வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 105


பாகம் 105

ஜூன் 22, 1834ல் மிசௌரியின் பிஷ்ஷிங் நதியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். தீர்க்கதரிசி தலைமையின் கீழ் பரிசுத்தவான்கள் ஒஹாயோ மற்றும் பிற பகுதிகளிலிருந்து, பின்னர் சீயோனின் முகாம் என்றறியப்பட்ட மிசௌரிக்கு, ஒரு போர்ப்படையாக அணிவகுத்துச் சென்றனர். வெளியேற்றப்பட்ட மிசௌரி பரிசுத்தவான்கள் ஜாக்சன் மாகாணத்திலுள்ள அவர்களுடைய இடங்களுக்கு திரும்பிப்போக அவர்களுக்குப் பாதுகாப்பாகச் செல்வதே அவர்களுடைய நோக்கமாயிருந்தது. முன்பு பரிசுத்தவான்களை துன்புறுத்திய மிசௌரியர்கள் சீயோன் முகாமிலிருந்து பழிவாங்குவார்கள் என பயந்து, மிசௌரியிலுள்ள கிளே கவுன்டியில் வசித்துவந்த சில பரிசுத்தவான்களை முன்நடவடிக்கையாக தாக்கினார்கள். பரிசுத்தவான்களை ஆதரிக்க மிசௌரி ஆளுநர் கொடுத்த அவரது வாக்கை திரும்ப பெற்றுக்கொண்ட பின்னர், ஜோசப் ஸ்மித் இந்த வெளிப்படுத்தலைப் பெற்றார்.

1–5, சிலஸ்டியல் நியாயப்பிரமாணத்திற்கு ஒத்ததாக சீயோன் கட்டப்படும்; 6–13, சீயோனின் மீட்பு கொஞ்சகாலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது; 14–19, சீயோனின் யுத்தங்களை கர்த்தர் பண்ணுவார்; 20–26, பரிசுத்தவான்கள் புத்தியாயிருக்கவேண்டும், அவர்கள் கூடிவரும்போது பலத்த கிரியைகளுக்காக மேன்மை பாராட்டாதிருக்க வேண்டும்; 27–30, ஜாக்சனிலும் அண்டை மாகாணங்களிலும் நிலங்கள் வாங்கப்பட வேண்டும்; 31–34, கர்த்லாந்தில் கர்த்தரின் வீட்டில் மூப்பர்கள் ஒரு தரிப்பித்தலைப் பெறவேண்டும்; 35–37, அழைக்கப்பட்ட மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட பரிசுத்தவான்கள் பரிசுத்தமாக்கப்படுவார்கள்; 38–41, பரிசுத்தவான்கள் உலகத்திற்கு சமாதானத்தின் கொடியை உயர்த்தவேண்டும்.

1 என்னுடைய துயரப்பட்ட ஜனங்களின் மீட்பைக் குறித்து என்னுடைய சித்தத்தை நீங்கள் அறிந்து கொள்ளும்படியாக ஒன்றாய்க் கூடி வந்திருக்கிற உங்களுக்கு மெய்யாகவே நான் சொல்லுகிறேன்,

2 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தனிப்பட்டவர்களைக் குறித்தல்லாமல் சபையைக் குறித்து பேசுவதில், என்னுடைய ஜனங்களின் அக்கிரமங்களில்லாமல் இருந்தால் இப்போதுகூட அவர்கள் மீட்கப்பட்டிருப்பார்கள்.

3 ஆனால், இதோ, அவர்களிடம் நான் எதிர்பார்த்த காரியங்களில் கீழ்ப்படிதலாயிருக்க அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை, ஆனால் சகலவிதமான தீமைகளால் நிறைந்திருக்கிறார்கள் அவர்களுக்கு மத்தியிலிருந்த தரித்திரருக்கும் துயரப்பட்டோருக்கும், பரிசுத்தவான்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது போல் இல்லாமல் தங்களுடைய பொருட்களை பகிர்ந்தளிக்காமல் இருந்தார்கள்;

4 சிலஸ்டியல் ராஜ்யத்தின் நியாயப்பிரமாணத்திற்கு தேவையான ஒற்றுமையின்படி ஒன்று படாதிருந்தார்கள்;

5 சிலஸ்டியல் ராஜ்யத்தின் நியாயப்பிரமாணத்தின் கொள்கைகளால் அல்லாமல் சீயோன் கட்டப்பட முடியாது; இல்லையெனில் நான் அவளை என்னிடத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாது.

