பொது மாநாடு
என் ஆத்துமாவுக்குரிய காரியங்கள்
அக்டோபர் 2021 பொது மாநாடு


என் ஆத்துமாவுக்குரிய காரியங்கள்

நீங்கள் என்ன காரியங்களை சிந்திக்கிறீர்கள்? உங்களுக்கு உண்மையில் என்ன காரியங்கள் முக்கியம்? உங்கள் ஆத்துமாவின் காரியங்கள் யாவை?

என் சகோதர சகோதரிகளே, நமது விருப்பமான மாநாட்டு மையத்தில் நான் மீண்டும் நிற்கும்போது, அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன: “ஆண்டவரே,நாம் இங்கே இருக்கிறது நல்லது.”1

தகப்பன் லேகியின் மரணத்தைத் தொடர்ந்து தனது ஜனத்தின் பதிவேட்டை வைத்திருந்த தீர்க்கதரிசி நேபியின் வார்த்தைகளை மையமாகக் கொண்டு இன்று எனது எண்ணங்கள் உள்ளன. நேபி எழுதினான், “இவைகளின் மேல் என் ஆத்துமாவுக்குரியவைகளை எழுதுகிறேன்.”2

காரியங்கள் எனும் வார்த்தை மிகவும் நேர்த்தியானது அல்லது ஆவிக்குரியது அல்ல, “என் ஆத்துமா”வுடன் இணைவதற்கு போதுமானதாக இல்லை என நினைத்து இந்த வசனத்தை நான் கடந்து செல்வது வழக்கம். ஆயினும் காரியங்கள் என்ற வார்த்தை 2,354 முறை வேதங்களில் பயன்படுத்தப்பட்டதை நான் அறிந்திருக்கிறேன்.3 உதாரணமாக, மோசேயில்: “நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன், சர்வ வல்ல தேவன்; என்னுடைய ஒரே பேறானவர் மூலம் மட்டுமே நான் இந்த காரியங்களை உருவாக்கினேன்.”4 மற்றும் நேபியின் வார்த்தைகள்: “இதோ, என் ஆத்துமா கர்த்தருடைய காரியங்களில் மகிழ்ச்சியடைகிறது; நான் பார்த்த மற்றும் கேட்ட காரியங்களின் மீது என் இருதயம் தொடர்ந்து சிந்திக்கிறது.”5

நேபியின் வார்த்தைகள் “நீங்கள் என்ன காரியங்களைப்பற்றி யோசிக்கிறீர்கள்?” எனும் கேள்விகளை எழுப்புகிறது. “உங்களுக்கு உண்மையில் என்ன காரியங்கள் முக்கியம்?” உங்கள் ஆத்துமாவின் காரியங்கள் யாவை?

கேள்விகளைக் கேட்பதன் மூலம் நம் ஆத்துமாவின் காரியங்கள் அடிக்கடி தெளிவுபடுத்தப்பட்டு ஆழப்படுத்தப்படுகின்றன.

படம்
ஒரு மெய்நிகர் கூட்டத்தில் மூப்பர் ராஸ்பண்ட்
படம்
இளைஞர் ஆராதனை
படம்
இளம் வயதுவந்தோர் ஒளிபரப்பு

தொற்றுநோய்களின் போது நான் உலகம் முழுவதிலுமிருந்து இளைஞர்களை அநேக ஆராதனைகள், பெரிய மற்றும் சிறிய பல ஒளிபரப்புகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் சந்தித்தேன், அவர்களின் கேள்விகளை நாங்கள் விவாதித்தோம்.

