2010–2019
ஆசாரியத்துவமும் இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமையும்
அக்டோபர் 2017


ஆசாரியத்துவமும் இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமையும்

பரலோக பிதாவின் நோக்கங்கள் நிறைவேற்றப்பட கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமை தேவனின் பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்யப்பட வேண்டும். ஆசாரியத்துவம் இந்த சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறது.

ஒரு தளத்தில் கொண்டு செல்லப்பட்டு, உயரே பறக்க ஆயத்தப்படும்படியாக ஒரு ராக்கெட் திட்டமிடப்படுவதை என்னோடு கற்பனை செய்துபாருங்கள். இப்போது தீ பற்றுவதைப் பாருங்கள். எரிபொருள் கட்டுப்பாட்டில் எரிக்கப்பட்டு, சூடான வாயுவாக மாற்றப்பட்டு வெளியே தள்ளப்பட்டு வானவெளியில் ராக்கெட் பறப்பதற்கான தேவையான உந்துதல் கொடுக்கப்படுகிறது. இறுதியாக, ராக்கெட்டின் மேல் இருக்கிற பாரத்தை அல்லது பொருளைப் பாருங்கள். அது எங்கே போகவேண்டுமோ அங்கே போகவும், செயல்படும் விதமாக இருக்கும்போதும் மட்டுமே பாரத்தின் மதிப்பு முழுமையாக உணரப்படுகிறது.  பூமியின் விலையேறப்பெற்ற தொலைதொடர்பு செயற்கைகோள், கிடங்கிலிருக்கும்போது அதற்கு குறைவான மதிப்பே இருக்கிறதென, அதைப் பாராட்ட நீங்கள் ஒரு ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை. பாரத்தை கொண்டுசெல்வதே ஒரு ராக்கெட்டின் பணி.

நாம் தரித்திருக்கிற ஆசாரியத்துவத்துடன் ராக்கெட்டையும் மற்றும் இரட்சகரின் பாவநிவர்த்தியிலிருந்து பயன்பெறும் சந்தர்ப்பத்தை, ஒரு ராக்கெட் கொண்டுசெல்கிற பாரத்திற்கும் இந்த மாலையில் நான் ஒப்பிட விரும்புகிறேன்.

அவருடைய பாவநிவர்த்தியின் நிமித்தம் மனுக்குலம் முழுவதையும் மீட்க இயேசு கிறிஸ்துவுக்கு அதிகாரமும் வல்லமையுமிருந்தது. அவருடைய பாவநிவர்த்தியின் வல்லமையை எளிதாக அடைய அவருடைய வல்லமை மற்றும் அதிகாரத்தின் ஒரு பகுதியை பூமியிலுள்ள மனிதர்களுக்கு அவர் ஒப்படைத்தார். இந்த ஒப்படைக்கப்பட்ட வல்லமையும் அதிகாரமும் ஆசாரியத்துவம் என அழைக்கப்படுகிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு இரட்சிப்பையும் மேன்மையடைதலையும் கொண்டுவர அவர்களுடைய பணியில் பரலோக பிதாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உதவ இது ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களை அனுமதிக்கிறது. இது இப்படிச் செய்வதால் இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமையைப் பெற அவருடைய பிள்ளைகளுக்கு இது சந்தர்ப்பம் அளிக்கிறது.

திரும்பிச் செல்லமுடியாததால் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமை அத்தியாவசியமானது. அநித்தியத்தில், வழக்கமாக நாம் தவறுகள் செய்கிறோம், தேவனின் பிரமாணங்களை மீறுகிறோம். பாவத்தால் நாம் கறையடைந்து தேவனின் பிரசன்னத்தில் வாழ திரும்பிப்போக நாம் அனுமதிக்கப்படுவதில்லை. பரலோக பிதாவுடன் நாம் ஒப்புரவாகும்படியாக நமக்கு இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமை தேவையாயிருக்கிறது. அனைவருக்கும் உயிர்த்தெழுதலை அனுமதித்து, சரீர மரணத்தின் கட்டுக்களை இயேசு கிறிஸ்து உடைத்தார். அவருடைய சுவிசேஷத்தின் பிரமாணங்களுக்கும் உடன்படிக்கைகளுக்கும் கீழ்ப்படிதலின் நிபந்தனையில் பாவங்களுக்கான மன்னிப்பை அவர் வழங்குகிறார். அவர் மூலமாக மேன்மையடைதல் வழங்கப்படுகிறது. இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமையிலிருந்து பயன்பெறும் சந்தர்ப்பம் சிருஷ்டிகரின் மிகமுக்கிய பாரமாகும்.

