பொது மாநாடு
அவரைப் போலாகுதல்
அக்டோபர் 2020 பொது மாநாடு


அவரைப் போலாகுதல்

அவருடைய தெய்வீக உதவியால் மட்டுமே நாம் அனைவரும் அவரைப் போலாகுவதை நோக்கி முன்னேற முடியும்.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் கவனமாகப் படிக்கும் மாணவருக்கு கூட, “என்னைப் போலவே” இருக்க வேண்டும் என்ற இரட்சகரின் அறிவுரை 1 என்பது அச்சுறுத்தும் மற்றும் அடைய முடியாததாகத் தெரிகிறது. ஒருவேளை நீங்கள் என்னைப் போன்றவராக இருக்கலாம், உங்கள் தவறுகளையும் தோல்விகளையும் அனைவரும் அறிந்திருக்கலாம், எனவே மேல்நோக்கி சாய்தளமும், முன்னேற்றமும் இல்லாத பாதையில் நடப்பது உங்களுக்கு மனரீதியாக மிகவும் வசதியாக இருப்பதை நீங்கள் காணலாம். “நிச்சயமாக, இந்த போதனை உண்மையற்றது மற்றும் மிகைப்படுத்தலானது” என்று நாம் பகுத்தறிகிறோம், குறைந்தபட்ச எதிர்ப்பின் போக்கை நாம் வசதியாக தேர்ந்தெடுக்கும்போது, இதனால் தேவையான மாற்றத்தின் குறைந்த கலோரிகளை எரிக்கிறோம்.

ஆனால், “[அவர்] போலவே” மாறுவது நம் அநித்திய நிலையில் கூட, உருவகமாக இல்லாவிட்டால் என்ன செய்வது? இது ஓரளவிற்கு, இந்த வாழ்க்கையில் அடையக்கூடியது, உண்மையில், அவருடன் மீண்டும் இருப்பதற்கு ஒரு முன் நிபந்தனை என்றால் என்ன செய்வது? “என்னைப் போலவே” என இரட்சகரால் சொல்லப்பட்டது எதைக் குறிக்கிறது என்பது சரியாகவும் துல்லியமாகவும் இருந்தால் என்ன செய்வது? பின்னர் என்ன? நம்முடைய இயல்பை மாற்ற இயலும்படியாக, அவருடைய அற்புத வல்லமையை நம் வாழ்வில் வரவேற்க நாம் எந்த அளவிலான முயற்சியைக் கொடுக்க தயாராக இருக்கிறோம்.

மூப்பர் நீல் ஏ. மேக்ஸ்வெல் போதித்தார்: “இயேசுவைப் போலவே ஆகும்படி கட்டளையிடப்பட்டதைப்பற்றி நாம் சிந்திக்கையில், நம்முடைய தற்போதைய சூழ்நிலை, நாம் துன்மார்க்கர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால், நாம் அரை மனதுடையவராக இருக்கிறோம். அவருடைய காரணத்திற்காக உற்சாகத்தில் குறைவுள்ளவர்களாக--இது நம்முடைய காரணமும் கூட! நாம் அவரைப் புகழ்ந்து பேசுகிறோம், ஆனால் எப்போதாவது அவரைப் பின்பற்றுகிறோம்.“ 2 ஒரு இளம் ஊழியக்காரரான, சார்லஸ் எம். ஷெல்டன், இதேபோன்ற உணர்வுகளை இவ்வாறு வெளிப்படுத்தினார்: “எங்கள் கிறிஸ்தவம் மிகக்கடினமான எதுவாயிருந்தாலும், சிலுவை போல பாரமானதாய் இருந்தாலும், அதன் சுலபத்தையும் ஆறுதலையும் மிகவும் விரும்புகிறது.” 3

