பொது மாநாடு
 நமது இதயப்பூர்வமான அனைத்தும்
ஏப்ரல் 2022 பொது மாநாடு


நமது இதயப்பூர்வமான அனைத்தும்

இரட்சகர் நம்மை பரலோகத்திற்கு உயர்த்த நாம் விரும்பினால், அவருக்கும் அவருடைய சுவிசேஷத்திற்கும் நம்முடைய அர்ப்பணிப்பு சாதாரணமாகவோ அல்லது எப்போதாவதோ இருக்க முடியாது.

 அவருக்கு ஒரு காணிக்கை

நமக்காக அவருடைய ஜீவனைக் கொடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, எருசலேம் ஆலயத்தில் ஆலய உண்டியலில் மக்கள் நன்கொடை அளிப்பதை இயேசு கிறிஸ்து பார்த்துக்கொண்டிருந்தார். “ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள்,” ஆனால் பின்னர் ஒரு ஏழை விதவையும் வந்து “இரண்டு காசைப் போட்டாள்.” பதிவு செய்வதற்கு அரிதான அது மிகச் சிறிய தொகையாயிருந்தது.

படம்
இரண்டு காசுகளை ஒரு விதவை காணிக்கை கொடுத்தல்

இருந்தும் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாததாகத் தோன்றிய நன்கொடை இரட்சகரின் கவனத்தை ஈர்த்தது. உண்மையில், அது அவரை மிகவும் ஆழமாக கவர்ந்தது, “அவர் தம்முடைய சீஷர்களை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்:

“அவர்கள் எல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள், இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனுக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.”1

இந்த எளிய கவனிப்பின் மூலம், இரட்சகர் அவருடைய ராஜ்யத்தில் காணிக்கைகள் எவ்வாறு அளவிடப்படுகின்றன என்பதை நமக்குக் கற்றுத் தந்தார், இது நாம் வழக்கமாக அளவிடும் விதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. கர்த்தருக்கு, நன்கொடையின் மதிப்பு, காண்க்கைப் பெட்டியில் ஏற்படுத்திய தாக்கத்தால் அளக்கப்படாமல், நன்கொடையாளரின் இருதயத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை வைத்து அளவிடப்படுகிறது.

இந்த விசுவாசமிக்க விதவையைப் புகழ்ந்து, இரட்சகர் நமது சீஷத்துவத்தை அதன் பல வெளிப்பாடுகள் அனைத்திலும் அளவிடுவதற்கு ஒரு தரத்தை நமக்குக் கொடுத்தார். நம்முடைய காணிக்கை பெரியதாக இருக்கலாம் அல்லது சிறியதாக இருக்கலாம், ஆனால் எப்படியிருந்தாலும், அது நம் இதயபூர்வமாக அனைத்துமாகும்.

இந்த கொள்கை மார்மன் தீர்க்கதரிசி அமலேக்கியின் வேண்டுதலில் எதிரொலிக்கிறது: “நீங்கள் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கிறிஸ்துவினிடத்தில் வந்து, அவரின் இரட்சிப்பிலும், அவரின் மீட்பின் வல்லமையிலும் புசிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். ஆம், அவரிடத்தில் வந்து உங்கள் முழுஆத்துமாக்களை அவருக்கு காணிக்கையாக அளியுங்கள்.”2

ஆனால் இது எப்படி சாத்தியமாகும்? நம்மில் பலருக்கு, முழு ஆத்துமாவின் ஒப்புக்கொடுத்தல் போன்ற ஒரு தரநிலை எட்டாததாகத் தோன்றுகிறது. நாம் ஏற்கனவே மிகவும் மெல்லியதாக நீட்டப்பட்டுள்ளோம். நம் முழு ஆத்துமாக்களையும் கர்த்தருக்கு கொடுக்க வேண்டும் என்ற நமது வாஞ்சைகளுடன் வாழ்க்கையின் பல தேவைகளை எவ்வாறு நாம் சமநிலைப்படுத்துவது?

