பொது மாநாடு
சிலுவையின் மீது உயர்த்தப்பட்டார்
அக்டோபர் 2022 பொது மாநாடு


சிலுவையின் மீது உயர்த்தப்பட்டார்

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக இருப்பதற்கு, ஒருவர் சில சமயங்களில் ஒரு பாரத்தைச் சுமக்க வேண்டும், தியாகம் தேவைப்படுகிற மற்றும் துன்பம் தவிர்க்க முடியாத இடத்திற்குச் செல்ல வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க மத வரலாறு குறித்த பட்டதாரி பள்ளி கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஒரு சக மாணவர் என்னிடம், கேட்டார், “பிற்காலப் பரிசுத்தவான்கள், ஏன் மற்ற கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தின் அடையாளமாகப் பயன்படுத்தும் சிலுவையை ஏற்றுக்கொள்ளவில்லை?”

சிலுவையைப் பற்றிய இதுபோன்ற கேள்விகள் பெரும்பாலும் கிறிஸ்துவுக்கான நமது அர்ப்பணிப்பைப்பற்றிய கேள்வியாக இருப்பதால், நான் உடனடியாக அவரிடம் சொன்னேன், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியை உண்மையாக, முக்கியமான அடித்தளமாக பிரதான கோட்பாடாக, மற்றும் அவரது பிள்ளைகளின் இரட்சிப்புக்கான தேவனின் மகத்தான திட்டத்தில் தெய்வீக அன்பின் இறுதி வெளிப்பாடாக கருதுகிறது.1 அந்தச் செயலில் உள்ள இரட்சிக்கும் கிருபை அவசியமானது என்றும், ஆதாம் மற்றும் ஏவாளிலிருந்து உலகின் இறுதி வரை முழு மனித குடும்பத்தினருக்கும் உலகளவில் வரமாகும் என்றும் நான் விளக்கினேன்.2 தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தை நான் மேற்கோள் காட்டினேன், அவர் கூறினார், “நம்முடைய மதம் தொடர்பான அனைத்து காரியங்களும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் பிற்சேர்க்கைகள் மட்டுமே”.3

இயேசு பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு நேபி எழுதியதை நான் அவருக்குப் படித்தேன்: “மேலும்… தேவதூதன் … என்னிடம் பேசி, பார்! என்றான். நான் நோக்கிப் பார்த்து, தேவ ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன், …[அவர்] சிலுவையின் மீது தூக்கப்பட்டு, உலகத்தின் பாவங்களுக்காகக் கொலை செய்யப்பட்டார்.”4

எனது “அன்பு, பகிர்தல் மற்றும் அழைத்தல்” என்ற வைராக்கியத்துடன், நான் தொடர்ந்து வாசித்தேன்! புதிய உலகில் உள்ள நேபியர்களிடம் உயிர்த்தெழுந்த கிறிஸ்து, “நான் சிலுவையில் உயர்த்தப்பட்ட பின்பு, நான் எல்லா மனுஷரையும் என்னிடத்தில் இழுக்கும்படியாக, இதற்காகவே … நான் உயர்த்தப்பட்டிருக்கிறேன்”.5

நான் அப்போஸ்தலனாகிய பவுலை மேற்கோள் காட்டவிருந்தேன், என் நண்பரின் கண்கள் பனிக்க ஆரம்பித்ததை நான் கவனித்தேன். அவரது கைக்கடிகாரத்தை விரைவாகப் பார்த்தது, அவர் எங்காவது, எங்கோ இருக்க வேண்டும் என்பதை அவருக்கு நினைவூட்டியது போல, அவர் தனது கற்பனையான சந்திப்பிற்குச் சென்றார். இப்படியாக எங்கள் உரையாடல் முடிந்தது.

