பொது மாநாடு
நான் உண்மையிலேயே மன்னிக்கப்பட்டேனா?
ஏப்ரல் 2023 பொது மாநாடு


நான் உண்மையிலேயே மன்னிக்கப்பட்டேனா?

இயேசு கிறிஸ்துவின் எல்லையற்ற பாவநிவிர்த்தியின் மூலம், முழுமையான மற்றும் பரிபூரணமான மன்னிப்புக்கான வாக்குறுதி அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நானும் சகோதரி நாட்ரஸும் ஐடஹோவுக்குக் குடியேறினோம் , அங்கு நாங்கள் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்கினோம். அலுவலகத்தில் இரவும் பகலுமாக அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாக, நாங்கள் வேலையிலிருந்து சில கட்டிடங்கள் தள்ளி வாழ்ந்தோம். ஒவ்வொரு வாரமும், ஷவ்னாவும் எங்கள் ஆறு வயதுக்குட்பட்ட மூன்று மகள்களும் மதிய உணவை ஒன்றாக சேர்ந்து உண்ண அலுவலகத்திற்கு வருவார்கள்.

அன்று பிற்பகலில், எங்கள் ஐந்து வயது மகள் மிஷேல் எனக்கு ஒரு தனிப்பட்ட செய்தியை அனுப்பியதை நான் கவனித்தேன், அது ஒரு ஒட்டும் குறிப்பு தாளில் எழுதப்பட்டு எனது அலுவலக தொலைபேசியுடன் ஒட்டப்பட்டிருந்தது.

“அப்பா, என்னை நேசிக்க நினைவுவைத்திருங்கள்” என்று எளிமையாக எழுதப்பட்டிருந்தது. அன்புடன், மிஷேல்.” இது ஒரு இளம் தந்தைக்கு, மிகவும் முக்கியமான விஷயங்களைப்பற்றி ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக இருந்தது.

சகோதர சகோதரிகளே, நம்முடைய பரலோக பிதா எப்பொழுதும் நம்மை நினைவில் வைத்திருப்பார் என்றும் அவர் நம்மை பரிபூரணமாக நேசிக்கிறார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். எனது கேள்வி இதுதான்: நாம் அவரை நினைவுகூர்கிறோமா? நாம் அவரை நேசிக்கிறோமா?

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் உள்ளூர் சபை தலைவராக சேவையாற்றினேன். எங்கள் இளம் ஆண்களில் ஒருவரான டேனி, எல்லா வகையிலும் சிறந்து விளங்கினான். அவன் கீழ்ப்படிதல், கருணை, நன்மையான, மற்றும் சிறந்த நெஞ்சம் கொண்டவனாக இருந்தான். இருப்பினும், அவன் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றதும், ஒரு கடினமான கூட்டத்துடன் பழகத் தொடங்கினான். அவன் போதையில் வீழ்ந்தான், குறிப்பாக மெத்தாம்பேட்டமைன், அடிமையாகுதலிலும் மீளமுடியாத அழிவின் சாய்விலும் அவன் பயணம் செய்தான். சிறிது காலத்திற்கு முன்பே, அவனது தோற்றம் முற்றிலும் மாறியது. அவனை அடையாளம் காண்பது கடினமாயிருந்தது மிக முக்கியமான மாற்றம் அவனது கண்களில் இருந்தது அவன் கண்களில் ஒளி மங்கிவிட்டது. பலமுறை அவனைத் தொடர்பு கொண்டேன், ஆனால் பலனில்லை. அவன் ஆர்வம் காட்டவில்லை.

இந்த வியக்கத்தக்க இளைஞன் கஷ்டப்படுவதையும், அவனல்லாத வாழ்க்கையை வாழ்வதையும் பார்ப்பது கடினமாயிருந்தது! அவன் இன்னும் நிறைய திறன் வாய்ந்தவனாக இருந்தான்.

பின்னர் ஒரு நாள், அவனின் அற்புதம் துவங்கியது.

அவன் திருவிருந்து கூட்டத்தில் கலந்து கொண்டான், அங்கு அவனது இளைய சகோதரன் ஊழிய சேவைக்கு புறப்படுவதற்கு முன்பு தனது சாட்சியைப் பகிர்ந்து கொண்டான். டேனி நீண்ட நாட்களாக உணராத ஒன்றை இந்த கூட்டத்தின் போது உணர்ந்தான். கர்த்தரின் அன்பை உணர்ந்தான். முடிவாக அவனுக்கு நம்பிக்கை வந்தது

அவனுக்கு ஆசை இருந்தாலும், டேனிக்கு மாறுவது கடினமாக இருந்தது. அவனுடைய அடிமைத்தனமும் அதனுடன் சேர்ந்த குற்ற உணர்ச்சியும் அவனால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது.

