பொது மாநாடு
அறிமுகச் செய்தி
ஏப்ரல் 2022 பொது மாநாடு


அறிமுகச் செய்தி

இந்த சிறப்பு கூட்டத்தில் தேவனின் குமாரத்திகள் மற்றும் அவர்களின் அமைப்புகளின் அக்கறைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் நாங்கள் அவர்களை மதிக்கிறோம்.

எனக்கன்பான சகோதரிகளே, பொது மாநாட்டின் இந்த தனித்துவமான பெண்கள் கூட்டத்தை நாம் தொடங்கும் போது, பிரதான தலைமையில் இருந்து இந்த அறிமுக செய்தியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது சனிக்கிழமை கூட்டங்கள் வெவ்வேறு நோக்கங்கள் மற்றும் வெவ்வேறு பார்வையாளர்களின் வரலாற்றைக் கொண்டுள்ளன. எதிர்பார்க்க முடிகிற எதிர்காலத்திற்காக ஒரு புதிய நோக்கத்தையும் நடைமுறையையும் தொடங்கும்போது இந்த மாலையில் நாம் அந்த வரலாற்றில் சேர்க்கிறோம். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மாறுவதில்லை. சுவிசேஷ கோட்பாடு மாறுவதில்லை. நமது தனிப்பட்ட உடன்படிக்கைகள் மாறுவதில்லை. ஆனால் பல ஆண்டுகளாக, எங்கள் செய்திகளைத் தொடர்புகொள்வதற்காக நாங்கள் நடத்தும் கூட்டங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன, பல ஆண்டுகளாக அநேகமாக தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

இப்போதைக்கு, இந்த சனிக்கிழமை மாலைக் கூட்டம் பொது மாநாட்டின் கூட்டம், எந்த அமைப்பின் கூட்டமும் அல்ல. பொது மாநாட்டின் அனைத்து கூட்டங்களையும் போலவே, திட்டமிடுதல், செய்தியாளர்கள் மற்றும் இசை ஆகியவை பிரதான தலைமையால் நியமிக்கப்படுகின்றன.

இந்த கூட்டத்தை நடத்துமாறு ஒத்தாசைச் சங்கத்தின் பொதுத் தலைவர், தலைவர் ஜீன் பி. பிங்காமிடம் நாங்கள் கேட்டுள்ளோம். வருங்கால சனிக்கிழமை மாலை கூட்டங்கள், பிரதான தலைமையால் பணிக்கப்பட்ட ஒத்தாசைச் சங்கம், இளம் பெண்கள் மற்றும் ஆரம்ப வகுப்பு போன்ற பொதுத் தலைமையின் உறுப்பினர்களான சபையின் மற்ற பொது அதிகாரிகளில் ஒருவரால் நடத்தப்படலாம்.

இன்றிரவு, இந்த சனிக்கிழமை மாலை பொது மாநாட்டின் கூட்டம் பிற்காலப் பரிசுத்தவான் பெண்களின் அக்கறைகள் மீது கவனம் செலுத்தும். இது பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் கோட்பாடுகள், குறிப்பாக பெண்களுடன் தொடர்புடைய சபையின் கொள்கைகள், மற்றும் சபையின் பெண்கள் மற்றும் சிறுமிகளை உள்ளடக்கிய அமைப்புகளின் பொதுப் பொறுப்புகள் மற்றும் பணிகளை உள்ளடக்கும். பொது மாநாட்டின் அனைத்து கூட்டங்களையும் போலவே உலகளாவிய பார்வையாளர்களுக்கு வேண்டுமென்றே இந்தக் கூட்டம் ஒளிபரப்பப்பட்டாலும், இந்த கூட்டத்திற்கு மாநாட்டு மையத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட பார்வையாளர்கள் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் மற்றும் சிறுமிகள். பங்கேற்கும் அமைப்புகளுக்குத் தலைமை தாங்கும் சில ஆசாரியத்துவத் தலைவர்களை நாங்கள் சேர்த்துள்ளோம்.

நாம் இங்கு தொடங்குவது, கர்த்தருடைய உலகளாவிய சபைத் தலைமை மற்றும் உறுப்பினர்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய தகவல் தொடர்பு ஆதாரங்களுக்கு பதிலளிக்கக்கூடியது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கோட்பாடு எல்லோருக்குமானது, எனவே இது எங்கள் முக்கிய நோக்கமும் பரப்புதலின் அளவாயுமிருக்கிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் தேவனின் குமாரத்திகள் மற்றும் அவர்களின் அமைப்புகளின் அக்கறைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் நாங்கள் அவர்களை மதிக்கிறோம்.

இப்போது, களத்தில் குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு உரையாற்றுவதன் மூலம் விரிவான பயிற்சியை நடத்துவதற்கான திறனை இப்போது சபைத் தலைவர்களுக்கு ஒளிபரப்பு தொழில்நுட்பம் வழங்குவதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தற்போதைய பயண வாய்ப்புகள் அதிகரித்து வருவதையும் நாங்கள் வரவேற்கிறோம். அந்தத் களத்தில் தேவைப்படும் வழக்கமான நேருக்கு நேர் தலைமைப் பயிற்சியை நடத்துவதற்கு சபைத் தலைவர்களை அனுப்ப இது நம்மை அனுமதிக்கிறது.

இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பணி. அவருடைய பரிசுத்த ஆவியால் வழிநடப்படுகிற நாம் அவருடைய ஊழியக்காரர்கள். இந்த அமைப்புகளின் தலைவர்கள் மீதும், இந்த அமைப்புகளிலும், கர்த்தருக்கு சேவை செய்யும் விசுவாசமிக்க பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், நமது கர்த்தருடைய ஆசீர்வாதங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் வேண்டுகிறோம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.