பொது மாநாடு
தேவனுக்கும் அவருடைய பணிக்கும் உண்மையாக இருங்கள்
அக்டோபர் 2022 பொது மாநாடு


தேவனுக்கும் அவருடைய பணிக்கும் உண்மையாக இருங்கள்

நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நம்முடைய சொந்த சாட்சியைத் தேட வேண்டும், நம்முடைய உணர்ச்சிகளுக்குக் கடிவாளமிட வேண்டும், நம்முடைய பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும், தேவனுக்கும் அவருடைய பணிக்கும் உண்மையாக இருக்க வேண்டும்.

கடந்த அக்டோபரில், நாங்கள் மூன்று பேரும் இளம் ஊழியக்காரர்களாக பணியாற்றிய யுனைடெட் கிங்டத்திற்கு விஜயம் செய்யும்படி, தலைவர் எம். ரசல் பல்லார்ட் மற்றும் மூப்பர் ஜெஃப்ரி ஆர். ஹாலண்ட் ஆகியோருடன் நான் நியமிக்கப்பட்டேன். எனது கொள்ளுத் தாத்தா ஹீபர் சி. கிம்பலும் அவரது கூட்டாளிகளும் முதல் ஊழியக்காரர்களாக இருந்த பிரிட்டிஷ் தீவுகளில் போதிக்கவும் சாட்சியளிக்கவும், ஆரம்பகால சபை வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்தவும் எங்களுக்கு சிலாக்கியம் கிடைத்தது.1

தலைவர் ரசல் எம். நெல்சன், இந்த நியமிப்பைப்பற்றி எங்களைக் கிண்டல் செய்தார், அவர்கள் இளமையில் ஊழியக்காரர்களாகச் சேவை செய்த பகுதிக்கு மூன்று அப்போஸ்தலர்களை நியமிப்பது வழக்கத்திற்கு மாறானது என்று குறிப்பிட்டார். அவர்களின் முதன்மை ஊழியத்தைப் பார்வையிட பணிக்கப்பட அனைவரும் விரும்புவார்கள் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன், 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊழியத்தில் பணியாற்றிய மற்றொரு மூன்று அப்போஸ்தலர்களின் தொகுப்பு இருந்தால், அவர்களும் இதேபோன்ற பணியைப்ப் பெறலாம் என்ற முன்னுதாரணத்தை அவர் சுருக்கமாக விளக்கினார்.

படம்
ஹீபர் சி. கிம்பல்

அந்த பணித்தலுக்கான ஆயத்தத்தில், பின்னர் அப்போஸ்தலத்துவத்திற்கு அழைக்கப்பட்ட அவருடைய ஒரு பேரனான, ஆர்சன் எஃப். விட்னி எழுதிய Life of Heber C. Kimball புத்தகத்தை மீண்டும் நான் படித்தேன். எனக்கு கிட்டத்தட்ட 7 வயதாக இருந்தபோது இந்த தொகுப்பு என் அருமை அம்மாவால் எனக்கு வழங்கப்பட்டது. ஜூலை 24, 1947 அன்று தலைவர் ஜார்ஜ் ஆல்பர்ட் ஸ்மித்தால் திஸ் இஸ் த பிளேஸ் நினைவுச் சின்னத்தின் பிரதிஷ்டையில் கலந்துகொள்ள நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.2 என் மூதாதையரான ஹீபர் சி. கிம்பலைப்பற்றி நான் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இந்த புத்தகத்தில் தலைவர் கிம்பலுக்கு சொந்தமான ஒரு ஆழமான அறிக்கை உள்ளது, அது நமது நாளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அறிக்கையைப் பகிர்வதற்கு முன், ஒரு சிறிய பின்னணியை நான் வழங்குகிறேன்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் லிபர்ட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அப்போஸ்தலர்கள் பிரிகாம் யங் மற்றும் ஹீபர் சி. கிம்பல் ஆகியோர் மிசௌரியிலிருந்து பரிசுத்தவான்களை வெளியேற்றுவதை மேற்பார்வையிடும் பொறுப்பை, பயங்கரமான பாதகமான சூழ்நிலையில் மேற்கொண்டிருந்தனர். கவர்னர் லில்பர்ன் டபிள்யூ. போக்ஸ் மூலம் வெளியேற்ற உத்தரவை பிறப்பித்ததால் பெரும்பகுதி வெளியேற்றம் தேவைப்பட்டது.3