பதினான்கு வயதான ஜோசப் ஸ்மித்தின் ஆத்துமாவில் ஆழமான ஒரு கேள்வி இருந்தது, அவர் அதை கர்த்தரிடம் எடுத்துச் சென்றார். தலைவர் ரசல் எம். நெல்சன் வலியுறுத்தினார்: “உங்கள் கேள்விகளை கர்த்தரிடமும் மற்ற உண்மையுள்ள ஆதாரங்களிடமும் எடுத்துச் செல்லுங்கள். ஒரு தீர்க்கதரிசியின் வாழ்க்கையில் ஒரு குறைபாட்டை, அல்லது வேதங்களில் ஒரு முரண்பாட்டைக் கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கையைவிட, நம்புவதற்குள்ள விருப்பத்துடன் படியுங்கள். சந்தேகப்படுபவர்களுடன் … அவைகளை ஒத்திகை பார்த்து உங்கள் சந்தேகங்கள் அதிகரித்தலை நிறுத்துங்கள். ஆவிக்குரிய கண்டுபிடிப்புக்கான உங்கள் பயணத்தில் உங்களை வழிநடத்த கர்த்தரை அனுமதியுங்கள்.”6

நான் என்ன நம்புகிறேன், ஏன் நம்புகிறேன் என்று இளைஞர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

ஒரு இளம் பெண்ணை அவளது வீட்டில் சந்திக்கச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு அப்போஸ்தலர் அவள் வீட்டில் இருப்பது இது முதல் தடவையா என்று நான் கேட்டேன். அவள் விரைவாக புன்னகைத்து பதிலளித்தாள், “ஆம்.” என்னிடம் அவளுடைய கேள்வி நன்றாக இருந்தது: “நான் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரியங்கள் என்ன?”

தூண்டுதல்களைக் கேட்க என்னைத் தயார்படுத்தும் காரியங்கள், உலகத்தின் வழிகளைத் தாண்டி என் பார்வையை உயர்த்தும், சுவிசேஷத்திலும் என் வாழ்க்கையிலும் எனது வேலைக்கான நோக்கத்தைக் கொடுக்கும், என் ஆத்துமாவின் காரியங்களுடன் நான் பதிலளித்தேன்.

என் ஆத்துமாவுக்குரிய சில காரியங்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ளட்டுமா? இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக இருக்க விரும்பும் அனைவருக்கும் இந்த காரியங்கள் பொருந்தும். பத்து, ஒரு நல்ல, மொத்த எண்ணாக இருக்கும். உங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து எட்டு, ஒன்பது மற்றும் பத்தை முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இன்று நான் உங்களுக்கு ஏழு தருகிறேன்.

முதலில், பிதாவாகிய தேவனையும் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும் நேசியுங்கள்.

முதல் பெரிய கட்டளையை இயேசு கட்டளையிட்டார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.”7

கர்த்தருடைய சபையை நடத்த தலைவர் நெல்சன் அழைக்கப்பட்டபோது, “நான் அவர்களை அறிவேன், அவர்களை நேசிக்கிறேன், என் வாழ்வின் மீதமுள்ள ஒவ்வொரு மூச்சிலும் அவர்களுக்கும், உங்களுக்கும் சேவை செய்வதாக உறுதியளிக்கிறேன்”8 எனச் சொல்லி, நமது நித்திய பிதாவாகிய தேவன் மற்றும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆகியோருக்கு தனது அர்ப்பணிப்பை பிரகடனப்படுத்தினார்.

எனவே முதலில், பிதாவையும் குமாரனையும் நேசியுங்கள்.

இரண்டாவதாக, “உங்கள் அயலாரை நேசியுங்கள்.”9

அது நல்ல யோசனை மட்டுமல்ல; இது இரண்டாவது பெரிய கட்டளை. உங்கள் அயலார் உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர், தொகுதி உறுப்பினர்கள், வேலையிடத்தின் சக ஊழியர்கள், அறை நண்பர்கள், நமது விசுவாசத்தில் இல்லாதவர்கள், உதவி கரம் தேவைப்படுபவர்கள் மற்றும் வெளிப்படையாக அனைவரும். “உன் அயலாரை நேசி” என்பதன் சாராம்சம் “ஒருவரை ஒருவர் நேசியுங்கள்” என்ற பாடலில் ஒலிக்கிறது.10

தலைவர் நெல்சன் நமக்கு நினைவூட்டுகிறார், “நாம் தேவனை முழு இருதயத்தோடு நேசிக்கும்போது, அவர் நம் இருதயங்களை மற்றவர்களின் நல்வாழ்வுக்கு திருப்புகிறார்.”11

மூன்றாவது, உங்களை நேசியுங்கள்.