ஒருவேளை நமது சவால் என்னவென்றால், சமநிலை என்பது நமது நேரத்தை போட்டியிடும் ஆர்வங்களுக்கிடையில் சமமாகப் பிரிப்பது என்று நாம் நினைக்கிறோம். இந்த வழியில் பார்க்கும்போது, இயேசு கிறிஸ்துவுக்கான நமது ஒப்புக்கொடுத்தல் என்பது நாம் செய்ய வேண்டிய பல காரியங்களில், நமது சுறுசுறுப்பான கால அட்டவணைகளுக்குள் நாம் பொருத்தக்கூடிய ஒன்றாகும். ஆனால் ஒருவேளை அதைப் பார்க்க வேறு ஒரு வழி இருக்கிறது.

சமநிலை: ஒரு மிதிவண்டியை ஓட்டுவது போன்றது

என் மனைவி ஹரியட்டும் நானும் ஒன்றாக மிதிவண்டி ஓட்டுவதை விரும்புகிறோம். ஒன்றாக நேரத்தை செலவிடும் போது சில உடற்பயிற்சிகளைப் பெற இது ஒரு அற்புதமான வழியாகும். நாங்கள் சைக்கிள் ஓட்டும்போது, நான் அதிகமாக கூச்சலிடுவதில்லை, கும்மாளமிடுவதில்லை, நம்மைச் சுற்றியுள்ள அழகான உலகத்தை ரசிக்கிறோம், மேலும் இனிமையான உரையாடலில் ஈடுபடுகிறோம். நம் மிதிவண்டியில் நமது சமநிலையை வைத்திருப்பதில் எப்போதாவதுதான் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். நாங்கள் இப்போது அதைப்பற்றி யோசிக்காத அளவுக்கு நீண்ட நேரம் சவாரி செய்து வருகிறோம், அது எங்களுக்கு வழக்கமானதாகவும் இயற்கையானதாவும் ஆகிவிட்டது.

ஆனால் முதன்முறையாக ஒருவர் பைக் ஓட்டக் கற்றுக்கொள்வதை நான் பார்க்கும் போதெல்லாம், அந்த இரண்டு குறுகிய சக்கரங்களில் உங்களை சமநிலைப்படுத்துவது எளிதானது அல்ல என்பதை நான் நினைவுபடுத்தப்படுகிறேன். இதற்கு நேரம் பிடிக்கும். இதற்கு பயிற்சி தேவை. இதற்கு பொறுமை வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முறை கீழே விழுவது கூட நடக்கும்.

ஒரு மிதிவண்டியில் சமநிலைப்படுத்துவதில் வெற்றி பெறும் பெரும்பாலாக அனைவரும் இந்த முக்கியமான உதவிக்குறிப்பைக் கற்றுக்கொள்கிறார்கள்.

உங்கள் கால்களை பார்க்காதிருங்கள்.

முன்னே பாருங்கள்.

உங்கள் முன்னாலிருக்கிற சாலையில் உங்கள் கண்களை வைத்திருங்கள். உங்கள் இலக்கின் மீது கவனம் செலுத்துங்கள். மிதியுங்கள். சமநிலையில் இருப்பதென்பது முன்னோக்கி நகர்வதாகும்.

இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக நம் வாழ்வில் சமநிலையைக் கண்டறிவதில் இதே போன்ற கொள்கைகள் பொருந்தும். பல முக்கியப் பணிகளுக்கு மத்தியில் உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது நபருக்கு நபர் மற்றும் வாழ்க்கையின் ஒரு பருவத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும். ஆனால் நமது பொதுவான, ஒட்டுமொத்த நோக்கமே, நமது போதகராகிய இயேசு கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றி, பரலோகத்தில் உள்ள நமது அன்புக்குரிய பிதாவின் முன்னிலைக்குத் திரும்புவதே ஆகும். நாம் யாராக இருந்தாலும், நம் வாழ்வில் என்ன நடந்தாலும் இந்த நோக்கமானது நிலையானதாகவும் சீரானதாகவும் இருக்க வேண்டும்.3

தூக்கிவிடுங்கள்: ஒரு விமானத்தில் பறப்பதைப் போன்றது

இப்போது, ஆர்வமுள்ள மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு, பைக் சவாரி செய்வதோடு சீஷத்துவத்தை ஒப்பிடுவது உதவிகரமான ஒப்புமையாக இருக்கலாம். இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். நான் உறுதியாக நம்புகிறேன், ஒவ்வொரு ஆணும், பெண்ணும், பிள்ளையும் தொடர்பு கொள்ள முடியும் என்பது என்னிடம் உள்ள மற்றொரு உவமை.