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்பு, ஹீபர் சி. கிம்பல், பின்னர் பிரதான தலைமையில், ஒரு புதிய தலைமுறையினருடன் இந்த வரலாற்றைப்பற்றி சிந்தித்து, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்களில் பலர் உங்களுக்கு எல்லா சிரமங்களையும் சோதனைகளையும் துன்புறுத்தல்களையும் சந்திக்கும் நேரத்தைக் காண்பீர்கள். நீங்கள் தேவனுக்கும் அவருடைய பணிக்கும் உண்மையாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்ட நிறைய வாய்ப்புகள் உள்ளன.”4

ஹீபர் தொடர்ந்தார்: “வரவிருக்கும் சிரமங்களைச் சந்திக்க, இந்த பணியின் உண்மையைப்பற்றிய அறிவை நீங்கள் பெறுவது அவசியம். இந்த தனிப்பட்ட அறிவு அல்லது சாட்சி இல்லாத ஆணோ பெண்ணோ வீழ்ச்சியடையும் அளவுக்கு சிரமங்கள் அத்தகைவையாக இருக்கும். நீங்கள் சாட்சியைப் பெறாமல் சரியாக வாழாமல், அதை அடையும் வரை கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதை, நிறுத்தாமலிருந்தால். நீங்கள் கூப்பிடாதிருந்தால் நீங்கள் நிற்க மாட்டீர்கள். எந்த ஆணும் பெண்ணும் கடன் வாங்கிய வெளிச்சத்தில் இருக்கமுடியாத காலம் வரும். ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் ஒளியால் வழிநடத்தப்பட வேண்டும். அது உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் நிற்க மாட்டீர்கள்; ஆகையால், சோதனைக் காலம் வரும்போது நீங்கள் தடுமாறி விழாதபடிக்கு, இயேசுவின் சாட்சியைத் தேடி, அதில் இசைந்திருங்கள்.”5

நாம் ஒவ்வொருவருக்கும் தேவனின் பணி 6 மற்றும் இயேசு கிறிஸ்துவின் முக்கிய பங்கைப்பற்றிய தனிப்பட்ட சாட்சியம் தேவை. கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் 76 வது பாகம் மகிமையின் மூன்று நிலைகளைக் குறிக்கிறது மற்றும் சிலஸ்டியல் மகிமையை சூரியனுடன் ஒப்பிடுகிறது. அதன் பிறகு டிரஸ்டிரியல் ராஜ்ஜியத்தை சந்திரனுடன் ஒப்பிடுகிறது.7

சூரியனுக்கு அதன் சொந்த ஒளி உள்ளது என்பது சுவாரஸ்யமானது, ஆனால் சந்திரன் ஒளி அல்லது “கடன் வாங்கிய ஒளியை” பிரதிபலிக்கிறது. டிரஸ்டிரியல் ராஜ்யத்தைப்பற்றி பேசுகையில், வசனம் 79 கூறுகிறது, “இவர்களே இயேசுவைக் குறித்த சாட்சியில் பராக்கிரமம் இல்லாதவர்களாய் இருந்தார்கள்.” நாம் சிலஸ்டியல் ராஜ்ஜியத்தைப் பெற முடியாது மற்றும் கடன் வாங்கிய ஒளியில் பரலோக பிதாவாகிய தேவனுடன் வாழ முடியாது; இயேசுவையும் அவருடைய சுவிசேஷத்தையும்பற்றிய நமது சொந்த சாட்சி நமக்குத் தேவை.