இங்குதான் பலர் போராடுகிறார்கள். நம்மை நேசிப்பது மற்றவர்களை நேசிப்பதை விட எளிதாக வருகிறது என்பது ரசிக்கத்தக்கதாக இல்லையா? ஆனாலும், “தன்னைப்போல் பிறனையும் நேசி” என்று கர்த்தர் சொன்னார்.12 அவர் நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை மதிக்கிறார்; நாமும் அவ்வாறே மதிக்க வேண்டும். நாம் தவறுகள், இருதய வலிகள், போதாமையின் உணர்வுகள், ஏமாற்றம், கோபம் அல்லது பாவம் ஆகியவற்றால் அதிக சுமையில் இருக்கும்போது, இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமை, தெய்வீக வடிவமைப்பால், ஆத்துமாவை உயர்த்தும் ஒன்று ஆகும்.

நான்காவது, கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்.

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்”என்று கர்த்தர் தெளிவுபடுத்தியுள்ளார்.13 ஒவ்வொரு நாளும் கொஞ்சம் சிறப்பாகச் செயல்படவும், நீதியில் முன்னெடுத்துச் செல்லவும் பாடுபடுங்கள்.

ஐந்தாவதாக, ஆலயம் செல்வதற்கு எப்போதும் தகுதியானவராக இருங்கள்.

நான் அதை கர்த்தருக்கு பரிந்துரைக்கப்பட்டதாக அழைக்கிறேன். உங்களுக்கு ஒரு ஆலயம் செல்வது முடிந்தாலும் இல்லாவிட்டாலும், உடன்படிக்கை பாதையில் உறுதியாக இருக்க உங்களுக்கு நடைமுறையிலிருக்கும் ஆலய பரிந்துரைக்கு தகுதியாக இருங்கள்.

ஆறாவதாக, மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.

“திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள்,”14 என கர்த்தர் சொல்லியிருக்கிறார். ஏன்? எப்படி, ஒவ்வொரு திருப்பத்திலும் சவால்கள் நம்மை எதிர்கொள்ளும்போது? இயேசு கிறிஸ்து அளித்த வாக்குறுதியின் காரணமாக: “கர்த்தராகிய நான் உங்களுடனேயே கூட இருக்கிறேன், உங்களுக்குப் பக்கத்திலேயே நிற்கிறேன்.”15

தலைவர் நெல்சன் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை “மகிழ்ச்சியின் செய்தி!” என்று விவரிக்கிறார்.16 அவர் விளக்குகிறார், “நாம் உணரும் மகிழ்ச்சிக்கு நம் வாழ்வின் சூழ்நிலைகளுக்கும், நம் வாழ்வின் கவனிக்க வேண்டிய எல்லாவற்றிற்கும் சிறிதளவு தொடர்பும் இல்லை.”17

ஏழாவதாக, தேவனின் ஜீவிக்கிற தீர்க்கதரிசியைப் பின்பற்றுங்கள்.

இது எனது காரியங்களின் பட்டியலில் ஏழாவது இடமாக இருக்கலாம், ஆனால் இன்று அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இது என் மனதில் முதலிடத்தில் உள்ளது.

இன்று பூமியில் தேவனின் தீர்க்கதரிசி நமக்கு இருக்கிறார்! அது உங்களுக்கு என்ன அர்த்தமாகிறது என்பதை ஒருபோதும் தள்ளாதீர்கள். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த இளம் பெண்ணை நினைவில் வையுங்கள். என்ன காரியங்கள் மிகவும் முக்கியம் என்பதை அவள் அறிய விரும்பினாள். “ஜீவிக்கிற தீர்க்கதரிசியைப் பின்பற்றுங்கள்,” என்று நான் அப்போது சொன்னேன், இன்று நான் மீண்டும் அதை வலியுறுத்துகிறேன்.

இந்த நேரத்தில் தேவனால் அழைக்கப்பட்ட தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்களால் வழிநடத்தப்படும் ஒரு சபையாக நாம் வேறுபடுத்தப்படுகிறோம். நீங்கள் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு பின்பற்றும்போது, நீங்கள் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன். ஒருபோதும் இல்லை!

