2010–2019
பரிசுத்த ஆவி எவ்வாறு உங்களுக்குதவுகிறது?
ஏப்ரல் 2017


பரிசுத்த ஆவி எவ்வாறு உங்களுக்குதவுகிறது?

பரிசுத்த ஆவியானவர் எச்சரிக்கிறார், பரிசுத்த ஆவியானவர் தேற்றுகிறார், பரிசுத்த ஆவியானவர் சாட்சியளிக்கிறார்.

அண்மையில் ஒரு திங்கள் கிழமை மாலையில், என்னுடைய மனைவி லேசாவும் நானும் எங்கள் பகுதியில் ஒரு இளம் குடும்பத்தின் வீட்டு முன்பு நின்றோம். நாங்கள் அங்கிருந்தபோது, அவர்களுடைய ஒன்பது வயது மகன் குடும்ப இல்ல மாலைக்கான பாடத்தை ஆயத்தப்படுத்தியிருப்பதாகவும் நாங்களும் அங்கிருக்குமாறு அக்குடும்பத்தினர் எங்களை அழைத்தார்கள். நாங்கள் பங்கெடுத்தோம்!

ஆரம்ப பாடல், ஜெபம், குடும்ப விவகாரங்களைத் தொடர்ந்து அந்த ஒன்பது வயது பையன் கையால் எழுதப்பட்டிருந்த தனது பாடத்திலிருந்து ஒரு  உள்ளுணர்வுடைய கேள்வியைப் படிக்க ஆரம்பித்தான். “பரிசுத்த ஆவி எவ்வாறு உங்களுக்குதவுகிறது?” இந்த முக்கியமான கேள்வியுடன் குறிக்கப்பட்டிருந்த அவனுடைய குறிப்புகள் இங்கே. இந்தக் கேள்வி அர்த்தமிக்க குடும்ப கலந்துரையாடலைத் தொடங்கியது, ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டனர். நமது ஆசிரியரின் பாட ஆயத்தத்தால் நான் கவரப்பட்டேன், அவனுடைய மிக நல்ல கேள்வி மீண்டும் மீண்டும் என்னை சிந்திக்க வைத்தது.

படம்
கையால் எழுதப்பட்ட குடும்ப இல்ல மாலை பாடம்

அப்போதிலிருந்து நான் தொடர்ந்து எனக்குள்ளே கேட்டுக்கொள்வேன், “பரிசுத்த ஆவி எவ்வாறு உங்களுக்குதவுகிறது?”-- எட்டு வயதாகி ஞானஸ்நானத்திற்கு ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கிற, சமீபத்தில் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றிருக்கிற ஆரம்ப வகுப்பு பிள்ளைகளுக்கு குறிப்பாக இந்த கேள்வி பொருத்தமாயிருக்கிறது. சமீபத்தில் மனமாறிய ஆயிரக்கணக்கானவர்களுக்கும், இது பொருத்தமாயிருக்கும்.

“பரிசுத்த ஆவி எவ்வாறு உங்களுக்குதவுகிறது?” என்பதைக் கருத்தில் கொள்ள நம் ஒவ்வொருவரையும், விசேஷமாக ஆரம்ப வகுப்பு பிள்ளைகளை நான் வரவேற்கிறேன். இந்தக் கேள்வியைக்குறித்து நான் சிந்தித்தபோது என்னுடைய இளம் வயதிலிருந்து ஒரு அனுபவத்தை உடனேயே நான் நினைவுகூர்ந்தேன். பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்திற்கு என்னுடைய அழைப்பிற்குப் பின் உடனேயே என்னுடைய வாழ்க்கையைப்பற்றி சபை பத்திரிகையில் மூப்பர் ராபர்ட்  டி.ஹேல்ஸ் எழுதிய கட்டுரையை அவர் இணைத்தபோது அவரிடம் நான் சொன்ன கதை இது. 1 உங்களில் சிலர் இந்தக் கதையைக் கேட்டிருக்கலாம், ஆனால் அநேகர் கேட்டிருக்கமாட்டீர்கள்.

