பொது மாநாடு
கர்த்தருக்கு பரிந்துரைக்கப்பட்டு
அக்டோபர் 2020 பொது மாநாடு


கர்த்தருக்கு பரிந்துரைக்கப்பட்டு

“கர்த்தருக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்” ஆக இப்போது செயல்முறையைத் தொடங்குங்கள், இதனால் அவருடைய ஆவி உங்களுடன் ஏராளமாக இருக்கும்.

காலை வணக்கம், சகோதர சகோதரிகளே, நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராக, இந்த மாநாட்டிற்காக உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் நேரலையில் கூடிவருவதை நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

படம்
டர்பன் தென் ஆப்பிரிக்கா ஆலயம்

இது மிகவும் அசாதாரண ஆண்டாகும். என்னைப் பொறுத்தவரை, தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள ஒரு பரிசுத்த ஆலயத்தை கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்வதற்கான பிரதான தலைமையிலிருந்து வந்த பணியினால் இது தொடங்கியது. கட்டிடத்தின் ஆடம்பரத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஆனால் அமைப்பை விட, அந்த பரிசுத்தமான மாளிகையில் பிரவேசிக்க மிகவும் ஆயத்தப்பட்டிருந்த மக்களின் கண்ணியத்தை நான் எப்போதும் பொக்கிஷமாகக் கருதுவேன். மறுஸ்தாபிதத்தின் கிரீடமான ஆசீர்வாதங்களில் ஒன்றில் பங்கேற்க அவர்கள் தயாராக வந்தார்கள்; கர்த்தருடைய வீட்டின் பிரதிஷ்டை. அவர்கள் அவர்மீதும் அவருடைய பிராயச்சித்தத்தின் மீதும் அன்பு நிறைந்த இதயங்களுடன் வந்தார்கள். மேன்மைப்படுதலுக்கு வழிவகுக்கும் பரிசுத்தமான நியமங்களை வழங்கியதற்காக பரலோகத்திலுள்ள நமது பிதாவுக்கு நன்றியால் நிரப்பப்பட்டு அவர்கள் வந்தனர். அவர்கள் தகுதியுடன் வந்தார்கள்.

படம்
டர்பன் தென் ஆப்ரிக்கா ஆலயத்தில் அங்கத்தினர்கள்

ஆலயங்கள், அவை எங்கிருந்தாலும், உலக வழிகளுக்கு மேலே உயர்கின்றன. உலகின் ஒவ்வொரு பிற்காலப் பரிசுத்தவான் ஆலயங்களும், அவற்றில் 168 அனைத்தும், நித்திய ஜீவனில் நம்முடைய நம்பிக்கையையும், அதை நமது குடும்பங்களுடனும், நம்முடைய பரலோக பிதாவுடனும் செலவழித்ததன் மகிழ்ச்சிக்கு சான்றாக நிற்கின்றன. ஆலயம் செல்வது தேவத்துவம் மற்றும் நித்திய சுவிசேஷத்தைப்பற்றிய நமது புரிதலையும், சத்தியத்தின்படி வாழ்வதற்கும் கற்பிப்பதற்கும் நம்முடைய அர்ப்பணிப்பு மற்றும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான நமது விருப்பத்தையும் அதிகரிக்கிறது.

படம்
கர்த்தருக்கு பரிசுத்தம்

சபையின் ஒவ்வொரு ஆலயத்தின் வெளிப்புறத்திலும் “கர்த்தருக்கு பரிசுத்தம்” என்ற பொருத்தமான வார்த்தைகள் உள்ளன. ஆலயம் கர்த்தரின் வீடு மற்றும் உலகத்திலிருந்து ஒரு சரணாலயம். அந்த பரிசுத்த சுவர்களுக்குள் ஆராதிப்பவர்களை அவருடைய ஆவி சூழ்ந்து கொள்கிறது. அவருடைய விருந்தினர்களாக நாம் பிரவேசிக்கும் தரங்களை அவர் அமைக்கிறார்.

படம்
ப்ளைன் ட்விட்சல்

எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவரான என் மாமனார் பிளைன் ட்விட்செல் எனக்கு ஒரு சிறந்த பாடம் கற்பித்தார். சகோதரி ராஸ்பான்டும் நானும் அவரது பூலோக பயணத்தின் முடிவை நெருங்கும் போது அவரைப் பார்க்கச் சென்றோம். நாங்கள் அவரது அறைக்குள் நுழைந்தபோது, அவரது ஆயர் அப்போதுதான் கிளம்பிக் கொண்டிருந்தார். நாங்கள் ஆயருக்கு வாழ்த்துதல் சொல்லும்போது, “என்ன ஒரு நல்ல ஆயர் என நான் நினைத்தேன். அவர் இங்கே தனது தொகுதியின் விசுவாசமிக்க அங்கத்தினருக்கு ஊழியம் செய்கிறார். ”

நான் பிளைனிடம் குறிப்பிட்டேன், “ஆயர் வருவது அவ்வளவு அருமையானதில்லையா.”

