பொது மாநாடு
உங்கள் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தை பெறுவது எப்போது
ஏப்ரல் 2023 பொது மாநாடு


உங்கள் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தை பெறுவது எப்போது

நீங்கள் உங்கள் ஆசீர்வாதத்தைப் பெறும்போது, ​​பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் உங்களை எப்படி நேசிக்கிறார்கள் என்பதையும், அவர்கள் உங்கள் மீது எப்படி தனி கவனம் செலுத்துகிறார்கள் என்பதையும் நீங்கள் அறிந்து உணர்வீர்கள்.

நேற்று எனது அன்பு நண்பர் மூப்பர் ராண்டால் கே. பென்னட் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்களைப்பற்றி பேசினார் இது ஒரு சிறந்த செய்தி மற்றும் நம் அனைவரையும் ஊக்கப்படுத்தியது. என் அன்பான சகோதர சகோதரிகளே, நானும் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்களைப்பற்றி பேசலாமா? கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்களின் கோரிக்கைகள் அதிகரிக்கும்போது, கோத்திரத்தலைவர்களே, நீங்கள் தொடர்ந்து உங்கள் அழைப்பை மிகைப்படுத்த தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

நான் பிணைய மாநாடுகளுக்குச் செல்லும்போது, ​​பிணையத் தலைவர் மற்றும் அவரது துணைவியரை வழக்கமாக சந்திப்பேன். கோத்திரத்தலைவர்கள் தேவனால் அழைக்கப்பட்ட கனிவான, கீழ்ப்படிதலுள்ள மற்றும் வியக்கத்தக்க தலைவர்கள். அவர்கள் எனக்கு பல அற்புதமான ஆவிக்குரிய அனுபவங்களைச் சொல்கிறார்கள். தாங்கள் ஆசீர்வாதம் வழங்கிய இளையவர் மற்றும் மூத்தவரின் வயதைக் கேட்கிறேன். இதுவரை, இளையவருக்கு 11 வயது மற்றும் மூத்தவருக்கு 93 வயது.

நான் ஞானஸ்நானம் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 19 வயதில், சபையின் புதிய உறுப்பினராக எனது கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெற்றேன். எனது கோத்திரத்தலைவன் நம்பமுடியாத மூத்த வயதுள்ளவராக இருந்தார். அவர் 1916-ல் சபையில் இணைந்தார் மற்றும் ஜப்பானில் சபையின் முன்னோடியாக இருந்தார் அந்த விசேஷமான கர்த்தரின் சீடரிடம் இருந்து எனது கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெறுவது எனக்குப் பெருமையாக இருந்தது. அவருடைய ஜப்பானிய மொழியை புரிந்துகொள்வது எனக்கு சற்று கடினமாக இருந்தது, ஆனால் அது வல்லமை வாய்ந்ததாக இருந்தது.

பல தனிநபர்கள் ஊழிய சேவை செய்வதற்கு முன்பு அவர்களுக்கான கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள் என்று நான் சந்தித்த கோத்திரத்தலைவர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். எனது அன்பான இளம் ஆண்களே, இளம் பெண்களே, பெற்றோர்களே, ஆயர்களே, கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்கள் ஊழிய பணியைச் செய்வதற்கு ஆயத்தப்படுத்துவதற்கு மட்டுமல்ல. தகுதியான ஞானஸ்நானம் பெற்ற உறுப்பினர்கள் தங்களுடைய சரியான நேரத்தில் தங்கள் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்1

அன்பான வயதுவந்த உறுப்பினர்களே, உங்களில் சிலருக்கு இதுவரையிலும் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறாமல் இருக்கலாம் நினைவில் கொள்ளுங்கள், இதற்கு அதிகபட்ச வயது இல்லை

என் மாமியார் மிகவும் சுறுசுறுப்பான சபை உறுப்பினராக இருந்தார், அவர் 90 வயதில் மரிக்கும் வரை ஒத்தாசைச் சங்கத்தின் ஆசிரியராக சேவை செய்தார். அவள் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெறவில்லை என்பதை அறிந்து நான் வருத்தமடைந்தேன். அவள் வாழ்க்கையில் பல சிரமங்களை அனுபவித்தாள், மேலும் அவளுக்கு வீட்டில் ஒரு ஆசாரியத்துவம் பெற்றவர் இல்லாததால், அவளுக்கு அதிக ஆசாரிய ஆசீர்வாதங்கள் கிடைக்கவில்லை ஒரு கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் மிகவும் தேவைப்படும்போது அவளுக்கு ஆறுதல் அளித்திருக்கலாம்.