வாழ்க்கையின் பெரும்பாலான காரியங்களைப் போலவே சீஷத்துவத்தை விமானத்தில் பறப்பதற்கு ஒப்பிடலாம்.

ஒரு பெரிய பயணிகள் விமானம் உண்மையில் தரையில் இருந்து எழும்பி, பறக்க முடியும் என்பது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசிப்பதை நிறுத்தியிருக்கிறீர்களா? இந்த பறக்கும் இயந்திரங்கள் வானத்தில் வழியே நேர்த்தியாக உயர்ந்து, பெருங்கடல்களையும் கண்டங்களையும் கடந்து செல்ல வைப்பது எது?

எளிமையாகச் சொன்னால், ஒரு விமானம் அதன் இறக்கைகளுக்கு மேல் காற்று நகரும்போது மட்டுமே பறக்கிறது. அந்த இயக்கம் காற்றழுத்தத்தில் வேறுபாடுகளை உருவாக்கி அது விமானத்தை உயரே எழுப்புகிறது. எழுவதை உருவாக்க, இறக்கைகளுக்கு மேல் போதுமான காற்றை நீங்கள் எவ்வாறு பெறுவீர்கள்? முன்னோக்கி உந்துதல் என்பதே பதில்.

ஓடுபாதையில் அமர்ந்திருந்து விமானம் எந்த உயரத்தையும் பெறாது. அதைத் தடுத்து நிறுத்தும் சக்திகளை எதிர்கொள்ள போதுமான உந்துதலுடன், விமானம் முன்னோக்கி நகரும் வரை காற்று வீசும் நாளில் கூட, போதுமான உந்துதல் உருவாக்கப்படாது.

முன்னோக்கிய வேகம் ஒரு மிதிவண்டியை சமநிலையாகவும் நிமிர்ந்தும் வைத்திருப்பது போல, முன்னோக்கி நகர்வது புவிஈர்ப்பு மற்றும் இழுவையைக் கடக்க ஒரு விமானத்திற்கு, உதவுகிறது.

இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகிய நமக்கு இது என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? நாம் வாழ்க்கையில் சமநிலையைக் காண விரும்பினால், மற்றும் இரட்சகர் நம்மை பரலோகத்திற்கு உயர்த்த நாம் விரும்பினால், அவருக்கும் அவருடைய சுவிசேஷத்திற்கும் நம்முடைய அர்ப்பணிப்பு சாதாரணமாகவோ அல்லது எப்போதாவதோ இருக்க முடியாது. எருசலேமின் விதவையைப் போல, அவருக்கு நம் முழு ஆத்துமாக்களையும் நாம் அர்ப்பணிக்க வேண்டும். நமது காணிக்கை சிறியதாக இருக்கலாம், ஆனால் அது நம் இருதயத்திலிருந்தும் ஆத்துமாவிலிருந்தும் வர வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் ஒரு சீஷனாக இருப்பது என்பது நாம் செய்யும் பல காரியங்களில் ஒன்றல்ல. இரட்சகர் நாம் செய்யும் அனைத்திற்கும் பின்னால் உள்ள உந்து சக்தியாக இருக்கிறார். நமது பயணத்தில் அவர் ஒரு ஓய்வு நிறுத்தம் அல்ல. இயற்கை எழில் கொஞ்சும் சாலையாகவோ அல்லது முக்கிய அடையாளமாகவோ அவர் இல்லை. அவரே “வழியும் சத்தியமும் ஜீவனுமானவர்: பிதாவினிடத்தில் ஒருவனும் வரான்,” “ஆனால் [இயேசு கிறிஸ்துவாலே]”4 அதுவே வழி மற்றும் நமது இறுதி இலக்கு.

“கிறிஸ்துவில் திட நம்பிக்கையாய் பூரணமான நம்பிக்கையின் பிரகாசத்தோடும், தேவனிடத்திலும் எல்லா மனிதரிடத்திலும் அன்போடும் நாம் முன்னேறிச் செல்லும்போது”, 5 சமநிலையும் எழுதலும் வருகிறது.