பரலோக பிதாவின் நோக்கங்கள் எட்டப்பட, கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமை தேவனுடைய பிள்ளைகளுக்கு கிடைப்பது தேவையாயிருக்கிறது. 1 இந்த சந்தர்ப்பங்களை ஆசாரியத்துவம் வழங்குகிறது. இது ராக்கெட். பூமியில் அவசியமான நியமங்களும் உடன்படிக்கைகளும் அதன் அதிகாரத்தால் மட்டுமே நிர்வகிக்கப்படுவதால் ஆசாரியத்துவம் அத்தியாவசியமானது. இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமையிலிருந்து பயன்பெற சந்தர்ப்பத்தை ஆசாரியத்துவம் கொடுக்க தவறினால், அதன் நோக்கம் என்னவாயிருக்கமுடியும்? இது ஒரு கவனத்தை இழுக்கக்கூடிய, வானவேடிக்கையாயிருக்குமா? ஞாயிற்றுகிழமையில் வகுப்பு மட்டுமல்லாமல் அல்லது ஒரு சேவையின் வாய்ப்பைவிட ஆசாரியத்துவம் பயன்படுத்தப்பட தேவன் உத்தேசிக்கிறார். பாரத்தை கொண்டு சேர்க்க வேண்டுமென அவர் விரும்புகிறார்.

ராக்கெட்டின் சிறிய குறைபாடுகள் செய்முறையின் தோல்விக்குக் காரணமாயிருக்கும். பழைய மூடிகள், பலவீனமான பொருட்கள், ராக்கெட் சரியாகச் செயல்படாததற்குக் காரணமாயிருக்கும். உருவகத்தில் பழைய மூடிகளிலிருந்தும் பலவீனமான பொருட்களிலிருந்தும் ஆசாரியத்துவத்தைப் பாதுகாக்க, அது அருளப்படுதல், பயன்பாடு இரண்டையும் தேவன் பாதுகாக்கிறார். 2 மனிதனுக்கு கொடுக்கப்படும் தலைமையின் உரிமைகளான ஆசாரியத்துவ திறவுகோல்களினால் ஆசாரியத்துவம் அருளப்படுதல் பாதுகாக்கப்படுகிறது. 3 ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள் செய்கிற உடன்படிக்கைகளினால் அதுபோல ஆசாரியத்துவ பயன்பாடு பாதுகாக்கப்படுகிறது. ஆசாரியத்துவ பயன்பாடு ஆசாரியத்துவ திறவுகோல்களாலும் உடன்படிக்கைகளாலும் ஆளப்படுகிறது. கூடுதலாக, ஒரு மனிதனின் ஆசாரியத்துவ நியமிப்பு தனிப்பட்டதாக கொடுக்கப்படுகிறது, அவரிடமிருந்து சுதந்திரமாக இருப்பது இல்லை. 4 ஆசாரியத்துவம் ஒரு சுயாட்சி பெற்ற வல்லமையின் உருவமற்ற ஆதாரமில்லை.

ஆரோனிய மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவங்கள் இரண்டும் உடன்படிக்கையால் பெறப்படுகிறது. 5 நிபந்தனைகளை தேவன் தீர்மானிக்கிறார், மனிதன் ஏற்றுக்கொள்கிறான். வெளிப்படையாகச் சொன்னால், தேவனுடைய பணியில் அவருக்குதவ ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள் உடன்படிக்கை செய்கிறார்கள். இந்த ஊழியக்காலத்தின் ஆரம்பத்தில், ஆசாரியத்துவத்தின் உடன்படிக்கை “உங்கள் நிமித்தம், மட்டுமல்ல, முழு உலகத்தின் நிமித்தம் உங்கள்மேல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. . . . ஏனெனில் அவர்கள் என்னிடத்தில் வரவில்லை” 6 என இயேசு கிறிஸ்து விவரித்தார்.

