2010–2019
மூன்று சகோதரிகள்
அக்டோபர் 2017


மூன்று சகோதரிகள்

நமது சீஷத்துவத்துக்கு நாமே பொறுப்பு, பிறர் நம்மை நடத்துகிற விதத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

அன்பான சகோதரிகளே, அன்பு நண்பர்களே, உலகளாவிய சகோதரிகளின் கூட்டத்துடன் பொது மாநாட்டைத் தொடங்குவது விசேஷமானது மற்றும் அற்புதமானது. கற்பனை செய்யுங்கள்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக அனைத்து வயதுடைய, பின்னணியுள்ள, தேசங்களிலுள்ள, மொழி பேசுகிற சகோதரிகளும் விசுவாசத்திலும், அன்புடனும் ஒன்றுபட்டிருக்கிறார்கள்

நாங்கள் அண்மையில் நமது அன்பான தீர்க்கதரிசி, தலைவர் தாமஸ்  எஸ். மான்சனை சந்தித்தோம். கர்த்தரை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என தெரிவித்தார். கர்த்தரில் உங்கள் அன்புக்காகவும், ஜெபங்களுக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும் தலைவர் மான்சன் உங்கள் மீது மிகவும் நன்றியுடையவராக இருக்கிறார் என நான் அறிவேன்.

நீண்ட காலத்திற்கு முன் மூன்று சகோதரிகளைக்கொண்ட ஒரு குடும்பம் தூரதேசம் ஒன்றில் வாழ்ந்து வந்தார்கள்.

முதல் சகோதரி துக்கமாயிருந்தாள். அவளுடைய மூக்கிலிருந்து நாடிவரை, அவளுடைய தோலிலிருந்து பாதங்கள்வரை எல்லாமுமே அவளுக்கு சரியாகத் தோன்றவில்லை. அவள் பேசும்போது, அவளுடைய வார்த்தைகள் சிலநேரங்களில் விகாரமாக வந்தது, மக்கள் சிரித்தார்கள். யாராவது அவளை விமர்சித்தாலோ எதற்காகவோ அவளை அழைக்க மறந்தாலோ அவள் முகம் சிவந்து, வெளியில் சென்று சோகமாக பெருமூச்சுவிட ஒரு இரகசிய இடத்தைக் கண்டுபிடித்து ஏன் வாழ்க்கை மிக இருண்டும் சந்தோஷமில்லாதும் இருக்கிறதென வியப்புறுவாள்.

இரண்டாவது சகோதரி பைத்தியமாயிருந்தாள். அவள் தன்னை சாமர்த்தியசாலி என நினைத்துக்கொண்டாள், ஆனால் பள்ளிக்கூடத்தில் எப்போதுமே யாரோ ஒருவர் பரிட்சையில் அதிக மதிப்பெண்கள் எடுத்தார்கள். அவள் தன்னை நகைச்சுவையுடையவளாகவும், அழகானவளாகவும், நாகரீகமானவளாகவும், கவர்ச்சியானவளாகவும் கருதினாள். ஆனால் எப்போதுமே யாரோ ஒருவர் அதிக நகைச்சுவையுடையவராகவும், மிக அழகானவராகவும், அதிக நாகரீகமானவராகவும், மிக கவர்ச்சியானவராகவும் தோன்றினார்.

அவள் எப்போதுமே எதிலுமே முதலாவதாக இல்லை, இதை அவளால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. வாழ்க்கை இப்படி இருக்கக்கூடாது!

சிலநேரங்களில் மற்றவர்களை திட்டினாள், அவள் எப்போதுமே ஏதாவது ஒரு காரியத்தால் அல்லது வேறொன்றால் எளிதில் கோபமடைந்தாள்.

இது அவளை விரும்பத்தக்கவளாகவோ புகழ்பெற்றவளாகவோ ஆக்கவில்லை. சிலநேரங்களில் அவள் தன் பற்களைக் கடித்துக்கொண்டு, முஷ்டிகளை இறுக்கிக்கொண்டு “வாழ்க்கை அநியாயமானது!” என நினைப்பாள்.

