பொது மாநாடு
என் எல்லா நாட்களிலும் கர்த்தரால் தயவு பெற்றவனாயிருந்தேன்
அக்டோபர் 2021 பொது மாநாடு


என் எல்லா நாட்களிலும் கர்த்தரால் தயவு பெற்றவனாயிருந்தேன்

நமது துன்பங்களுக்கு நாம் எவ்வாறு பதில் செயல் செய்கிறோம்? நமது பிரச்சினைகளை விட நமது ஆசீர்வாதங்களில் அதிக கவனம் செலுத்துவதால் நாம் நன்றியுள்ளவர்களாக உணர்கிறோமா?

உலக வரலாறு முழுவதிலும் தேவனின் பிள்ளைகள் எதிர்கொண்ட பல சோதனைகள் மற்றும் சவால்களில் கோவிட் -19 தொற்றுநோய் ஒன்றாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், என் அன்பான குடும்பமும் நானும் சில இருண்ட நாட்களில் வாழ்ந்தோம். சில அன்புக்குரியவர்களின் மறைவு மூலம் தொற்றுநோயும் பிற காரணங்களும் எங்கள் குடும்பத்திற்கு மரணத்தையும் வலியையும் அளித்தன. மருத்துவ கவனிப்பு, உபவாசம் மற்றும் ஜெபம் இருந்தபோதிலும், ஐந்து வார காலப்பகுதியில் என் சகோதரர் சார்லி, என் சகோதரி சுசி மற்றும் என் மைத்துனர் ஜிம்மி திரையின் மறுபக்கத்துக்கு கடந்து சென்றனர்.

லாசருவை உயிரோடெழுப்புவதற்கான வல்லமை அவரிடம் உள்ளது என்பதையும், மிக விரைவில் இரட்சகர் தனது நண்பனை மரணத்திலிருந்து காப்பாற்ற இந்த வல்லமையைப் பயன்படுத்துவார் என்பதையும் அறிந்தும், தன் சகோதரன் லாசருவின் மரணத்தால் வேதனைப்பட்ட மரியாளைக் கண்ட அவர் ஏன் அழுதார் என்று சில சமயங்களில், எனக்கு ஆச்சரியமாக இருந்தது.1 மரியாளிடம் இரட்சகரின் இரக்கமும் மனதுருக்கமும் என்னை வியக்க வைக்கிறது; மரியாளின் சகோதரன் லாசருவின் மரணத்தில் அவள் அனுபவித்த விவரிக்க முடியாத வலியை அவர் புரிந்து கொண்டார்.

நம் அன்புக்குரியவர்களிடமிருந்து தற்காலிகப் பிரிவை அனுபவிக்கும்போது அதே கடுமையான வலியை நாம் உணர்கிறோம். இரட்சகர் நம்மீது பரிபூரண மனதுருக்கம் கொண்டுள்ளார். அவர் நம்முடைய குறுகிய பார்வைக்காகவோ அல்லது நமது நித்திய பயணத்தை காட்சிப்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்டதற்காகவோ நம்மை குறை சொல்லவில்லை. மாறாக, நம்முடைய துக்கம் மற்றும் துன்பத்துக்காக நம் மீது அவருக்கு மனதுருக்கம் இருக்கிறது.

பரலோக பிதாவும் அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவும், நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள்.2 “தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்: “நாம் உணரும் மகிழ்ச்சிக்கும், நம் வாழ்வின் சூழ்நிலைகளுக்கும், நம் வாழ்வின் கவனம் செலுத்த வேண்டிய எல்லாவற்றிற்கும் சிறிதும் சம்பந்தமில்லை. நமது வாழ்க்கையில், இரட்சிப்பின் தேவனுடைய திட்டத்தில் கவனமிருக்கும்போது … நமது வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருந்தாலும், அல்லது நடக்காவிட்டாலும் நாம் சந்தோஷத்தை உணரமுடியும்.”3

நான் ஒரு இளம் ஊழியக்காரனாக இருந்தபோது, நான் பாராட்டிய ஒரு அற்புதமான ஊழியக்காரன், சில பேரழிவு தரும் செய்திகளைப் பெற்றது எனக்கு நினைவிருக்கிறது. அவனது தாயும் அவனது இளைய சகோதரரும் ஒரு துயர விபத்தில் உயிரிழந்தனர். இறுதிச் சடங்கிற்காக வீடு திரும்பும் வாய்ப்பை இந்த மூப்பருக்கு ஊழியத் தலைவர் வழங்கினார். இருப்பினும், தனது தகப்பனுடன் தொலைபேசியில் பேசிய பிறகு, இந்த ஊழியக்காரன், தங்கியிருந்து தனது ஊழியத்தை நிறைவுசெய்ய முடிவு செய்தான்.