உண்மையில், இயேசு கிறிஸ்து பிதாவைப் போல ஆனது போலவே, அவரைப் போலவே ஆக வேண்டும் என்ற கட்டளையின் கீழ் அனைவரும் இருக்கிறார்கள். 4 நாம் முன்னேறும்போது, நாம் இன்னும் முழுமையானவர்களாகவும், நிறைவானவர்களாகவும், முழுமையாக வளர்ந்தவர்களாகவும் மாறுகிறோம். 5 இத்தகைய போதனை எந்த ஒரு பிரிவின் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, ஆனால் அது நேரடியாக போதகரிடமிருந்து வருகிறது. இந்த உருப்பெருக்கி மூலம்தான் வாழ்க்கை வாழ்ந்தாக வேண்டும், தகவல்தொடர்புகள் கருதப்பட வேண்டும், உறவுகள் வளர்க்கப்பட வேண்டும். உண்மையாகவே, சமாதான பிரபுவை நாம் ஒவ்வொருவரும் முழுமையாக பின்பற்றுவதை விட, உடைந்த உறவுகளின் அல்லது உடைந்த சமூகத்தின் காயங்களை குணப்படுத்த வேறு வழியில்லை. 6

இயேசு கிறிஸ்துவின் பண்புகளைப் பெறுவதன் மூலம் அவரைப் போலாகும் சிந்தனைமிக்க, வெளிப்படையான மற்றும் வேண்டுமென்றே தொடர ஆரம்பிப்பது எப்படி என்பதைக் கருத்தில் கொள்வோமாக.

தீர்த்து ஒப்புக்கொடுங்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் மனைவியும் ஜப்பானின் மிக உயரமான மலையான புஜி மலையின் பாதையில் நின்றோம். நாங்கள் ஏறத் தொடங்கியதும் தொலைவிலிருந்த சிகரத்தைப் பார்த்தோம், நாங்கள் அங்கு செல்ல முடியுமா என்று யோசித்தோம்.

படம்
புஜி மலை

நாங்கள் முன்னேறியபோது, சோர்வு, வலி ஏற்பட்ட தசைகள், மற்றும் உயரத்தின் தாக்கங்கள் ஏற்பட்டன. மனரீதியாக, அடுத்த அடி வைப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் கூறினோம், “நான் விரைவில் உச்சிக்குச் செல்லமாட்டேன், ஆனால் இந்த அடுத்த அடியை வைப்பது இப்போது என்னால் முடியும்.” நேரம் செல்லவே, கடினமான பணி இறுதியில் அடையக்கூடியதாக மாறியது-படிப்படியாக.

இயேசு கிறிஸ்துவைப் போல மாறுவதற்கான இந்த பாதையின் முதல் படி, அவ்வாறு செய்ய ஆசைப்படுவதாகும். அவரைப் போலவே இருக்க வேண்டும் என்ற அறிவுரையைப் புரிந்துகொள்வது நல்லது, ஆனால் அந்த புரிதலுடன் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன், சுபாவ மனிதனைத் தாண்டி, ஒரு நேரத்தில் ஒரு படி நம்மை மாற்றும் ஏக்கத்துடன் இணைய வேண்டும். 7 வாஞ்சையை வளர்க்க, இயேசு கிறிஸ்து யார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவருடைய குணத்தைப்பற்றி கொஞ்சமாவது நாம் அறிந்திருக்க வேண்டும், மேலும் வேதங்கள், வழிபாட்டு ஆராதனைகள் மற்றும் பிற பரிசுத்த ஸ்தலங்களில் அவருடைய பண்புகளை நாம் தேட வேண்டும். 8 நாம் அவரைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ளத் தொடங்குகையில், அவருடைய பண்புகள் மற்றவர்களிடம் பிரதிபலிப்பதைக் காண்போம். இது நம்முடைய சொந்த தேடலில் நம்மை ஊக்குவிக்கும், ஏனென்றால் மற்றவர்களால், அவரின் பண்புகளை ஓரளவிற்கு அடைய முடிந்தால், அவ்வாறே நம்மாலும் முடியும்.

நாம் நம்மோடு நேர்மையாக இருந்தால், கிறிஸ்துவின் ஒளி 9 இரட்சகர் விரும்பிய தன்மையுடன் ஒப்பிடுகையில், நாம் இருக்கும் இடத்திற்கு இடையில் தூரம் இருப்பதாக, நமக்குள்ளே கிசுகிசுக்கிறது. 10 அவரைப் போல நாம் முன்னேற வேண்டுமானால் இத்தகைய நேர்மை மிக முக்கியம். உண்மையில், நேர்மை அவருடைய பண்புகளில் ஒன்றாகும்.