அடுத்து அங்கே மூன்றாவது சகோதரி. அவளுடைய துக்கமான மற்றும் பைத்தியமான சகோதரிகளைப் போலில்லாமல் அவள் நன்றாகவும் சந்தோஷமாகவுமிருந்தாள். இது, அவளுடைய சகோதரிகளைவிட அவள் அதிக சாமர்த்திசாலி, அதிக அழகானவள், அதிக திறமைசாலி என்பதாலில்லை. இல்லை, சிலநேரங்களில் மக்கள் அவளையும் புறக்கணித்தார்கள். அவள் அணிந்திருந்தவை அல்லது அவள் சொன்னவைகளை சிலநேரங்களில் அவர்கள் கேலி செய்தார்கள். மக்கள் சிலநேரங்களில் அவளைப்பற்றி மோசமாகச் சொன்னார்கள். ஆனால் அது எதுவுமே அவளை அதிகமாகக் கவலைப்பட அவள் அனுமதிக்கவில்லை.

இந்த சகோதரிக்கு பாடப் பிடிக்கும். அவளுக்கு நல்ல சாரீரமில்லை, அதைப்பற்றி மக்கள் சிரித்தார்கள், ஆனால் அது அவளை நிறுத்தவில்லை. “மற்ற மக்களும் அவர்களுடைய கருத்துக்களும் பாடுவதிலிருந்து என்னை நிறுத்த நான் அனுமதிக்கப்போவதில்லை!” என அவள் சொல்வாள்.

உண்மையில் அவள் பாடிக்கொண்டிருந்தது, முதல் சகோதரியை துக்கமாகவும் அவளுடைய இரண்டாவது சகோதரியை பைத்தியமாகவும் ஆக்கியது.

அநேக ஆண்டுகள் கடந்தன, இறுதியாக ஒவ்வொரு சகோதரியும் பூமியில் அவர்களுடைய நேரத்தின் முடிவை அடைந்தார்கள்.

வாழ்க்கையில் ஏமாற்றங்களுக்கு குறைவில்லை என மீண்டும் மீண்டும் கண்டுபிடித்த முதல் சகோதரி இறுதியாக துக்கத்துடன் மரித்தாள்.

ஒவ்வொரு நாளும் விரும்பாமலிருக்க புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கிற இரண்டாவது சகோதரி பைத்தியமாக மரித்தாள்.

மூன்றாவது சகோதரி, அவளுடைய முழுபெலத்துடன் அவளுடைய பாட்டைப் பாடிக்கொண்டு அவளுடைய முகத்தில் ஒரு தன்னம்பிக்கையின் புன்னகையோடு சந்தோஷமாக மரித்தாள்.

வாழ்க்கை ஒருபோதும் மிக எளிதாயில்லை, இந்தக் கதையிலுள்ள மூன்று சகோதரிகளைப்போல மக்கள் ஒருபோதும் ஒரே பரிமாணத்திலிருப்பதில்லை. ஆனால் இவைகளைப்போல மிஞ்சிய எடுத்துக்காட்டுகள் நம்மைப்பற்றி எதையாவது நமக்குப் போதிக்கிறது. நம்மில் அநேகரைப்போல நீங்களிருந்தால், இந்த சகோதரிகளில் ஒன்று, இரண்டு அல்லது ஒருவேளை மூன்று சகோதரிகளில் உங்களின் பகுதியை நீங்கள் அடையாளம் காணலாம். ஒவ்வொருவரையும் நாம் நெருக்கமாகப் பார்ப்போம்.

வஞ்சிக்கப்பட்டவர்

முதல் சகோதரி, யாரோ ஒருவர் செய்கிறதைப்போல, தன்னை ஒரு வஞ்சிக்கப்பட்டவளாகப் பார்த்தாள். 1 ஒன்றை அடுத்து ஒன்றாக தொடர்ந்து அவளுக்கு நேர்வதாகத் தோன்றி அது அவளை பரிதாபகரமாக்கியது. வாழ்க்கையின் இந்த அணுகுமுறையுடன், அவள் எப்படி உணர்ச்சி மற்றும் நடத்தையின் கட்டுப்பாட்டை மற்றவர்களுக்கு அவள் கொடுத்துக்கொண்டிருந்தாள். நாம் இதைச் செய்யும்போது ஒவ்வொரு கருத்துக் காற்றாலும் நாம் அடித்துச் செல்லப்படுகிறோம், தற்போதைய சமூக ஊடகத்தில் அந்த காற்று கடும்புயலின் வேகத்தில் அடிக்கிறது.