ஆவிக்குரிய தன்மை, ஒழுக்கம், உத்தமம் மற்றும் மரியாதை, “அங்கும் இங்கும் தூக்கி எறியப்படும்”18 ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். நாம் தேர்ந்தெக்க வேண்டும். நம் அச்சங்களை அமைதிப்படுத்தவும், நம் பார்வையை உயர்த்தவும் அவருடைய தீர்க்கதரிசி மூலம் கர்த்தரின் குரல் நமக்கு இருக்கிறது, ஏனெனில் தலைவர் நெல்சன் பேசும்போது, அவர் கர்த்தருக்காகப் பேசுகிறார்.

“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்”19 என நமக்கு நினைவூட்டும் வேதங்களாலும் போதனைகளாலும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்.

அதனால் சீரியாவில் ஒரு சிறந்த இராணுவத் தலைவராக இருந்த நாகமான், ஒரு தொழுநோயாளி, அவன் தீர்க்கதரிசி எலிசா அவனை குணப்படுத்த முடியும் என்று கூறப்பட்டான். யோர்தான் ஆற்றில் ஏழு முறை கழுவினால், அவன் சுத்தமாவான் என நாகமானுக்கு சொல்ல, எலிசா தனது தூதனை அனுப்பினான். நாகமான் கேலி செய்தான். நிச்சயமாக யோர்தானை விட சக்திவாய்ந்த நதி இருந்தது, எலிசா, தீர்க்கதரிசியாக அவனை தனிப்பட்ட முறையில் குணப்படுத்துவான் என்று எதிர்பார்த்தபோது ஏன் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்? நாகமான் விலகிச் சென்றான், ஆனால் இறுதியில் வேலைக்காரர்களால் வற்புறுத்தப்பட்டான்: “அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா?”20 நாகமான் இறுதியாக யோர்தானில் ஏழு முறை மூழ்கி குணமடைந்தான்.

நம் சிந்தனை, எதிர்பார்ப்புகள் அல்லது இன்றைய விதிமுறைகளுக்கு ஏற்ற தீர்க்கதரிசன ஆலோசனையின் பகுதிகளை தேர்ந்தெடுக்கும் இடர்பாடுகளை நாகமானின் விவரம் நமக்கு நினைவூட்டுகிறது. குணமடைய நமது சொந்த யோர்தான் நதியை நமது தீர்க்கதரிசி தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறார்.

நாம் கேட்கக்கூடிய, சிந்திக்கக்கூடிய மற்றும் பின்பற்றக்கூடிய மிக முக்கியமான வார்த்தைகள் நம் ஜீவிக்கிற தீர்க்கதரிசி மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. சபை மற்றும் உலகின் முக்கிய காரியங்களைப்பற்றி விவாதிக்க நான் தலைவர் நெல்சனுடன் ஆலோசனையில் அமர்ந்திருந்தேன் என்பதையும், அவர் மூலம் வெளிப்பாடு பாய்வதையும் நான் கண்டேன் என நான் சாட்சியளிக்கிறேன். அவர் கர்த்தரை அறிந்திருக்கிறார், அவருடைய வழிகளை அறிந்திருக்கிறார், மேலும் தேவனின் பிள்ளைகள் அனைவரும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குச் செவிகொடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

பல வருடங்களாக நாம் வருடத்திற்கு இரண்டு முறை பொது மாநாட்டில் தீர்க்கதரிசி பேசக் கேட்டோம். ஆனால், நமது நாளின் சிக்கலான பிரச்சினைகளை, தலைவர் நெல்சன் அமர்வுகள்,21 சமூக ஊடகங்கள், 22ஆராதனைகள், 23மற்றும் பத்திரிகை விளக்கங்களில் கூட மிக அதிகமாய் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்.24 அதிக நன்றியுணர்வை ஊக்குவிக்கும், பூமியில் உள்ள நம் சகோதர சகோதரிகள் அனைவரையும் அதிக அளவில் சேர்ப்பதை ஊக்குவித்த, நமது தனிப்பட்ட வாழ்வில் அமைதி, நம்பிக்கை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஆழமான வெளிப்படுத்தும் செய்திகளை அவர் ஆயத்தம் செய்து வழங்குவதை நான் கவனித்தேன்.