படம்
மருத்துவமனையில் ஊழியக்காரரை சந்தித்தல்

சிறிது காலம் கழித்து, நாங்கள் அதே பகுதியில் பணியாற்றியபோது, என் தோழனுக்கும் எனக்கும் ஒரு அவசர அழைப்பு வந்தது; அதே ஊழியக்காரனுக்கு சொந்தமான சைக்கிளை சில திருடர்கள் திருடிச் சென்று அவனை கத்தியால் காயப்படுத்தினர். அவனும் அவனது தோழனும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது, அங்கு நானும் என் தோழனும் அவர்களைச் சந்தித்தோம். மருத்துவமனைக்கு செல்லும் வழியில், நான் இந்த ஊழியக்காரனுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அவனது ஆர்வம் குறைந்திருக்கும் என்றும் நிச்சயமாக இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்திற்குப் பிறகு, அவன் இப்போது வீடு திரும்ப விரும்புவான் என்றும் நான் கற்பனை செய்தேன்.

எனினும், நாங்கள் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தபோது, இந்த ஊழியக்காரன் தன் படுக்கையில் படுத்து, அறுவை சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்படுவதற்காகக் காத்திருந்தான், அவன் சிரித்துக் கொண்டிருந்தான். நான் நினைத்தேன், “இது போன்ற நேரத்தில் அவன் எப்படி சிரிக்க முடியும்?” அவன் மருத்துவமனையில் குணமடைந்து கொண்டிருந்தபோது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற நோயாளிகளுக்கு மார்மன் புஸ்தகத்தின் துண்டு பிரசுரங்களையும் நகல்களையும் அவன் ஆர்வத்துடன் வழங்கினான். இந்த சோதனைகளுடன் கூட, அவன் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை. மாறாக, அவன் விசுவாசம், ஆற்றல், வலிமை மற்றும் உற்சாகத்துடன் தனது ஊழியத்தின் கடைசி நாள் வரை பணியாற்றினான்.

மார்மன் புஸ்தகத்தின் ஆரம்பத்தில், நேபி கூறுகிறான், “என்னுடைய வாழ்நாட்களில் பல உபத்திரவங்களைக் கண்டிருப்பினும், ஆயினும், என் எல்லா நாட்களிலும் கர்த்தரால் மிகத் தயவு பெற்றவனாக இருந்தேன்.”4.

நேபி அனுபவித்த பல சோதனைகளை நான் நினைக்கிறேன், அவற்றில் பல அவனது எழுத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. நாம் அனைவருக்கும் நம் இருண்ட நாட்கள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள அவனுடைய சோதனைகள் நமக்கு உதவுகின்றன. லாபான் தன் பொறுப்பில் வைத்திருந்த பித்தளைத் தகடுகளைப் பெற எருசலேம் திரும்பும்படி நேபிக்கு கட்டளையிடப்பட்டபோது இந்த சோதனைகளில் ஒன்று ஏற்பட்டது. நேபியின் சகோதரர்கள் சிலர் விசுவாசம் குறைந்தவர்கள், அவர்கள் நேபியை ஒரு குச்சியால் அடித்தனர். அவன் தனது வில்லை முறித்ததால், அவனது குடும்பத்திற்கு உணவு கிடைக்காதபோது நேபி மற்றொரு சோதனையை சந்தித்தான். பின்னர், ஒரு கப்பலை உருவாக்கும்படி நேபிக்கு கட்டளையிடப்பட்டபோது, அவனுடைய சகோதரர்கள் அவனை கேலி செய்தனர் மற்றும் அவனுக்கு உதவ மறுத்தனர். அவனது வாழ்க்கையின் போது இவை மற்றும் பல சோதனைகள் இருந்தபோதிலும், நேபி எப்போதும் தேவனின் நன்மையை அங்கீகரித்தான்.

படம்
நேபி கப்பலில் கட்டப்பட்டான்

வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குச் செல்லும் வழியில் அவனது குடும்பம் கடலைக் கடந்தபோது, நேபியின் குடும்பத்தினர் சிலர் “தாங்களே குதூகலிக்க ஆரம்பித்தனர்,” கடுமையாகப் பேசினர், தங்களைக் காப்பாற்றியது கர்த்தரின் வல்லமை என்பதை மறந்துவிட்டனர். நேபி அவர்களைக் கண்டித்தபோது, அவர்கள் கோபமடைந்தனர் மற்றும் அவனால் நகர முடியாதபடி அவனை கயிறுகளால் கட்டினார்கள். அவனுடைய சகோதரர்கள் “[அவனை] மிகவும் கடுமையாக நடத்தினார்கள்” என்று மார்மன் புஸ்தகம் கூறுகிறது; அவனது மணிக்கட்டு மற்றும் கணுக்கால் “மிகவும் வீங்கியிருந்தது, மற்றும் ரணம் அதிகமாக இருந்தது.”5 நேபி தனது சகோதரர்களின் இருதயத்தின் கடினத்தினிமித்தம் வருத்தப்பட்டான் மற்றும் சில சமயங்களில் சோகத்தில் மூழ்கியதாக உணர்ந்தான். “இருந்தபோதிலும் நான் என் தேவனை நோக்கிப்பார்த்து, நாள் முழுவதும் அவரைத் துதித்தேன், என்னுடைய துன்பங்களினிமித்தம் நான் கர்த்தருக்கு எதிராக முறுமுறுக்கவில்லை”, என அவன் அறிவித்தான்.7

