வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2


பாகம் 2

செப்டம்பர் 21, 1823 மாலையில், நியூயார்க்கின் மான்செஸ்டரிலிலுள்ள தீர்க்கதரிசியின் தகப்பன் வீட்டில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு மரோனி தூதன் கொடுத்த வார்த்தைகளின் ஒரு சாராம்சம் ஜோசப் ஸ்மித்தின் வரலாற்றிலிருந்து கொடுக்கப்பட்டது. மார்மன் புஸ்தகமாக இப்போது உலகத்திற்கு முன்னாலிருக்கிற பதிவேட்டை செய்த மரோனி, வரலாற்றாசிரியர்களின் ஒரு நீண்ட வரிசையின் கடைசியானவன். (மல்கியா 4:5–6 ஐயும், பாகங்கள் 27:9; 110:13–16; மற்றும் 128:18 ஐயும் ஒப்பிடவும்).

1, ஆசாரியத்துவத்தை எலியா வெளிப்படுத்துவான்; 2–3, பிதாக்களின் வாக்குத்தத்தங்கள் பிள்ளைகளின் இருதயங்களில் நடப்படுகின்றன.

1 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே எலியா தீர்க்கதரிசியின் கையால் ஆசாரியத்துவத்தை உங்களுக்கு வெளிப்படுத்துவேன்.

2 பிதாக்களுக்குச் செய்யப்பட்ட வாக்குத்தத்தங்களை பிள்ளைகளின் இருதயங்களில் அவன் நடுவான், பிள்ளைகளின் இருதயங்கள் தங்கள் பிதாக்களிடத்திற்கு திரும்பும்.

3 இல்லையெனில், அவரது வருகையில் பூமி முழுவதும் நிச்சயமாய்ப் பாழாக்கப்படும்.