பொது மாநாடு
நீடித்த சீஷத்துவம்
அக்டோபர் 2022 பொது மாநாடு


நீடித்த சீஷத்துவம்

நம் விசுவாசத்தின் நெருப்பைத் தக்கவைத்து எரியூட்டக்கூடிய பரிசுத்த பழக்கவழக்கங்களையும் நீதியான நடைமுறைகளையும் நாம் வளர்த்துக் கொள்ளும்போது ஆவிக்குரிய நம்பிக்கையையும் சமாதானத்தையும் காணலாம்.

கடந்த கோடையில், உலகெங்கிலும் உள்ள நமது இளைஞர்களில் 2,00,000 க்கும் அதிகமானோர் இளைஞர்களின் பெலனுக்காக அல்லது எப்எஸ்ஒய் மாநாடுகளின் நூற்றுக்கணக்கான ஒருவாரகால கூட்டங்களில் ஒன்றில் விசுவாசத்தில் வளர்ந்தனர். தொற்றுநோய்கால தனிமையில் இருந்து வெளிவருவது, பலருக்கு அதில் கலந்துகொள்வது, கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தின் செயலாக இருந்தது. இளம் பங்கேற்பாளர்களில் பலர் ஆழமான மனமாற்றத்தை நோக்கி இதேபோன்ற மேல்நோக்கிய வளைவைப் பின்பற்றுவதுபோல் தோன்றுகிறது. அவர்களின் வாரத்தின் முடிவில், “எப்படி போனது?” என்று கேட்க நான் விரும்பினேன்.

அவர்கள் சில நேரங்களில் இப்படிச் சொன்னார்கள்: “சரி, திங்கட்கிழமை என் அம்மா என்னை வந்து இதைச் செய்யச் சொன்னதால் நான் மிகவும் கோபமடைந்தேன். மேலும் நான் யாரையும் அறியவில்லை. மேலும் இது எனக்கானது என்று நான் நினைக்கவில்லை. மேலும் எனக்கு நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். … ஆனால் இப்போது வெள்ளிக்கிழமை, நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன். நான் என் வாழ்க்கையில் ஆவியை உணர விரும்புகிறேன். நான் இப்படி வாழ விரும்புகிறேன்.”

அவர்கள் ஒவ்வொருவரும் தெளிவின் தருணங்கள் மற்றும் ஆவிக்குரிய வரங்களினால் கழுவப்பட்டு அந்த வளர்ச்சியின் வளைவுடன் எடுத்துச் செல்லப்படுவதற்கான அவர்களின் சொந்த கதைகள் உள்ளன. எப்எஸ்ஒய்யால் இந்த கோடையில் நானும் மாறினேன், ஏனென்றால் ஒவ்வொருவரும், ஒரு வாரமாக அவரை நம்புவதற்கு தைரியத்தைக் கண்டறிந்த இந்த இளைஞர்களின் தனிப்பட்ட இருதயங்களின் நீதியான ஆசைகளுக்கு தேவனின் ஆவி இடையறாமல் பதிலளிப்பதைக் கண்டேன்.

கடலில் ஒளிரும் எஃகுக் கப்பல்களைப் போல, நாம் ஆவிக்குரிய ரீதியில் அரிக்கும் சூழலில் வாழ்கிறோம், அங்கு மிகவும் பளபளப்பான நம்பிக்கைகள் கவனமாக பராமரிக்கப்பட வேண்டும் இல்லையானால் அவை செதுக்கப்பட்டு, பின்னர் அரிக்கப்பட்டு, பின்னர் சிதைந்துவிடும்.

நம் நம்பிக்கைகளின் நெருப்பை பராமரிக்க நாம் என்ன வகையான விஷயங்களைச் செய்யலாம்?

எப்எஸ்ஒய் மாநாடுகள், முகாம்கள், திருவிருந்து கூட்டங்கள் மற்றும் ஊழியங்கள் போன்ற அனுபவங்கள் நமது சாட்சியங்களை மெருகேற்றி, வளர்ச்சியின் வளைவுகள் மற்றும் ஆவிக்குரிய கண்டுபிடிப்புகள் மூலம் ஒப்பீட்டளவில் சமாதானமான இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்ல உதவும். ஆனால் அங்கேயே தங்கி தொடர்ந்து, பின்னோக்கி நழுவுவதை விட “கிறிஸ்துவில் திடநம்பிக்கையாய் முன்னேறிச் செல்ல” நாம் என்ன செய்ய வேண்டும்(2 நேபி 31:20). அடிக்கடி ஜெபிப்பது, வேதத்தில் மூழ்குவது, உண்மையாக சேவை செய்வது போன்ற, முதலில் நம்மை அங்கு கொண்டு வந்த காரியங்களை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

நம்மில் சிலருக்கு, திருவிருந்து கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு கூட கர்த்தரில் நம்பிக்கை வைக்கும் பயிற்சி தேவைப்படலாம். ஆனால் அங்கு சென்றதும், கர்த்தரின் திருவிருந்தின் குணப்படுத்தும் செல்வாக்கு, சுவிசேஷ கொள்கைகளின் ஊடுருவல் மற்றும் சபை சமூகத்தின் வளர்ப்பு ஆகியவை நம்மை உயர்ந்த இடத்தில் உள்ள வீட்டிற்கு அனுப்ப முடியும்.