அன்பான சகோதரிகளே, உங்களைப்பற்றியோ, உங்களுடைய சந்தோஷங்களைப்பற்றியோ சிறிதும் கவலைப்படாத யாரோ ஒருவரிடத்தில் அல்லது யாரோ ஒரு குழுவினிடத்தில் நீங்கள் ஏன் உங்களுடைய சந்தோஷங்களை சரணடையச் செய்யவேண்டும்?

உங்களைப்பற்றி மற்ற மக்கள் என்ன சொல்கிறார்களென நீங்கள் கவலைப்படுவதாக நீங்கள் உங்களைக் கண்டால் இந்த மாற்று மருந்தைக் கொடுக்கிறேன். நீங்கள் யாரென்று நினைவுகூருங்கள். நீங்கள் தேவ இராஜ்ஜியத்தின் அரண்மனையிலுள்ளவர்கள், பிரபஞ்சம் முழுவதையும் ஆளுகிற பரலோக பெற்றோரின் குமாரத்திகள் என்பதை நினைவுகூருங்கள்.

தேவனின் ஆவிக்குரிய டிஎன்ஏ உங்களிடமிருக்கிறது. உங்களுடைய ஆவிக்குரிய சிருஷ்டிப்பில் உண்டாக்கப்பட்ட, உங்களுடைய அநித்தியத்திற்கு முந்தைய வாழ்க்கையின் பரந்த வெளியில் விருத்தி செய்யப்பட்ட தனித்துவமான வரங்கள் உங்களிடமிருக்கிறது. நீங்கள், நம்முடைய இரக்கமுள்ள நித்திய பரலோக பிதாவின், சேனைகளின் கர்த்தரின், பிரபஞ்சத்தை சிருஷ்டித்தவரின், பரந்த வெளியில் சுழலும் நட்சத்திரங்களை பரப்பியவரின், அவர்களுக்குரிய சுற்றுப்பாதையில் கோளங்களை அமைத்தவரின் பிள்ளை.

நீங்கள் அவருடைய கரத்திலிருக்கிறீர்கள்.

மிகவும் நல்ல கரங்கள்.

அன்பான கரங்கள்

அக்கறையான கரங்கள்

உங்களைப்பற்றி யாராவது பேசுகிற எதுவும் அதை மாற்றமுடியாது. தேவன் உங்களைப்பற்றி சொன்னதை ஒப்பிடும்போது அவர்களுடைய வார்த்தைகள் அர்த்தமற்றவை.

நீங்கள் அவருடைய விலையேறப்பெற்ற பிள்ளை

அவர் உங்களை நேசிக்கிறார்.

நீங்கள் தடுமாறும்போதும், அவரிடத்திலிருந்து நீங்கள் விலகிப்போகும்போதும், தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் காணாமற்போனதாக, கைவிடப்பட்டதாக, அல்லது மறக்கப்பட்டதாக உணர்ந்தால் பயப்படாதிருங்கள். நல்ல மேய்ப்பர் உங்களை கண்டுபிடிப்பார். அவர் உங்களைத் தூக்கி தன் தோள்களின்மேல் போட்டுக்கொள்வார். அவர் உங்களை வீட்டிற்கு தூக்கி வருவார். 2

எனக்கன்பான சகோதரிகளே, இந்த தெய்வீக சத்தியங்கள் உங்கள் இருதயங்களில் ஆழமாக மூழ்க அனுமதியுங்கள். துக்கமில்லாதிருக்க நீங்கள் அநேக காரணங்களை காண்பீர்கள், ஏனெனில் நிறைவேற்ற உங்களுக்கு ஒரு நித்திய இலக்கிருக்கிறது.

அந்த இலக்கை உண்மையாக்க நீங்கள் தேர்ந்தெடுக்கும்படியாக உலகத்தின் அன்புள்ள இரட்சகர் தனது ஜீவனைக் கொடுத்தார். நீங்கள் அவருடைய நாமத்தை உங்கள்மீது எடுத்துக்கொண்டீர்கள், நீங்கள் அவருடைய சீஷர்கள். அவரால் நீங்கள் நித்திய மகிமையின் அங்கிகளை உடுத்தமுடியும்.