இன்று காலை, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களில் ஒவ்வொருவரும் உங்கள் கைக்கடிகாரங்களைப் பார்க்க ஆரம்பித்தாலும் அந்த விளக்கத்தை முடிக்க நான் உறுதியாக இருக்கிறேன். பொதுவாக சிலுவையின் உருவப்படத்தை நாம் ஏன் பயன்படுத்துவதில்லை என்பதை விளக்க முற்படுகையில், விசுவாசம் நிரம்பிய நோக்கங்கள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையின் மீது நமது ஆழ்ந்த மரியாதை மற்றும் ஆழ்ந்த போற்றுதலை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

சிலுவையை ஒரு சின்னமாக நாம் வலியுறுத்தாததற்கு ஒரு காரணம் நமது வேதாகம வேர்களில் இருந்து வருகிறது. சிலுவையில் அறையப்படுவது ரோமானியப் பேரரசின் மிகவும் வேதனையான மரணதண்டனை வடிவங்களில் ஒன்றாக இருந்ததால், இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் பலர் அந்த துன்பத்தின் கொடூரமான கருவியை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை. கிறிஸ்துவின் மரணத்தின் பொருள் நிச்சயமாக அவர்களின் நம்பிக்கையின் மையமாக இருந்தது, ஆனால் சுமார் முன்னூறு ஆண்டுகளாக அவர்கள் பொதுவாக தங்கள் சுவிசேஷ அடையாளத்தை மற்ற வழிகளில் தெரிவிக்க முயன்றனர்.6

நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில், பொதுமைப்படுத்தப்பட்ட கிறிஸ்தவத்தின் அடையாளமாக சிலுவை அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் நம்முடையது “பொதுமைப்படுத்தப்பட்ட கிறிஸ்தவம்” அல்ல. கத்தோலிக்கராகவோ அல்லது புராட்டஸ்டன்டாகவோ இல்லாததால், நாம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட புதிய ஏற்பாட்டு சபை. அப்படியாக, நமது தோற்றம் மற்றும் அதிகாரம், ஆலோசனைகள், நம்பிக்கைகள், உருவப்படங்களின் காலத்திற்கு முன்பே செல்கிறது.7 இந்த அர்த்தத்தில், பொதுவான பயன்பாட்டிற்கு தாமதமாக வந்த ஒரு சின்னம் இல்லாதது, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உண்மையான கிறிஸ்தவ தொடக்கத்தின் மறுஸ்தாபிதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.

உருவகப்படுத்தப்பட்ட சிலுவைகளைப் பயன்படுத்தாததற்கு மற்றொரு காரணம், கிறிஸ்துவின் ஊழியத்தின் முழுமையான அற்புதத்தின் மீது நாம் வலியுறுத்துவது, அவரது மகிமையான உயிர்த்தெழுதல் மற்றும் அவரது தியாக பாடுகளும் மரணமும். அந்த உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகையில், சால்ட் லேக் சிட்டியில் ஒவ்வொரு வியாழன் தோறும் பரிசுத்தமான வாராந்திர ஆலயக் கூட்டத்தில் பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் பின்னணியில் இருக்கும் இரண்டு ஓவியங்களை 8 நான் கவனிக்கிறேன். இந்தச் சித்தரிப்புகள், செலுத்தப்பட்ட விலையையும், நாம் யாருடைய வேலைக்காரர்களாக இருக்கிறோமோ, அவரால் பெற்ற வெற்றியையும் நமக்குத் தொடர்ந்து நினைவூட்டுகிறது.

படம்
சிலுவையில் அறைதல்– ஹாரி ஆண்டர்சன்
படம்
உயிர்த்தெழுதல்-ஹாரி ஆண்டர்சன்

கிறிஸ்துவின் இரண்டு பகுதி வெற்றியின் பொதுப் பிரதிநிதித்துவம், அவரது சிலுவையில் அறையப்பட்ட காயங்களுடன் கல்லறையிலிருந்து மகிமையுடன் வெளிப்படும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் இந்த சிறிய தோர்வால்ட்சன் படத்தை நாம் பயன்படுத்துகிறோம்.9