எனக்கு சுமார் 11 வயதாயிருந்தபோது, ஒரு வெயில் காலத்தின் கோடை கால நாளில் எங்கள் வீட்டிற்கருகிலிருந்த மலைகளில் மலை ஏற என்னுடைய அப்பாவும் நானும் சென்றோம். செங்குத்தான பாதையில் அப்பா ஏறியபோது, பாதை அருகிலிருந்த பாறையிலிருந்து மற்றொன்றுக்கு நான் தாவினேன். ஒரு பெரிய பாறையில் ஏறும் எண்ணத்துடன் அதன் உச்சிக்கு நான் தொற்றி ஏறினேன். நான் அப்படிச் செய்தபோது என்னுடைய தகப்பன் என் பெல்டைப் பிடித்து சீக்கிரமே என்னை கீழே இறக்கியதைப் பார்த்து நான் வியப்புற்றேன். “அந்தப் பாறையில் ஏறாதே. பாதையின் வழியே செல்வோம்” என்று சொன்னார்.

சில நிமிடங்களுக்குப் பின்னர், பாதையின் உயரத்திலிருந்து நாங்கள் கீழே பார்த்தபோது, நான் ஏறுவதற்கெண்ணிய அதே பாறையின் உச்சியில் ஒரு பாம்பு வெயிலில் குளிர் காய்ந்து கொண்டிருந்ததை பார்த்து நாங்கள் நடுங்கினோம்.

பின்னர் நாங்கள் வீட்டிற்குத் திரும்ப வண்டியில் போய்க்கொண்டிருந்தபோது, “பாம்பு அங்கிருந்ததென்று எப்படி உங்களுக்குத் தெரியும்?” என நான் கேட்பதற்கு அப்பா காத்திருக்கிறாரென நான் அறிவேன். ஆகவே என்னுடைய கேள்வியை நான் கேட்டேன், என் கேள்வி பரிசுத்த ஆவியைப்பற்றியும் பரிசுத்த ஆவி எவ்வாறு நமக்குதவ முடியுமெனவும் ஒரு கலந்துரையாடலுக்கும் நடத்தியது. அந்த நாளில் நான் கற்றதை ஒருபோதும் என்னால் மறக்கமுடியாது.

பரிசுத்த ஆவி எவ்வாறு எனக்குதவியதென்பதை உங்களால் பார்க்க முடிகிறதா? என்னுடைய உயிரைக் காப்பாற்றிய பரிசுத்த ஆவியின் அமர்ந்த மெல்லிய குரலுக்கு என் தகப்பன் செவிகொடுத்ததற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.

பரிசுத்த ஆவியைப்பற்றி நமக்கு என்ன தெரியும்

“பரிசுத்த ஆவி எவ்வாறு உங்களுக்குதவுகிறது? என்ற கேள்வியை அதிகமாக நாம் கருத்தில்கொள்வதற்கு முன்பு பரிசுத்த ஆவியைக்குறித்து கர்த்தர் என்ன வெளிப்படுத்தியிருக்கிறாரென நாம் பார்ப்போம். நாம் அநேக நித்திய சத்தியங்களைப் பார்க்கலாம், ஆனால் இன்று மூன்றை நான் முக்கியப்படுத்துகிறேன்.

முதலாவதாக, பரிசுத்த ஆவி தெய்வீகத்தின் மூன்றாவது அங்கத்தினர். இந்த சத்தியத்தை முதல் விசுவாசப் பிரமாணத்தில் நாம் அறிகிறோம். “நித்திய பிதாவாகிய தேவனையும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியையும் நாங்கள் நம்புகிறோம்.” 2