வெறுப்பவன்

இரண்டாவது சகோதரி உலகத்தின் மீது கோபமாயிருந்தாள். அவளுடைய துக்கமான சகோதரியைப்போல, அவளுடைய வாழ்க்கையில் யாரோ ஒருவர் பிரச்சினைகளுக்கு காரணமானவர் என அவள் உணர்ந்தாள். அவளை மட்டும் தவிர எதிலும் யாரோடும் அவள் நினைத்ததுபோல நடக்காததற்காக எல்லாவற்றின்மேலும் அவள் குறைகூறினாள். அவளுடைய குடும்பத்தை, அவளுடைய நண்பர்களை, அவளுடைய மேலதிகாரியை, சகபணியாளர்களை, போலீஸை, அண்டைவீட்டாரை, சபைத்தலைவர்களை, தற்போதைய நாகரீக போக்கை, சூரிய ஒளியின் கடுமையை, சாதாரண துரதிருஷ்டத்தை அவள் குறை கூறினாள். அவைகள் எல்லாவற்றையும் அவள் திட்டினாள்.

அவள் தன்னை ஒரு மோசமான நபராக நினைக்கவில்லை. மாறாக, அவள் மாத்திரமே அவளுக்காக இருக்கிறாள் என உணர்ந்தாள். சுயநலத்தாலும், அற்பத்தனத்தாலும், வெறுப்பாலும் எல்லோருமே தூண்டப்படுகிறார்கள் என அவள் நம்பினாள். மாறாக, அவள் நல்ல எண்ணங்களுடனும், நீதியிலும், நேர்மையிலும், அன்பிலும் தூண்டப்படுகிறாள் என நினைத்தாள்.

துரதிருஷ்டவசமாக, பைத்தியமான சகோதரியின் சிந்திப்பின் போக்கு மிகப் பொதுவானது. இரண்டு போட்டிக் குழுக்களிடையில் அபிப்பிராய பேதம் கண்டுபிடிக்கப்பட்ட இது, சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வின் பகுதியாக ஆராய்ச்சியாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பாலஸ்தீனியர்களையும், இஸ்ரவேலர்களையும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குடியரசுவாதிகளையும், ஜனநாயகவாதிகளையும் நேர்காணல் கண்டனர். “தங்களின் குழு, வெறுப்பைவிட அன்பினாலேயே தூண்டப்பட்டனர் என ஒவ்வொரு பக்கமும் உணர்ந்தனர் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர், ஆனால் அவர்களின் போட்டி குழு ஏன் அபிப்பிராய பேதத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் என கேட்கப்பட்டபோது, பிற குழுக்கள் தூண்டப்பட்ட காரணம், வெறுப்பு என [அவர்கள்] சுட்டிக்காட்டினர்.” 3

வேறு வார்த்தைகளிலெனில், ஒவ்வொரு குழுவும் தங்களை நல்ல மனிதர்களாக, நீதியுள்ளவர்களாக, இரக்கமுள்ளவர்களாக உண்மையுள்ளவர்களாக நினைத்தார்கள். மாறாக, அவர்களின் போட்டியாளர்களை அவர்கள் கெட்ட மனிதர்களாக, படிக்காதவர்களாக, நேர்மையில்லாதவர்களாக, தீமையானவர்களாகக்கூட அவர்கள் பார்த்தார்கள்.

இத்தகைய பார்வைகள் நீண்ட மற்றும் பரிதாபமான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. நான் பிறந்த ஆண்டில், வேதனையான துக்கத்திற்கும் கட்டுக்கடங்காத வேதனைக்கும் காரணமான ஒரு பயங்கர யுத்தத்தில் உலகம் மூழ்கியிருந்தது. குறிப்பிட்ட பிற பிரிவினரை தீமையானவர்களாக அடையாளம்கண்டு, அவர்களுக்கு எதிராக வெறுப்பை ஊக்குவித்த என்னுடைய நாட்டின் ஒரு பிரிவின் மக்களால் இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.

இதைப் பிடிக்காதவர்களை அவர்கள் அமைதியாக்கினார்கள். அவர்களை அவர்கள் அவமானப்படுத்தி பிசாசுகளாக்கினார்கள். மனிதர்களைவிட குறைவாக அவர்களை அவர்கள் தாழ்ந்தவர்களாக கருதினார்கள். ஒருமுறை ஒரு பிரிவின் மக்களை நீங்கள் அவமதித்தால், அவர்களுக்கெதிரான பலாத்காரத்தின் வார்த்தைகளையும் செயல்களையும் நீங்கள் அநேகமாக நியாயமாக்குவீர்கள்.

