பொது மாநாடு
கர்த்தருக்காக நேரம் ஒதுக்குங்கள்
அக்டோபர் 2021 பொது மாநாடு


கர்த்தருக்காக நேரம் ஒதுக்குங்கள்

ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் கர்த்தருக்காக நேரத்தை ஒதுக்குவதன் மூலம் உலகின் கவர்ச்சியை எதிர்கொள்ள நான் இன்று உங்களிடம் கெஞ்சுகிறேன்.

என் அன்பான சகோதர சகோதரிகளே, இரண்டு நாட்களாக கர்த்தரின் ஊழியர்களால் நாம் நன்கு போதிக்கப்பட்டுள்ளோம், அவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்று கருத்தாய் தேடியிருக்கிறார்கள்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு நமதுபொறுப்பு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்போது கேள்வி என்னவென்றால், நாம் கேட்ட மற்றும் உணர்ந்தவற்றால் நாம் எப்படி வித்தியாசமாக இருப்போம்?

நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் இருந்து, சில சமயங்களில் வாழ்க்கை எவ்வளவு விரைவாக மாறும் என்பதை தொற்றுநோய் நிரூபித்துள்ளது. இருப்பினும், நாம் கட்டுப்படுத்தக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. நாம் நமது சொந்த முன்னுரிமைகளை அமைத்து, நமது ஆற்றல், நேரம் மற்றும் வழிமுறைகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைத் தீர்மானிக்கிறோம். ஒருவருக்கொருவரை நாம் எப்படி நடத்துவது என்பதை நாம் தீர்மானிக்கிறோம். சத்தியம் மற்றும் வழிகாட்டுதலுக்காக நாம் யாரை நோக்கி திரும்புவோமோ அவர்களை நாம் தேர்வு செய்கிறோம்.

உலகின் குரல்களும் அழுத்தங்களும் ஈர்க்கக்கூடியவை மற்றும் எண்ணற்றவை. ஆனால் பல குரல்கள் ஏமாற்றுகிற, கவர்ச்சிகரமானவை, மேலும் உடன்படிக்கை பாதையிலிருந்து நம்மை வெளியே இழுக்கலாம். தவிர்க்க முடியாத இருதயம் உடைவதைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் கர்த்தருக்காக நேரத்தை ஒதுக்குவதன் மூலம் உலகின் கவர்ச்சியை எதிர்கொள்ள நான் இன்று உங்களிடம் கெஞ்சுகிறேன்.

நீங்கள் பெறும் பெரும்பாலான தகவல்கள் சமூக அல்லது பிற ஊடகங்களிலிருந்து வந்தால், ஆவியின் கிசுகிசுப்புகளைக் கேட்கும் உங்கள் திறன் குறையும். அன்றாட ஜெபம் மற்றும் சுவிசேஷப் படிப்பு மூலம் நீங்கள் கர்த்தரைத் தேடவில்லை என்றால், புதிரான ஆனால் உண்மையல்லாத தத்துவங்களுக்கு நீங்கள் பாதிப்படைய உங்களை விட்டுவிடுகிறீர்கள். பாபிலோனின் இசைக்குழுவின் தொடர்ச்சியான ஒலியால் மிகவும் விசுவாசமுள்ள பரிசுத்தவான் கூட தடம் புரளலாம்.

என் சகோதர சகோதரிகளே, கர்த்தருக்காக நேரம் ஒதுக்கும்படி நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்! பரிசுத்த ஆவியானவர் எப்போதும் உங்களுடன் இருக்க அனுமதிக்கும் விஷயங்களைச் செய்வதன் மூலம் உங்கள் சொந்த ஆவிக்குரிய அடித்தளத்தை உறுதியாக ஆக்கி, காலத்தின் சோதனையில் நிலைத்திருங்கள்.

“ஆவியானவர் பேசுகிற விஷயங்களைப் பற்றியும் … உண்மையில் இருக்கும் விஷயங்களைப் பற்றியும், உண்மையாகவே இருக்கப்போகும் விஷயங்களைப் பற்றியுமான” ஆழமான சத்தியத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.1 அது “நீங்கள் செய்ய வேண்டிய சகல காரியங்களையும் உங்களுக்குக் காண்பிக்கும்.”2

இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துவதைத் தவிர வேறு எதுவும் ஆவியை அழைப்பதில்லை. கிறிஸ்துவைப் பற்றி பேசுங்கள், கிறிஸ்துவில் களிகூருங்கள், கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்துப் பாருங்கள், மேலும் கிறிஸ்துவில் உறுதியுடன் முன்னோக்கி செல்லுங்கள்.3 நீங்கள் அவரை ஆராதித்து, திருவிருந்தில் பங்கேற்று, அவருடைய நாளை பரிசுத்தமாக்கி, ஓய்வு நாளை களிப்பாக்குங்கள்.4

இன்று காலை நான் வலியுறுத்தியது போல், தயவுசெய்து கர்த்தரின் பரிசுத்த வீட்டில் அவருக்கு நேரம் ஒதுக்குங்கள். ஆலய சேவை மற்றும் ஆலய ஆராதனை போல, வேறெதுவும் உங்கள் ஆவிக்குரிய அடித்தளத்தை வலுப்படுத்தாது.

நமது புதிய ஆலயங்களுக்காக பணிபுரியும் அனைவருக்கும் நன்றி. அவை உலகம் முழுவதும் கட்டப்பட்டு வருகின்றன. கீழ்க்காணும் இடங்களில் அல்லது அதற்கு அருகில் அதிக ஆலயங்களைக் கட்டுவதற்கான நமது திட்டங்களை அறிவிப்பதில் இன்று நான் மகிழ்ச்சியடைகிறேன்: காஹ்சியுங், தைவான்; டாக்லோபன், பிலிப்பைன்ஸ்; மன்ரோவியா, லைபீரியா; கனங்கா, காங்கோ ஜனநாயக குடியரசு; அந்தனனரிவோ, மடகாஸ்கர்; குலியாக்கான், மெக்சிகோ; விட்டேரியா, பிரேசில்; லா பாஸ், பொலிவியா; சாண்டியாகோ மேற்கு, சிலி; ஃபோர்ட் வொர்த், டெக்சாஸ்; கோடி, வயோமிங்; ரெக்ஸ்பர்க் வடக்கு, ஐடஹோ; ஹீபர் பள்ளத்தாக்கு, யூட்டா; ஓரம் யூட்டா ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு புரோவோ யூட்டா ஆலயத்தின் புனரமைப்பு.

அன்புள்ள சகோதர சகோதரிகளே நான் உஙகளை நேசிக்கிறேன். பரலோக பிதா உங்களை அறிந்திருக்கிறார், உங்களை நேசிக்கிறார். அவரே உங்கள் இரட்சகர் மற்றும் உங்கள் மீட்பர். அவர் தனது சபையை வழிநடத்துகிறார். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒவ்வொரு நாளும், அவருக்காக நேரத்தை ஒதுக்குவீர்களானால், அவர் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களை வழிநடத்துவார்.

நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக, நான் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.