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப் பெற அவர்களுக்குதவி கிறிஸ்துவண்டை வர மற்றவர்களை வரவேற்பது ஆசாரியத்துவத்தின் நோக்கம் என இது போதிக்கிறது. பாவத்தின் சுமையிலிருந்து விடுபட்டிருக்கவும் அவரைப்போலாகவும் பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கு நாம் உதவும்படிக்கு நம்மிடம் ஆசாரியத்துவமிருக்கிறது. சுவிசேஷ உடன்படிக்கைகளைச் செய்து, கைக்கொண்டு சம்பந்தப்பட்ட நியமங்களைப் பெறுகிற அனைவரின் வாழ்க்கையில் ஆசாரியத்துவத்தின் மூலமாக தெய்வீகத்தின் வல்லமை வெளிப்படுகிறது. 7 இந்த வழியில், நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவண்டை வந்து சுத்திகரிக்கப்பட்டு தேவனோடு ஒப்புரவாக இதுவே வழி. கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமை, பாரத்தைக் கொடுக்கிற ஆசாரியத்துவத்தின் மூலமாகக் கிடைக்கிறது.

தேவனோடுள்ள உடன்படிக்கை முக்கியமானதும் பயபக்தியுமானது. ஒரு மனிதன் அதற்கு ஆயத்தப்படவேண்டும், கற்றுக்கொள்ளவேண்டும், அவைகளைக் கனம்பண்ணும் எண்ணத்துடன் அத்தகைய உடன்படிக்கைகளுக்குள் பிரவேசிக்கவேண்டும். உடன்படிக்கை சுய உறுதிமொழியாக மாறுகிறது. ஆங்கில நாடகமான ராபர்ட் போல்ட்டின் தொகுப்பில், ஒரு வாக்குறுதிக்கு மிகவிசேஷமாக தன்னையே அவன் ஒப்படைக்க விரும்பும்போது மட்டுமே ஒரு மனிதன் உடன்படிக்கையைச் செய்கிறான். வாக்குறுதியின் சத்தியத்திற்கும் அவனுடைய சொந்த நற்குணத்திற்குமிடையில் அவன் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துகிறான். ஒரு மனிதன் ஒரு உடன்படிக்கையைச் செய்யும்போது, தன்னுடைய குவிந்த கைகளிலுள்ள தண்ணீரைப்போல அவன் தன்னையே பிடித்து வைத்திருக்கிறான். அவன் தன் விரல்களைத் திறந்தால் மீண்டும் அவனைக் காண்பதை அவன் நம்பத் தேவையில்லை. உடன்படிக்கையை மீறுகிறவன் ஒப்புக்கொடுக்க எதுவுமில்லாதவனாக, கொடுக்க ஒரு உத்திரவாதமுமில்லாதிருக்கிறான். 8

தீமையை தவிர்க்கவும், தேவனிடத்தில் ஒப்புரவாக மற்றவர்களுக்கு உதவவும், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப் பெற ஆயத்தப்படவும் ஒரு ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவன் உடன்படிக்கை செய்கிறான். 9 அவன் போதிக்கும்போது, ஞானஸ்நானம் கொடுக்கும்போது, சபை அங்கத்தினர்களைப் பெலப்படுத்தும்போது, சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள மற்றவர்களை அழைக்கும்போது, இந்த பரிசுத்த பொறுப்புகள் நிறைவேற்றப்படுகின்றன. இவைகளே அவனுடைய “ராக்கெட்” செயல்பாடுகள். பதிலாக, நம்பிக்கையை, மன்னிப்பை, தூதர்களின் பணிவிடையை, மனந்திரும்புதலின் ஞானஸ்நானத்தின் சுவிசேஷத் திறவுகோல்களை, தேவன் வாக்களிக்கிறார். 10