இந்த மனோபாவங்களால் 20வது நூற்றாண்டில் ஜெர்மனிக்கு என்ன நடந்ததென்பதைப்பற்றி நினைத்துப்பார்க்க நான் நடுங்குகிறேன்.

ஒருவர் நம்மை எதிர்த்தாலோ அல்லது ஒப்புக்கொள்ளாமலிருந்தாலோ அவர்களிடம் எதோ தவறிருக்கிறதென்று நினைக்க தூண்டப்படுகிறோம். அப்போதிலிருந்து அவர்களுடைய வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் மோசமான நோக்கத்தை இணைக்க இது ஒரு சிறு படி.

எது சரியோ அதற்காக நாம் எப்போதும் நிற்கவேண்டும், அந்த காரணத்திற்காக நமது குரல்களை எழுப்பவேண்டிய காலங்கள் வரும். ஆயினும், நமது இருதயங்களில் கோபத்துடன் அல்லது வெறுப்புடன் நாம் அப்படிச் செய்யும்போது, காயப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ அல்லது அவர்களை அமைதியாக்கவோ மற்றவர்களை திட்டும்போது, நாம் நீதியில் செய்துகொண்டிருக்கவில்லை என்பதற்கு வாய்ப்புகளிருக்கின்றன.

இரட்சகர் என்ன போதித்தார்?

“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காவும் ஜெபம் பண்ணுங்கள்;

“இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.” 4

இது இரட்சகரின் வழியாயிருக்கிறது. உலகத்தில் மிகுந்த கோபத்தையும், வெறுப்பையும், பிரிவையும், பலாத்காரத்தையும் உருவாக்குகிற தடங்கல்களை உடைத்தெறிவதில் இது முதல் படியாயிருக்கிறது.

“ஆம், என்னுடைய சத்துருக்கள் என்னை நேசிக்க விரும்புவதாயிருந்தால் அதையே செய்ய நானும் விருப்பமுள்ளவனாயிருக்கிறேன்” என நீங்கள் சொல்லலாம்.

ஆனால் உண்மையில், அது பொருட்டல்ல, இல்லையா? நமது சொந்த சீஷத்துவத்துக்கு நாம் பொறுப்புள்ளவர்களாயிருக்கிறோம், நம்மை மற்றவர்கள் நடத்துவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பதிலுக்கு அவர்கள் புரிந்துகொண்டு அன்புள்ளவர்களாயிருப்பார்களென நாம் நம்பிக்கை வைப்போம், ஆனால் அவர்கள் மீது நமக்குள்ள அன்பு, நம்மீது அவர்களுக்கான உணர்வுகளிலிருந்து தனிப்பட்டது.

ஒருவேளை நம்முடைய சத்துருக்களை நேசிக்கும் நமது முயற்சிகள் அவர்களுடைய இருதயங்களை மிருதுவாக்கி நன்மைக்காக அவர்களை செல்வாக்கடையச் செய்யலாம். ஒருவேளை அப்படிச் செய்யாமலுமிருக்கலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற நமது ஒப்புக்கொடுத்தல் மாறாது.

ஆகவே, இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களாக, நாம் நமது சத்துருக்களை நேசிப்போம்.

கோபத்தை அல்லது வெறுப்பை நாம் மேற்கொள்வோம்.

தேவனுடைய பிள்ளைகள் யாவர் மீதும் அன்பால் நம் இருதயங்களை நிரப்புவோம்.

“[நம்மை] நிந்திக்கிறவர்களையும் துன்பப்படுத்துகிறவர்களையும்”, ஆசீர்வதிக்க மற்றவர்களை நாம் அணுகி அவர்களுக்கு பணிவிடை செய்வோம். 5

நிச்சயமான சீஷன்

மூன்றாவது சகோதரி இயேசு கிறிஸ்துவின் நிச்சயமான சீஷனை பிரதிபலித்தாள். செய்வதற்கு கடினமான ஒன்றை அவள் செய்தாள், பரிகாசத்திற்கு முன்பும் அவள் தேவனை நம்பினாள். அவளைச் சுற்றி இகழ்ச்சி மற்றும் குற்றப்படுத்துதல் இருந்தாலும் எப்படியாவது அவளுடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் அவள் பராமரித்தாள். அவளுடைய சூழ்நிலைகள் மகிழ்ச்சியாயிருந்ததால் அல்ல, அவள் மகிழ்ச்சியாயிருந்ததால், அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள்.

