு கோபுரத்தைக் கட்டுங்கள்.

46 இப்பொழுது பிரபுவின் வேலைக்காரர்கள் போய் அவர்களுடைய எஜமான் அவர்களுக்குக் கட்டளையிட்டதைப்போல செய்து, ஒலிவ மரங்களை நட்டார்கள், மற்றும் சுற்றிலும் ஒரு வேலியடைத்து காவற்காரர்களை நியமித்து, ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள்.

47 அங்கே அவர்கள் இன்னமும் அஸ்திபாரத்தைப் போட்டுக் கொண்டிருந்தபோது, தங்களுக்குள் அவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்: இந்தக் கோபுரம் என்னுடைய எஜமானுக்கு ஏன் தேவையாயிருக்கிறது?

48 நீண்ட நேரமாக ஆலோசனை செய்து அவர்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள், இது சமாதானத்தின் காலமாயிருக்கிறபடியால், இந்தக் கோபுரம் என்னுடைய எஜமானுக்கு ஏன் தேவையாயிருக்கிறது?

49 இந்தப் பணம் காசுக்காரரிடம் கொடுக்கப்படக்கூடாதோ, ஏனெனில் இந்தக் காரியங்களுக்கு எந்த தேவையுமில்லை.

50 அவர்கள் ஒருவரோடொருவர் கருத்தொற்றுமை இல்லாதிருக்கும்போது அவர்கள் மிகுந்த சோம்பேறிகளாகிறார்கள், அவர்களுடைய எஜமானின் கட்டளைகளுக்கு செவிகொடுக்காது இருக்கிறார்கள்.

51 சத்துரு இராக்காலத்திலே வந்து, வேலிகளைத் தகர்த்துப் போட்டான்; பிரபுவின் வேலைக்காரர்கள் எழுந்து, பயந்து ஓடிப்போனார்கள்; அவர்களுடைய வேலையை சத்துரு அழித்துப்போட்டு ஒலிவ மரங்களை முறித்துப்போட்டான்.

52 இப்பொழுது, இதோ, திராட்சைத் தோட்டத்தின் எஜமானனான பிரபு அவனுடைய வேலைக்காரர்களை அழைத்து அவர்களுக்குச் சொன்னான், ஏன்! இந்தப் பெரிய தீங்குக்கு காரணமென்ன?

53 நான் உங்களுக்குக் கட்டளையிட்டதைப்போல நீங்கள் செய்யாதிருந்தீர்களே, திராட்சைத் தோட்டத்தை நீங்கள் நட்டு, சுற்றிலும் வேலியடைத்து, சுவர்களின்மீது காவற்காரர்களை வைத்து, சத்துரு உங்கள்மேலே வராதபடிக்கு, ஒரு கோபுரத்தையும் கூட கட்டி, கோபுரத்தின் மீதும் ஒரு காவற்காரனைப்போட்டு, என்னுடைய திராட்சைத் தோட்டத்தை காவல் காத்து, நித்திரையடையாதிருந்தீர்களா?

54 இதோ, கோபுரத்தின் மேலேயுள்ள காவற்காரன் சத்துருவை, அவன் தூரத்திலே இருக்கும்போதே பார்த்திருப்பான், பின்னர் நீங்கள் ஆயத்தமாகி சத்துரு வேலிகளை தகர்த்துப்போடுவதை தடுத்து, சங்காரக்காரனின் கைகளிடமிருந்து என்னுடைய திராட்சைத் தோட்டத்தை பாதுகாத்திருப்பீர்கள்.

55 திராட்சைத் தோட்டத்தின் எஜமான் தன்னுடைய வேலைக்காரர்களில் ஒருவனுக்குச் சொன்னான், நீ போய் மீதியான என்னுடைய வேலைக்காரர்களை கூட்டி, என்னுடைய வீரர்களும், என்னுடைய இளம் வாலிபர்களும், என்னுடைய எல்லா வேலைக்காரர்களிடையேயும் நடுவயதுடைய, என்னுடைய வீட்டில் உள்ள அனைவரையும் நான் இருக்கும்படி நியமித்தவர்களைத்தவிர என்னுடைய வீட்டின் எல்லாரையும் கூட்டிக்கொண்டு;

56 நீங்கள் என்னுடைய திராட்சைத் தோட்டத்தின் நிலத்திற்கு நேராகப் போய் என்னுடைய திராட்சைத் தோட்டத்தை மீட்டுக் கொள்ளுங்கள்; ஏனெனில் அது என்னுடையதாயிருக்கிறது, நான் அதை பணம் கொடுத்து வாங்கினேன்.