படம்
சபை சின்னம்

கடைசியாக, தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி ஒருமுறை கற்பித்ததை நினைவூட்டுகிறோம், “நம்முடைய மக்களின் வாழ்க்கை … நமது [விசுவாசத்தின்] அடையாளமாக [இருக்கவேண்டும்]“.10 இந்தக் கருத்தாய்வுகள், குறிப்பாக பிந்தையவை, சிலுவையைப்பற்றிய அனைத்து வேதப்பூர்வ குறிப்புகளிலும் மிக முக்கியமானவை என்ன என்பதை எனக்குக் கொண்டு வருகின்றன. பதக்கங்கள் அல்லது நகைகள், கோபுரங்கள் அல்லது வழிகாட்டி பலகைகளுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக, இயேசு தனது சீஷர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்த அழைப்புக்கு கிறிஸ்தவர்கள் செதுக்கின பாறை போன்ற உத்தமம் மற்றும் உறுதியான ஒழுக்கமுள்ளவர்களின் முதுகெலும்புடன் வர வேண்டும். ஒவ்வொரு தேசத்திலும் யுகத்திலும், அவர் நம் அனைவருக்கும், “ஒருவன் [ஒருத்தி] என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.”11 என்று கூறியிருக்கிறார்.

இது நாம் அணியும் சிலுவைகளைக் காட்டிலும் நாம் சுமக்கும் சிலுவைகளைப்பற்றி பேசுகிறது. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக இருப்பதற்கு, ஒருவர் சில சமயங்களில் உங்களுடைய அல்லது வேறொருவரின் ஒரு பாரத்தைச் சுமக்க வேண்டும், மற்றும் தியாகம் தேவைப்படுகிற மற்றும் துன்பம் தவிர்க்க முடியாத இடத்திற்குச் செல்ல வேண்டும். ஒரு உண்மையான கிறிஸ்தவர், அவர் அல்லது அவள் ஒப்புக்கொண்ட காரியங்களில் மட்டும் போதகரைப் பின்பற்ற முடியாது. இல்லை. நாம் எல்லா இடங்களிலும் அவரைப் பின்தொடர்கிறோம், தேவைப்பட்டால், கண்ணீர் மற்றும் பிரச்சனைகள் நிறைந்த அரங்கங்கள் உட்பட, சில நேரங்களில் நாம் மிகவும் தனியாக நிற்கலாம்.

சபைக்கு உள்ளேயும் வெளியேயும், கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றும் மக்களை நான் அறிவேன். கடுமையான உடல் ஊனமுற்ற பிள்ளைகளை நான் அறிவேன், அவர்களைப் பராமரிக்கும் பெற்றோரையும் நான் அறிவேன். பலம், பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியின் தருணங்களைத் தேடி, மிகவும் களைப்படையுமட்டும் பலர் சில நேரங்களில் வேலை செய்வதை நான் காண்கிறேன், அவை வேறு வழியில் வராது. ஒரு அன்பான தோழமைக்காகவும், அற்புதமான திருமணத்திற்காகவும், தங்கள் சொந்தப் பிள்ளைகள் நிறைந்த வீட்டுக்காகவும் ஏங்குகிற, தகுதியுள்ள பல தனியான பெரியவர்களை நான் அறிவேன். எந்த ஆசையும் மிக நேர்மையானதாக இருக்க முடியாது, ஆனாலும் வருஷா வருஷமாக அத்தகைய நல்ல அதிர்ஷ்டம் இன்னும் வரவில்லை. பல வகையான மனநோய்களுடன் போராடுபவர்களை நான் அறிவேன், அவர்கள் ஜெபிக்கும்போது உதவிக்காக மன்றாடுகிறார்கள் மற்றும் உணர்ச்சி ஸ்திரத்தன்மையின் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்காக ஏங்குகிறார்கள். பலவீனமான வறுமையுடன் வாழ்பவர்களை நான் அறிவேன், ஆனால் விரக்தியை மீறி, தங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்காகவும் சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதற்கான வாய்ப்பையே கேட்கிறார்கள். அடையாளம், பாலினம் மற்றும் பாலியல் இயல்பு போன்றவற்றில் போராடும் பலரை நான் அறிவேன். நான் அவர்களுக்காக அழுகிறேன், அவர்களின் தேர்ந்தெடுப்புகளின் விளைவுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை அறிந்து அவர்களுடன் நான் அழுகிறேன்.

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளக்கூடிய பல சோதனையான சூழ்நிலைகளில் இவை சில மட்டுமே, சீஷத்துவத்திற்கு ஒரு செலவு இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது. அவனுடைய தகன பலிக்காக இலவச எருதுகளையும் இலவச மரத்தையும் கொடுக்க முயன்றபோது, தாவீது ராஜா அர்வனாவிடம் கூறியது போல், “அப்படியல்ல; ஆனால் நான் என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்தாமல் அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன்.”12 எனவே, நாம் அனைவரும் சொல்கிறோம்.