இரண்டாவதாக, தற்கால வேதங்கள் விவரிப்பதைப்போல, பரிசுத்த ஆவி, ஆவி நபர். “மனுஷனுடையது போல தொட்டுணரத்தக்கதான மாம்சமும் எலும்புமுள்ள சரீரம் பிதாவுக்கிருக்கிறது, குமாரனுக்கும் கூட. ஆனால் பரிசுத்த ஆவிக்கு மாம்சமும் எலும்புமுள்ள சரீரம் இல்லை. இல்லாவிட்டால் பரிசுத்த ஆவி நம்மில் வாசம் செய்யமுடியாது.” 3 அதாவது, சரீர உடல்களிருக்கிற பிதாவாகிய தேவனையும், இயேசு கிறிஸ்துவையும் போலல்லாமல் பரிசுத்த ஆவிக்கு ஆவி சரீரமிருக்கிறது. இந்த உண்மை, பரிசுத்த ஆவி, தேவனின் ஆவி, கர்த்தரின் ஆவி, வாக்குத்தத்தத்தின் ஆவி, தேற்றரவாளனையும் சேர்த்து நமக்கு பிரசித்தமான பிற பெயர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு கொடுக்கப்பட்டதை தெளிவாக்குகிறது. 4

மூன்றாவதாக, கைகள் வைக்கப்படுவதால் பரிசுத்த ஆவியின் வரம் வருகிறது. ஞானஸ்நானத்தைத் தொடர்ந்து இந்த நியமம் பரிசுத்த ஆவியின் நிரந்தர தோழமைக்கு நம்மைத் தகுதிப்படுத்துகிறது. 5 இந்த நியமத்தைச் செய்ய, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கும் தகுதியானவர்கள் அந்நபரின் தலையின்மேல் தங்கள் கைகளை வைத்து, அவன் அல்லது அவளின் பெயரை அழைத்து தங்களுடைய ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தை உரைத்து, 6 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவன் அல்லது அவளை பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் ஒரு அங்கத்தினராக்கி, முக்கியமான சொற்றொடரான “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்” என சொல்கிறார்கள்.

பரிசுத்த ஆவி எவ்வாறு உங்களுக்குதவுகிறது?

பரிசுத்த ஆவியானவர் பற்றிய அந்த எளிய மூன்று முக்கிய சத்தியங்களின் பரிசீலனையுடன் நாம் நமது முதல் கேள்விக்குத் திரும்புகிறோம், “பரிசுத்த ஆவி எவ்வாறு உங்களுக்குதவுகிறது?”

பரிசுத்த ஆவி எச்சரிக்கிறது

என்னுடைய பிள்ளைப்பருவத்தின் அனுபவத்தை நான் விளக்கியதைப்போல, சரீர மற்றும் ஆவிக்குரிய அபாயங்களில் முன்கூட்டியே உங்களை எச்சரிப்பதால் பரிசுத்த ஆவி உங்களுக்குதவலாம்.. ஜப்பானில் பகுதி தலைமையில் நான் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது மீண்டும் பரிசுத்த ஆவியின் முக்கியமான எச்சரிக்கும் பாத்திரத்தைப்பற்றி நான் அறிந்தேன்.

இந்த நேரத்தில், ஜப்பான் சென்டாய் ஊழியத்தின் தலைவராயிருந்த ரெய்ட் டெட்டகோவுடன் நான் நெருக்கமாக பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவருடைய வழக்கமான ஊழியப் பணியின் பகுதியாக, அவருடைய தென் பகுதி ஊழியத்தில் ஊழியக்காரர் தலைவர்களின் ஒரு கூட்டத்தை தலைவர் டெட்டகோ திட்டமிட்டார். கூட்டத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன், குறிப்பிட்ட சிறிய எண்ணிக்கையிலான மூப்பர்கள் மற்றும் சகோதரி தலைவர்களையும் அழைப்பதற்குப் பதிலாக தென் மண்டலத்தின் அனைத்து ஊழியக்காரர்களையும் கூட்டத்திற்கு அழைக்க தலைவர் டெட்டகோவின் இருதயத்தில் ஒரு உணர்வு வந்தது.