பெரியவர்களே, உங்களுக்கு இன்னும் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் கிடைக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம்! ஒவ்வொருவரின் ஆவிக்குரிய காலகட்டம் வித்தியாசமானது. உங்களுக்கு 35 அல்லது 85 வயது இருந்து உங்களுக்கு விருப்பம் இருந்தால், உங்கள் ஆசீர்வாதத்தைப் பெறுவதைப்பற்றி உங்கள் ஆயரிடம் பேசுங்கள்.

சபையின் புதிய உறுப்பினர்களே, கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்களைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நான் சபையில் சேர்ந்தபோது அவற்றை பெறுவதற்கான வாய்ப்பைப்பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் எனது அன்பான ஆயர் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்களைப்பற்றி என்னிடம் கூறினார் மற்றும் நான் ஞானஸ்நானம் பெற்ற பிறகு என்னுடையதைப் பெறத் தயாராகும்படி என்னை ஊக்குவித்தார். எனது அன்பான புதிய உறுப்பினர்களே, நீங்கள் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தையும் பெறலாம். இந்த பரிசுத்தமான தருணத்திற்கு தயார் செய்ய தேவன் உங்களுக்கு உதவுவார்.

ஒரு கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்திற்கான இரண்டு நோக்கங்களைக் கருத்தில் கொள்வோம்:

  1. கர்த்தரிடமிருந்து உங்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை இந்த கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தில் அடங்கியிருக்கிறது.2

  2. ஒரு கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் இஸ்ரவேல் வீட்டில் உங்கள் வம்சாவளியை அறிவிக்கிறது.

உங்கள் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் பரலோக பிதாவிடமிருந்து வரும் ஒரு செய்தியாகும், மேலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு வழிகாட்டும் வாக்குறுதிகள் மற்றும் ஊக்கமளிக்கும் அறிவுரைகளை உள்ளடக்கியிருக்கலாம். கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் உங்கள் வாழ்க்கையை வரையறுக்கவோ அல்லது உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கவோ போவதில்லை. இது ஒரு முக்கியமான வாழ்க்கை நிகழ்வைக் குறிப்பிடவில்லை என்றால், உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். அதேபோல், உங்கள் ஆசீர்வாதத்தில் உள்ள அனைத்தும் இந்த வாழ்க்கையில் நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் நித்தியமானது, நீங்கள் தகுதியுடன் வாழ்ந்தால், இந்த வாழ்க்கையில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் வாழ்விற்கு பின்பு வழங்கப்படும்.3

நீங்கள் வம்சாவளி பிரகடனத்தைப் பெறும்போது, ​​நீங்கள் இஸ்ரவேல் வம்சத்தாரும் ஆபிரகாமின் சந்ததியாரும் என்பதை அறிந்துகொள்வீர்கள்4 இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, கர்த்தர் ஆபிரகாம் மூலம் இஸ்ரவேல் வீட்டாருக்கு அளித்த வாக்குத்தத்தங்களில் கவனம் செலுத்துங்கள்.

அந்த வாக்குறுதிகளில் பின்வருவன அடங்கும்:

  • “அவரது சந்ததியினர் ஏராளமானவர்களாக இருப்பார்கள் (ஆதியாகமம் 17:5-6 ஆபிரகாம் 2:9 ;3:14 பார்க்கவும்

  • “அவருடைய சந்ததி அல்லது சந்ததியினர், சுவிசேஷத்தைப் பெற்று, ஆசாரியத்துவத்தை தரித்திருப்பார்கள் (ஆபிரகாம் 2:9 பார்க்கவும்)

  • “அவருடைய சந்ததியின் ஊழியத்தின் மூலம், ‘பூமியின் எல்லா குடும்பங்களும் சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களாலும், இரட்சிப்பின் ஆசீர்வாதங்களாலும், நித்திய ஜீவனாலும் கூட ஆசீர்வதிக்கப்படும் (ஆபிரகாம் 2:11).”5

சபையின் உறுப்பினர்களாகிய நாம் உடன்படிக்கையின் பிள்ளைகள்6 சுவிசேஷ சட்டங்கள் மற்றும் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிவதால் ஆபிரகாமிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்

கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கான ஆயத்தம், பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீதான உங்கள் விசுவாசத்தை அதிகரிக்க உதவும். உங்கள் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெற்று, அதைப் படித்து சிந்திக்கும்போது, ​​நீங்கள் அடிக்கடி அவற்றில் கவனம் செலுத்தலாம்.