எதிர்ப்பில்லாத வாழ்க்கைப் பயணத்தின் மூலமாக நம்மில் யாரும் இதைச் செய்யவில்லை. அநேக சக்திகள் நம்மை புறம்பே தள்ள முயற்சிக்கும்போது, விசுவாசிகளுக்கு வாக்களிக்கப்பட்ட மகிமையான சந்தோஷத்தில் எவ்வாறு நாம் நம் பார்வையை வைப்போம்?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தீர்க்கதரிசி பெற்ற தரிசனத்தில் பதில் காணப்படமுடியுமென்று நான் நம்புகிறேன். தீர்க்கதரிசியின் பெயர் லேகி, அவனுடைய தரிசனம் மார்மன் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

அவனுடைய தரிசனத்தில் லேகி ஒரு பரந்த விசாலமான வெளியைக் கண்டான், அதில் விவரிப்புக்கும் அப்பால் அழகான, ஒரு அற்புதமான விருட்சமிருந்தது. திரளான ஜனக்கூட்டம் அந்த விருட்சத்தை நோக்கி நடந்து சென்றதையும் அவன் கண்டான். அதன் மகிமையான கனியை அவர்கள் புசிக்க விரும்பினார்கள். அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நிலையான சமாதானத்தையும் கொடுக்குமென அவர்கள் உணர்ந்து நம்பினார்கள்.

விருட்சத்திற்கு நடத்திச் சென்ற பாதை நெருக்கமாயிருந்தது, அவர்கள் பாதையில் செல்ல கரையோரமாயிருந்த ஒரு இருப்புக்கோல் அவர்களுக்குதவியது. பாதை மற்றும் விருட்சத்தின் மீது அவர்களின் பார்வையை மறைத்த மந்தாரமான இருள் அங்கிருந்தது. பக்கத்திலிருந்த பெரிய விசாலமான கட்டிடத்திலிருந்து வந்துகொண்டிருந்த கேலிச்சிரிப்பின், உரத்த சத்தம் ஒருவேளை மிகவும் அபாயகரமானதாயிருந்திருக்கலாம். அதிர்ச்சியடையத்தக்கதாக கேலிசெய்தல் விருட்சத்தை அடைந்து அற்புதமான கனியைப் புசித்தவர்கள் வெட்கப்பட்டு விலகிச்செல்வதையும், சில ஜனங்களை ஏற்றுக்கொள்ள வைத்தது. 6

விருட்சம் அழகானதென ஒருசமயம் அவர்கள் நினைத்ததைப்பற்றி ஒருவேளை அவர்கள் சந்தேகப்பட ஆரம்பித்திருக்கலாம். ஒருவேளை அவர்கள் அனுபவித்ததின் உண்மையைப்பற்றி அவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கலாம்.

விருட்சத்திலிருந்து விலகிப்போனால் வாழ்க்கை எளிதாயிருக்கலாமென அவர்கள் நினைத்திருக்கலாம். இனியும் அவர்கள் கேலி செய்யப்படாமல் அல்லது நகைக்கப்படாமலிருந்திருக்கலாம்.

உண்மையில், அவர்களை கேலி செய்துகொண்டிருந்த ஜனங்கள் மிக மகிழ்ச்சியாகவும் நல்ல நேரத்திலிருந்ததாகவும் தோன்றுகிறது. ஆகவே, அவர்கள் ஒருவேளை விருட்சத்தை கைவிட்டால் அவர்கள் அந்த பெரிய விசாலமான கட்டிடத்திற்குள் வரவேற்கப்பட்டு அவர்களுடைய தீர்மானத்துக்காகவும், புத்திசாலித்தனத்திற்காகவும், உயர்ந்த தரத்திற்காகவும் பாராட்டப்பட்டிருப்பார்கள்.