அவருடைய எண்ணத்தை அவர் அறிவித்தபோது, இந்த குறிப்பிட்ட கூட்டம் அனைத்து ஊழியக்காரர்களுக்கும் வடிவமைக்கபடவில்லை, ஊழியக்கார தலைவர்களுக்கு மட்டுமே என மற்றவர்கள் அவருக்கு நினைவுபடுத்தினார்கள். ஆயினும், அவர் பெற்ற உணர்த்துதலைப் பின்பற்ற மற்ற காரியங்களை ஒதுக்கிவிட்டு, புக்குஷிமா பட்டணத்தையும் சேர்த்து, ஏராளமான கடற்கரை பட்டணங்களில் ஊழியம் செய்துகொண்டிருந்த எல்லா ஊழியர்களையும் அவர் கூட்டத்திற்கு அழைத்தார். மார்ச்  11, 2017ல் அந்தக் குறிப்பிட்ட நாளில், கோரியாமா என்ற உள்நாட்டு பட்டணத்தில் விரிவாக்கப்பட்ட ஊழியக்கூட்டத்தில் ஊழியக்காரர்கள் ஒன்றுகூடினர்.

இந்த கூட்டத்தின்போது, ஜப்பான் சென்டாய் ஊழியமிருந்த இடத்தின், ஜப்பான் பகுதியில் 9.0 அளவிலான பூமியதிர்ச்சியும் சுனாமியும் தாக்கியது. சோகப்படத்தக்கதாக அநேக கடற்கரை பட்டணங்கள், கூடியிருந்த ஊழியக்காரர்களின் இடங்களையும் சேர்த்து, அழிந்து அதிக உயிர் சேதங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து புகுஷிமா பட்டணம் அணு அபாயத்தால் பாதிக்கப்பட்டது.

அந்த நாளில் ஊழியக்காரர்கள் ஒன்றுகூடிய கூடுமிடம் பூமி அதிர்ச்சியால் பழுதடைந்தாலும் பரிசுத்த ஆவியின் உணர்த்துதல்களைப் பின்பற்றியதால் தலைவர் மற்றும் சகோதரி டெட்டகோவும் எல்லா ஊழியக்காரர்களும் பாதுகாப்பாயிருந்தனர். அவர்கள் அபாயத்திற்கு அப்பாலிருந்து சுனாமி மற்றும் அணு அபாயத்திலிருந்து அதிக மைல் தூரத்திலிருந்தார்கள்.

எப்போதும் மெல்லிய அமர்ந்த உணர்த்துதல்களை பரிசுத்த ஆவியிடமிருந்து நீங்கள் கேட்கும்போது, உங்களுக்குத் தெரியாமலே ஆவிக்குரிய, மற்றும் உலக அபாயங்களிலிருந்து நீங்கள் அகற்றப்படுவீர்கள்.

சகோதர சகோதரிகளே, என்னுடைய அப்பாவுக்கும், தலைவர் டாட்டியோகாவுக்கும் பரிசுத்த ஆவி செய்தததைப்போல உங்களை எச்சரிப்பதால் அவர் உங்களுக்குதவுவார்.

பரிசுத்த ஆவி தேற்றுகிறது

“பரிசுத்த ஆவி எவ்வாறு உங்களுக்குதவுகிறது?” என்ற கேள்விக்கு பதிலைத் தொடர, தேற்றரவாளனாக அவருடைய பாத்திரத்தை இப்போது நாம் ஆராயலாம். நம் வாழ்க்கை முழுவதும் எதிர்பாராத நிகழ்வுகள், துக்கம், வேதனை மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இருந்தும் இந்த சோதனைகளுக்கு மத்தியில், அவரது முக்கியமான பாத்திரங்களில் ஒன்றில் பரிசுத்த ஆவி, அவருடைய பெயர்களில் ஒன்றான தேற்றரவாளனாக நமக்கு சேவை செய்கிறது. இயேசு கிறிஸ்துவிடமிருந்து இந்த சமாதான, மறுஉறுதியான வார்த்தைகள் இந்த பரிசுத்த பாத்திரத்தை விளக்குகிறது. “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் அனுப்புவார். 7

இதைக் கூடுதலாக விவரிக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு லாஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா, அஐநாவிலிருந்து, ஒரு கிராமத்துக்கு ஐந்து மகன்களுடன் குடியேறிய ஒரு குடும்பத்தின் உண்மை விவரத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன். இரண்டு மூத்த மகன்கள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்து, நண்பர்களுடனும், தலைவர்களுடனும் பயிற்சியாளர்களுடனும் இணைந்திருந்தார்கள். அவர்களில் அநேகர் சபையின் விசுவாசமுள்ள அங்கத்தினர்களாயிருந்தனர். இந்த உறவுகள் மூத்தவன் பெர்னான்டோ மற்றும் அவனுடைய இளைய சகோதரனினின் ஞானஸ்நானத்திற்கு நடத்த உதவியது.