தலைவர் தாமஸ் எஸ். மான்சன் விளக்கினார், லேகிக்கு லியஹோனாவை வழங்கிய அதே கர்த்தர் இன்று உங்களுக்கும் எனக்கும் ஒரு அரிய மற்றும் மதிப்புமிக்க வரத்தை வழங்குகிறார், வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு மாறாக, நமது வாழ்க்கைக்கு வழிகாட்டவும், ஆபத்துகளை உணர்த்தி பாதுகாத்திடவும், பாதையில் வழிநடத்தவும், பாதுகாப்பான பாதையிலும் கூட நம்முடைய பரலோக குடும்பத்திற்கு வழிநடத்துகிறார்.”7

என் அன்பான ஆயர்களே, பெற்றோர்களே, மூப்பர் குழும மற்றும் ஒத்தாசைச் சங்கத் தலைவர்கள், தொகுதி ஊழிய பணித் தலைவர்கள், மற்றும் ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகளே, இதுவரை கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெறாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், வயதுவந்த உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்களை கர்த்தரின் வழிநடத்துதலைப் பெற ஊக்குவிக்கவும். அவ்வாறு தங்களை தயார்படுத்திக்கொள்ள உதவுங்கள்

எனது கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தை நான் அடிக்கடி மற்றும் ஜெபத்துடன் படிக்கிறேன்; அது எப்போதும் எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது. கர்த்தர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், அது மனந்திரும்பி மனத்தாழ்மையுடன் இருக்க எனக்கு உதவியது. நான் அதைப் படித்து சிந்திக்கும்போது, ​​அதன் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு தகுதியுடையவராக வாழ விரும்புகிறேன்.

நாம் பலமுறை படித்த வேதங்கள் பிற்காலத்தில் நமக்குப் புதிய அர்த்தத்தைத் தருவது போல, நம் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் வெவ்வேறு சமயங்களில் நமக்கு வேறு அர்த்தத்தைத் தரும். எனக்கு 30 வயதிலும் 50 வயதிலும் இருந்ததை விட இப்போது என்னுடையது வேறு அர்த்தமாக உள்ளது. வார்த்தைகள் மாறுவதல்ல, வேறு விதமாகப் பார்க்கிறோம்.

கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் “பரிசுத்த ஆவியின் உத்வேகத்தின் கீழ் வழங்கப்படுகிறது, அதே ஆவியின் செல்வாக்கின் கீழ் வாசிக்கப்பட்டு விளங்கப்பட வேண்டும்” என்று தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ் அறிவித்தார். கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தின் அர்த்தமும் முக்கியத்துவமும் [அதை] தூண்டிய அதே பரிசுத்த ஆவியின் வல்லமையால் காலப்போக்கில் வரிக்கு வரி கற்பிக்கப்படும்8

சகோதர சகோதரிகளே, பரலோக பிதாவும் அவருடைய அன்புக்குரிய ஒரே பேறான குமாரனுமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் வாழ்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன். அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள். கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் அவர்களிடமிருந்து பரிசுத்தமான வரங்கள். உங்கள் ஆசீர்வாதத்தைப் பெறும்போது, ​​அவர்கள் உங்களை எப்படி நேசிக்கிறார்கள் என்பதையும், அவர்கள் உங்கள் மீது எப்படி தனி கவனம் செலுத்துகிறார்கள் என்பதையும் நீங்கள் அறிந்து உணர்வீர்கள்.

மார்மன் புஸ்தகம்: இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு. நமது அன்பான தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சன் இந்தக் கூட்டத்திற்கு நிறைவு உரையாற்றுபவராக இருப்பார்.

நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலையும் மையமாகக் கொண்டு, அவரை துதித்து, அவருடைய தியாகத்திற்கு நன்றி செலுத்துவேன். அவர் நம்மை மிகவும் ஆழமாக நேசிப்பதால் அவர் மிகவும் ஆழமாக துன்பப்பட்டார் என்பதை நான் அறிவேன். அவர் நம்மீது கொண்ட அன்பினால் உயிர்த்தெழுந்தார் என்பதை நான் அறிவேன். அவர் உண்மையானவர். அப்படியே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 18.17, ChurchofJesusChrist.org பார்க்கவும்.

  2. Patriarchal Blessings,” in True to the Faith (2004), 112. பார்க்கவும்.

  3. Patriarchal Blessings,” in True to the Faith, 113 பார்க்கவும்.

  4. ஆபிரகாம் 2:10 பார்க்கவும்.

  5. Abrahamic Covenant,” in True to the Faith, 5.

  6. 3 நேபி 20:25-26 பார்க்கவும்.

  7. Thomas S. Monson, “Your Patriarchal Blessing: A Liahona of Light,” Ensign, Nov. 1986, 65.

  8. Dallin H. Oaks, “Patriarchal Blessings,” Worldwide Leadership Training Meeting: The Patriarch, Jan. 8, 2005, 10.