பிளைன் என்னைப் பார்த்து பதிலளித்தார், “இது அதைவிட மிக அதிகம். எனது ஆலய பரிந்துரை நேர்காணலுக்கு ஆயர் வருமாறு விரும்பியதால் நான் கேட்டேன். கர்த்தருக்கு பரிந்துரைக்கப்பட்டு நான் செல்ல விரும்புகிறேன்.” அவர் அதைச் செய்தார்.

“கர்த்தருக்குப் பரிந்துரைக்கப்பட்டு” என்ற சொற்றொடர் என்னுடன் தங்கியுள்ளது. இது நமது சபை தலைவர்களால் தவறாமல் பேட்டி காணப்படுவதற்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகால சபையில், 1891 வரை, ஒவ்வொரு ஆலய பரிந்துரையும் சபைத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது வரை ஒரு ஆலய பரிந்துரை மிகவும் முக்கியமானதாயிருந்தது. 1

இளைஞர்களுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ, உங்கள் ஆலய பரிந்துரை நேர்காணல், செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதவையைப்பற்றியது அல்ல. பரிந்துரை என்பது சரிபார்ப்பு பட்டியல், நுழைவு அனுமதி அல்லது சிறப்பு இருக்கைகளுக்கான சீட்டு அல்ல. இது மிக உயர்ந்த மற்றும் புனிதமான நோக்கத்தைக் கொண்டுள்ளது. ஒரு ஆலய சிபாரிசின் கௌரவத்திற்கு தகுதி பெற, நீங்கள் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் போதனைகளுக்கு இசைவாக வாழ வேண்டும்.

உங்கள் நேர்காணலில், இயேசு கிறிஸ்து மீதான உங்கள் தனிப்பட்ட விசுவாசம் மற்றும் அவருடைய பிராயச்சித்தத்தைப்பற்றி உங்கள் ஆத்துமாவைத் தேட உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப்பற்றிய உங்கள் சாட்சியத்தை வெளிப்படுத்த, உங்களுக்கு சபையை வழிநடத்த அழைத்தவர்களை ஆதரிப்பதற்கான உங்கள் விருப்பம், சுவிசேஷக் கோட்பாட்டின் மீதான உங்கள் நம்பிக்கை, குடும்பப் பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்றுவது, உங்கள் நேர்மையின் குணங்கள், கற்பு, நம்பகத்தன்மை, கீழ்ப்படிதல், ஞான வார்த்தையை கடைபிடிப்பது, தசமபாகம் நியாயப்பிரமாணம், ஓய்வுநாளின் புனிதத்தன்மை ஆகியவற்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அவை இயேசு கிறிஸ்துவுக்காகவும் அவருடைய பணிகளுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையின் அடிப்படைக் கொள்கைகள்.

உங்கள் ஆலய பரிந்துரை ஆழ்ந்த, ஆன்மீக நோக்கத்தை பிரதிபலிக்கிறது, நீங்கள் கர்த்தருடைய நியாயப் பிரமாணங்களின்படி வாழவும், அவர் நேசிப்பதை நேசிக்கவும் முயற்சிக்கிறீர்கள்: பணிவு, சாந்தம், உறுதி, தயாளம், தைரியம், இரக்கம், மன்னிப்பு மற்றும் கீழ்ப்படிதல். அந்த பரிசுத்த ஆவணத்தில் உங்கள் பெயரை கையொப்பமிடும்போது நீங்கள் அந்த தரங்களுக்கு உங்களை ஒப்புக்கொடுக்கிறீர்கள்.

ஞானஸ்நானம், தரிப்பித்தல், திருமணங்கள் மற்றும் முத்திரித்தல்கள் உள்ளிட்ட நித்திய முக்கியத்துவம் வாய்ந்த உரிமைகள் மற்றும் கட்டளைகளுடன் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உங்கள் ஆலய பரிந்துரை பரலோகத்தின் வாயில்களைத் திறக்கிறது.