பின்னர் பெர்னான்டோ வீட்டிலிருந்து போய், அவனுடைய படிப்பைத் தொடர்ந்து கல்லூரி கால்பந்தாட்டத்தில் விளையாடினான். அவனுடைய இனிய பள்ளித்தோழி பாய்லேயை ஆலயத்தில் அவன் திருமணம் செய்தான். பெர்னான்டோவும், பாய்லேயும் தங்களுடைய பள்ளிப்படிப்பை முடித்து தங்களுடைய பெண் குழந்தையின் பிறப்பை மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். பெர்னான்டோவும் பாய்லேயும் திரும்ப வீட்டிற்கு வர குடும்பத்தினர் உதவிக்கொண்டிருந்தபோது, பாய்லேயும் அவளுடைய சகோதரியும் சாலையில் அநேக வாகனங்கள் ஈடுபட்டிருந்த விபத்தில், பாய்லேயும் பிறக்காத அவளுடைய குழந்தையும் பரிதாபமாக மரித்தார்கள்.

படம்
பெர்னான்டோ மற்றும் பாய்லே

இருந்தும், பெர்னான்டோ மற்றும் பாய்லேயின் பெற்றோர் மற்றும் கூடப்பிறந்தவர்களின் ஆழமான வேதனையின் அளவுக்கு எதிராக ஏறக்குறைய உடனேயே மிக ஆழமான சமாதானமும், தேறுதலும் அவர்கள் மேல் இறங்கியது. இந்த புரிந்துகொள்ளமுடியாத துயரத்தினூடே பரிசுத்த ஆவி அவரது பாத்திரத்தில் தேற்றரவாளனாக பெர்னான்டோவை உண்மையில் ஆதரித்தது. அந்த பரிதாபமான விபத்தில் ஈடுபட்டிருந்த எல்லோர் மேலும் மன்னிப்பு மற்றும் அன்பின் ஒரு எண்ணத்துடன் பெர்னான்டோவை நடத்திய ஒரு நிலைத்த சமாதானத்தை ஆவி கொடுத்தது.

விபத்தின்போது ஊழியக்காரராக இருந்த அவளுடைய சகோதரரை பாய்லேயின் பெற்றோர் அழைத்தார்கள். அவருடைய அன்பான சகோதரியைப்பற்றிய கடினமான செய்தியைக் கேட்ட அவருடைய உணர்வுகளை பின்னர் அவருடைய குடும்பத்திற்கு ஒரு கடிதத்தில் அவர் விளக்கினார்: “ஒரு புயலுக்கு மத்தியில் மிக அமைதியான உங்கள் குரல்களைக் கேட்டது என்னை ஆச்சரியப்படுத்தியது. என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.   . . . என் நினைவுக்கு வருவதெல்லாம், நான் வீட்டிற்கு வரும்போது என்னுடைய சகோதரி அங்கிருக்கமாட்டாள். . . .இரட்சகர் மற்றும் அவரது திட்டத்தில் உங்களுடைய உறுதியான சாட்சிகளால் நான் ஆறுதலடைந்தேன். நான் படித்து, போதிக்கும்போது என் இருதயத்தை நிரப்பிய அதே இனிமையான ஆவி என் கண்களில் கண்ணீரைக் கொண்டுவந்தது. பின்னர் நான் ஆறுதலடைந்து, நான் அறிந்த காரியங்களை எனக்கு நினைப்பூட்டியது.” 8

பெர்னான்டோவுக்கும் பாய்லேவின் குடும்பத்துக்கும் அவர் செய்தது போல, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு ஆறுதல் அளித்து உங்களுக்கு உதவுவார்.

பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுக்கிறார்

பிதாவையும், குமாரனையும், சகல சத்தியங்களையும் குறித்து பரிசுத்த ஆவியும் சாட்சி பகருகிறது. 9 சீஷர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது கர்த்தர் சொன்னார், “பிதாவினிடத்திலிருந்து  நான் உங்களுக்கு அனுப்பப்போகிற தேற்றரவாளன் வரும்போது அவர் என்னைக்குறித்து சாட்சி கொடுப்பார்.” 10

சாட்சியாக பரிசுத்த ஆவியின் மதிப்புமிக்க பாத்திரத்தை விளக்கும்படியாக பெர்னான்டோ மற்றும் பாய்லேயின் கதையை நான் தொடருவேன். உங்களுக்கு நினைவிருந்தால் பெர்னான்டோவும் அவனுடைய சகோதரனும் ஞானஸ்நானம் பெற்றதை நான் பகிர்ந்திருக்கிறேன், ஆனால் அவனுடைய பெற்றோரும், இளைய மூன்று சகோதரர்களும் ஞானஸ்நானம் பெறவில்லை. பலஆண்டுகளாக, ஊழியக்காரர்களை சந்திக்க ஏராளமான அழைப்புகளைப் பெற்றும் கூட ஒவ்வொரு முறையும் குடும்பத்தினர் மறுத்தார்கள்.

பாய்லேயும் தங்களுடைய பிறக்காத பேரக்குழந்தையும் மரித்த வேதனையில் பெர்னான்டோவின் குடும்பம் ஆறதலில்லாமலிருந்தது. பெர்னான்டோவையும் பாய்லே குடும்பத்தினரைப் போலல்லாமல் அவர்களால் சமாதானத்தையும் ஆறுதலையும் காணமுடியவில்லை. பாய்லேயின் குடும்பத்தினருடன் சேர்ந்து தங்கள் மகனும் எவ்வாறு தங்களின் பாரமான சுமையைத் தாங்கிக்கொள்கிறார்களென அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

இறுதியாக, அவர்களின் மகன் பெற்றிருக்கிற இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் அவர்களுக்கில்லை, இதுதான் சமாதானத்தின் ஆறுதலின் ஆதாரமென அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்த உணர்வைத் தொடர்ந்து தங்களுடைய குடும்பத்திற்கு சுவிசேஷத்தைப் போதிக்க ஊழியக்காரர்களை அவர்கள் அழைத்தார்கள். அதன் விளைவாக தங்களுடைய சாட்சியையும், சந்தோஷத்தின் மகா திட்டத்தின் சாட்சியையும் அவர்கள் பெற்றார்கள். அவர்கள் ஆர்வமாகத் தேடிக்கொண்டிருந்த இனிய சமாதானத்தையும் அமைதியான ஆறுதலையும் அது அவர்களுக்குக் கொண்டுவந்தது.

படம்
பெர்னான்டோவின் குடும்பத்தின் ஞானஸ்நானம்

பாய்லே மற்றும் பிறக்காத தங்களுடைய பேரக்குழந்தையின் இழப்பிற்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர் பெர்னான்டோவின் பெற்றோரும் இரண்டு இளைய சகோதரர்களும் ஞானஸ்நானம் பெற்று, திடப்படுத்தப்பட்டு, பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றார்கள். இப்போது ஆறு வயதான பெர்னான்டோவின் கடைசி சகோதரன் அவனுக்கு எட்டு வயதாகும்போது ஞானஸ்நானத்திற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். ஆவியான பரிசுத்த ஆவி, சுவிசேஷத்தின் சத்தியத்தை சாட்சியளித்து, ஞானஸ்நானம் பெறவும், பரிசுத்த ஆவியைப் பெறவும் விரும்ப அவர்களை நடத்தியதென்றும் அவர்கள் ஒவ்வொருவரும் சாட்சியளிக்கிறார்கள்.

சகோதர சகோதரிகளே, பெர்னான்டோ குடும்பத்திற்கு பரிசுத்த ஆவி செய்ததைப்போல உங்களுக்கு சாட்சியளிப்பதால் அவர் உங்களுக்குதவுவார்.