படம்
வேடிக்கை-வீட்டு கண்ணாடி மாறுபிம்பம்

இப்போது, தைரியமுள்ள நம்மில் ஒரு நம்பகமான குடும்ப அங்கத்தினர், மனைவி, நண்பர் அல்லது ஆவிக்குரிய தலைவரிடம் இயேசு கிறிஸ்துவின் பண்பு நமக்குத் தேவை என கேட்பதைக் கருத்தில் கொள்ளலாம் - அதற்கான பதிலை நாம் தழுவிக்கொள்ள வேண்டும்! சில நேரங்களில் நாம் சிதைந்த வேடிக்கையான கண்ணாடியுடன் நம்மைப் பார்க்கிறோம், அது நாம் உண்மையில் இருப்பதை விட அதிகம் பெருத்ததாக அல்லது மிகவும் மெலிந்ததாக காட்டுகிறது.

நம்பகமான நண்பர்களும் குடும்பத்தினரும் நம்மை நாமே இன்னும் துல்லியமாகப் பார்க்க நமக்கு உதவலாம், ஆனால் அவர்கள் கூட அவர்கள் இருக்க விரும்பும் அளவுக்கு அன்பாகவும் உதவியாகவும் இருப்பதால், விஷயங்களை பூரணமற்றதாகக் காணலாம். இதன் விளைவாக, நம்முடைய அன்பான பரலோக பிதாவிடம் நமக்கு என்ன தேவை, நம்முடைய முயற்சிகளுடன் நாம் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்பதும் மிக முக்கியம். அவர் நம்மைப்பற்றி ஒரு பூரணமான பார்வையைக் கொண்டிருக்கிறார், மேலும் நம்முடைய பலவீனத்தை அன்பாகக் காண்பிப்பார். 11 ஒரு சிலவற்றைக் கூறினால், உங்களுக்கு அதிக பொறுமை, பணிவு, தயாளம், அன்பு, நம்பிக்கை, கருத்துடைமை அல்லது கீழ்ப்படிதல் தேவை என்பதை ஒருவேளை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் 12

சிறிது காலத்திற்கு முன்பு, ஒரு அன்பான சபைத் தலைவர் ஒரு குறிப்பிட்ட பண்பின் அதிக அளவை நான் பயன்படுத்த முடியும் என்று ஒரு நேரடி ஆலோசனையை வழங்கியபோது எனக்கு ஆத்துமாவை இழுக்கும் அனுபவம் ஏற்பட்டது. எந்தவொரு மாறுபிம்பத்தையும் அவர் அன்பாக தடுத்தார். அன்று இரவு, இந்த அனுபவத்தை நான் என் மனைவியுடன் பகிர்ந்து கொண்டேன். அவருடைய ஆலோசனையுடன் அவள் உடன்பட்டபோதும் அவள் இரக்கத்துடன் தயாளமுள்ளவளாக இருந்தாள். அவர்களின் ஆலோசனை அன்பான பரலோக பிதாவிடமிருந்து வந்தது என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு உறுதிப்படுத்தினார்.

Preach My Gospel. 6ம் அத்தியாயத்தில் கிறிஸ்துவைப் போன்ற பண்பு, நிகழ்ச்சியை நேர்மையாக முடிக்க உதவியாக இருக்கலாம். 13

நீங்கள் ஒரு நேர்மையான மதிப்பீட்டைச் செய்து, மலையில் ஏறத் தொடங்க முடிவெடுத்தால், நீங்கள் மனந்திரும்ப வேண்டும். தலைவர் ரசல்.எம். நெல்சன் அன்பாக போதித்தார்: “நாம் மனந்திரும்பத் தெரிந்துகொள்ளும்போது, மாற்றத்தைத் தேர்வு செய்கிறோம்! நமக்குள்ள சிறந்த மாதிரிக்குள் நம்மை மாற்ற, இரட்சகரை நாம் அனுமதிக்கிறோம். ஆவிக்குரிய விதமாக வளரவும், அவரில் மீட்பின் சந்தோஷமான சந்தோஷத்தைப் பெறவும் நாம் தேர்ந்தெடுக்கிறோம். நாம் மனந்திரும்ப தெரிந்துகொள்ளும்போது, அதிகமாக இயேசு கிறிஸ்துவைப் போலாக மாற நாம் தெரிந்து கொள்கிறோம்!” 14