அக்கிரமம் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம்8 மனிதர்களின் கருத்துக்களால் இருதயங்கள் தேவனை விட்டு விலகுகின்றன.9 தேவனின் பணி மற்றும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியத்தைத் தேடுவதைப்பற்றிய ஹீபர் சி கிம்பலின் அக்கறை, வேதங்களில் மிகவும் அழுத்தமான எடுத்துக்காட்டுகளில் ஒன்று, ஆல்மாவின் மூன்று மகன்களான ஏலமன், சிப்லோன் மற்றும் கொரியாந்தனுக்கு அவனது ஆலோசனையில் அமைக்கப்பட்டிருக்கிறது.10 அவருடைய இரண்டு மகன்கள் தேவனுக்கும் அவருடைய பணிக்கும் உண்மையாக இருந்தார்கள். ஆனால் ஒரு மகன் சில மோசமான முடிவுகளை எடுத்தான். எனக்கு ஆல்மாவின் ஆலோசனையின் மிகப் பெரிய முக்கியத்துவம் என்னவென்றால், அவன் தனது சொந்த பிள்ளைகளின் நலனுக்காக ஒரு தந்தையாக அதை அளித்தான்.

ஹீபர் சி. கிம்பலைப் போலவே அவருடைய முதல் கவலை, ஒவ்வொருவருக்கும் இயேசு கிறிஸ்துவின் சாட்சியமும் தேவனுக்கும் அவருடைய பணிக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே.

ஆல்மா தனது மகன் ஏலமனுக்குக் கொடுத்த அருமையான போதனையில், “தேவனில் தன் நம்பிக்கையை வைக்கிற எவரும் அவர்களுடைய சோதனைகளிலும், அவர்களுடைய பிரச்சினைகளிலும், அவர்களுடைய உபவத்திரங்களிலும் ஆதரிக்கப்பட்டு, கடைசி நாளின்போது உயர்த்தப்படுவார்கள்” என்று அவர் ஒரு ஆழமான வாக்குறுதியை அளிக்கிறார்.”11

ஆல்மா ஒரு தூதனைப் பார்த்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்றிருந்தாலும், இது அரிதானது. பரிசுத்த ஆவியால் ஏற்படுத்தப்பட்ட பதிவுகள் மிகவும் வழக்கமானவை. இந்த பதிவுகள் தேவதூதர்களின் வெளிப்பாடுகளுக்கு சமமாக முக்கியமானதாக இருக்கலாம். தலைவர் ஜோசப் ஃபீல்டிங் ஸ்மித் கற்பித்தார்: “பரிசுத்த ஆவியிலிருந்து வரும் ஆத்துமாவின் மீதான எண்ணங்கள் ஒரு தரிசனத்தைக் காட்டிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆவி ஆவியுடன் பேசும் போது, ஆத்துமாவின் மீது உள்ள முத்திரையை அழிக்க மிகவும் கடினமாக உள்ளது.”12

இது ஆல்மாவின் இரண்டாவது மகனான சிப்லோனுக்கான ஆலோசனைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. சிப்லோன் தன் சகோதரன் ஏலமனைப் போல நீதியுள்ளவனாக இருந்தான். நான் வலியுறுத்த விரும்பும் ஆலோசனை ஆல்மா 38:12 ஆகும், இது ஒரு பகுதியில் சொல்கிறது, “நீங்கள் அன்பால் நிறைக்கப்படும் பொருட்டு உங்கள் ஆசாபாசங்களை எல்லாம் கடிவாளமிடப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

கடிவாளம் என்பது ஒரு சுவாரஸ்யமான சொல். நாம் குதிரையில் சவாரி செய்யும்போது, அதை வழிநடத்த கடிவாளத்தைப் பயன்படுத்துகிறோம். ஒரு நல்ல ஒத்திசைவானது, இயக்குவது, கட்டுப்படுத்துவது அல்லது நிதானப்படுத்துவதாகும் பழைய ஏற்பாட்டில் சொல்கிறது, நாம் சரீர உடல்கள் இருக்கும் என்று அறிந்ததும் நாம் மகிழ்ச்சியுடன் கத்தினோம்.13 உடல் தீமையானது அல்ல, அது அழகானது மற்றும் அத்தியாவசியமானது, ஆனால் சில உணர்வுகள், சரியாகவும் சரியான முறையில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், தேவனிடமிருந்தும் அவருடைய பணியிலிருந்தும் நம்மைப் பிரித்து, நமது சாட்சியத்தை எதிர்மறையாக பாதிக்கும்.