6 அவர்கள் அனுபவிக்கிற பாடுகளினாலே அவர்கள் தண்டிக்கப்படுவது அவசியமாயிருந்தால், கீழ்ப்படிதலை என்னுடைய ஜனங்கள் கற்றுக்கொள்ளும்வரை, என் ஜனங்கள் தண்டிக்கப்படுவது அவசியமாயிருக்கிறது.

7 என்னுடைய ஜனங்களை வழிநடத்த நியமிக்கப்பட்ட என்னுடைய சபையின் முதல் மூப்பர்களான அவர்கள் யாவரும் இந்த ஆக்கினையின் கீழ் இல்லாதிருப்பதால் அவர்களைக் குறித்து நான் பேசவில்லை;

8 ஆனால் தூர இடத்திலுள்ள என்னுடைய சபையைக் குறித்து நான் பேசுகிறேன்: அவர்களுடைய தேவன் எங்கே? இதோ, உபத்திரவத்தின் நேரத்திலே அவர்களை அவர் விடுவிப்பார், இல்லையெனில் நாங்கள் சீயோன் வரை போகமாட்டோம், எங்களுடைய பணத்தை வைத்திருப்போம் என சொல்பவர்கள் அநேகர் இருக்கிறார்கள்.

9 ஆகவே, என்னுடைய ஜனங்களின் மீறுதல்களின் விளைவாக, சீயோனின் மீட்பிற்காக,

10 அவர்களே ஆயத்தப்படும்படியாகவும், என்னுடைய ஜனங்கள் மிகப்பரிபூரணமாக போதிக்கப்படும்படியாகவும், அனுபவம் பெறவும், தங்களுடைய கடமைகளைக் குறித்தும், அவர்களின் கைகளில் நான் எதிர்பார்க்கும் காரியங்களைக் குறித்தும் மிகப்பரிபூரணமாக அறிந்துகொள்ளும்படியாகவும், என்னுடைய மூப்பர்கள் கொஞ்சகாலம் காத்திருக்கவேண்டியது எனக்கு அவசியமாயிருக்கிறது.

11 உன்னதத்திலிருந்து வல்லமையுடன் என்னுடைய மூப்பர்கள் தரிப்பிக்கப்படாதவரை, இது கொண்டுவரப்பட முடியாது.

12 ஏனெனில் இதோ, எனக்கு முன்பாக அவர்கள் உண்மையுள்ளவர்களாயும் தாழ்மையில் தொடர்ந்துமிருக்கிற அளவில் ஒரு மகத்தான தரிப்பித்தலையும் ஆசீர்வாதத்தையும் அவர்கள் மேல் ஊற்ற நான் ஆயத்தப்படுத்தியிருக்கிறேன்.

13 ஆகவே சீயோனின் மீட்பிற்காக என்னுடைய மூப்பர்கள் கொஞ்சகாலம் காத்திருக்கவேண்டியது என்னில் அவசியமாயிருக்கிறது.

14 ஏனெனில் இதோ, சீயோனின் யுத்தங்களை அவர்கள் பண்ணுவது எனக்கு அவசியமில்லை; ஏனெனில் உங்களுடைய யுத்தங்களை நான் பண்ணுவேன் என ஒரு முந்தைய கட்டளையில் சொன்னதைப்போல நான் நிறைவேற்றுவேன்.

15 இதோ, அழிப்பதற்கும் என்னுடைய சத்துருக்களை பாழாக்கவும் சங்காரக்காரனை நான் அனுப்பினேன், என்னுடைய சுதந்தரத்தை தீட்டுப்படுத்தவும், என்னுடைய பரிசுத்தவான்கள் கூடிவருவதற்காக நான் பரிசுத்தம் செய்த தேசத்தில் என்னுடைய நாமத்தை தூஷிக்கவும் அநேக வருஷங்கள் அவர்கள் விடப்படமாட்டார்கள்.

16 இதோ, என்னுடைய ஜனங்களின் மீட்பிற்காக ஒன்று கூடிவரவும், என்னுடைய சத்துருக்களின் கோபுரங்களை இடித்துத் தள்ளவும், அவர்களுடைய காவற்காரர்களை சிதறச் செய்யவும், என்னுடைய வீட்டின் அனைவருக்கும், பலமான என்னுடைய வீரர்களுக்கும், என்னுடைய வாலிபர்களுக்கும், நடுத்தர வயதானவர்களுக்கும் சொல்லும்படியாக என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனுக்கு நான் கட்டளையிட்டேன்;

17 ஆனால் என்னுடைய வீட்டின் அனைவரும் என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை.