தியாகமும் பரிசுத்தப்படுதலும்

நம் வாழ்க்கையை மிகவும் சுறுசுறுப்பாகச் செய்கிற அநேக பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றி என்ன உள்ளது? அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, பள்ளிக்குச் செல்வது அல்லது வேலைக்குத் தயாராவது, வாழ்வாதாரத்தை சம்பாதிப்பது, குடும்பத்தைப் பராமரிப்பது, சமூகத்தில் சேவை செய்வது, இவையெல்லாம் எங்கே பொருந்தும்? இரட்சகர் நமக்கு உறுதியளிக்கிறார்:

“இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

“ஆனால் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”6

ஆனால் இது எளிதானது என்று அர்த்தமல்ல.7 அதற்கு தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு இரண்டும் தேவை.

சில காரியங்களை விட்டுவிட்டு மற்றவற்றை வளர விட வேண்டும்.

பரிசுத்த ஆலயத்தில் கீழ்ப்படிய நாம் உடன்படிக்கை செய்கிற, தியாகம் மற்றும் பரிசுத்தப்படுதல் இரண்டு பரலோக நியாயப்பிரமாணங்கள். இந்த இரண்டு நியாயப்பிரமாணங்களும் ஒத்தவை, ஆனால் ஒரே மாதிரியானவை அல்ல. தியாகம் செய்வது என்பது மிகவும் மதிப்புமிக்க ஒன்றிற்கு ஆதரவாக எதையாவது விட்டுக்கொடுப்பதாகும். பழங்காலத்தில், வரவிருக்கும் மேசியாவைக் கௌரவிப்பதற்காக தேவனுடைய மக்கள் தங்கள் மந்தையின் முதல் குட்டிகளை பலியிட்டனர். வரலாறு முழுவதும், உண்மையுள்ள பரிசுத்தவான்கள் இரட்சகருக்காக தனிப்பட்ட ஆசைகள், ஆறுதல்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையை கூட தியாகம் செய்துள்ளனர்.

நம் அனைவருக்கும் பெரிய மற்றும் சிறிய காரியங்கள் உள்ளன, இயேசு கிறிஸ்துவை இன்னும் முழுமையாக பின்பற்றுவதற்கு நாம் தியாகம் செய்ய வேண்டும்.8 நாம் எதை உண்மையாக மதிக்கிறோம் என்பதை நமது தியாகங்கள் காட்டுகின்றன. தியாகங்கள் பரிசுத்தமானவை, தேவனால் போற்றப்படுகின்றன.9

பரிசுத்தப்படுத்தல் என்பது ஒரு முக்கியமான வழியிலாவது தியாகத்திலிருந்து வேறுபட்டது. நாம் ஒன்றைப் பரிசுத்தப்படுத்தும்போது, அதை நுகரும்படி பலிபீடத்தின் மீது விட்டுவிடுவதில்லை. மாறாக, அதை கர்த்தருடைய சேவையில் பயன்படுத்த வைக்கிறோம். அதை அவருக்கும் அவருடைய பரிசுத்த நோக்கங்களுக்கும் அர்ப்பணிக்கிறோம்.10 கர்த்தருடைய ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதற்கும், நமது திறமைகளைப் புதைப்பதற்கும், அவற்றைப் பன்மடங்கு அதிகரிப்பதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.11

நம்மில் மிகச் சிலரே இரட்சகருக்காக நம் வாழ்க்கையை தியாகம் செய்யும்படி கேட்கப்படுவார்கள். ஆனால் நாம் அனைவரும் நம் வாழ்க்கையை அவருக்கு பரிசுத்தப்படுத்த அழைக்கப்படுகிறோம்.

ஒரு வேலை, ஒரு மகிழ்ச்சி, ஒரு நோக்கம்

நாம் நம் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்தி , ஒவ்வொரு சிந்தனையிலும் கிறிஸ்துவைப் பார்க்க முற்படுகையில்,12 மற்ற அனைத்தும் சீரடையத் தொடங்குகின்றன. வாழ்க்கையானது, மெல்லிய சமநிலையில் உள்ள தனித்தனி முயற்சிகளின் நீண்ட பட்டியலைப் போல் இனி உணராது.