குறிப்பாக இரண்டு உணர்ச்சிகளைப்பற்றி பேசலாம், முதலாவது, கோபம் மற்றும் இரண்டாவது, காமம்.14 இரண்டுமே கட்டுங்கடாமல் அல்லது கட்டுப்பாடில்லாமல் விட்டுவிடுவது மிகுந்த மனவேதனையை உண்டாக்கும், ஆவியின் செல்வாக்கைக் குறைத்து, தேவன் மற்றும் அவருடைய வேலையிலிருந்து நம்மைப் பிரிக்கலாம் என்பது சுவாரஸ்யமானது. வன்முறை மற்றும் ஒழுக்கக்கேட்டின் உருவங்களால் நம் வாழ்க்கையை நிரப்ப எதிரி ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகிறான்.

சில குடும்பங்களில் கோபமான கணவன் அல்லது மனைவி துணையையோ அல்லது குழந்தையையோ அடிப்பது சகஜம். ஜூலை மாதம் லண்டனில் நடந்த யுனைட்டட் கிங்டத்தின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற மன்றத்தில் நான் பங்கேற்றேன்.15 பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான வன்முறை உலகளவில் குறிப்பிடத்தக்க பிரச்சனையாக எடுத்துக்காட்டப்பட்டது. வன்முறையைத் தவிர, மற்றவர்கள் வாய்மொழி துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர். “துணையை அல்லது சந்ததியை துஷ்பிரயோகம் செய்பவர்கள் ஒரு நாள் தேவனுக்கு முன்பாக கணக்குக் கேட்கப்படுவார்கள்” என்று குடும்ப பிரகடனம் நமக்குச் சொல்கிறது16

நேற்று காலை தலைவர் நெல்சன் இதை கடுமையாக வலியுறுத்தினார்.17 உங்கள் பெற்றோர் உங்களை துஷ்பிரயோகம் செய்தார்களா அல்லது செய்யவில்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், உங்கள் துணை அல்லது குழந்தைகளை உடல் ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ துஷ்பிரயோகம் செய்ய மாட்டீர்கள் என்பதில் தயவுசெய்து உங்கள் மனதில் உறுதி கொள்ளுங்கள்.

இன்றைய காலகட்டத்தில் சமூகப் பிரச்சனைகள் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகம் ஆகியவை மிக முக்கியமான சவால்களில் ஒன்றாகும். பல சந்தர்ப்பங்களில் கோபமும் தவறான மொழியும் காரணம், விவாதம் மற்றும் நாகரீகத்தை மாற்றியுள்ளன. இரட்சகரின் மூத்த அப்போஸ்தலரான பேதுருவின் அறிவுரையை பலர் கைவிட்டுள்ளனர், கிறிஸ்துவைப் போன்ற இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம் மற்றும் அன்பு போன்ற குணங்களை நாடுங்கள்.18 அவர்கள் கிறிஸ்துவைப் போன்ற மனத்தாழ்மையையும் கைவிட்டிருக்கிறார்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் பிற உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதுடன், நமது எண்ணங்கள், மொழி மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தூய்மையான ஒழுக்க வாழ்க்கையை நடத்த வேண்டும். நாம் ஆபாசப் படங்களைத் தவிர்க்க வேண்டும், நம் வீடுகளில் என்ன செயல்படுகிறோம் என்பதன் சரியான தன்மையை மதிப்பீடு செய்ய வேண்டும், மேலும் ஒவ்வொரு வகையான பாவ நடத்தையையும் தவிர்க்க வேண்டும்.

இது ஆல்மாவின் மகன் கொரியாந்தனுக்கான ஆலோசனைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அவனது சகோதரர்களான ஏலமன் மற்றும் சிப்லோன் போலல்லாமல், கொரியாந்தன் ஒழுக்க மீறலில் ஈடுபட்டான்.