ஆரோனிய ஆசாரியத்துவத்துடன் சம்பந்தப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றவும், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அவரது அழைப்பை நிறைவேற்றவும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர் உடன்படிக்கை செய்கிறார். 11 உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்ட கட்டளைகளைக் கைக்கொள்ளுவதால் அவர் அப்படிச் செய்கிறார். “நித்திய ஜீவனைக் குறித்த வார்த்தைகளுக்கு கருத்தாய் செவிகொடுப்பதுவும்” “தேவனின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையின்படி ஜீவிப்பதும்” 12, இயேசு கிறிஸ்துவையும் அவருடைய பிற்காலப் பணியையும் குறித்து சாட்சியளிப்பதுவும், 13 தன்னைக் குறித்து பெருமை பாராட்டாதிருப்பதும், 14 ஒரு சிநேகிதரைப்போல அவரை நம்பி இரட்சகரின் சிநேகிதராக மாறுவதும்15 இந்த கட்டளைகளில் அடங்கியிருக்கிறது.

பதிலுக்கு, தேவனின் இரகசியங்களைப் புரிந்துகொள்ள மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற ஒருவர் திறவுகோல்களைப் பெறுவாரென்று தேவன் வாக்களிக்கிறார். தேவனின் பிரசன்னத்தில் அவர் நிற்கும்படியாக அவர் பரிபூரணமானவராகிறார். இரட்சிப்பின் பணியில் அவருடைய பங்கை அவரால் நிறைவேற்றமுடியும். ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவருக்கு முன்னால் இயேசு கிறிஸ்து வழியை ஆயத்தம்பண்ணி அவரோடிருப்பார். ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவரின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் இருப்பார், தூதர்கள் அவரை உயரே தூக்குவார்கள். அவருடைய சரீரம் பெலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும். அவருடைய மனைவியுடன் ஆபிரகாமின் ஆசீர்வாதங்களுக்கு சுதந்தரர்களாகி, பரலோக பிதாவின் இராஜ்ஜியத்தில் இயேசு கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரராவார்கள். 16 இவைகள் “மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள்” 17. வேறு மேன்மையான வாக்குத்தத்தங்களை கற்பனை செய்யமுடியாது.

மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப் பெறுகிற ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு ஆணையுடன் அவருடைய உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை தேவன் உறுதி செய்கிறார். 18 இந்த ஆணை மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்திற்கு மாத்திரமே உரித்தாகுகிறது, 19 உறுதிமொழியை தேவன் ஆணையிடுகிறார், ஆசாரியத்துவத்தை தரித்திருப்பவரில்லை. 20 இந்த தனித்துவமான சூழ்நிலையில் அவருடைய தெய்வீக வல்லமையும் அதிகாரமும் ஈடுபட்டிருப்பதால், அவருடைய வாக்குத்தத்தங்களின் கட்டப்பட்டிருக்கிற, திருப்ப முடியாத தன்மையை நமக்கு உறுதியளிக்க, அவரால் முடிந்த மிக ஆற்றலுள்ள மொழியைப் பயன்படுத்தி தேவன் ஒரு ஆணையைப் பயன்படுத்துகிறார்.

