வேதங்கள்
2 நேபி 22


அதிகாரம் 22

ஆயிரவருஷ நாளிலே, மனுஷர் யாவரும் கர்த்தரைத் துதிப்பார்கள் – அவர் அவர்கள் மத்தியில் வாசமாயிருப்பார் – ஏசாயா 12ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 அந்நாளிலே நீ சொல்வது: கர்த்தாவே நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தபோதிலும், உம்முடைய கோபம் நீங்கிற்று. நீர் என்னைத் தேற்றுகிறீர்.

2 இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும் என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

3 ஆதலால், இரட்சிப்பின் ஊற்றுக்களிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் எடுப்பீர்கள்.

4 அக்காலத்திலே நீங்கள் சொல்வது, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள்.

5 கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார். இது பூமியெங்கும் அறியப்பட்டிருக்கிறது.

6 சீயோனில் வாசம்பண்ணுகிறவனே, சத்தமிட்டுக் கெம்பீரி; ஏனெனில் இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.