கொரியாந்தன் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருந்ததால், மனந்திரும்புதலைப்பற்றி ஆல்மா அவனுக்குக் கற்பிக்க வேண்டியிருந்தது. பாவத்தின் தீவிரத்தையும் பிறகு எப்படி மனந்திரும்ப வேண்டும் என்பதையும் அவனுக்கு அவன் கற்பிக்க வேண்டியதாயிருந்தது.19

எனவே, ஆல்மாவின் தடுப்பு ஆலோசனையானது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதாக இருந்தது, ஆனால் மீறியவர்கள் மனந்திரும்ப வேண்டும். தலைவர் நெல்சன் ஏப்ரல் 2019 பொது மாநாட்டில் மனந்திரும்புதல் குறித்து உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த ஆலோசனை வழங்கினார். தினசரி மனந்திரும்புதல் நம் வாழ்வில் இன்றியமையாதது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். “மனந்திரும்புதல் ஒரு நிகழ்ச்சி இல்லை, இது ஒரு செயல்முறை. இது மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான திறவுகோல்,” என்று அவர் கற்பித்தார். “அன்றாட மனந்திரும்புதல் தூய்மைக்கு நடைபாதை, தூய்மை வல்லமையைக் கொண்டுவருகிறது.”20 தலைவர் நெல்சன் ஆலோசனையளித்ததை கொரியாந்தன் செய்திருந்தால், அவன் தூய்மையற்ற எண்ணங்களை எண்ணத்தொடங்கியவுடன் அவன் மனம் வருந்தியிருப்பான். பெரிய மீறல்கள் நடந்திருக்காது.

ஆல்மா தனது மகன்களுக்கு வழங்கிய இறுதி ஆலோசனை அனைத்து வேதங்களிலும் உள்ள மிக முக்கியமான கோட்பாடுகளில் ஒன்றாகும். இது இயேசு கிறிஸ்து செய்த பாவநிவர்த்தியுடன் தொடர்புடையது.

கிறிஸ்து பாவத்தை அகற்றுவார் என்று ஆல்மா சாட்சியமளித்தான்.21 இரட்சகரின் பாவநிவர்த்தி இல்லாமல், நீதியின் நித்திய கொள்கைக்கு தண்டனை தேவைப்படும்.22 இரட்சகரின் பாவநிவர்த்தியின் காரணமாக, மனந்திரும்பியவர்களுக்கு இரக்கம் மேலோங்கி, அவர்கள் தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்ப அனுமதிக்கும். இந்த அற்புதமான கோட்பாட்டை நாம் சிந்திப்பது நல்லது.

எவரும் தனது சொந்த நற்செயல்களால் மட்டுமே தேவனிடம் திரும்ப முடியாது; இரட்சகரின் தியாகத்தின் பலன் நம் அனைவருக்கும் தேவை அனைவரும் பாவம் செய்தார்கள், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் மட்டுமே நாம் இரக்கத்தைப் பெற்று தேவனோடு வாழ முடியும்.23

கொரியாந்தன் செய்த பாவங்கள் சிறியதா அல்லது கடுமையானதா என்பதைப் பொருட்படுத்தாமல், மனந்திரும்புதல் செயல்முறையைக் கொண்ட அல்லது செல்லவிருக்கும் கொரியாந்தனுக்கும் நம் அனைவருக்கும் ஆல்மா அற்புதமான ஆலோசனைகளை வழங்கினான். பாகம் 42 ன் வசனம் 29, “இப்பொழுதும், என் குமாரனே, இக்காரியங்கள் இனி ஒருபோதும் உன்னைச் சஞ்சலப்படுத்தக்கூடாதென்று விரும்புகிறேன், உன் பாவங்கள் மாத்திரம் உன்னை சஞ்சலப்படுத்துவதாக, அந்தச் சஞ்சலத்தினிமித்தம் நீ மனந்திரும்புதலுக்குக் கொண்டுவரப்படுவாய்.”

கொரியாந்தன் ஆல்மாவின் ஆலோசனைக்கு செவிசாய்த்தான், இருவரும் மனந்திரும்பி மரியாதையுடன் பணியாற்றினார்கள். இரட்சகரின் பாவநிவர்த்தியின் காரணமாக, குணமடைதல் அனைவருக்கும் கிடைக்கிறது.

