பொது மாநாடு
விசுவாசத்தின் ஜெபங்கள்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


விசுவாசத்தின் ஜெபங்கள்

நாம் விசுவாசத்தில் ஜெபிக்கும்போது, அவருடைய இரண்டாம் வருகைக்காக உலகத்தை அவர் ஆயத்தப்படுத்தும்போது கர்த்தருடைய பணியில் நாம் ஒரு முக்கிய பங்காயிருப்போம்.

பொது மாநாட்டின் இந்த முதல் கூட்டத்தில் மூப்பர் மேனஸின் ஜெபம் பதிலளிக்கப்பட்டது. அற்புதமான செய்திகள் மற்றும் இனிமையான இசையின் மூலமாக நமக்கு உணர்த்துதல் வருகிறது. இந்த மாநாடு மகத்துவமாயும் மறக்கமுடியாததாகவுமிருக்குமென்ற தலைவர் ரசல் எம்.நெல்சனின் வாக்குறுதி ஏற்கனவே நிறைவேற ஆரம்பித்துக்கொண்டிருக்கிறது.

பிதாவாகிய தேவனும் அவருடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் ஒரு தரிசனத்தில் ஜோசப் ஸ்மித்துக்கு தோற்றமளித்ததிலிருந்து இரு நூற்றாண்டு காலத்தை 200 ஆண்டுகள் ஞாபகார்த்த ஆண்டாக இந்த ஆண்டை தலைவர் நெல்சன் வடிவமைத்திருக்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டிற்கு நம்மை ஆயத்தப்படுத்த ஒரு தனிப்பட்ட திட்டத்தை உண்டாக்க தலைவர் நெல்சன் நம்மை அழைத்திருக்கிறார், சபையின் வரலாற்றில் ஞாபகார்த்தம் ஒரு முக்கியமானதாயிருக்குமெனவும் உங்கள் பாத்திரம் முக்கியமெனவும் அவர் சொன்னார்.”1

என்னைப்போலவே ஒருவேளை நீங்களும் அவருடைய செய்தியைக் கேட்டிருக்கிறீர்கள். “எந்த வழியில் என்னுடைய பாத்திரம் முக்கியமானது?” மறுஸ்தாபிதத்தின் நிகழ்ச்சிகளைப்பற்றி ஒருவேளை நீங்கள் படித்தீர்கள், ஜெபித்தீர்கள். ஒருவேளை பிதாவாகிய தேவன் அவருடைய நேச குமாரனை அறிமுகப்படுத்தியபோதுள்ள அசாதாரணமான காலங்களின் விவரங்களை முன்பைவிட அதிகமாக நீங்கள் படிப்பீர்கள். நமது பரலோக பிதாவின் பிள்ளைகளிடத்தில் பின்னர் இரட்சகர் பேசியபோதுள்ள நிகழ்வுகளை ஒருவேளை, நீங்கள் படிப்பீர்கள். அந்த காரியங்கள் அனைத்தையும் அதிகமானவற்றையும் நான் செய்தேன் என நான் அறிவேன்.

தேவனுடைய ஆசாரியத்துவத்தைப்பற்றியும், ஊழியக்காலத்தின் ஆரம்பித்தலையும்பற்றியும் எனது படிப்பில் குறிப்புகளை நான் கண்டேன். என்னுடைய சொந்த வரலாற்றில் இந்த மாநாட்டுக்கான என்னுடைய ஆயத்தம் ஒரு முக்கியமானதென நான் உணர ஆரம்பித்தபோது நான் தாழ்மையடைந்தேன். என்னுடைய இருதயத்தில் மாற்றங்களை நான் உணர்ந்தேன். புதிய நன்றியுணர்வை நான் உணர்ந்தேன். தற்போது நடைபெற்று வரும் மறுஸ்தாபிதத்தின் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுவதற்கான வாய்ப்பில் நான் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டதாக உணர்ந்தேன்.

கவனமான ஆயத்தம், அதிக சந்தோஷம், அதிக நம்பிக்கை, கர்த்தருக்கு தேவையான எந்த அளவிலும் சேவை செய்ய அதிக தீர்மானத்தால் மற்றவர்கள் உணருகிறார்கள் என நான் கற்பனை செய்கிறேன்.

