வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 26


பாகம் 26

ஜூலை 1830ல் பென்சில்வேனியாவின் ஹார்மனியில் தீர்க்கதரிசியான ஜோசப் ஸ்மித்துக்கும், ஆலிவர் கௌட்ரிக்கும், ஜான் விட்மருக்கும் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல் (பாகம் 24க்கான தலைப்பைப் பார்க்கவும்).

1, வேதங்களை ஆராயவும், பிரசங்கிக்கவும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள்; 2, பொது சம்மத விதி உறுதிசெய்யப்பட்டது.

1 இதோ, அடுத்த மாநாட்டை நடத்தும்படியாக மேற்கே நீங்கள் செல்லும்வரை, வேதங்களை ஆராய்வதற்கும், பிரசங்கிக்கவும், கோல்ஸ்வில்லிலுள்ள சபையை திடப்படுத்துவதற்கும் தேவைக்கேற்ப தேசத்தில் பிரயாசப்பட உங்கள் நேரத்தை அர்ப்பணிப்பீர்களாக, பின்னர் நீங்கள் செய்ய வேண்டியவை தெரிவிக்கப்படும் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

2 சபையின் பொது சம்மதத்தாலும், அதிக ஜெபத்தாலும் விசுவாசத்தாலும் சகல காரியங்களும் செய்யப்படும், ஏனெனில் சகல காரியங்களையும் நீங்கள் விசுவாசத்தால் பெறுவீர்கள். ஆமென்.