ஆல்மாவின் நாளிலும், ஹீபரின் நாளிலும், நிச்சயமாக நம் நாளிலும், நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் சொந்த சாட்சியைத் தேட வேண்டும், நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும், நம் பாவங்களுக்காக மனந்திரும்ப வேண்டும், மேலும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் சமாதானத்தைக் கண்டுபிடித்து தேவனுக்கும் அவருடைய பணிக்கும் உண்மையாக இருக்க வேண்டும்.

ஒரு சமீபத்திய உரையிலும் மீண்டும் இந்த காலை நேரத்தில் தலைவர் ரசல் எம். நெல்சன் இவ்வாறு கூறினார்: “இயேசு கிறிஸ்துவைப்பற்றிய உங்கள் சாட்சிக்கு நீங்கள் பொறுப்பேற்குமாறு நான் உங்களிடம் கெஞ்சுகிறேன். அதற்காக உழைத்திடுங்கள். அதை சொந்தமாக்குங்கள் அதை கவனித்துக்கொள்ளுங்கள். அது வளரும்படியாக அதைப் போஷியுங்கள். பின்னர் உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ பார்த்துக் கொள்ளுங்கள்.”24

இப்போது தலைவர் நெல்சனிடம் இருந்து நாம் கேட்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தலைவர் நெல்சன் நம் நாளுக்கான தேவனின் தீர்க்கதரிசி என்று நான் சாட்சி கூறுகிறேன். அவர் மூலம் நாம் பெறும் அற்புதமான உணர்த்துதல் மற்றும் வழிகாட்டுதலை நான் நேசிக்கிறேன், பொக்கிஷமாக கருதுகிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலன் என்ற முறையில், இரட்சகரின் தெய்வீகத்தன்மை மற்றும் அவருடைய பாவநிவர்த்தியின் யதார்த்தம் ஆகியவற்றைப்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உறுதியான சாட்சியாக இருக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. Ronald K. Esplin, “A Great Work Done in That Land,” Ensign, July 1987, 20: “On June 13, Elder Kimball, Orson Hyde, Joseph Fielding, and Heber’s friend Willard Richards left Kirtland for England பார்க்கவும். நியூயார்க்கில், ஜூன் 22 அன்று, கனடியர்கள் ஐசக் ரசல், ஜான் குட்சன் மற்றும் ஜான் ஸ்னைடர் ஆகியோர் அவர்களுடன் இணைந்தனர். ஏழு ஊழியக்காரர்கள் பின்னர் லிவர்பூலுக்கு கேரிக் பாதையை பதிவு செய்தனர். (Heber C. Kimball papers, 1837–1866; Willard Richards journals and papers, 1821–1854, Church History Library, Salt Lake City பார்க்கவும்.)

  2. ஜூலை 24, 1847 அன்று சால்ட் லேக் பள்ளத்தாக்கு பரிசுத்தவான்கள் வருகையின் 100 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், யூட்டாவின் சால்ட் லேக் சிட்டியின் கிழக்குப் பகுதியில், எமிக்ரேஷன் கனியன் முகப்பில் அமைந்துள்ள இந்த இடம் நினைவுச்சின்னம். இந்த நினைவுச்சின்னத்தில் ப்ரிகாம் யங், ஹீபர் சி. கிம்பல் மற்றும் வில்ஃபோர்ட் உட்ரஃப் ஆகியோரின் சிலைகள் உள்ளன.