ஆசாரியத்துவ உடன்படிக்கைகளை மீறுவதால், மொத்தத்தில் அவைகளிலிருந்து திரும்புவதால், மோசமான பலன்கள் விளைகிறது. 21 ஆசாரியத்துவ அழைப்பில் தற்செயலாக அல்லது அக்கறையில்லாதிருத்தல் ஒரு ராக்கெட்டில் நலிவான பொருட்களை அறிமுகப்படுத்துவதைப் போன்றது. ஊழியத்தின் தோல்விக்கு அது நடத்துவதால் ஆசாரியத்துவத்தின் உடன்படிக்கையை இது ஆபத்துக்குள்ளாக்குகிறது. தேவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமை உடன்படிக்கையை உடைக்கிறது. ஒரு நிரந்தரமான, மனந்திரும்பாத உடன்படிக்கையை மீறுபவருக்கு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் திரும்ப எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஆசாரியத்துவ ராக்கெட்டுக்கும், அநேக ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையின் பாரத்திலிருந்து பயன்பெறும் சந்தர்ப்பத்திற்குமிடையிலுள்ள உறவை நான் முழுமையாக புரிந்துகொண்டேன். வாரக்கடைசியின்போது எனக்கு இரண்டு கொடுக்கப்பட்ட பணிகளிருந்தன. ஒன்று முதல் பிணையத்தை ஒரு நாட்டில் உருவாக்குவது, மற்றொன்று ஒரு வாலிபனை நேர்காணல் செய்து எல்லாமுமே ஒழுங்காயிருந்தால், அவனுடைய ஆசாரியத்துவத்தையும் ஆசீர்வாதங்களையும் புதுப்பிப்பது. இந்த 30வயதான மனிதன், தனது குமரப்பருவத்தின் பின்பகுதியில் சபையில் சேர்ந்தான். மரியாதைக்குரிய தனது ஊழியத்தை அவன் செய்தான். ஆனால் அவன் வீடு திரும்பிய பின், அவன் தன் வழியைத் தவறவிட்டான், சபையில் தனது அங்கத்தினரத்துவத்தை அவன் இழந்தான். சிலஆண்டுகளுக்குப் பின் “அவரிடத்தில் அவன் வந்தான்” 22. அன்பான ஆசாரியத்துவ தலைவர்கள், கனிவான அங்கத்தினர்கள் உதவியுடன் அவன் மனந்திரும்பி, மறுஞானஸ்நானத்தால் சபைக்குள் திரும்ப சேர்க்கப்பட்டான்.

பின்னர், அவனுடைய ஆசாரியத்துவத்தையும் ஆலய ஆசீர்வாதங்களையும் புதுப்பிக்க அவன் விண்ணப்பித்தான். சனிக்கிழமை காலை 10 மணிக்கு கூடுமிடத்தில் நாங்கள் நேரம் ஒதுக்கினோம். முந்திய நேர்காணல்களுக்கு நான் வந்தடைந்தபோது அவன் ஏற்கனவே அங்கிருந்தான். மீண்டும் ஒருமுறை ஆசாரியத்துவத்தைக் கொண்டிருக்க அவன் மிக ஆவலாயிருந்தான், அவனால் காத்திருக்கமுடியவில்லை.

எங்களுடைய நேர்காணலின்போது, அவனுடைய விண்ணப்பத்தை தலைவர் தாமஸ்  எஸ். மான்சனே பரிசீலனை செய்து நேர்காணலை அதிகாரமளித்திருக்கிறாரென்று விவரித்த கடிதத்தை நான் அவனுக்குக் காண்பித்தேன். மற்றபடி, உணர்வில்லாதவனாக வாலிபன் அழுதான். அவனுடைய வாழ்க்கையில் எங்கள் நேர்காணலின் தேதி எந்த அதிகாரப்பூர்வ அர்த்தத்தையும் கொண்டிருக்காது என பின்னர் நான் அவனுக்குச் சொன்னேன். அவன் திகைப்புடன் காணப்பட்டான். அவனுடைய ஆசீர்வாதங்களை நான் புதுப்பித்த பின்னர் அவனுடைய அங்கத்தினர் பதிவு அவனுடைய முந்திய ஞானஸ்நானம், திடப்படுத்தல், ஆசாரியத்துவ நியமிப்பு, தரிப்பித்தல் தேதிகளையே காட்டுமென நான் அவனுக்கு அறிவித்தேன். மீண்டும் அவன் மூச்சுத் திணறினான்.

கோட்பாடும் உடன்படிக்கைகளுமிலிருந்து வாசிக்க நான் அவனைக் கேட்டேன்.

“இதோ, தன் பாவங்களிலிருந்து மனந்திரும்புபவன் மன்னிக்கப்படுகிறான், கர்த்தராகிய நான் அவற்றை இனிமேலும் நினைவுகூரமாட்டேன்.