தலைவர் நெல்சன் ஒரு வரம்பெற்ற தொடர்பாளர், ஆனால் மிக முக்கியமாக, அவர் தேவனின் தீர்க்கதரிசி. நீங்கள் அதை நினைக்கும் போது அது திகைப்பூட்டும், ஆனால் அவரது தெளிவான வழிகாட்டுதல் இன்று உலகில் வஞ்சம், தந்திரம் மற்றும் மதச்சார்பற்ற வழிகளில் இருந்து நம்மைக் காக்கும் என்பதை உணர வேண்டியது அவசியம்.25

தீர்க்கதரிசன பொறுப்பு என்பது வெளிப்பாட்டைப்பற்றியது. “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையின் மறுஸ்தாபிதம்: ஏப்ரல் 2020 பொது மாநாட்டில் வழங்கப்பட்ட உலகிற்கு இருநூற்றாண்டு பிரகடனம்,” கர்த்தர் இந்த பணியை இயக்குகிறார் என்பதை வலியுறுத்துகிறது. இந்த பிரகடனத்தில், பிரதான தலைமையும் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமமும் கூறுகிறார்கள்: “வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மறுஸ்தாபிதம், தொடர்ச்சியான வெளிப்பாட்டின் மூலம் முன்னோக்கி செல்கிறது என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். தேவன் “சகலத்தையும் கிறிஸ்துவுக்குள் கட்டும்போது” (எபேசியர் 1:10) பூமி மீண்டும் ஒருபோதும் இப்போது போலிருக்காது. 26

“சகலத்தையும் கிறிஸ்துவுக்குள்”27 மற்றும் “என் ஆத்துமாவுக்குரிய காரியங்கள்”28, இந்த சபை, இந்த சுவிசேஷம் மற்றும் இந்த ஜனத்தைப்பற்றியது.

நான் இன்று பகிர்ந்த ஏழு “என் ஆத்துமாவுக்குரிய காரியங்களை” கருத்தில் கொள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அழைப்புடன் நான் நிறைவு செய்கிறேன்: பிதாவாகிய தேவனையும் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும் நேசியுங்கள்; உங்கள் அண்டை வீட்டாரை நேசியுங்கள்; உங்களையும் நேசியுங்கள்; கட்டளைகளைக் காத்துக்கொள்ளுங்கள்; எப்போதும் ஒரு ஆலய பரிந்துரைக்கு தகுதியானவராக இருங்கள்; மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருங்கள்; மற்றும் தேவனின் ஜீவிக்கிற தீர்க்கதரிசியைப் பின்பற்றுங்கள். உங்கள் சொந்த எட்டு, ஒன்பது மற்றும் பத்தை அடையாளம் காண நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் இதயப்பூர்வமான “காரியங்களை” மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளைக் கருத்தில் கொண்டு, ஜெபம் செய்யவும், சிந்திக்கவும், கர்த்தரின் வழிகாட்டுதலைத் தேடவும் அவர்களை ஊக்குவியுங்கள்.

என் ஆத்துமாவுக்குரிய காரியங்கள் உங்களுக்கு உங்களுடையதைப் போலவே எனக்கும் விலைமதிப்பற்றவை. இந்த காரியங்கள் சபையிலும் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் நமது சேவையை பலப்படுத்துகின்றன. அவர்கள் நம்மை இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள், அவர்கள் நம் உடன்படிக்கைகளை நமக்கு நினைவூட்டுகிறார்கள், மேலும் அவர்கள் கர்த்தருடைய கரங்களில் பாதுகாப்பாக உணர நமக்கு உதவுகிறார்கள். நாம் அவருடைய உண்மையான சீஷர்களாக மாறவும், அவர் பிதாவுடன் இருப்பது போல அவருடன் ஒன்றாக இருக்கவும் நாடும்போது, அவர் நம்முடைய ஆத்துமாக்கள் “இனி பசியோ, தாகமோ அடையாமல் அவருடைய அன்புடன் நிரப்பப்பட்டிருக்கும்” என்று விரும்புகிறார் என்று நான் சாட்சியளிக்கிறேன்.29 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.