வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 87


பாகம் 87

டிசம்பர் 25, 1832ல் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக ஒஹாயோவின் கர்த்லாந்து அல்லது அதற்கருகில் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தலும் யுத்தத்தைப்பற்றிய தீர்க்கதரிசனமும். இந்த நேரத்தில் அமெரிக்க ஐக்கியநாடுகளில் அடிமைத்தனத்தைப்பற்றியும், தென் கரோலினாவில் கூட்டாட்சி கட்டணங்களின் ரத்துசெய்தலைப்பற்றியும் வாக்குவாதங்கள் நடந்துகொண்டிருந்தன. “ஆரம்பத்தில் வனாந்தரத்திலிருந்து வெளியே சபை அதன் பயணத்தை ஆரம்பித்த நேரத்தைவிட” “தேசங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளின் தோற்றங்கள் தீர்க்கதரிசிக்கு “அதிக தெளிவான காட்சியாயிருந்தது” என ஜோசப் ஸ்மித்தின் வரலாறு கூறுகிறது.

1–4, வடக்கு மாகாணங்களுக்கும் தெற்கு மாகாணங்களுக்கும் இடையிலுள்ள யுத்தம் முன்னறிவிக்கப்பட்டது; 5–8, பூமியின் குடிகள் யாவர் மீதும் பெரிய அழிவுகள் வரும்.

1 இறுதியில் அநேக ஆத்துமாக்களின் மரணத்திலும் துர்பாக்கியத்திலும் முடியப்போகிற, தென் கரோலினாவின் கலகத்தின் ஆரம்பத்தில், விரைவிலேயே வரப்போகிற யுத்தங்களைக் குறித்து மெய்யாகவே, இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார்;

2 இந்த இடத்தில் ஆரம்பித்து, சகல தேசங்களின் மேலும் யுத்தம் பொழியப்போகிற சமயம் வரும்.

3 ஏனெனில் இதோ, தெற்கு மாநிலங்கள் வடக்கு மாநிலங்களுக்கு எதிராக பிரிக்கப்பட்டு, தெற்கு மாநிலங்கள் பிற தேசங்களை, கிரேட் பிரிட்டன் என்று அழைக்கப்படுகிற தேசத்தையும்கூட அழைக்கும், அது அழைக்கப்பட்டதைப்போல, பிற தேசங்களுக்கு எதிராக தங்களை காத்துக்கொள்ள அவர்களும் பிற தேசங்களை அழைப்பார்கள், பின்னர் யுத்தம் சகல தேசங்களின் மேலும் பொழியப்படும்.

4 அநேக நாட்களுக்குப் பின்னர், யுத்தத்திற்காக தகுதிபடுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட அடிமைகள் தங்களுடைய எஜமானர்களுக்கு எதிராக எழுவார்கள்.

5 தேசத்தில் விடப்பட்ட மீதியானவர்கள் அவர்களே, தங்களை தகுதிபடுத்தி மிகுந்த கோபமூண்டவர்களாகி ஒரு மிகுந்த சஞ்சலத்துடன் புறஜாதியாரை சஞ்சலப்படுத்துவார்கள்.

6 இப்படியாக, பட்டயத்தாலும் இரத்தம் சிந்துதலாலும் பூமியின் குடிகள் துக்கிப்பார்கள்; பஞ்சத்தாலும். வாதையாலும், பூமி அதிர்ச்சியாலும், வானத்தின் இடிமுழக்கத்தாலும் உக்கிரமும் வேகமுமுள்ள மின்னல்களாலும், தீர்மானிக்கப்பட்ட அழிவு சகல தேசங்களையும் முழுமையாக பட்சித்துப்போடும்வரை, பூமியின் குடிகள் கோபத்தையும், எரிச்சலையும், ஒரு சர்வவல்லமையுள்ள தேவனின் தண்டிக்கும் கரத்தையும் உணர வைக்கப்படுவார்கள்;

7 தங்களுடைய சத்துருக்களால் பழிதீர்க்கப்படும்படிக்கு, பூமியிலிருந்து பரிசுத்தவான்களின் கூக்குரலும், பரிசுத்தவான்களின் இரத்தமும் ஓய்வுநாளின் கர்த்தரின் செவிகளுக்கு வருவது நின்றுபோகும்.

8 ஆகவே, பரிசுத்த ஸ்தலங்களில் நீங்கள் நின்று கொண்டிருங்கள், கர்த்தர் வருகிற நாள்வரைக்கும் அசையாதிருங்கள்; ஏனெனில் இதோ, அது சீக்கிரத்திலே வருகிறதென கர்த்தர் சொல்லுகிறார். ஆமென்.