18 ஆனால் என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கிறவர்கள் அங்கிருக்கிற அளவில், அவர்கள் உண்மையுள்ளவர்களாய் தொடர்ந்திருந்தால் ஒரு ஆசீர்வாதத்தையும் ஒரு தரிப்பித்தலையும் அவர்களுக்காக நான் ஆயத்தம் செய்திருக்கிறேன்.

19 நான் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்டேன், அவர்களுடைய காணிக்கைகளை ஏற்றுக்கொண்டேன்; அவர்களுடைய விசுவாசத்தின் பரிட்சையாக இதுவரைக்கும் அவர்கள் கொண்டுவரப்படுவது எனக்கு அவசியமாயிருக்கிறது.

20 இப்பொழுது, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; இங்கே வருகிற அளவில் அவர்கள் சுற்றிலுமுள்ள பகுதிகளில் தங்கலாம், அவர்கள் தங்கட்டுமென, நான் உங்களுக்கு ஒரு கட்டளை கொடுக்கிறேன்.

21 கிழக்கில் குடும்பங்கள் இருப்பதால், தங்கமுடியாதவர்கள், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் அவர்களுக்கு நியமிக்கிற அளவில் கொஞ்சகாலத்திற்கு தங்குவார்களாக;

22 ஏனெனில் இந்தக் காரியத்தைக் குறித்து அவனுக்கு நான் ஆலோசனையளிப்பேன், அவர்களுக்கு அவன் நியமித்த சகல காரியங்களும் நிறைவேற்றப்படும்.

23 சுற்றிலும் வசிக்கிற என்னுடைய சகல ஜனங்களும் மிக உண்மையுள்ளவர்களாயும், ஜெபத்துடனும் எனக்கு முன்பாக தாழ்மையுள்ளவர்களாயும் இருப்பார்களாக, மேலும் அவைகள் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்று என்னில் ஞானம் விளங்கும்வரை நான் அவர்களுக்கு வெளிப்படுத்திய காரியங்களை வெளிப்படுத்தாது இருப்பார்களாக.

24 நியாயத்தீர்ப்புகளைப்பற்றி பேசாதீர்கள், விசுவாசத்தையோ அல்லது பராக்கிரம கிரியைகளைப்பற்றியோ மேன்மை பாராட்டாதிருப்பார்களாக, ஆனால் ஜனங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப முடிந்தவரை ஒரே பகுதியில் கவனமாக ஒன்று கூடுவார்களாக;

25 இதோ, சட்டத்தின்படி எங்களுக்கு நியாயத்தையும் நீதியையும் செய்து எங்களுடைய தவறுகளிலிருந்து சீர்படுத்துங்கள் என ஜனங்களுக்கு நீங்கள் சொல்லும்போது, சமாதானத்திலும் பாதுகாப்பிலும் நீங்கள் இளைப்பாறும்படியாக, அவர்களுடைய கண்களில் தயையையும் கிருபையையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

26 இப்பொழுது, இதோ, என்னுடைய சிநேகிதரே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இஸ்ரவேலின் சேனை மிகப்பெரியதாகும்வரை இந்த வழியில் ஜனங்களின் கண்களில் நீங்கள் தயை காண்பீர்களாக.

27 என்னுடைய வீட்டிற்கு பலம் சேர்க்க நான் நியமித்த என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனுக்கும் என்னுடைய மூப்பர்களுக்கும் நேரமிருப்பதற்காக, பார்வோனின் இருதயத்திற்கு நான் செய்ததைப்போல, அவ்வப்போது ஜனங்களின் இருதயங்களை நான் இளக்குவேன்.

28 வாங்க முடிகிற ஜாக்சன் மாகாணத்திலும் சுற்றிலுமுள்ள பக்கத்து மாகாணங்களிலும் வாங்கப்படக்கூடிய சகல நிலங்களையும் குறித்து நான் உங்களுக்கு கட்டளையிட்டவற்றை நிறைவேற்றுவதற்காக புத்திசாலியான மனுஷர்களை நான் அனுப்பினேன்.

