வேதங்கள்
2 நேபி 19


அதிகாரம் 19

ஏசாயா மேசியாபோலப் பேசுதல் – அந்தகாரத்திலுள்ள ஜனங்கள் ஒரு பெரிய வெளிச்சத்தைக் காண்பார்கள் – நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் – அவர் சமாதானத்தின் பிரபுவாக, தாவீதின் சிங்காசனத்தின் மீதிருந்து அரசாளுவார் – ஏசாயா 9ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 ஆகிலும், அவன் முன்னர் செபுலோன் தேசத்தையும், நப்தலி தேசத்தையும் அதிகமாய் இடுக்கப்படுத்தாதபோதும், பின்னர் தேசத்தாரிருந்த கலிலேயாவில் யோர்தானுக்கு அப்பால் சிவந்த சமுத்திரத்தின் வழியே, மிகவும் கொடிய முறையில் இடுக்கப்படுத்தினபோதும், இருந்த அவளுடைய இழிவைப்போல அது இருண்டிருப்பதில்லை.

2 இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல், வெளிச்சம் பிரகாசித்தது.

3 அந்த தேசத்தைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர். அறுப்பில் மனுஷர்கள் மகிழ்கிறது போலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருவது போலவும், உமக்கு முன்பாக மகிழ்கிறார்கள்.

4 அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்களை ஒடுக்கிறவனின் கோலையும், முறித்துப்போட்டீர்.

5 யுத்தம்புரிகிற, வீரருடைய ஒவ்வொரு யுத்தமும் அமளியாய் இருக்கிறது, இரத்தத்தில் புரண்ட வஸ்திரங்கள் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்.

6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு எனப்படும்.

7 தன் ராஜ்யத்தைத் திடப்படுத்தி, அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தீர்ப்பினாலும், நியாயத்தினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, தாவீதின் சிங்காசனத்தின்மீது அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்திற்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை. சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

8 கர்த்தர் தன் வார்த்தையை யாக்கோபுக்கு அனுப்பினார், அது இஸ்ரவேலின் மீது இறங்கிற்று.

9 அகந்தையும் மனப்பெருமையுமாய்ச் சொல்லுகிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிகளுமாகிய, எல்லா ஜனத்திற்கும் அது தெரியவரும்.

10 செங்கல் கட்டு இடிந்துபோயிற்று. பொளிந்த கல்லாலே திரும்பக் கட்டுவோம்; காட்டத்தி மரங்கள் வெட்டிப்போடப்பட்டது. அவைகளுக்குப் பதிலாகக் கேதுரு மரங்களை வைப்போம்.

11 ஆதலால் கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவனுக்கு விரோதமாய் உயர்த்தி, அவனுடைய சத்துருக்களை ஒன்றாய்ச் சேர்ப்பார்.

12 முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்த வாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

13 ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.

14 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிடமிருந்து தலையையும் வாலையும் கிளையையும் நாணலையும் ஒரே நாளில் வெட்டிப்போடுவார்.

15 மூப்பனே தலை; பொய்போதகம் பண்ணுகிற தீர்க்கதரிசியே வால்.

16 இந்த ஜனத்தின் தலைவர்களே அவர்கள் தப்பு செய்யக் காரணமாயிருந்தார்கள். அவர்களால் வழிநடத்தப்பட்டவர்கள் அழிக்கப்பட்டனர்.

17 ஆதலால் ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை. அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள் மேலும், விதவைகள் மேலும் இரங்குவதுமில்லை. அவர்கள் அனைவரும் மாயக்காரரும், பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள், எல்லா வாயும் ஆகாமியம் பேசும். இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், கை நீட்டியே இருக்கிறது.

18 துன்மார்க்கம் அக்கினியைப்போல எரிகிறது, அது முட்செடியையும், நெருஞ்சிலையும் பட்சிக்கும். அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும். புகை திரண்டு எழும்பும்.

19 சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, ஜனங்கள் அக்கினிக்கு இரையாவார்கள், ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான்.

20 வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள், இடது புறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள், அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.

21 மனாசே எப்பிராயீம், எப்பிராயீம் மனாசே, இவர்கள் ஏகமாய் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள். இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டனபடியே இருக்கிறது.