காலப்போக்கில், அனைத்தும் ஒரே வேலையாக மாறும்.

ஒரு மகிழ்ச்சி.

ஒரு பரிசுத்த நோக்கம்.

இது தேவனை நேசித்து சேவை செய்வதன் பணி ஆகும். இது தேவனுடைய பிள்ளைகளை நேசிப்பதுவும் சேவை செய்வதுமாகும்.13

நம் வாழ்க்கையைப் பார்க்கும்போது, செய்ய வேண்டிய நூறு விஷயங்களைப் பார்க்கும்போது, நாம் அதிகமாக கவலைப்படுகிறோம். நூறு விதமான வழிகளில் தேவனையும் அவருடைய பிள்ளைகளையும் நேசிக்கிற, சேவை செய்கிற, ஒரு காரியத்தைப் பார்க்கும்போது, பின்னர் அந்த காரியங்களில் நாம் மகிழ்ச்சியுடன் வேலை செய்யலாம்.

நம்மைத் தடுத்து நிறுத்தும் எதையும் தியாகம் செய்வதன் மூலமும், மீதமுள்ளவற்றை தேவனுக்கும் அவருடைய நோக்கங்களுக்கும் அர்ப்பணிப்பதன் மூலமும், இப்படித்தான் நம் முழு ஆத்துமாக்களையும் நாம் அர்ப்பணிக்கிறோம்.

ஊக்கம் மற்றும் சாட்சியத்தின் வார்த்தை

என் அன்பான சகோதர சகோதரிகளே, என் அன்பான நண்பர்களே, நீங்கள் இன்னும் அதிகமாகச் செய்ய விரும்புகிற நேரங்கள் வரும். பரலோகத்திலுள்ள உங்கள் அன்பான தகப்பன் உங்கள் இருதயத்தை அறிகிறார். உங்கள் இருதயம் நீங்கள் செய்ய விரும்பும் அனைத்தையும் உங்களால் செய்ய முடியாது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் நீங்கள் தேவனை நேசிக்கவும் சேவை செய்யவும் முடியும். அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யலாம். நீங்கள் அவருடைய பிள்ளைகளை நேசிக்கவும் சேவை செய்யவும் முடியும். மேலும் உங்கள் முயற்சிகள் உங்கள் இருதயத்தை தூய்மையாக்கி, ஒரு புகழ்பெற்ற எதிர்காலத்திற்கு உங்களை தயார்படுத்துகிறது.

ஆலய உண்டியலருகில் இருந்த விதவைக்கு இது புரிந்ததாகத் தோன்றுகிறது. அவளுடைய காணிக்கை இஸ்ரவேலின் அதிர்ஷ்டத்தை மாற்றாது என்பதை அவள் நிச்சயமாக அறிந்திருந்தாள், ஆனால் அது அவளை மாற்றக்கூடும், ஏனென்றால், சிறியதாக இருந்தாலும், அது அவளிடமிருந்த அனைத்துமே.

எனவே, என் அன்பான நண்பர்களே, இயேசு கிறிஸ்துவின் அன்பான சக சீஷர்களே, நாம் “நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருப்போம், ஏனெனில் [நாம்] “ஒரு மகத்தான பணிக்கு அடித்தளத்தைப் போடுகிறோம்.” சிறிய காரியங்களிலிருந்து “பெரிதானவை வரும்.”14

இயேசு கிறிஸ்து நமது போதகர், நமது மீட்பர், பரலோகத்திலிருக்கும் நம் அன்பான பிதாவினிடத்துக்கு திரும்பும் ஒரே வழி என்று நான் சாட்சி கூறுவது போல், இது உண்மை என்று நான் சாட்சி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. மாற்கு 12:41–44.

  2. ஓம்னி 1:26.

  3. நம் பிள்ளைகளும் இளைஞர்களும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்போது சமநிலையான வழியில் வளர அழைக்கப்படுகிறார்கள், அவர் ஒரு இளைஞனாக “ஞானத்திலும் வளர்த்தியிலும், தேவ கிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்” (லூக்கா 2:52).