“தனது பாவங்களிலிருந்து ஒரு மனுஷன் மனந்திரும்பினால், இதோ, அவற்றை அவன் அறிக்கையிட்டு அவற்றை விட்டுவிடுகிறான்.” 23

மூன்றாவது முறையாக அவனுடைய கண்களில் கண்ணீர் நிறைந்தது. பின்னர் எனது கைகளை அவனுடைய தலையின்மேல் வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலும், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தாலும், சபையின் தலைவரின் அதிகாரத்துடன், அவனுடைய ஆசாரியத்துவத்தையும் ஆலய ஆசீர்வாதங்களையும் நான் புதுப்பித்தேன்.

எங்கள் மீது வந்த மகிழ்ச்சி மகத்துவமானதாயிருந்தது. தேவனுடைய ஆசாரியத்துவத்தை தரித்திருக்கவும் செயல்படுத்தவும் மீண்டும் ஒருமுறை அவன் அதிகாரம்பெற்றிருக்கிறான் என அவன் அறிந்தான். அவனுடைய ஆலய ஆசீர்வாதங்கள் மீண்டும் முழுசெயல்பாட்டிலிருக்கிறதென அவன் அறிந்தான். அவனது காலடியில் துள்ளல் இருந்தது, அவனிடம் ஒரு பிரகாசமான ஒளி வந்தது. நான் அவனைப்பற்றி பெருமைப்பட்டேன், அவனைப்பற்றியும் பரலோக பிதா எவ்வளவு பெருமைப்பட்டிருப்பாரென உணர்ந்தேன்.

விசுவாசமிக்க பரிசுத்தவான்களால் கூட்டங்கள் ஜனங்கள் அதிகமாக வந்து, அற்புதமான பிணையத்தலைமை ஆதரிக்கப்பட்டது. ஆயினும், எனக்கு, ஒரு நாட்டில் முதல் பிணையம் நிறுவப்பட்ட வரலாற்று நிகழ்ச்சியை, இந்த வாலிபனுக்கு புதுப்பிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப்பற்றி நான் உணர்ந்த மகிழ்ச்சி மறைத்தது.

ஒரு பிணையத்தை நிறுவுவதின் நோக்கம் அல்லது எந்த வகையிலாவது தேவனின் ஆசாரியத்துவத்தைப் பயன்படுத்துதல் என்பது, பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் பணியில் அவர்களுக்குதவ, தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் மீட்பு மற்றும் மேன்மையடைதலின் சந்தர்ப்பத்தைக் கொடுக்கவே என்பதை நான் உணர ஆரம்பித்தேன். ஒரு பாரத்தை கொண்டு சென்று கொடுக்கும் ராக்கெட்டின் நோக்கத்தைப்போல, அனைவரும் உடன்படிக்கைகளைச் செய்யவும், சம்பந்தப்பட்ட நியமங்களைப் பெறவும் சாத்தியமாக்குதலில் ஆசாரியத்துவம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கொண்டு சென்று கொடுக்கிறது. அதினால், பரிசுத்த ஆவியின் சுத்திகரிப்பின் செல்வாக்கை நாம் அனுபவிப்பதிலும், தேவன் வாக்களிக்கிற ஆசீர்வாதங்களைப் பெறுவதிலும், கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் இரத்தம்24 நமது வாழ்க்கையில் பிரயோகப்படுத்தப்படுகிறது.

நீங்களே சுவிசேஷப் பிரமாணங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படியும்போது, ஆசாரியத்துவ உடன்படிக்கைகளைச் செய்யவும் கைக்கொள்ளவும் நான் உங்களை அழைக்கிறேன். தேவனுடைய வாக்குறுதியையும் அவருடைய வாக்களிப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள். பரலோக பிதாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உதவ ஆசாரியத்துவத்தில் உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுங்கள். யாரோ ஒருவர் இரட்சகரின் பாவநிவர்த்தியிலிருந்து பயன்பெற சந்தர்ப்பத்தைக் கொடுத்துதவ ஆசாரியத்துவத்தைப் பயன்படுத்துங்கள்! நீங்கள் அப்படிச் செய்யும்போது, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பெரிய ஆசீர்வாதங்கள் வரும். மீட்பர் ஜீவிக்கிறாரென்றும், இந்த பணியை வழிநடத்துகிறாரென்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.