நேரில் ஒன்று கூடும் வல்லமை எங்கிருந்து வருகிறது?

எப்எஸ்ஒய்யில், நமது இளைஞர்களில் 150,000 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இரட்சகரின் நாமத்தில் இரண்டு அல்லது அதிகமானோர் ஒன்று கூடும் எளிய சூத்திரத்தைப் பயன்படுத்தி அவரை நன்கு அறிந்து கொண்டனர் (மத்தேயு 18:20 பார்க்கவும்), சுவிசேஷம் மற்றும் வேதங்களில் ஈடுபாடு கொண்டிருத்தல், ஒன்றாகப் பாடுதல், ஒன்றாக ஜெபித்தல் மற்றும் கிறிஸ்துவில் சமாதானத்தைக் கண்டறிதல். இது ஆவிக்குரிய எழுப்புதலுக்கான ஒரு வல்லமை வாய்ந்த மருந்து.

இந்த தொலைதூர சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் குழு இப்போது ஒரு பரபரப்பான உலகின் குழப்பத்தில் அடித்துச் செல்லப்படும்போது இன்னும் “கர்த்தரை நம்புவது” (நீதிமொழிகள் 3:5; 2022 இளைஞர் தலைப்பு) என்பதன் அர்த்தம் என்ன என்பதை தீர்மானிக்க வீட்டிற்குச் சென்றுள்ளது. ஒரு அமைதியான இடத்தில், திறந்து வைக்கப்பட்டுள்ள வேதங்களுடன் “அவருக்குச் செவிகொடுப்பது” (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:17) என்பது ஒரு விஷயம். ஆனால் நம் சீஷத்துவத்தை கவனச்சிதறல்களின், இந்த உலகக் குழப்பத்திற்குள் கொண்டு செல்வது முற்றிலும் வேறுபட்ட விஷயம், சுய அக்கறை மற்றும் பலவீனமான நம்பிக்கையின் தெளிவின்மையிலும் கூட அங்கு நாம் “அவருக்குச் செவிகொடுக்க” முயற்சி செய்ய வேண்டும், எந்த சந்தேகமும் வேண்டாம், நம் காலத்தின் மாறிவரும் ஒழுக்கரீதியான அலங்காரங்களுக்கு எதிராக தங்கள் இருதயங்களையும் மனதையும் நிமிர்ந்து நிற்க வைக்கும் போது நம் இளைஞர்களால் காட்டப்படும் கதாநாயகர்களின் காரியம் இது.

சபை நடவடிக்கைகளில் உருவாக்கப்பட்ட வேகத்தை கட்டியெழுப்ப குடும்பங்கள் வீட்டில் என்ன செய்யலாம்?

நான் ஒருமுறை பிணைய இளம் பெண்கள் தலைவரின் கணவராக இருந்தேன். அடுத்த வாரம் இளம் பெண்கள் முகாமில் கலந்துகொள்ளத் தயாராகி வரும் பெற்றோர்கள் மற்றும் அவர்களது மகள்களுக்காக என் மனைவி கூடுமிடத்தில் ஒரு தீ முகாமை நடத்திக் கொண்டிருந்தபோது, ஒரு இரவு, நான் வராந்தாவில் பிஸ்கட்டுகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டேன். எங்கு இருக்க வேண்டும், எதைக் கொண்டு வர வேண்டும் என்பதை விளக்கிய பிறகு, “இப்போது செவ்வாய்க் கிழமை காலை உங்கள் செல்லப் பெண்களை பேருந்திற்கு இறக்கிவிடும்போது, அவர்களை இறுக அணைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் திரும்பி வர மாட்டார்கள் என்பதால், நீங்கள் அவர்களுக்கு முத்தமிடுகிறீர்கள்.”

யாரோ மூச்சு விடுவதை நான் கேட்டேன், அது நான்தான் என்பதை உணர்ந்தேன். “திரும்பி வருவதில்லையா?”