இயேசு கிறிஸ்து போலாவதற்கு நம் இருதயங்களையும் மனதையும், உண்மையில், நம்முடைய தன்மையையும் மாற்ற வேண்டும், அவ்வாறு செய்வது இயேசு கிறிஸ்துவின் இரட்சிக்கும் கிருபையால் மட்டுமே சாத்தியமாகும். 15

செயலை அடையாளம் காணுங்கள்

இப்போது நீங்கள் மாறவும் மனந்திரும்பவும் தீர்மானித்திருக்கிறீர்கள், ஜெபத்தின் மூலம் வழிகாட்டுதலைத் தேடியுள்ளீர்கள், நேர்மையாக யோசித்து சாத்தியமானால், மற்றவர்களுடன் ஆலோசனை செய்திருக்கிறீர்கள், உங்கள் கவனமாக மாறும் ஒரு பண்பை, நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அர்த்தமுள்ள முயற்சியைச் செய்ய நீங்கள் ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்த பண்புகள் மலிவாகவும் திடீரெனவும் வராது, ஆனால் அவருடைய கிருபையின் மூலம் அவை முயற்சி செய்யப்படும்போது படிப்படியாக வரும்.

கிறிஸ்துவைப் போன்ற பண்புகள், நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் ஆசீர்வதிப்பதற்காக, அன்பான பரலோக பிதாவிடமிருந்து கிடைத்த பரிசுகளாகும். அதன்படி, இந்த பண்புகளைப் பெறுவதற்கான நமது முயற்சிகளுக்கு அவருடைய தெய்வீக உதவிக்கு மனமார்ந்த விண்ணப்பங்கள் தேவைப்படும். மற்றவர்களுக்கு சிறப்பாக சேவை செய்வதற்காக இந்த பரிசுகளை நாம் நாடினால், நம்முடைய முயற்சிகளில் அவர் நம்மை ஆசீர்வதிப்பார். தேவனிடமிருந்து ஒரு பரிசைப் பெற சுயநலமாக முயல்வது ஏமாற்றத்திலும் விரக்தியிலும் முடிவடையும்.

தேவையான ஒரு பண்பில் அதிகமாக கவனம் செலுத்துவதன் மூலம், அந்த பண்பைப் பெறுவதில் நீங்கள் முன்னேறும்போது, பிற பண்புகள் உங்களுக்கு வரத் தொடங்குகின்றன. தயாளத்தில் ஆழமாகக் கவனம் செலுத்தும் ஒருவர் அன்பிலும் தாழ்மையிலும் அதிகரிக்க முடியாதா? கீழ்ப்படிதலில் கவனம் செலுத்தும் ஒருவர் அதிக கருத்துடைமையையும் நம்பிக்கையையும் பெற முடியாதா? ஒரு பண்பைப் பெறுவதற்கான உங்கள் குறிப்பிடத்தக்க முயற்சிகள் துறைமுகத்தில் உள்ள அனைத்து படகுகளையும் தூக்குகிற அலைகளாகின்றன.

பதிவுசெய்து நிலைத்திருங்கள்

எனது அனுபவங்களையும், நான் கற்றுக்கொண்டவற்றையும் பதிவு செய்ய நான் அவரைப் போல ஆக முயற்சிக்கும்போது எனக்கு அது முக்கியமாகும். அவருடைய பண்புகளில் ஒன்றை என் மனதில் ஆழமாகப் படிக்கும்போது, அவருடைய போதனைகள், அவருடைய ஊழியம் மற்றும் அவருடைய சீஷர்களில் இந்த பண்புக்கான எடுத்துக்காட்டுகளைப் பார்க்கும்போது வேதங்கள் புதியதாகின்றன. மற்றவர்களிடையே உள்ள பண்புகளை அடையாளம் காண்பதில் எனது கண் அதிக கவனம் செலுத்துகிறது. சபைக்கு உள்ளேயும் வெளியேயும் அவரைப் பின்பற்றுகிற பண்புகளை உடைய அற்புதமான நபர்களை நான் கவனித்திருக்கிறேன். அவருடைய அன்பான கிருபையின் மூலம் அந்த பண்புகளை வெறும் மனிதர்களில் எவ்வாறு வெளிப்படுத்த முடியும் என்பதற்கு அவை சக்தி வாய்ந்த எடுத்துக்காட்டுகள்.