“கர்த்தருக்கு பரிந்துரைக்கப்படுவது” என்பது உடன்படிக்கையைக் காத்துக்கொள்ளும் பிற்காலப் பரிசுத்தவானிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை நினைவூட்டுவதாகும். என் மாமனார் பிளைன், அவர் தாழ்மையுடன் கர்த்தரின் முன் நிற்கும் நாளுக்கு இது விலைமதிப்புள்ள ஆயத்தமாகக் கண்டார்.

படம்
எரியும் புதர்

மோசே ஓரேப் மலைமீது ஏறியதும், கர்த்தராகிய யேகோவா எரியும் புதரில் அவருக்குத் தோன்றியதையும் கருத்தில் கொள்ளுங்கள். தேவன் அவனிடம், “உன் கால்களில் இருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு, ஏனென்றால் நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார். 2

ஆலய வாசலில் நமது காலணிகளைக் கழற்றி வைப்பது, ஆவிக்குரிய வளர்ச்சியிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் உலக ஆசைகள் அல்லது இன்பங்களை விட்டுவிடுவது, நம்முடைய விலைமதிப்பற்ற உலக வாழ்க்கையை வழிவிலக்குவனவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, சர்ச்சைக்குரிய நடத்தைக்கு மேலே உயர்ந்து, பரிசுத்தமாக இருக்க நேரம் கேட்பதாகும்.

தெய்வீக வடிவமைப்பால், நமது மாம்ச சரீரம் என்பது தேவனின் சிருஷ்டிப்பு, உங்கள் ஆவிக்கான ஆலயம், மற்றும் பயபக்தியுடன் நடத்தப்பட வேண்டும். ஆரம்ப வகுப்பு பாடலின் வார்த்தைகள் மிகவும் உண்மை, “என் உடல் ஒரு கோவில், இதற்கு மிகவும் கவனிப்பு தேவை.” 3 நேபியர்களிடம் கர்த்தர் தோன்றி கட்டளையிட்டார், “நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதனாலே சுத்திகரிக்கப்பட்டு, எனக்கு முன்பாக கறைதிரையற்றவர்களாக நிற்பீர்கள்” 4 “நீங்கள் எத்தகைய மனுஷராய் இருக்க வேண்டும்?”5 எனக் கர்த்தர் கேட்டு பின்பு பதிலளித்தார், “என்னைப் போலவே இருக்க வேண்டும்.” 5 “கர்த்தரால் பரிந்துரைக்கப்பட்டவர்களாயிருக்க” நாம் அவரைப் போலிருக்க முயற்சிக்க வேண்டும்.

சபையின் 14 வது தலைவராக, பொது மாநாட்டின் தனது முதல் உரையில் தலைவர் ஹோவர்ட் டபிள்யூ. ஹண்டர் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அவர் சொன்னார்: “சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும் ஆலயத்துக்குள் பிரவேசிக்க தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது இதயத்தின் ஆழ்ந்த ஆசை. ஒவ்வொரு வயதுவந்த அங்கத்தினரும் தற்போதைய ஆலய பரிந்துரையை எடுத்துச் செல்ல தகுதியுடையவராக இருந்தால் அது கர்த்தரைப் பிரியப்படுத்தும்.” 6 ஒரு வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு பரிந்துரை எங்கள் அருமையான இளைஞர்களுக்கு ஒரு தெளிவான பாதையை அமைக்கும் என்று நான் சேர்த்துக் கொள்கிறேன்.

தலைவர் ரசல் எம்.நெல்சன், தலைவர் ஹண்டரின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார், “அந்த நாளில், ஜூன் 6, 1994ல், நாங்கள் எடுத்துச் செல்லுகிற ஆலய பரிந்துரை எனது பணப்பையில் வேறுபட்ட பொருளாக மாறியது. அதற்கு முன், அது முடிவுக்கு ஒரு வழியாக இருந்தது. கர்த்தருடைய பரிசுத்த வீட்டிற்குள் நுழைய என்னை அனுமதிப்பதற்கான வழிமுறையாக இருந்தது; ஆனால் அவர் அந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, அது ஒரு முடிவுக்கு வந்தது. இது தேவனின் தீர்க்கதரிசிக்கு கீழ்ப்படிதலுக்கான எனது அடையாளமாக மாறியது.” 7