57 ஆகவே, என்னுடைய நிலத்திற்கு நேராகப் போங்கள்; என்னுடைய சத்துருக்களின் சுவர்களை தகர்த்துப்போடுங்கள், அவர்களுடைய கோபுரங்களை இடித்துப்போடுங்கள், அவர்களுடைய காவற்காரர்களை சிதறடிக்கப்பண்ணுங்கள்.

58 உங்களுக்கெதிராக அவர்கள் கூடுகிற அளவில், என்னுடைய சத்துருக்களை பழி தீருங்கள், அதனால் என்னுடைய வீட்டின் மீதியானவர்களோடு விரைவில் நான் வந்து நிலத்தை சுதந்தரித்துக் கொள்வேன்.

59 வேலைக்காரன் தன்னுடைய எஜமானுக்குச் சொன்னான், இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?

60 அவன் தன்னுடைய வேலைக்காரனுக்குச் சொன்னான், எனக்கு சித்தமாகும்போது, நீ நேரே போய் நான் உனக்கு கட்டளையிட்ட சகல காரியங்களையும் செய்;

61 உன் மீது இது என்னுடைய முத்திரையாயும் ஆசீர்வாதமுமாயிருக்கும், என்னுடைய வீட்டிலுள்ளோர் மத்தியிலே ஒரு உண்மையும் புத்தியுமுள்ள உக்கிராணக்காரன், என்னுடைய ராஜ்யத்திலே ஒரு அதிகாரி,

62 அவனுடைய வேலைக்காரன் நேராகப் போய், அவனுடைய எஜமான் அவனுக்குக் கட்டளையிட்ட சகல காரியங்களையும் செய்தான்; அநேக நாட்களுக்குப்பின் சகல காரியங்களும் நிறைவேற்றப்பட்டன.

63 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்களுடைய இரட்சிப்புக்காக ஒரு சரியான பரிபூரணமான வழியில் வழிநடத்தப்பட அவர்கள் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிற அளவில், சகல சபைகளையும் குறித்து என்னுடைய ஞானத்தில் நான் உங்களுக்குக் காட்டுவேன்,

64 என்னுடைய பரிசுத்தவான்கள் ஒன்று கூடிவரும் பணி தொடரும்படியாகவும், பரிசுத்த ஸ்தலங்களின்மேல் என்னுடைய நாமத்தில் அவர்களை முன்னேற்றும் படியாகவும்; அறுவடையின் காலம் வந்துவிட்டதால், என்னுடைய வார்த்தை நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாயிருக்கிறது.

65 ஆகவே, கோதுமை மற்றும் பதரின் உவமையின்படி, நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள கோதுமையை களஞ்சியங்களில் சேர்க்கும்படியாகவும், அவனவனுடைய கிரியைகளின்படி ஒவ்வொரு மனுஷனுக்கும் பலன் அளிக்க என்னுடைய பிதாவின் ராஜ்யத்தில் நான் வரும்போது சிலஸ்டியல் மகிமையுடன் கிரீடம் சூட்டப்படவும், நான் என்னுடைய ஜனங்களை கூட்டிச் சேர்க்கவேண்டும்;

66 அவியாத அக்கினியால் அவைகள் சுட்டெரிக்கப்படும்படியாக பதர்கள் கட்டுக்களாக கட்டப்படும்போது அவற்றின் கட்டுக்கள் பலமாக்கப்படும்.

67 ஆகவே, நான் நியமித்த ஸ்தலங்களில் அவர்கள் தொடர்ந்து ஒன்றுகூடிவரும்படியாக சகல சபைகளுக்கும் நான் ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்.

68 ஆயினும், ஒரு முந்தைய கட்டளையில் நான் உங்களுக்குச் சொன்னதைப்போல, நீங்கள் கூடிச்சேருவது அவசரமாயும், துரிதமாயுமில்லாமல் இருப்பதாக. ஆனால் உங்களுக்கு முன்பாக சகல காரியங்களும் ஆயத்தப்பட்டிருப்பதாக.

69 உங்களுக்கு முன்பாக சகல காரியங்களும் ஆயத்தப்பட்டிருக்கும்படியாக, இந்த காரியங்களைக் குறித்து,

70 என்னுடைய பரிசுத்தவான்களின் கூடிச்சேர்தலின் ஆரம்பத்திற்காக சீயோனின் தேசமாயிருக்கும்படியாக நான் நியமித்த நிலத்தின் சுற்றியுள்ள பகுதிகளில், பணத்தால் வாங்க முடிகிற நிலங்கள் யாவையும் வாங்கி, நான் கூறுகிற, அல்லது கற்பிக்கிற, உங்களுக்குக் கொடுத்த கட்டளையை ஆசரியுங்கள்;

71 ஜாக்சன் மாகாணத்திலும், சுற்றியுள்ள மாகாணங்களிலும் வாங்கமுடிகிற எல்லா நிலங்களையும், வாங்குங்கள், மீதியுள்ளவற்றை என்னுடைய கைகளில் விட்டுவிடுங்கள்.