ஒரு குறிப்பிட்ட மதிய வேளையில், நான் எங்கள் புல்வெளியை அறுத்துக்கொண்டிருந்தபோது, ​​எதிர்பாராதவிதமாக டேனி தன் காரிலிருந்து வந்திறங்கினான். அவனுடைய போராட்டம் பயங்கரமாயிருந்தது நான் புல்லறுக்கும் இயந்திரத்தை அணைத்தேன், நாங்கள் தாழ்வாரத்தின் படியில் நிழலில் ஒன்றாக அமர்ந்தோம். அப்போதுதான் தன் மனதின் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டான். அவன் உண்மையிலேயே திரும்பி வர விரும்பினான். இருப்பினும், அவனது அடிமைத்தனம் மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து விலகுவது மிகவும் கடினமாக இருந்தது. இதனுடன் சேர்த்து, அவன் மிகவும் குற்றஉணர்வுடன் இருந்தான், இவ்வளவு தூரம் விழுந்ததற்காக வெட்கப்பட்டான். அவன் கேட்டான், “நான் உண்மையில் மன்னிக்கப்பட முடியுமா? உண்மையில் திரும்ப வழி இருக்கிறதா?

இந்த கவலைகளில் அவன் இருதயம் நிரம்பியபொழுது, ஆல்மா 36-ம் அதிகாரத்தை ஒன்றாகப் படித்தோம்

“நான் என் சகல பாவங்களையும், அக்கிரமங்களையும் நினைவு கூர்ந்தேன்…

ஆம், … தேவசமுகத்தில் பிரவேசிக்கவேண்டுமென்ற அந்த எண்ணமே, என் ஆத்துமாவை சொல்லமுடியாத திகிலால் அலைக்கழித்தது (வசனங்கள் 13-14).

அந்த வசனங்களுக்குப் பிறகு, டேனி, “நான் இப்படித்தான் உணர்கிறேன்!” என்றான்.

நாங்கள் தொடர்ந்தோம்:

“நான் வேதனையில் துவண்டு, என் அநேக பாவங்களால் அலைக்களிக்கப்பட்டபோது, இதோ உலகத்தின் பாவங்களை நிவர்த்தியாக்க, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்பவருடைய வரவைக் குறித்து, ஜனங்களுக்கு என் தந்தை தீர்க்கதரிசனம் சொல்லுவதைக் கேட்டதாகவும் நினைவுகூர்ந்தேன்.

என்ன சந்தோஷம், என்ன மகத்துவமான ஒளியை நான் கண்டுகொண்டேன்” (வசனங்கள் 17, 20).

இந்த பத்திகளை படிக்கும் போது கண்ணீர் வழிய ஆரம்பித்தது. ஆல்மாவின் மகிழ்ச்சி அவன் தேடிக்கொண்டிருந்த மகிழ்ச்சி!

ஆல்மா விவரிக்கமுடியாத பொல்லாதவன் என்று நாங்கள் விவாதித்தோம். ஆனால், ஒருமுறை மனம்திரும்பிய பின் அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவர் இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்புள்ள சீடரானார். அவர் தீர்க்கதரிசி ஆனார்! டேனியின் கண்கள் விரிந்தன. “ஒரு தீர்க்கதரிசியா?” எனக் கேட்டான்.

நான் வெறுமனே பதிலளித்தேன், “ஆம், ஒரு தீர்க்கதரிசி. உன்னை கட்டாயப்படுத்தவில்லை!”

அவனுடைய பாவங்கள் ஆல்மா அளவிற்கு ஆழமாக இல்லை என்றாலும், இயேசு கிறிஸ்துவின் எல்லையற்ற பாவநிவிர்த்தியின் மூலமும், முழுமையான மற்றும் பரிபூரணமான மன்னிப்புக்கான அதே வாக்குறுதி அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது என்று நாங்கள் விவாதித்தோம்.

டேனிக்கு இப்போது புரிந்துவிட்டது. தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான்: கர்த்தரில் நம்பிக்கை வைத்து, தன்னை மன்னிப்பதன் மூலம் தனது பயணத்தை அவன் தொடங்க வேண்டும்!