நாம் நம்முடைய சிலுவைகளை எடுத்துக்கொண்டு அவரைப் பின்தொடரும்போது, ​​நமது சவால்களின் எடை, மற்றவர்களால் சுமக்கப்படும் சுமைகளின் மீது அதிக பச்சாதாபம் மற்றும் கவனத்துடன் இருக்கவில்லை என்றால் அது உண்மையில் சோகமாக இருக்கும். சிலுவையில் அறையப்பட்டதில் மிகவும் சக்திவாய்ந்த முரண்பாடான ஒன்று, இரட்சகரின் கரங்கள் அகலமாக விரிக்கப்பட்டு, பின்னர் அங்கே அறைந்தன. அறியாமல், ஆனால் துல்லியமாக சித்தரிப்பது, முழு மனித குடும்பத்திலும் உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும், பிள்ளையும் வரவேற்கத்தக்கது ஆனால் அவரது மீட்கும், மேன்மையான அரவணைப்பிற்கும் வரவேற்கப்படுகிறது.13

மகிமையான உயிர்த்தெழுதல் வேதனையளிக்கும் சிலுவையில் அறையப்படுவதைத் தொடர்ந்த போது, “கிறிஸ்துவிலே விசுவாசித்து, அவருடைய மரணத்தை எண்ணி, அவரின் சிலுவையின் பாடனுபவிக்க ஆயத்தமானவர்கள்பற்றி” மார்மன் புஸ்தக தீர்க்கதரிசி யாக்கோபு கூறுவது போல், எல்லா வகையான ஆசீர்வாதங்களும் அவர்கள்மேல் கொட்டப்படுகின்றன. சில சமயங்களில் அந்த ஆசீர்வாதங்கள் விரைவில் வரும், சில சமயங்களில் அவை பின்னர் வரும், ஆனால் நம்முடைய சொந்த டோலோரோசா14 மூலம் நமக்குத் தெரிந்த அற்புதமான முடிவு, அவை வரும் என்ற போதகரின் வாக்குறுதியாகும். அத்தகைய மிகுதியைப் பெற, ஒருபோதும் தடுமாறவோ, தப்பியோடவோ, பணியை கண்டு தயங்கவோ செய்யாமல், நமது சிலுவைகள் கனமாக இருக்கும்போது அல்ல, ஒரு காலத்திற்கு, பாதை இருட்டாகும்போது அல்ல, தவறாமல் நாம் அவரைப் பின்தொடர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். உங்கள் வலிமை, விசுவாசம் மற்றும் உங்கள் அன்புக்கு, நான் ஆழ்ந்த தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில் நான் “உயர்த்தப்பட்ட” அவரைப்பற்றியும், அவருடன் “உயர்த்தப்பட்டவர்களுக்கு” 15 அவர் அருளும் நித்திய ஆசீர்வாதங்களைப்பற்றியும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குறித்த எனது அப்போஸ்தல சாட்சியை பகருகிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. Jeffrey R. Holland, Encyclopedia of Mormonism (1992), “Atonement of Jesus Christ,” 1:83.

  2. அமுலேக் கிறிஸ்துவின் பாவநிவர்த்தியை “பெரிய மற்றும் கடைசி பலி” என்று பேசுகிறார் (ஆல்மா 34:10). ஏனென்றால், “எல்லாரும் விழுந்து தொலைந்து போனார்கள், அது பாவநிவர்த்தியின் மூலம் ஒழிய அழிந்து போகும்” (ஆல்மா 34:9; வசனங்கள் 8-12ஐயும் பார்க்கவும்). தலைவர் ஜான் டெய்லர் மேலும் கூறுகிறார்: “நமக்கு புரியாத மற்றும் விவரிக்க முடியாத வகையில், [இயேசு] முழு உலகத்தின் பாவங்களின் பாரத்தை சுமந்தார்; ஆதாமின் மட்டுமல்ல, அவனுடைய சந்ததியினருக்கும்; அதைச் செய்வதன் மூலம், எல்லா விசுவாசிகளுக்கும், தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்த அனைவருக்கும் மட்டுமல்ல, முதிர்ச்சி அடையும் முன்பே மரிக்கும் மனித குடும்பத்தில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கும், பரலோகராஜ்யம் திறக்கப்பட்டது. [அவர்கள்], நியாயப்பிரமாணம் இல்லாமல் மரித்து, அவரது மத்தியஸ்தம் மூலம், நியாயப்பிரமாணம் இல்லாமல் உயிர்த்தெழுப்பப்படுவார்கள், மற்றும் நியாயப்பிரமாணம் இல்லாமல் நியாயந்தீர்க்கப்படுவார்கள், இதனால் அவரது பாவநிவர்த்தி ஆசீர்வாதங்களில் பங்கு பெறுவார்கள்.(An Examination into and an Elucidation of the Great Principle of the Mediation and Atonement of Our Lord and Savior Jesus Christ [1892], 148–49; Teachings of Presidents of the Church: John Taylor [2001], 52–53).