ஆனால் பின்னர் அவள் தொடர்ந்தாள், “செவ்வாய்க்கிழமை காலைப் பெண்களை நீங்கள் இறக்கிவிட்டால், அவர்கள் சிறிய விஷயங்களின் கவனச்சிதறலை விட்டுவிட்டு, ஒரு வாரத்தை ஒன்றாகக் கழித்து கற்று, வளர்ந்து, கர்த்தரை நம்புவார்கள். நாங்கள் ஒன்றாக ஜெபிப்போம், பாடுவோம், சமைப்போம், ஒன்றாகச் சேவை செய்வோம், ஒன்றாகச் சாட்சியங்களைப் பகிர்ந்துகொள்வோம், பரலோக பிதாவின் ஆவியானவர் அவர்களின் எலும்புகளை நனையவைக்கும் வரை, வாரம் முழுவதும் அதை உணர அனுமதிக்கும் காரியங்களைச் செய்வோம். மேலும் சனிக்கிழமை, அந்த பேருந்தில் இருந்து இறங்குகிற நீங்கள் பார்க்கும் சிறுமிகள் செவ்வாய் கிழமை நீங்கள் இறக்கிவிட்டவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் புதிய சிருஷ்டிகளாக இருப்பார்கள். அந்த உயரமான தளத்திலிருந்து தொடர நீங்கள் அவர்களுக்கு உதவினால், அவர்கள் உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். அவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள், வளருவார்கள். உங்கள் குடும்பமும் அப்படித்தான் இருக்கும்.”

அந்த சனிக்கிழமை அவள் கணித்தபடியே இருந்தது. நான் கூடாரங்களை ஏற்றியபோது, வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு சிறுமிகள் கூடியிருந்த சிறிய காடுபோன்ற வெளியரங்கில் என் மனைவியின் குரல் கேட்டது. அவள் சொல்வதை நான் கேட்டேன், “ஓ, நீங்கள் இருக்கிறீர்கள். வாரம் முழுவதும் உங்களுக்காக காத்துக் கொண்டிருந்தோம். நமது சனிக்கிழமை சிறுமிகள்.”

சீயோனின் உறுதியான இளைஞர்கள் அதிர்ச்சியூட்டும் காலங்களில் பயணம் செய்கிறார்கள். தீர்க்கதரிசனம் கூறப்பட்ட, இடையூறுகள் நிறைந்த இவ்வுலகில், மகிழ்ச்சியைக் கண்டறிய, அந்த உலகத்தின் பாகமாக மாறாமல், பரிசுத்தத்தை நோக்கிய குருட்டுப் புள்ளியை நோக்குவது, அவர்களின் குறிப்பிட்ட பொறுப்பு. ஜி.கே. செஸ்டர்டன் இந்த தேடலை வீட்டை மையமாகக் கொண்ட சபை ஆதரித்த விதத்தைப் பார்த்ததைப் போலவே பேசினார், அவர் கூறினார்: “நாம் பிரபஞ்சத்தை ஒரு காட்டுமிராண்டியின் கோட்டையாக உணர வேண்டும், தாக்கப்பட, ஆனால் நமது சொந்த குடிசையாக இருக்க வேண்டும். அதற்கு நாம் மாலையில் திரும்பலாம்” (Orthodoxy [1909], 130).

நன்றிகூறும் விதமாக, அவர்கள் தனியாக போருக்குச் செல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு ஒருவருக்கொருவர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்களும் இருக்கிறீர்கள். அவர்கள் ஜீவிக்கும் தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சனைப் பின்தொடர்வதால், அவர் இந்தக் காலத்தின் மாபெரும் முயற்சியாகிய இஸ்ரவேலின் கூடுகை, பிரமாண்டமாகவும் கம்பீரமாகவும் இருக்கும் என்று அறிவிப்பதில் ஒரு ஞானதிருஷ்டிக்காரரின் நம்பிக்கையுடன் வழிநடத்துகிறார்.(“Hope of Israel” [worldwide youth devotional, June 3, 2018], HopeofIsrael.ChurchofJesusChrist.org பார்க்கவும்).

இந்த கோடையில், நானும் என் மனைவி கல்லீனும் ஆம்ஸ்டர்டாமில் விமானம் மாறிக் கொண்டிருந்தோம், அங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு புதிய ஊழியக்காரனாக இருந்தேன். டச்சு மொழியைக் கற்றுக்கொள்ள பல மாதங்கள் போராடிய பிறகு, எங்கள் கே.எல்.எம் விமானம் தரையிறங்கியது, மேலும் கேப்டன் ஒலிபெருக்கியில் ஒரு விளங்கிக்கொள்ளமுடியாத அறிவிப்பை வெளியிட்டார். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, “அது டச்சு என்று நான் நினைக்கிறேன்” என்று என் தோழன் முணுமுணுத்தான். எல்லாம் தொலைந்துவிட்டன என்று ஒருவருக்கொருவருடைய எண்ணங்களை தெரிந்து நாங்கள் மேலே பார்த்தோம்.

