வேதங்கள்
3 நேபி 25


அதிகாரம் 25

இரண்டாம் வருகையின்போது பெருமைக்காரரும், துன்மார்க்கரும் தாளடியைப் போல எரிக்கப்படுவார்கள் – அந்தப் பெரிதும் பயங்கரமுமான நாளுக்கு முன்னதாக எலியா திரும்புவான் – மல்கியா 4ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.பி. 34.

1 ஏனெனில் இதோ, சூளையைப் போல எரிகிற நாள் வருகிறது; பெருமைக்காரர் யாவரும், ஆம், துன்மார்க்கம்பண்ணுகிற யாவரும் தாளடியாயிருப்பார்கள்; வரப்போகிற நாள் அவர்களை எரித்துப் போடும். அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

2 ஆனால் என் நாமத்திற்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் குமாரன் தன் செட்டைகளின் ஆரோக்கியத்தை வைத்து எழும்புவார்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய் தொழுவத்திலுள்ள கன்றுகளைப் போல வளருவீர்கள்.

3 நீங்கள் துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்கிற அந்நாளிலே உங்கள் உள்ளங்கால்களின் கீழ் அவர்கள் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

4 ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் கட்டளைகளுடனும், நியாயங்களுடனும், நான் கட்டளையிட்ட என் தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தை நினையுங்கள்.

5 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன்னமே தீர்க்கதரிசியாகிய எலியாவை உங்களிடத்திற்கு அனுப்புவேன்

6 நான் வந்து பூமியை ஒரு சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளின் இருதயங்களை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.