பாதையில் நிலைத்திருங்கள்

அன்பான சகோதரிகளே, அன்பான நண்பர்களே, இருப்புக் கோலைக் கெட்டியாகப் பிடிக்கவும், இரட்சிப்பை நோக்கி உறுதியாய் நடக்கவும், நீங்கள் கஷ்டப்பட்டால், நீங்கள் அசைக்கப்படுவீர்கள் என மிகுந்த நம்பிக்கையுள்ளவர்களாகத் தோன்றுகிறவர்களின் சிரிப்பும் கேலியும் காரணமாயிருந்தால், பதிலளிக்கமுடியாத கேள்விகளால் அல்லது இன்னமும் நீங்கள் புரிந்துகொள்ளமுடியாத கோட்பாடுகளால் உங்களுக்கு தொந்தரவு இருந்தால், ஏமாற்றங்களால் நீங்கள் துக்கமடைந்தால், லேகியின் தரிசனத்தை நினைவுகூர நான் உங்களை வலியுறுத்துகிறேன்.

பாதையில் நிலைத்திருங்கள்

இருப்புக்கோலை, தேவனின் வார்த்தையைக் கைவிடாதிருங்கள்.

தேவனின் அன்பில் பங்கேற்பதற்காக உங்களை வெட்கப்பட வைக்க யாராவது முயற்சிக்கும்போது அவர்களை அசட்டை செய்யுங்கள்.

நீங்கள் தேவனின் பிள்ளை என்பதை ஒருபோதும் மறக்காதிருங்கள், ஏராளமான ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன, அவருடைய சித்தத்தின்படி செய்ய நீங்கள் கற்றுக்கொண்டால் மீண்டும் அவருடன் நீங்கள் வாழுவீர்கள்! 7

உலகத்தால் கொடுக்கப்படுகிற புகழ் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல், நம்பமுடியாததும், உண்மையில்லாததும், திருப்தியில்லாததாகவும் இருக்கும். தேவனின் வாக்களிப்பு இப்போதும் எப்போதும் நிச்சயமானதாயும், உண்மையானதாகவும் மகிழ்ச்சியுள்ளதாயுமிருக்கும்.

ஒரு உயர்ந்த பார்வையில் மதத்தையும் விசுவாசத்தையும் கருத உங்களை நான் அழைக்கிறேன். பெரிய விசாலமான கட்டிடத்தில் கொடுக்கப்படுகிற எதுவுமே இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி ஜீவிக்கிற கனியுடன் ஒப்பிடமுடியாதது.

உண்மையில், “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.” 8

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் சீஷத்துவத்தின் பாதை மகிழ்ச்சியின் பாதை என்பதை நானே அறிந்துகொண்டேன். இது பாதுகாப்புக்கும், சமாதானத்துக்குமான பாதை. இது சத்தியத்திற்கான பாதை.

பரிசுத்த ஆவியின் வரம் மற்றும் வல்லமையைப் பற்றி நான் சாட்சியளிக்கிறேன், இதை நீங்களே அறிந்துகொள்வீர்கள்.

அதே நேரத்தில், பாதை உங்களுக்கு கடினமாக மாறினால், ஆரம்ப வகுப்பு, இளம்பெண்கள் மற்றும் ஒத்தாசைச் சங்கம் போன்ற சபையிலுள்ள அற்புதமான நிறுவனத்தில் நீங்கள் அடைக்கலத்தையும், பெலத்தையும் காண்பீர்களென நான் நம்புகிறேன். முன்னாலிருக்கிற பாதைக்காக உங்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் புதுப்பித்துக்கொள்ளுகிற அவைகள் பாதையின் வழிக்குறிப்புகள். சொந்த வீடாக நீங்கள் உணருகிற, உங்கள் சகோதரிகளிடமிருந்தும் சக சீஷர்களிடமிருந்தும் ஊக்குவித்தலைப் பெறுகிற அவைகள் பாதுகாப்பின் வீடு.

ஆரம்ப வகுப்பில் நீங்கள் கற்றுக்கொள்ளும் காரியங்கள் இளம்பெண்ணாக நீங்கள் கற்றுக்கொள்ளும் கூடுதலான சத்தியங்களுக்கு ஆயத்தமாயிருக்கும். உங்களுடைய இளம் பெண்கள் வகுப்பில் நீங்கள் நடக்கிற சீஷத்துவத்தின் பாதை, ஒத்தசைச் சங்கத்தின் ஐக்கியத்திற்கும் சகோதரியத்துவத்திற்கும் நடத்துகிறது. பாதையில் ஒவ்வொரு அடியினூடே, இரக்கம், தயாளம் மற்றும் சேவையின் செயல்கள் மூலமாக மற்றவர்களிடத்தில் உங்களுடைய அன்பைக் காட்ட உங்களுக்கு கூடுதலான சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படுகிறது.