  3. 1839 ஆம் ஆண்டின் முற்பகுதியில் 8,000 முதல் 10,000 பிற்காலப் பரிசுத்தவான்கள் மிசௌரியில் இருந்து விழிப்புணர்வு மற்றும் கும்பல்களின் வன்முறைச் செயல்களில் இருந்து தப்பிச் சென்றனர். பிரிகாம் யங் மற்றும் ஹெபர் சி. கிம்பால் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், பொருட்களை சேகரிக்கவும், தேவைகளை மதிப்பிடவும் மற்றும் இலினாய்க்கு 200-மைல் (320-கிமீ) கடினமான குளிர்கால வெளியேற்றத்திற்கான பாதைகளை நிறுவவும் ஒரு குழு உருவாக்கப்பட்டது. குயின்சி நகரத்தில் இரக்கமுள்ள குடிமக்கள் துன்பப்பட்ட பரிசுத்தவான்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு மூலம் தற்காலிக அடைக்கலம் அளித்தனர். (Saints: The Story of the Church of Jesus Christ in the Latter Days, vol. 1, The Standard of Truth, 1815–1846 [2018], 375–77; William G. Hartley, “The Saints’ Forced Exodus from Missouri,” in Richard Neitzel Holzapfel and Kent P. Jackson, eds., Joseph Smith: The Prophet and Seer [2010], 347–89 பார்க்கவும்).

  4. In Orson F. Whitney, Life of Heber C. Kimball: An Apostle, the Father and Founder of the British Mission (1945), 449. emphasis added.

  5. Orson F. Whitney, Life of Heber C. Kimball, 450–450.

  6. மோசே 1:39 பார்க்கவும்; “The Work of Salvation and Exaltation,” section 1.2 in General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும். நாம் கிறிஸ்துவிடம் வந்து, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பின்பற்றி, தேவைப்படுபவர்களைக் கவனித்து, சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைப்பதன் மூலமும், குடும்பங்களை நித்தியமாக ஒன்றிணைப்பதன் மூலமும் தேவனுடைய பணியில் உதவுகிறோம். இது இரட்சிப்பின் பணிக்காக கொடுக்கப்பட்ட திறவுகோல்களை முன்வைக்கிறது கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110 ஐயும் பார்க்கவும்.

  7. 1 கொரிந்தியர் 15:40–41 ஐயும் பார்க்கவும்.

  8. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:27 பார்க்கவும்.

  9. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:29 பார்க்கவும்.

  10. ஆல்மா தீர்க்கதரிசியின் குமாரன் ஆல்மா. அவன் தேசத்தின் தலைமை நீதிபதி யாகவும் பிரதான ஆசாரியராகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்தான். அவர் ஒரு இளைஞனாக ஒரு அற்புதமான மனமாற்றத்தை அனுபவித்தான்.

  11. ஆல்மா 36:3.

  12. Joseph Fielding Smith, “The First Presidency and the Council of the Twelve,” Improvement Era, Nov. 1966, 979.

  13. யோபு 38:7 பார்க்கவும்.

  14. ஆல்மா 39:9. ஆல்மா கொரியாந்தனுக்கு அறிவுறுத்துகிறான், “உன் கண்களின் இச்சைக்குப் பின் போகாதே.”

  15. அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, நாடாளுமன்ற கூட்டங்கள், செவ்வாய்க்கிழமை, ஜூலை 5, 2022, “வன்முறையைத் தடுப்பது மற்றும் நம்பிக்கைச் சுதந்திரத்தை ஊக்குவித்தல்.”

  16. The Family: A Proclamation to the World,” ChurchofJesusChrist.org; Patrick Kearon, “He Is Risen with Healing in His Wings: We Can Be More Than Conquerors,” Liahona, May 2022, 37–39 ஐயும் பார்க்கவும்.

  17. Russell M. Nelson, “What Is True?,” Liahona, Nov. 2022, 29 பார்க்கவும்.

  18. 2 பேதுரு 1:5–10 பார்க்கவும்.

  19. ஆல்மா 39:9 பார்க்கவும்.

  20. Russell M. Nelson, “We Can Do Better and Be Better,” Liahona, May 2019, 67, 68.

  21. ஆல்மா 39:15 பார்க்கவும்.

  22. ஆல்மா 42:16 பார்க்கவும்

  23. 2 நேபி 25:23 பார்க்கவும்.

  24. Russell M. Nelson, Facebook, Aug. 1, 2022, facebook.com/russell.m.nelson; Twitter, Aug. 1, 2022, twitter.com/nelsonrussellm; Instagram, Aug. 1, 2022, instagram.com/russellmnelson; see also “Choices for Eternity” (worldwide devotional for young adults, May 15, 2022), broadcasts.ChurchofJesusChrist.org.