  3. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 49.

  4. 1 நேபி 11:32–33.

  5. 3 நேபி 27:14–15.

  6. நிச்சயமாக, பவுலின் போதனைகளில் சிலுவைபற்றிய குறிப்புகள் உள்ளன (உதாரணமாக, 1 கொரிந்தியர் 1:17-18; கலாத்தியர் 6:14; பிலிப்பியர் 3:18 பார்க்கவும்), ஆனால் இவை ஆணியடிக்கப்பட்ட இரண்டு மரக் கற்றைகளை விட மிகப் பெரிய ஒன்றைப்பற்றி அல்லது அத்தகைய சிறிய சின்னம் பற்றி பேசுகின்றன. ஆகவே, பவுல் சிலுவையைப்பற்றிப் பேசும்போது, அவர் பாவநிவர்த்தியின் மகத்துவத்தைப்பற்றி பேசுவதற்குக் கோட்பாட்டுச் சுருக்கெழுத்தைப் பயன்படுத்துகிறார், பிற்காலப் பரிசுத்தவான்கள் உடனடியாக அவருடன் சேர்ந்து அவரை மேற்கோள் காட்டும் ஒரு அரங்கம்.

  7. மார்ட்டின் லூதரின் கூட்டாளியான ஆண்ட்ரியாஸ் கார்ல்ஸ்டாட் (1486-1541) போன்ற ஆரம்பகால மற்றும் பாரம்பரிய கிறிஸ்தவ பிரமுகர்கள் இடைக்காலத்தின் பிற்பகுதியில் “சிலுவை [அதன் சொந்த] கிறிஸ்துவின் மனித துன்பங்களை மட்டுமே சித்தரித்தது மற்றும் அவரது உயிர்த்தெழுதல் மற்றும் மீட்பை [வல்லமைகளை] புறக்கணித்தது” என்று வாதிட்டனர்.” (in John Hilton III, Considering the Cross: How Calvary Connects Us with Christ [2021], 17).

  8. Harry Anderson, The Crucifixion; and Harry Anderson, Mary and the Resurrected Lord.

  9. Russell M. Nelson, “Opening the Heavens for Help,,” Liahona, May 2020, 72–74 பார்க்கவும்.

  10. Gordon B. Hinckley, “The Symbol of Christ,” Ensign, May 1975, 92.

  11. மத்தேயு16:24.

  12. 2 சாமுவேல் 24:24.

  13. “மனந்திரும்பி அவருடைய நாமத்தை விசுவாசிக்கும் எல்லா மக்களுக்கும் அவருடைய கரம் நீட்டப்பட்டுள்ளது” (ஆல்மா 19:36; 2 நேபி 26:33; ஆல்மா 5:33 ஐயும் பார்க்கவும்).

  14. வயா டோலோரோசா என்பது லத்தீன் சொற்றொடரின் பொருள் “ஒரு வலி மிகுந்த கடினமான பாதை, பாதை அல்லது அனுபவங்களின் தொடர்” (Merriam-Webster.com Dictionary, “via dolorosa”). இது பெரும்பாலும் பிலாத்துவால் கையில் கண்டனம் செய்யப்பட்டதிலிருந்து கல்வாரியில் சிலுவையில் அறையப்படும் வரை இயேசுவின் நகர்வுகளுடன் தொடர்புடையது.

  15. 3 நேபி 27:14–15 பார்க்கவும்.