என் அன்பான சகோதர சகோதரிகளே, நமது துன்பங்களுக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்? அவர்கள் காரணமாக நாம் கர்த்தருக்கு முன்பாக முணுமுணுக்கிறோமா? அல்லது, நேபி மற்றும் என் முன்னாள் ஊழியக்கார நண்பனைப் போல, நாம் நமது பிரச்சினைகளை விட நமது ஆசீர்வாதங்களில் அதிக கவனம் செலுத்துவதால், வார்த்தை, சிந்தனை மற்றும் செயலில் நாம் நன்றியுள்ளவர்களாக உணர்கிறோமா?

நம்முடைய இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பூலோக ஊழியத்தின் போது அவர் நமக்கு ஒரு உதாரணத்தைக் கொடுத்தார். கஷ்டம் மற்றும் சோதனையின் தருணங்களில், நம் சக மனிதனுக்கு சேவை செய்வதை விட அதிக அமைதியையும் திருப்தியையும் தரும் சில காரியங்கள் உள்ளன. ஏரோதியாளின் மகளை மகிழ்விப்பதற்காக அவரது ஒன்றுவிட்ட சகோதரனான யோவான் ஸ்நானன் ஏரோது ராஜாவால் தலை துண்டிக்கப்பட்டதை இரட்சகர் அறிந்தபோது என்ன நடந்தது என்பதை மத்தேயு புத்தகம் விவரிக்கிறது:

“அவனுடைய சீஷர்கள் வந்து, உடலை எடுத்து, அடக்கம்பண்ணி, போய் அந்த சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.

“இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு படவில் ஏறி வனாந்தரமான ஒரு இடத்திற்குப் போனார்: ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாக அவரிடத்திற்குப் போனார்கள்.

“இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கினார்.

“சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, இது வனாந்தரமான இடம், இப்போது நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய், தங்களுக்குப் போஜனபதார்த்தங்களை கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிட வேண்டும் என்றார்கள்.

“இயேசு அவர்களை நோக்கி, அவர்கள் போக வேண்டியதில்லை; நீங்கள் அவர்களுக்கு போஜனம் கொடுங்கள் என்றார்.”8

நமக்கு சோதனை மற்றும் துன்ப காலங்களில் மற்றவர்களின் கஷ்டங்களை அடையாளம் காண முடியும் என்று இயேசு கிறிஸ்து நமக்குக் காட்டினார். மனதுருக்கமடைந்து, நாம் அவர்களை அணுகி அவர்களை உயர்த்த முடியும். நாம் அவ்வாறு செய்யும்போது, நமது கிறிஸ்துவைப் போன்ற சேவையால் நாமும் உயர்த்தப்படுகிறோம். தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி கூறினார்: “கவலைக்கு எனக்கு தெரிந்த சிறந்த மருந்து வேலை. விரக்திக்கான சிறந்த மருந்து சேவை. சோர்வடைவதற்கான சிறந்த தீர்வு, அதிக சோர்வாக இருக்கும் ஒருவருக்கு உதவுவதற்கான சவாலாகும்.”9

இதில், இயேசு கிறிஸ்துவின் சபையில், என் சக மனிதனுக்கு ஊழியம் செய்யவும் சேவை செய்யவும் எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. அந்த சமயங்களில்தான் பரலோக பிதா என் சுமைகளைக் குறைக்கிறார் என்று நான் உணர்கிறேன். தலைவர் ரசல் எம். நெல்சன், பூமியில் தேவனின் தீர்க்கதரிசி; கடினமான சோதனைகளின் போது நாம் எப்படி மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம். தேவன் நமது அன்பான பரலோக பிதா என்று பல பிற பரிசுத்தவான்களுடன் நான் என் சாட்சியத்தை ஒன்றிணைக்கிறேன். என் இருண்ட நாட்களில் அவருடைய எல்லையற்ற அன்பை நான் உணர்ந்தேன். நம்முடைய இரட்சகர் இயேசு கிறிஸ்து நம்முடைய வலிகளையும் வேதனைகளையும் புரிந்துகொள்கிறார். அவர் நம் சுமைகளை இலகுவாக்கி நம்மை ஆறுதல்படுத்த விரும்புகிறார். நம்முடையதை விட அதிக சுமைகளுடன் இருப்பவர்களுக்கு சேவை செய்வதன் மூலமும் ஊழியம் செய்வதன் மூலமும் நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.