சுருக்கம்

இப்போது நாம் சுருக்கிச் சொல்வோம். பரிசுத்த ஆவியைக் குறித்து ஒரு அறிவை நமக்குக் கொண்டுவந்த மூன்று வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை நாம் கண்டுகொண்டோம். பரிசுத்த ஆவி, தெய்வீகத்தின் மூன்றாவது அங்கத்தினர், பரிசுத்த ஆவி, ஆவி நபர், கைகள் வைக்கப்படுவதால் பரிசுத்த ஆவியின் வரம் வருகிறது என்பவைகளே இவைகள். பரிசுத்த ஆவி எவ்வாறு உங்களுக்குதவும் என்ற கேள்விக்கு மூன்று பதில்களையும் நாம் கண்டுபிடித்தோம். பரிசுத்த ஆவி எச்சரிக்கிறது, பரிசுத்த ஆவி தேற்றுகிறது, பரிசுத்த ஆவி சாட்சியளிக்கிறது.

வரத்தைக் காத்துக்கொள்ள தகுதி

ஞனஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட அல்லது சமீபத்தில் அல்லது நீண்ட காலங்களுக்கு முன்பு பெற்ற உங்களுக்கு, பரிசுத்த ஆவியை நாம் காத்துக்கொள்ளுவது நமது சரீர, ஆவிக்குரிய பாதுகாப்பிற்கு முக்கியமானது. கற்பனைகளைக் கைக்கொள்ள, தனிப்பட்ட மற்றும் குடும்ப ஜெபம் செய்ய, வேதங்களைப் படிக்க, குடும்பத்தினருடனும், நாம் நேசிப்பவர்களுடனும் அன்பான, மன்னிப்பின் உறவுகளைத் தேட முயற்சி செய்வதால் இதை நாம் செய்ய ஆரம்பிக்கிறோம். நமது சிந்தனைகளை, செயல்களை, நல்ல உரையாடல்களை நாம் காத்துக்கொள்ளவேண்டும். நமது வீடுகளில், சபையில், எங்கெல்லாம் முடிகிறதோ, பரிசுத்த ஆலயத்தில் நமது பரலோக பிதாவை நாம் தொழுதுகொள்ளவேண்டும். ஆவிக்கு நெருக்கமாக இருங்கள், ஆவி உங்களுக்கு நெருக்கமாக இருக்கும்.

சாட்சி

ஒரு அழைப்புடனும் என்னுடைய உறுதியான சாட்சியுடனும் இப்போது நான் நிறைவுசெய்கிறேன். வழக்கமாக நமது ஆரம்ப வகுப்பு பிள்ளைகள் பாடுகிற வார்த்தைகளை மிகமுழுமையாக கடைபிடிக்க நான் உங்களை அழைக்கிறேன். “Listen, listen. The Holy Ghost will whisper. Listen, listen to the still small voice.” 11 என்ற வார்த்தைகளை அவர்கள் அடையாளம் காண்கிறார்களென நான் நம்புகிறேன்.

என்னுடைய அன்பான, வயதான, இளமையான, சகோதர சகோதரிகளே, பிதாவாகிய தேவன், இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியை அடக்கிய தெய்வீகத்தின் மகிமையான தெய்வீக நபர்கள் பற்றி நான் சாட்சியளிக்கிறேன். காலங்களின் நிறைவேறுதலில் பிற்காலப் பரிசுத்தவான்களாக நாம் அனுபவிக்கிற சிலாக்கியங்களில் ஒன்று பரிசுத்த ஆவியின் வரம் என நான் சாட்சியளிக்கிறேன். பரிசுத்த ஆவி உங்களுக்குதவுகிறது, உதவுமென நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவையும், நமது இரட்சகரும் மீட்பருமான அவருடைய பாத்திரத்தையும், நமது பரலோக பிதாவான தேவனையும் குறித்த என்னுடைய விசேஷித்த சாட்சியையும் நான் சேர்த்துக்கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.