72 இப்பொழுது, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சகல சபைகளும் தங்களுடைய எல்லா பணத்தையும் ஒன்று சேர்ப்பார்களாக; இந்த காரியங்கள் அவர்களுடைய காலத்தில் செய்யப்படுவதாக, ஆனால் அவசரத்தில் அல்ல, உங்களுக்கு முன்பாக சகல காரியங்களும் ஆயத்தப்படுத்தப்படுவதை உறுதி செய்யுங்கள்.

73 கண்ணியமான மனுஷர்களும், புத்திசாலியான மனுஷர்களும் நியமிக்கப்பட்டு, நிலங்களை வாங்க அவர்கள் அனுப்பப்படுவார்களாக.

74 கிழக்கு தேசங்களிலுள்ள சபைகள், அவைகள் கட்டப்படும்போது, இந்த ஆலோசனைக்கு அவர்கள் செவிகொடுத்தால் அவர்கள் நிலங்களை வாங்கி அவைகளில் கூடிச்சேருவார்களாக; இந்த வழியில் அவர்கள் சீயோனை ஸ்தாபிப்பார்களாக.

75 சீயோனை மீட்கவும், அவளுடைய பாழான ஸ்தலங்களை கட்டவும் இப்பொழுதுகூட ஏற்கனவே கையிருப்பில் போதுமானது இருக்கிறது, ஆம், ஏராளமாய், என்னுடைய நாமத்தினால் தங்களை அழைத்து என்னுடைய குரலுக்கு செவிகொடுக்க சித்தமாயிருக்கிற சபைகள் இனிமேலும் இடிக்கப்படாது.

76 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தங்களுடைய சத்துருக்களால் சிதறடிக்கப்பட்டவர்கள், அரசாளுபவர்களாகவும் உங்கள்மேல் அதிகாரமுள்ளவர்களாகவும் வைக்கப்பட்டவர்களின் கைகளால் துயர் போக்கவும், மீட்பிற்காகவும் உதவி கேட்பதை தொடரவேண்டுமென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது,

77 நீதியின்படியும் பரிசுத்த கொள்கைகளின்படியும் சகல மாம்சங்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பராமரிக்கப்பட வேண்டுமென, ஏற்படுத்த நான் அனுமதித்த, ஜனங்களின் சட்டங்கள் மற்றும் அரசியல் அமைப்பின்படி,

78 நியாயத்தீர்ப்பின் நாளில் அவனுடைய சொந்த பாவங்களுக்காக ஒவ்வொரு மனுஷனும் பொறுப்பேற்கத்தக்கதாக, நான் அவனுக்குக் கொடுத்த ஒழுக்க சுயாதீனத்தின்படி வருங்காலத்திற்கு சம்பந்தப்பட்ட கோட்பாடுகளிலும் கொள்கைகளிலும் ஒவ்வொரு மனுஷனும் செயல்படுவானாக.

79 ஆகவே, ஒருவருக்கொருவர் எந்த மனுஷனும் அடிமையாயிருப்பது சரி இல்லை.

80 இந்த நோக்கத்திற்காகவே நான் எழுப்பிய புத்திசாலிகளான மனுஷர்களின் கைகளினால், இந்த தேசத்தின் அரசியல் அமைப்பை இந்த நோக்கத்திற்காகவே நான் ஸ்தாபித்து, இரத்தம் சிந்துதலின் மூலம் தேசத்தை மீட்டேன்.

81 இப்பொழுது, சீயோனின் பிள்ளைகளை நான் எதற்கு ஒப்பிடுவேன்? பெண் மற்றும் அநீதியான நியாயாதிபதியின் உவமைக்கு நான் அவர்களை ஒப்பிடுவேன், ஏனெனில் சோர்ந்து போகாமல் மனுஷர்கள் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும், அது சொல்வதாவது,

82 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான், அவன் தேவனுக்குப் பயப்படாதவனாயும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.

83 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள், அவள் அவனிடத்திலே போய் எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ் செய்யவேண்டும் என்று சொன்னாள்.

84 வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. ஆனால் பின்பு அவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான், நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலிருந்தும், இந்த விதவை என்னை தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலுப்படையச் செய்யாதபடி, இவளுக்கு நியாயஞ்செய்வேன்.

85 இப்படியாக சீயோனின் பிள்ளைகளை நான் ஒப்பிடுவேன்.