டேனியின் மனமாற்றம் ஒரு அற்புதத்தை விட குறைந்ததல்ல. காலப்போக்கில், அவனது முகம் மாறியது, அவனது கண்களில் பிரகாசம் திரும்பியது. அவன் ஆலய தகுதியடைந்தான் அவன் இறுதியாக மீண்டான்!

பல மாதங்களுக்குப் பிறகு, டேனியிடம் முழுநேர ஊழிய பணிக்காக விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்புகிறாயா என்று கேட்டேன். அவனது பதில் அதிர்ச்சியும் பிரமிப்பும் நிறைந்ததாக இருந்தது.

அவன் கூறினான், “நான் ஊழிய பணியைச் செய்ய விரும்புகிறேன், ஆனால் நான் எங்கு இருந்தேன் மற்றும் நான் செய்த காரியங்கள் உங்களுக்குத் தெரியும்! நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக நினைத்தேன்.

நான் பதிலளித்தேன், “நீ சொல்வது சரியாக இருக்கலாம். இருப்பினும், கோரிக்கை வைப்பதில் நமக்கு தடை எதுவும் இல்லை. நீ தகுதி நீக்கம் செய்யப்படுவாய் என்றால், கர்த்தருக்கு சேவை செய்ய ஒரு உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்தினாய் என்பதை நீ அறிவாய்.” அவன் கண்கள் ஒளிர்ந்தன இந்த யோசனையால் அவன் சிலிர்ப்படைந்தான். அவனுக்கு இது ஒரு நீண்ட தூரம், ஆனால் அவர் எடுக்கத் தயாராக இருந்த ஒரு வாய்ப்பு.

சில வாரங்களுக்குப் பிறகு, அவனை ஆச்சரியப்படுத்தும் வகையில், மற்றொரு அற்புதம் நிகழ்ந்தது. டேனிக்கு முழுநேர ஊழியச் சேவை செய்ய அழைப்பு வந்தது.

டேனி ஊழிய பணிக்கு சென்ற சில மாதங்களுக்குப் பிறகு, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவனது ஊழியத் தலைவர் கூறினார், “இந்த இளைஞனிடம் என்ன இருக்கிறது? நான் பார்த்ததிலேயே மிகவும் வியக்கத்தக்க ஊழியக்காரன் அவர்!” இந்த தலைவர் நவீன கால இளைய ஆல்மாவைப் பெற்தை நீங்கள் அறிவீர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டேனி தனது முழு இருதயத்தோடும், வலிமையோடும், மனத்தோடும், கர்த்தருக்கு சேவை செய்து, நன்மதிப்போடு வீடு திரும்பினான்.

திருவிருந்து கூட்டத்தில் அவனது ஊழிய அறிக்கையைத் தொடர்ந்து, நான் வீடு திரும்பிய உடனே, முன் கதவு தட்டும் சத்தம் கேட்டது. கண்களில் கண்ணீருடன் டேனி நின்றிருந்தான். “ஒரு நிமிடம் பேசலாமா?” என்றான். நாங்கள் அதே தாழ்வாரப் படிக்காக வெளியே சென்றோம்.

தலைவரே, நான் உண்மையிலேயே மன்னிக்கப்பட்டேன் என்று நினைக்கிறீர்களா?” என்றான்

இப்போது என் கண்ணீரும் அவனுடன் சேர்ந்தது. இரட்சகரைப்பற்றி போதனை செய்வதற்கும் சாட்சி கொடுப்பதற்கும் தன் அனைத்தையும் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்புள்ள சீஷர் எனக்கு முன்பாக நிற்கிறார். அவர் இரட்சகரின் பாவநிவர்த்தியின் குணப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும் வல்லமையின் உருவகமாக இருந்தார்.

நான், “டேனி! கண்ணாடியில் பார்த்தாயா? உன் கண்களைப் பார்த்தாயா? அவைகள் ஒளியால் நிரப்பப்பட்டிருக்கின்றன, நீ கர்த்தருடைய ஆவியால் பிரகாசிக்கிறாய். நிச்சயமாக நீ மன்னிக்கப்பட்டுவிட்டாய்! நீ அற்புதமானவன்! இப்போது நீ செய்ய வேண்டியது உன் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துவதுதான். திரும்பிப் பார்க்காதே! அடுத்த நியமனத்தை விசுவாசத்துடன் எதிர்நோக்கு.