சொல்லப்படாத சந்தோஷத்திற்கும் பரிபூரணத்திற்கும், சீஷத்துவத்தின் இந்த பாதை நடத்துகிறது.

இது எளிதாயிருக்கும். உங்கள் புத்திசாலித்தனம், உருவாக்கும்திறன், விசுவாசம், நேர்மை, பெலன், தீர்மானம், அன்பு போன்ற உங்களிடமுள்ள மிகச் சிறந்த எல்லாமுமே இதற்கு தேவையாயிருக்கிறது. ஆனால் ஒருநாள் உங்கள் முயற்சிகளைத் திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் பெலமாக நிலைத்திருந்ததற்கும், நீங்கள் நம்பியிருந்ததற்கும், நீங்கள் பாதையிலிருந்து விலகாததற்கும், நீங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருப்பீர்கள்.

முன்னேறிச் செல்லுங்கள்

உங்களுடய கட்டுப்பாடுக்கு அப்பால் வாழ்க்கையில் அநேக காரியங்களிருந்திருக்கலாம். ஆனால் முடிவில், உங்கள் இலக்கு மற்றும் பாதையினூடே உங்கள் அனுபவங்கள் இரண்டிலும் தேர்ந்தெடுக்க உங்களுக்கு ஆற்றலிருக்கிறது. உங்கள் திறமைகளில்லை, உங்கள் தேர்ந்தெடுப்புகளே உங்கள் வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. 9

சூழ்நிலைகள் உங்களைத் துக்கப்படுத்த நீங்கள் அனுமதிக்க முடியாது.

உங்களை பைத்தியமாக்க அவைகளை நீங்கள் அனுமதிக்க முடியாது.

நீங்கள் தேவனின் குமாரத்தி என்பதில் நீங்கள் களிகூரலாம். தேவனின் கிருபையிலும் இயேசு கிறிஸ்துவின் அன்பிலும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் நீங்கள் காணமுடியும்.

நீங்கள் சந்தோஷமாயிருக்கலாம்.

ஏராளமான அளவிடமுடியாத தேவனின் நன்மைக்காக நன்றியுணர்வுடன் உங்கள் இருதயங்களை நிரப்ப நான் உங்களை வலியுறுத்துகிறேன். என்னுடைய அன்பான சகோதரிகளே, இதை உங்களால் செய்யமுடியும்! ஜீவவிருட்சத்திற்கு நேராக முன்னேறிச் செல்ல நீங்கள் தேர்ந்தெடுப்பீர்களென என்னுடைய ஆத்துமாவின் முழு பாசத்துடன் நான் ஜெபிக்கிறேன். நீங்கள் உங்கள் குரலை உயர்த்த தீர்மானித்து, உங்கள் வாழ்க்கையை துதியின் மகிமையான இசையாகச் செய்து தேவனின் அன்பிலும், அவருடைய சபை மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் உலகத்திற்குக் கொண்டுவரக்கூடிய அற்புதங்களிலும் களிகூரவேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.

உண்மையான சீஷத்துவத்தின் பாடல் சிலருக்கு சுமையாகவும், மிகவும் சத்தமாகவும்கூட இருக்கலாம். காலங்களின் ஆரம்பத்திலிருந்தே இது இப்படித்தானிருந்தது.

ஆனால் நமது பரலோக பிதாவுக்கும், அவர்மீது அன்பு வைத்து அவரைக் கனம்பண்ணுகிறவர்களுக்கும் இது கம்பீரமான, மீட்பு, அன்பு, சுத்திகரிப்பு மற்றும் தேவனுக்கும் சகமனிதர்களுக்கும் சேவையின் மிக அருமையான அழகிய பாடல். 10

சீஷத்துவத்தின் மகிமையான பாதையில் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக நடந்துகொண்டிருக்கும்போது, தேவனின் குமாரத்தியாக மகிழ்ச்சியாக முன்னேற பெலத்தை நீங்கள் காண்பீர்களென்று, கர்த்தரின் அப்போஸ்தலனாக எனது ஆசீர்வாதங்களை உங்களுக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.