ஆனால், அனைத்தும் இழக்கப்படவில்லை. ஊழியக்காரர்களாக நம்மீது மழை பொழியும் அற்புதங்களை நோக்கி இந்த விமான நிலையத்தின் வழியாக நாங்கள் நடந்து செல்லும்போது நாங்கள் பெற்றே விசுவாசத்தின் பாய்ச்சலைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். விமானத்தில் ஏறிக்கொண்டிருந்த ஒரு உயிருள்ள, சுவாசிக்கும் ஊழியக்காரனால் நான் திடீரென்று தற்போதைய நிலைக்குத் திரும்பினேன். அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “தலைவர் லண்ட், நான் இப்போது என்ன செய்யலாம்? பெலவானாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?”

எப்எஸ்ஒய் மாநாடுகள், இளைஞர் முகாம்கள், ஆலயப் பயணங்களிலிருந்து அவர்கள் திரும்ப வரும்போதும், மற்றும் அவ்வப்பொழுது அவர்கள் பரலோகத்தின் வல்லமைகளை உணரும்போதும் நமது இளைஞர்கள் மனதில் எழும் கேள்வி இதுதான்,

அவரது பணியின் கடைசி மணிநேரங்களில் இந்த தெளிவான கண்கள் கொண்ட ஊழிய சேவை செய்வதில் நான் அன்பின் எழுச்சியை உணர்ந்தேன், ஆவியின் அந்த நொடி அமைதியில், “அவருடைய பெயரைத் தாங்க நீங்கள் பேட்ஜ் அணிய வேண்டியதில்லை” என்று நான் சொன்னபோது என் குரல் நொறுங்கியது.”

நான் அவரது தோள்களில் என் கைகளை வைத்து சொல்ல விரும்பினேன், “இதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் வீட்டிற்குச் சென்று, இப்படியே இருங்கள். நீங்கள் மிகவும் நல்லவர், நீங்கள் கிட்டத்தட்ட இருட்டில் ஒளிர்கிறீர்கள். உங்கள் ஊழிய ஒழுக்கம் மற்றும் தியாகங்கள் உங்களை தேவனின் மகத்தான மகனாக ஆக்கியுள்ளன. இங்கே மிகவும் வல்லமை வாய்ந்ததாக வேலை செய்ததுபோலவே, வீட்டில் தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் ஜெபிக்கக் கற்றுக்கொண்டீர்கள், யாரிடம் ஜெபம் செய்வதெனவும், ஜெபத்தின் மொழியையும் கற்றுக்கொண்டீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தைகளைப் படித்து, இரட்சகரைப் போல இருக்க முயற்சிப்பதன் மூலம் அவரை நேசிக்கிறீர்கள். அவர் பரலோக பிதாவை நேசித்ததைப் போல நீங்கள் பரலோக பிதாவை நேசித்தீர்கள், அவர் மற்றவர்களுக்குச் சேவை செய்ததைப் போல மற்றவர்களுக்குச் சேவை செய்தீர்கள், அவர் வாழ்ந்ததைப் போல கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்கள், நீங்கள் செய்யாதபோது, நீங்கள் மனந்திரும்பினீர்கள். உங்கள் சீஷத்துவம் என்பது ஒரு சட்டையின் மீதுள்ள ஒரு கோஷம் அல்ல, இது மற்றவர்களுக்காக வாழ்ந்த உங்கள் வாழ்க்கையாகிவிட்டது. எனவே, வீட்டிற்குச் சென்று அதைச் செய்யுங்கள். அதுவாக இருங்கள். இந்த ஆவிக்குரிய வேகத்தை உங்கள் வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்லுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய உடன்படிக்கை பாதையிலும் நம்பிக்கை வைப்பதன் மூலம், நம்முடைய விசுவாசத்தின் நெருப்பைத் தக்கவைத்து எரியூட்டக்கூடிய பரிசுத்த பழக்கவழக்கங்களையும் நீதியான நடைமுறைகளையும் நாம் வளர்த்துக்கொள்வதன் மூலம் ஆவிக்குரிய நம்பிக்கையையும் சமாதானத்தையும் காணலாம் என்பதை நான் அறிவேன். நாம் ஒவ்வொருவரும் அந்த இதமான நெருப்பை இன்னும் நெருங்கிச் செல்வோமாக, என்ன வந்தாலும் அப்படியே இருப்போம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.