உண்மையான முன்னேற்றத்தைக் காண, நீங்கள் தொடர்ச்சியான முயற்சி எடுக்க வேண்டும். ஒரு மலையில் ஏறுவதற்கு இதற்கு முன் ஆயத்தம் தேவைப்படுவது போலவே, மேலும் ஏறும்போது சகிப்புத்தன்மையும் விடாமுயற்சியும் கூட, இந்த பயணத்திற்கும் உண்மையான முயற்சி மற்றும் தியாகம் தேவைப்படும். அதில் நாம் நமது போதகரைப் போல ஆக முயற்சிக்கிற, உண்மையான கிறிஸ்தவத்துக்கு, எப்போதும் நம்முடைய சிறந்த முயற்சிகள் தேவைப்பட்டிருக்கிறது. 16

இப்போது ஒரு சுருக்கமான எச்சரிக்கை வார்த்தை. அவரைப் போலவே இருக்க வேண்டும் என்ற கட்டளை உங்களை குற்றவாளியாகவோ, தகுதியற்றவராகவோ அல்லது அன்பற்றவராகவோ உணர வைப்பதற்கான நோக்கமுடையதல்ல. நமது முழு பூலோக அனுபவமும் முன்னேற்றம், முயற்சி, தோல்வி மற்றும் வெற்றியைப்பற்றியது. கண்களை மூடிக்கொண்டு சிகரத்திற்கு நம்மை மாயமாக கொண்டு செல்ல முடியும் என்று நானும் என் மனைவியும் விரும்பியிருக்கலாம், வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல.

நீங்கள் போதுமானவர், நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள், ஆனால் நீங்கள் இன்னும் முழுமையானவர் என்று அர்த்தமல்ல. இந்த வாழ்க்கையிலும் அடுத்த வாழ்க்கையிலும் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. அவருடைய தெய்வீக உதவியால் மட்டுமே நாம் அனைவரும் அவரைப் போலாவதை நோக்கி முன்னேற முடியும்.

இந்த நேரங்களில், “எல்லாம் குழப்பத்தில் இருப்பதாக தோன்றும்போது; பயம் எல்லாருக்கும் இருப்பது போலத் தோன்றினாலும்,” 17 ஒரே மருந்து, ஒரே தீர்வு, இரட்சகர் போலிருக்க, 18 முழு மனுக்குலத்தின் மீட்பராக 19 , உலகத்தின் ஒளியாக, 20 இருக்க முயன்று, “நானே வழி,” என அறிவித்த அவரைத் தேடுவதுதான். 21

படம்
மீட்பர்

அவருடைய தெய்வீக உதவி மற்றும் வலிமை மூலம் அவரைப் போலாகுவது படிப்படியாக அடையக்கூடியதாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். அப்படி இல்லையானால், அவர் இந்த கட்டளையை நமக்கு வழங்கியிருக்க மாட்டார் 22 இதை நான் அறிவேன்—ஏனென்றால், உங்களில் பலரில் அவரின் ஒரு பகுதி பண்புகளை நான் காண்கிறேன். இந்தக் காரியங்களைக் குறித்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. 3 நேபி 27:27. இது தொடர்புள்ள இரட்சகரின் அறிவுறுத்தல்களுக்கு மத்தேயு 5:48 (“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்க்கடவீர்கள்”); 1 யோவான் 2:6 (“அவரில் வாசம் பண்ணுகிறேன் என்பவன் அவர் நடந்ததுபோலவே நடக்க வேண்டும்”); மோசியா 3:19 (“ஜென்ம சுபாவ மனுஷன் தேவனுக்கு சத்துருவாயிருக்கிறான். அவன் பரிசுத்த ஆவியின் ஏவுதலுக்கு உடன்பட்டு, சுபாவ மனுஷனை அகற்றி கர்த்தராகிய கிறிஸ்துவின் பாவநிவர்த்தியால் பரிசுத்தவானாகி, ஒரு சிறுபிள்ளையைப் போலாகி, கீழ்ப்படிந்து, சாந்தமாயும் தாழ்மையாயும் பொறுமையாயும் அன்பில் பூரணப்பட்டிருந்து, கர்த்தர் தன் மீது சுமத்துகிற சகல காரியங்களுக்கும் தன் தகப்பனுக்கு கீழ்ப்படிகிற ஒரு பிள்ளையைப் போல கீழ்ப்படிய, மனமில்லாதவனாயிருந்தால் அவன் ஆதாமின் வீழ்ச்சி தொடங்கி என்றென்றைக்குமாய் தேவனுக்குச் சத்துருவாயிருப்பான்.”) ஆல்மா 5:14 (“இப்பொழுதும் சகோதரரே, சபையாராகிய நீங்கள் தேவனால் ஆவிக்குரிய பிரகாரம் ஜென்மித்தீர்களா? அவரின் சாயலைப் போல உங்கள் முரூபம் மாறிற்றா?”); 3 நேபி 12:48 (“பூரண சற்குணராயிருக்கிற என்னைப்போலவோ, அல்லது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவைப் போலவோ, நீங்களும் பூரண சற்குணராயிருக்க வேண்டும் என விரும்புகிறேன்.”).