படம்
நாவூ ஆலயம்

நீங்கள் இன்னும் ஒரு பரிந்துரையைப் பெறவில்லை என்றால் அல்லது உங்கள் பரிந்துரை காலாவதியாகிவிட்டால், ஆரம்பகால பரிசுத்தவான்கள் 1845 மற்றும் 1846 ஆம் ஆண்டுகளில் நாவூ ஆலய வாசலில் வரிசையாக நின்றதைப் போலவே ஆயரின் வாசலில் வரிசையாக நிற்கவும். அந்த விசுவாசமிக்கவர்களில் என் முன்னோருமிருந்தனர். அவர்கள் தங்கள் அழகான நகரத்தை கைவிட்டு மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர், ஆனால் ஆலயத்தில் தங்களுக்கு காத்திருக்கும் பரிசுத்த அனுபவங்களை அவர்கள் அறிந்தார்கள். அயோவாவின் கரடுமுரடான பாதையில் இருந்து சாரா ரிச் எழுதினார், “அந்த ஆலயத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட விசுவாசமும் அறிவும் இல்லாதிருந்தால் … எங்கள் பயணம் எப்படி இருந்திருக்கும் … இருட்டில் ஒரு பாய்ச்சலை எடுப்பது போலிருக்கும்.” 9 ஆலயத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட உணர்த்துதலும் சமாதானமும் இல்லாமல் நாம் தனியாக இந்த வாழ்க்கையை கடந்து செல்கிறோம் என்றால் அதைத்தான் நாம் இழக்கிறோம்.

அவருடைய ஆவியானவர் உங்களுடன் தாராளமாக இருக்கும்படிக்கும், அவருடைய தரநிலைகள் உங்களுக்கு “மனசாட்சியின் சமாதானத்தை” கொண்டு வரும் என்று “கர்த்தருக்குப் பரிந்துரைக்கப்பட்டவராக” இப்போது செயல்பாட்டைத் தொடங்குங்கள் 10

உங்கள் இளைஞர் தலைவர்கள், மூப்பர்கள் குழும தலைவர், ஒத்தாசைச் சங்கத் தலைவர் மற்றும் ஊழிய சகோதரர்கள் சகோதரிகள் உங்களுக்கு ஆயத்தம் செய்ய உதவுவார்கள், உங்கள் ஆயர் அல்லது கிளைத் தலைவர் அன்பாக உங்களுக்கு வழிகாட்டுவார்.

ஆலயங்கள் மூடப்பட்ட அல்லது பயன்பாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு காலத்தை நாம் அனுபவித்து வருகிறோம். தலைவர் நெல்சனுக்கும் அவரது பக்கத்திலேயே பணியாற்றும் எங்களுக்கும், ஆலயங்களை மூடுவதற்கான ஏவப்பட்ட முடிவு “வேதனையானது” மற்றும் “கவலையால் மூழ்கடித்தது.” தலைவர் நெல்சன் தன்னைக் கேட்டுக்கொண்டார், “தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு நான் என்ன சொல்வேன்? ப்ரிகாம் யங், வில்போர்ட் உட்ரஃப் மற்றும் தலைவர் தாமஸ் எஸ். மான்சன் வரையிலான பிற தலைவர்களுக்கு நான் என்ன சொல்வேன்? 11

இப்போது, நாம் படிப்படியாகவும் நன்றியுடனும் ஒரு குறிப்பிட்ட அளவில் முத்திரித்தல் மற்றும் தரிப்பித்தல்களுக்காக ஆலயங்களை மீண்டும் திறக்கிறோம்.

ஆலயம் செல்ல தகுதியானவராயிருப்பது எனினும், இடைநிறுத்தப்படவில்லை. உங்களுக்கு ஒரு ஆலயம் செல்வது முடிந்தாலும் இல்லாவிட்டாலும் நான் வலியுறுத்துகிறேன், உடன்படிக்கை பாதையில் உறுதியாக இருக்க உங்களுக்கு தற்போதைய ஆலய பரிந்துரை வேண்டும்.

படம்
நியூசிலாந்தில் குழுவினர்

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சகோதரி ராஸ்பான்டும் நானும் நியூசிலாந்தில் ஒரு பெரிய இளம் தனிமையான வயதுவந்தோருடன் பேசிக் கொண்டிருந்தோம். அவர்களுக்கு ஒரு ஆலயத்துக்கு எளிதாக செல்ல முடியவில்லை; ஹாமில்டனில் உள்ள ஒன்று புதுப்பிக்கப்பட்டு வருகிறது, மேலும் அவர்கள் ஆக்லாந்தில் உள்ள ஆலய பணி துவங்க காத்திருக்கிறார்கள். இருப்பினும், ஆலய பரிந்துரைகளை புதுப்பிக்க அல்லது பெற அவர்களை ஊக்குவிக்க நான் தூண்டப்பட்டதாக உணர்ந்தேன்.