  4. யோவான் 14:6.

  5. 2 நேபி 31:20.

  6. 3 நேபி 13:32–33; மத்தேயு 6:32–33 ஐயும் பார்க்கவும். ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, மத்தேயு 6:38 கூடுதல் உள்ளுணர்வைக் கொடுக்கிறது: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்” (மத்தேயு 6:33, அடிக்குறிப்பு a).

  7. நம்முடைய தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சனிடமிருந்து ஒரு எடுத்துக்காட்டு வருகிறது. அவர் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக தனது தொழிலில் உச்சத்தில் இருந்தபோது, அவர் பிணையத் தலைவராக அழைக்கப்பட்டார். மூப்பர்கள் ஸ்பென்சர் டபுள்யு. கிம்பலும் லிகிரான்ட் ரிச்சர்ட்ஸூம் அழைப்பை கொடுத்தனர். அவரது தொழிலின் நிபந்தனைகளை உணர்ந்து, அவரிடம் அவர்கள் சொன்னார்கள், “நீங்கள் மிக சுறுசுறுப்பாயிருந்து அழைப்பை ஏற்கக்கூடாதென உணர்ந்தால், அது உங்கள் சிலாக்கியம்.” அழைக்கப்படும்போது சேவை செய்யலாமா வேண்டாமா என்பது குறித்து நீண்ட காலத்திற்கு முன்பு, அவரும் அவரது மனைவியும் கர்த்தருடன் ஆலய உடன்படிக்கை செய்தபோது அவர்கள் தீர்மானித்தார்கள் என அவர் பதிலளித்தார். கர்த்தர் வாக்களித்தபடி மற்ற அனைத்தும் நம்மோடு சேர்க்கப்படும் என்ற நம்பிக்கையுடன்“ ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட’ அப்போது நாங்கள் ஒரு உறுதிமொழி எடுத்தோம்’ [மத்தேயு 6:33],” (Russell Marion Nelson, From Heart to Heart: An Autobiography [1979], 114).

  8. தலைவர் நெல்சன் சமீபத்தில் பேசினார், “இரட்சகரின் உதவியுடன், நம் வாழ்வில் உள்ள பழைய குப்பைகளை நாம் ஒவ்வொருவரும் அகற்ற வேண்டியதன் அவசியம் . … “நீங்கள் மிகத் தகுதியுள்ளவராக மாறும்படியாக நீங்கள் அகற்றவேண்டிய குப்பைகளை அடையாளம்காண ஜெபிக்கும்படி நான் உங்களை அழைக்கிறேன்” என அவர் சொன்னார் (“Welcome Message,” Liahona, May 2021, 7).

  9. நமது சாதனைகளைவிட நமது தியாகங்கள் தேவனுக்கு அதிக பரிசுத்தமானதாயிருக்கிறது என வேதங்கள் சொல்கிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 117:13 பார்க்கவும்). ஐசுவரியவான்களின் நன்கொடையை விட விதவையின் காசுகளையே தேவன் அதிகமாக மதிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். முந்தையது ஒரு தியாகம், இது கொடுப்பவர் மீது சுத்திகரிப்பின் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. பிந்தையது, அது அதிக பண ரீதியாக நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அது ஒரு தியாகம் அல்ல, மேலும் அது கொடுப்பவரை மாற்றாமல் விட்டுச் சென்றது.

  10. நம்மில் மிகச் சிலரே இரட்சகருக்காக நம் வாழ்க்கையை தியாகம் செய்யும்படி கேட்கப்படுவார்கள். ஆனால் நாம் அனைவரும் நம் வாழ்க்கையை அவருக்கு பரிசுத்தப்படுத்த அழைக்கப்படுகிறோம்.

  11. மத்தேயு 25:14–30 பார்க்கவும்.

  12. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36 பார்க்கவும்.

  13. இந்த வழியில், அப்போஸ்தலனாகிய பவுலின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை நம் வாழ்வில் நாம் காண்கிறோம்: “காலங்கள் நிறைவேறும்போது, பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும், அவரிலும்கூட கட்டப்படவேண்டும்” (எபேசியர் 1:10).

  14. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:33.