29 ஏனெனில் இந்த நிலங்கள் வாங்கப்பட வேண்டுமென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது; அவைகள் வாங்கப்பட்ட பின்பு நான் கொடுத்த பரிசுத்தமாக்கப்படுதல் நியாயப்பிரமாணங்களின்படி என்னுடைய பரிசுத்தவான்கள் அவைகளை வைத்துக்கொள்ள வேண்டும்.

30 இந்த நிலங்கள் வாங்கப்பட்ட பின்பு, தங்களுடைய பணத்தால் முன்பு வாங்கிய, தங்களுடைய சொந்த நிலங்களை சுதந்தரமாக்கிக் கொள்வதிலும், அவர்கள் மேல் விழத்தக்கதாக என்னுடைய சத்துருக்களின் கோபுரங்களை இடித்துத் தள்ளி, அவர்களுடைய காவற்காரர்களை சிதறடித்து, என்னை வெறுக்கிற அவர்களின் மூன்றாவது நான்காவது தலைமுறைமட்டும் என்னுடைய சத்துருக்களுக்கு நீதியை சரிக்கட்டியதிலும் இஸ்ரவேலின் சேனைகளை நான் குற்றமற்றவர்களாக வைத்திருப்பேன்.

31 ஆனால் முதலில் என்னுடைய சேனை பெரிதாகுவதாக, சூரியனைப்போல அழகாக, சந்திரனைப்போல தெளிவாக அவளுடைய கொடிகள் சகல தேசங்களுக்கும் கொடியதாய் தோன்றும்படியாகவும்;

32 சீயோனின் ராஜ்யம் நம்முடைய தேவனின் மற்றும் அவருடைய கிறிஸ்துவின் ராஜ்யம் என இந்த உலகத்தின் ராஜ்யங்கள், எனக்கு முன்பாக பரிசுத்தப்படுவதாக; ஆகவே அவளுடைய சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிவோம் என ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுவார்களாக.

33 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கர்த்லாந்து தேசத்தில் என்னுடைய நாமத்தில் கட்டப்படவேண்டுமென நான் கட்டளையிட்ட என்னுடைய ஆலயத்தில், உன்னதத்திலிருந்து என்னுடைய சபையின் முதல் மூப்பர்கள் அவர்களுடைய தரிப்பித்தலைப் பெற்றுக் கொள்ளவேண்டுமென்பது எனக்கு அவசியமாயிருக்கிறது.

34 சீயோனைக் குறித்து நான் கொடுத்த அந்த கட்டளைகளும் அவளுடைய நியாயப்பிரமாணமும் செயல்படுத்தப்பட்டு, அவளுடைய மீட்பிற்குப் பிறகு நிறைவேற்றப்படுவதாக.

35 அழைப்பின் ஒரு நாள் அங்கிருந்தது, ஆனால் தெரிந்துகொள்ளும் நாளுக்கான நேரம் வந்து விட்டது; தகுதியுள்ள அவர்கள் தெரிந்துகொள்ளப்படுவார்களாக.

36 தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆவியின் தொனியால் என்னுடைய ஊழியக்காரனுக்கு வெளிப்படுத்தப்படுவார்கள்; அவர்கள் பரிசுத்தமாக்கப்படுவார்கள்;

37 அவர்கள் பெற்றுக் கொண்ட ஆலோசனையை அவர்கள் பின்பற்றுகிற அளவில், சீயோனைக்குறித்த சகல காரியங்களையும் நிறைவேற்ற அநேக நாட்களுக்குப் பின்பும் அவர்கள் வல்லமை பெற்றிருப்பார்கள்.

38 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களை அடித்த ஜனங்களுக்கு மட்டுமல்ல, சகல ஜனங்களுக்கும் சமாதானத்தை வேண்டுங்கள்;

39 சமாதானத்தின் கொடியை உயர்த்தி பூமியின் கடையாந்தரம் வரைக்கும் சமாதானத்தின் பிரகடனத்தைச் செய்யுங்கள்;

40 உங்களிலிருக்கிற ஆவியின் தொனியின்படி உங்களை அடித்தவர்களுக்கு சமாதானத்தை முன் மொழியுங்கள், உங்கள் நன்மைக்கு ஏதுவாக சகல காரியங்களும் நடக்கும்.

41 ஆகவே, உண்மையுள்ளவர்களாயிருங்கள்; இதோ, முடிவுபரியந்தம் நான் உங்களுடனேயே கூட இருப்பேன். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.