அவர்கள் ஆலயத்துக்கு செல்ல முடியாவிட்டாலும், அவர்கள் தங்களை தூய்மையாக ஆயத்தப்பட்டவர்களாக கர்த்தருக்கு முன்பாக முன்வைப்பார்கள். தற்போதைய ஆலய பரிந்துரைக்கு தகுதியுடையவராக இருப்பது சத்துருவிடமிருந்து ஒரு பாதுகாப்பாகும், ஏனென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையைப்பற்றி கர்த்தரிடம் உறுதியான அர்ப்பணிப்பைச் செய்து ஆவியானவர் உங்களுடன் இருப்பார் என்ற வாக்குறுதியும் பெற்றுள்ளீர்கள், .

நம் முன்னோர்களைத் தேடி, அவர்களின் பெயர்களை நியமங்களுக்கு சமர்ப்பிக்கும் போது நாம் ஆலயப்பணி செய்கிறோம். நமது ஆலயங்கள் மூடப்பட்டிருந்தாலும், நாம் நமது குடும்பங்களை ஆராய்ச்சி செய்ய முடிந்தது. நம்முடைய இருதயங்களில் தேவனுடைய ஆவியுடன், நாம் “கர்த்தருக்குப் பரிந்துரைக்கப்படுவதற்காக” பதிலியாக நிற்கிறோம்.

நான் ஆலய துறையின் செயல் இயக்குநராக பணியாற்றியபோது, தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி நாவூ ஆலயத்தைப்பற்றி கர்த்தர் பேசிய இந்த வசனத்தை குறிப்பிடுகிறார்: “என் ஆலயத்தின் வேலையும், நான் உங்களுக்கு நியமித்த எல்லா செயல்களும் தொடரப்படுவதாக; நிறுத்தப்படாதிருப்பதாக. உங்கள் கருத்துடைமையும், விடாமுயற்சியும், பொறுமையும், உங்கள் செயல்களும் இரட்டிப்பாக்கப்படுவதாக, இப்போதே நீங்கள் உங்கள் பிரதிபலனை எந்த வகையிலும் இழக்க மாட்டீர்கள் என சேனைகளின் கர்த்தர் கூறுகிறார். ” 12

ஆலயத்தில் நம்முடைய பணி நம்முடைய நித்திய பிரதிபலனுடன் பிணைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளோம். ஆலயங்களில் “கருத்துடனும்… விடாமுயற்சி, பொறுமை” ஆகியவற்றுடன் பணியாற்ற கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார். 13 “கர்த்தருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதற்கு” அந்த குணங்கள் தேவை. கட்டளைகளை கைக்கொள்ளுவதில் நாம் கருத்தாய் இருக்க வேண்டும், நம்முடைய ஆலய உடன்படிக்கைகளில் நம் கவனத்தை கைவிடாமல் இருக்க வேண்டும், மேலும் கர்த்தர் அவற்றைப்பற்றி தொடர்ந்து கற்பிப்பதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், மேலும் ஆலயங்கள் முழுமையாக மீண்டும் திறக்கக் காத்திருக்கும்போது பொறுமையாக இருக்க வேண்டும்.

நம்முடைய முயற்சிகளை “இரட்டிப்பாக்க” கர்த்தர் நம்மை அழைக்கும்போது, நாம் நீதியில் அதிகரிக்கும்படி அவர் கேட்கிறார். எடுத்துக்காட்டாக, வேதங்களைப்பற்றிய நமது படிப்பு, நமது குடும்ப வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆலய பரிந்துரையைப் பெறத் தயாராகி வருபவர்களுடன், குறிப்பாக நமது குடும்ப அங்கத்தினர்களுடன் கர்த்தருடைய வீடு மீதான நம் அன்பைப் பகிர்ந்து கொண்டு, விசுவாச ஜெபங்களை நாம் விரிவுபடுத்தலாம்,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராக நான் உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்கிறேன், உங்கள் நீதியான முயற்சிகளை இரட்டிப்பாக்க நீங்கள் முயற்சிக்கும்போது, பிதாவாகிய தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவுடனான உங்கள் அர்ப்பணிப்பில் நீங்கள் புதுப்பிக்கப்படுவீர்கள், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அதிகமாய் வழிநடத்துவார். உங்கள் பரிசுத்த உடன்படிக்கைகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள், நீங்கள் “கர்த்தருக்குப் பரிந்துரைக்கப்படுகிறீர்கள்” என்பதை அறிந்து நீங்கள் சமாதானம் அடைவீர்கள். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.