டேனியின் அற்புதம் இன்றும் தொடர்கிறது. அவர் ஆலயத் திருமணம் செய்து கொண்டார் மேலுமாக கல்லூரிக்கு சென்று, அங்கு முதுகலைப் பட்டம் பெற்றார். அவர் தனது அழைப்புகளில் நன்மதிப்புடனும் கண்ணியத்துடனும் கர்த்தருக்கு தொடர்ந்து சேவை செய்கிறார். மிக முக்கியமாக, அவர் ஒரு நம்பமுடியாத கணவராகவும் உண்மையுள்ள தந்தையாகவும் மாறியுள்ளார். அவர் “இயேசு கிறிஸ்துவின் ஒரு அர்ப்பணிப்புள்ள சீஷர்.

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “[இரட்சகரின்] எல்லையற்ற பாவநிவர்த்தி இல்லாவிட்டால், அனைத்து மனித இனமும் மீளமுடியாமல் இழக்கப்படும்.”1 டேனி இழக்கப்படவில்லை, நாமும் தேவனிடம் இருந்து இழக்கப்படுவதில்லை நம்மை உயர்த்தவும், பலப்படுத்தவும், மன்னிக்கவும் அவர் வாசலில் நிற்கிறார். அவர் எப்போதும் நம்மை நேசிப்பதை நினைவில் கொள்கிறார்!

தேவனின் பிள்ளைகள் மீது இரட்சகரின் அன்பின் நம்பமுடியாத செயல் விளக்கம் மார்மன் புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது: அந்தப்படியே, இயேசு இவ்வாறு பேசினவுடனே, அவர் தம்முடைய கண்களை மறுபடியும் திரளானோருக்கு நேராய் ஏறெடுத்து, அவர்கள் கண்ணீர் விடுவதையும், அவர் தங்களோடு சற்று அதிகமாய்த் தங்கவேண்டுமென்று கேட்பதுபோன்று அவர்கள் அவரையே, கண்ணிமைக்காமல் பார்த்ததையும் கண்டார். (3 நேபி 17:5)

இரட்சகர் ஏற்கனவே ஒரு முழு நாளையும் மக்களுக்கு ஊழியம் செய்வதில் செலவிட்டார். இன்னும், அவர் இன்னும் செய்ய வேண்டியிருந்தது, அவர் தனது மற்ற ஆடுகளைப் பார்க்க வேண்டும்; அவர் தந்தையிடம் செல்ல வேண்டியிருந்தது

இந்தக் கடமைகள் இருந்தபோதிலும், மக்கள் தாம் இன்னும் சிறிது காலம் தங்க வேண்டும் என்று விரும்புவதை அவர் உணர்ந்தார். பின்னர், இரட்சகரின் இருதயம் நிறைந்த இரக்கத்துடன், உலக வரலாற்றில் மிகப்பெரிய அற்புதங்களில் ஒன்று நிகழ்ந்தது:

அவர் தங்கினார்.

அவர்களை அவர் குணமாக்கினார்.

அவர்களுடைய சிறுபிள்ளைகளை ஒவ்வொருவராய் எடுத்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்காக பிதாவினிடத்தில் ஜெபித்தார்.

அவர் அவர்களுக்காக ஜெபித்தார்; அவர்களுடன் சேர்ந்து அழுதார்.

அவர்களை அவர் சுகப்படுத்தினார். (3 நேபி 17 பார்க்கவும்.)

அவருடைய வாக்குறுதி நித்தியமானது: அவர் நம்மை சுகப்படுத்துவார்.

உடன்படிக்கையின் பாதையிலிருந்து விலகிச் சென்றவர்களுக்கு, நம்பிக்கை எப்போதும் இருக்கிறது, எப்போதும் குணமாகலாம், திரும்புவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அவரது நித்திய நம்பிக்கையின் செய்தி, ஒரு குழப்பமான உலகில் வாழும் அனைவருக்கும் குணப்படுத்தும் தைலம் ஆகும். இரட்சகர் சொன்னார், ”நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.” (யோவான் 14:6).

சகோதர சகோதரிகளே, அவரைத் தேடவும், அவரை நேசிக்கவும், எப்போதும் அவரை நினைவுகூரவும் நினைவில் கொள்வோம்.

தேவன் ஜீவிக்கிறார் என்றும் அவர் நம்மை நேசிக்கிறார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். இயேசு கிறிஸ்து உலகத்தின் இரட்சகரும் மீட்பருமானவர் என நான் கூடுதலாக சாட்சியளிக்கிறேன். அவர் வல்லமையுள்ள குணப்படுத்துபவர். “என் மீட்பர் உயிரோடிருக்கிறாரென நான் அறிவேன்! இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்பு

  1. Russell M. Nelson, “Prepare for Blessings of the Temple,” Ensign, Mar. 2002, 21.