86 அவர்கள் நியாயாதிபதியின் கால்களில் விழுந்து கெஞ்சுவார்களாக;

87 அவன் அவர்களுக்கு செவி கொடுக்கவில்லையானால், அவர்கள் ஆளுனரின் கால்களில் விழுந்து கெஞ்சுவார்களாக;

88 ஆளுனர் அவர்களுக்கு செவி கொடுக்கவில்லையானால், அவர்கள் ஜனாதிபதியின் கால்களில் விழுந்து கெஞ்சுவார்களாக;

89 ஜனாதிபதி அவர்களுக்கு செவி கொடுக்கவில்லையானால், பின்னர் கர்த்தர் அவருடைய மறைவான இடத்திலிருந்து எழுந்து வந்து அவருடைய கோபத்திலே தேசத்தை விசனமடையச் செய்வார்;

90 அவருடைய உக்கிரத்திலே, அவருடைய கொடிய கோபத்திலே, அவருடைய ஏற்ற காலத்தில் அந்த துன்மார்க்க, அவிசுவாசமான அநீதியான உக்கிராணக்காரர்களை அறுப்புண்டு போகப்பண்ணி மாய்மாலக்காரர்களுக்கும் நம்பிக்கையில்லாதோருக்கும் மத்தியிலேயும்;

91 அழுகையும், புலம்பலும் பற்கடிப்புமிருக்கிற புறம்பான இருளிலும்கூட அவர்களுடைய பங்கைக் கொடுப்பார்.

92 ஆகவே, உங்களுடைய கூக்குரல்களுக்கு அவர்களுடைய செவிகள் திறக்கப்படும்படியாக, அவர்கள் மேல் நான் இரக்கமாயிருக்கும்படியாக, இந்தக் காரியங்கள் அவர்கள் மேல் வராமலிருக்கும்படியாக நீங்கள் ஜெபியுங்கள்.

93 சகல மனுஷர்களும் போக்குச் சொல்ல இடமில்லாமல் விடப்படும்படியாக;

94 அவர்கள் ஒருபோதும் எண்ணாதிருந்தவற்றை புத்திசாலிகளான மனுஷர்களும் அரசாளுபவர்களும் கேட்டு அறிந்துகொள்ளும்படியாக;

95 என்னுடைய கிரியையாகிய அபூர்வமான கிரியையை நிறைவேற்ற தொடங்கவும், என்னுடைய வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், நீதிமான்களுக்கும் துன்மார்க்கருக்குமிடையில் மனுஷர்கள் பகுத்தறியும்படியாக நான் உங்களுக்குச் சொன்னவைகள் அவசியமானதாயிருக்கிறது என உங்கள் தேவன் சொல்லுகிறார்.

96 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஜனங்களுக்கு நான் நியமித்த என்னுடைய பண்டசாலையை என்னுடைய சத்துருக்களின் கைகளில் என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி கில்பர்ட் விற்க வேண்டுமென்பது என்னுடைய கட்டளைக்கும் என்னுடைய சித்தத்திற்கும் விரோதமாக இருக்கிறது.

97 நான் நியமித்தவைகள், என்னுடைய நாமத்தினால் தங்களை அழைத்துக் கொள்பவர்களின் ஒப்புதலோடு, என்னுடைய சத்துருக்களால் தீட்டுப்படாதிருப்பதாக;

98 ஏனெனில், நான் கட்டளையிட்ட, சீக்கிரத்திலேயே தேசங்களுக்கு சம்பவிக்கப்போகிற அந்தக் காரியங்களின் விளைவாக, எனக்கு விரோதமாகவும், என்னுடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் இது ஒரு மிகுந்த வேதனையும் கொடியதான பாவமுமாயிருக்கிறது.

99 ஆகவே, அங்கே அவர்கள் வாசம் செய்ய அனுமதிக்கப்படாவிட்டாலும்கூட என்னுடைய ஜனங்கள் உரிமை பாராட்டவேண்டும், அவர்களுக்காக நான் நியமித்தவற்றில் அவர்கள் உரிமை பாராட்டவேண்டுமென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது.

100 ஆயினும், அவர்கள் அங்கே வாசம் செய்யக்கூடாது என்று நான் சொல்லவில்லை; அவர்கள் ராஜ்யத்திற்கு உகந்த கனியையும் பலனையும் கொண்டுவருகிற அளவில் அவர்கள் அங்கு வாசம் செய்வார்கள்.

101 அவர்கள் கட்டுவார்கள், மற்றொருவன் அதை சுதந்தரித்துக் கொள்வதில்லை; அவர்கள் திராட்சைத் தோட்டத்தை நட்டு அதன் கனியைப் புசிப்பார்கள். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.