  2. Neal A. Maxwell, Even As I Am (1982), 16.

  3. Charles M. Sheldon, In His Steps (1979), 185.

  4. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:12–17 பார்க்கவும்.

  5. மத்தேயு 5:48, அடிக்குறிப்பு b.பார்க்கவும்

  6. ஏசாயா 9:6; 2 நேபி 19:6 பார்க்கவும்.

  7. 1 கொரிந்தியர் 2:14; மோசியா 3:19 பார்க்கவும்.

  8. மத்தேயு 7:23; 25:12; மோசியா 26:24; ஒவ்வொரு வசனத்துக்கும் அடிக்குறிப்பும் பார்க்கவும்; David A. Bednar, “If Ye Had Known Me,” Liahona, Nov. 2016, 102–5.

  9. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:2 பார்க்கவும்.

  10. மரோனி 7:12–19 பார்க்கவும்.

  11. ஏத்தேர் 12:27 பார்க்கவும்.

  12. Preach My Gospel: A Guide to Missionary Service, rev. ed. (2019), chapter 6, “How Do I Develop Christlike Attributes?” பார்க்கவும். இரட்சகரின் பிற பண்புகளைப்பற்றிய குறிப்புகள் வேதத்தில் சிதறிக்கிடக்கின்றன. மோசியா 3:19; ஆல்மா 7:23; விசுவாசப் பிரமாணங்கள் 1:13 சில உதாரணங்களில் அடங்கும்.

  13. Preach My Gospel, 132 பார்க்கவும்.

  14. Russell M. Nelson, “We Can Do Better and Be Better,” Liahona, May 2019, 67.

  15. Bible Dictionary, “Grace”; மற்றும் Guide to the Scriptures, “Grace,” scriptures.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

  16. Sheldon, In His Steps, 246 பார்க்கவும்: “ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கான எங்கள் வரையறை வெறுமனே வழிபாட்டின் சலுகைகளை அனுபவிப்பதாக இருந்தால், நமக்கு எந்த செலவும் இல்லாமல் தாராளமாக இருங்கள், இனிமையான நண்பர்களால் சூழப்பட்ட ஒரு நல்ல, சுலபமான நேரம் மற்றும் வசதியான விஷயங்களால், மரியாதையுடன் வாழவும், அதே நேரத்தில் உலகத்தைத் தவிர்க்கவும் பாவம் மற்றும் பிரச்சனையின் மிகுந்த மன அழுத்தம், ஏனெனில் அதைத் தாங்கிக் கொள்வது மிகவும் வேதனை-இது கிறிஸ்தவத்தின் வரையறை என்றால், நிச்சயமாக நாம் அவருடைய படிகளைப் பின்பற்றுவதில் இருந்து வெகுதூரத்தில் இருக்கிறோம். இழந்த மனிதநேயம்; ‘என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்று உயர்த்தப்பட்ட சிலுவையில் கூக்குரலிட்ட பெரிய இரத்தத் துளிகள் வியர்த்தன.

  17. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:91.

  18. ஏசாயா 43:3 பார்க்கவும்.

  19. யோபு 19:25 பார்க்கவும்.

  20. யோவான் 8:12 பார்க்கவும்.

  21. யோவான் 14:6.

  22. 1 நேபி 3:7 பார்க்கவும்.