நாம் மதிக்கிற மிகைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் தீர்க்கதரிசனமாக கடைசி ஊழியக்காலத்தில் வழங்கப்பட்டதன் தொடக்கமாகும், அதில் கர்த்தர் தம்முடைய சபையையும் அவருடைய பெயரைக் கொண்டவர்களையும், அவரைப் பெற ஆயத்தம் செய்கிற அவருடைய ஜனங்களையும், ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார். அவருடைய வருகைக்காக நமது ஆயத்தத்தின் பகுதியாக, இந்த உலக வரலாற்றில் காணப்பட்டதைப் போலல்லாமல் நாம் ஆவிக்குரிய சவால்களுக்கும் வாய்ப்புகளுக்கும் உயரக்கூடும்படியாக, நம் ஒவ்வொருவரையும் அவர் உயர்த்துவார்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தும் பிரதான தலைமையில் அவருடைய ஆலோசகர்களும் பின்வருபவற்றை அறிவித்தார்கள்: “இந்த கடைசி நாட்களில் கர்த்தருடைய பணி பரந்த அளவிலும் ஏறக்குறைய மனிதர்களால் புரிந்துகொள்ள முடிவதற்கு அப்பாலுமிருக்கிறது. அதன் மகிமைகள் கடந்த கால விவரம், மற்றும் அதன் ஆடம்பரம் மீற முடியாதவை. உலகத் தோற்றமுதல் ஒவ்வொரு அடுத்த தலைமுறையினரிடமிருந்தும் இன்றைய காலம்வரை தீர்க்கதரிசிகள் மற்றும் நீதியான மனிதர்களின் மார்பை உயிரூட்டச் செய்த கருத்து இது. பரலோகத்திலோ அல்லது பூமியிலோ கிறிஸ்து இயேசுவில் உள்ள அனைத்து காரியங்களும், அவரிடத்தில் ஒன்று கூடும்போது, உலக ஆரம்பத்திலிருந்து அனைத்து பரிசுத்த தீர்க்கதரிசிகளால் பேசப்பட்டதைப்போல சகல காரியங்களும் மறுஸ்தாபிக்கப்படும்போது அது உண்மையிலேயே ஊழியக்காலத்தின் பரிபூரண நேரங்களாகும், ஏனென்றால், பிதாக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் மகிமையான நிறைவேற்றுதல் நடக்கும், அதே சமயம் உன்னதமானவரின் வல்லமையின் வெளிப்பாடுகள் பெரியதாகவும், மகிமையாகவும், கம்பீரமாகவும் இருக்கும்”.

“ராஜ்யத்தின் மேம்பாட்டிற்காக முன்னேறிச் சென்று நமது ஆற்றல்களை ஒன்றிணைப்பதற்கும், தங்களுடைய முழுமையிலும் மகிமையிலும் ஆசாரியத்துவத்தை நிறுவுவதற்கும் அகற்றப்படுவதாக நாங்கள் உணருகிறோம் என அவர்கள் தொடர்ந்து சொல்கிறார்கள். கடைசி காலங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, தீர்க்கதரிசியால் [தானியேல்] [தானியேல் 2:34–35, 44–45 பார்க்கவும்] விவரிக்கப்பட்ட மகிமையும் மகத்துவமும் முன்னேறிச் செல்லும்படியாக பரிசுத்தவான்களின் ஆற்றல், திறன், திறமை, தகுதி செயல்பட அழைக்கப்படும், மற்றும் இதன் விளைவாக அத்தகைய அளவு மற்றும் ஆடம்பரமான செயல்களைச் செய்ய பரிசுத்தவான்களின் ஒருமுகப்படுத்துதல் தேவைப்படும்.”2

அவிழ்ந்துகொண்டிருக்கிற மறுஸ்தாபிதத்தில் நாம் என்ன செய்வோம், நாம் எப்போது செய்வோம் என்பதன் அநேக பிரத்தியேகங்கள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. இருந்தும், நமக்கு முன்பாக கர்த்தர் அமைத்திருக்கிற பணியின் அகலத்தையும் ஆழத்தையும் அந்த ஆரம்ப காலங்களிலும்கூட பிரதான தலைமை அறிந்திருந்தார்கள். நமக்கு தெரிந்தவைகள் நடக்கும் என்பதற்கான ஒரு சில எடுத்துக்காட்டுகள் இங்கே:

அவருடைய பரிசுத்தவான்கள் மூலமாக, அவருடைய சுவிசேஷத்தின் வரத்தை “ஒவ்வொரு தேசத்திற்கும், இனத்திற்கும், பாஷைக்காரருக்கும், ஜனத்திற்கும்”3 கர்த்தர் வழங்குவார். வல்லமையுடனும் அதிகரித்த விசுவாசத்துடனும் “மனுஷர்களைப் பிடிப்பவர்களைப்போல”4, தொழில்நுட்பங்களும் அற்புதங்களும் அதன் பங்காக தொடரும்.

அதிகரித்துவரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஒரு ஜனங்களாக நாம் அதிகமாய் ஒன்றுபடுவோம். குழுக்களின் ஆவிக்குரிய பெலத்தில் நாம் ஒன்றுகூடுவோம் மற்றும் குடும்பங்கள் சுவிசேஷ ஒளியில் நிரம்பியது.

அவநம்பிக்கையான உலகமும்கூட பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையை அடையாளம் கண்டு, அதன்மீதுள்ள தேவ வல்லமையை உணருவார்கள். விசுவாசமுள்ள, தைரியமுள்ள சீஷர்கள், தங்களுடைய அன்றாட வாழ்க்கையில், பயமில்லாமல், தாழ்மையுடன், வெளிப்படையாக கிறிஸ்துவின் நாமத்தை தங்கள்மேல் எடுத்துக்கொள்வார்கள்.

அப்படியானால், இவ்வளவு பெரிய மற்றும் ஆடம்பரமான இந்த வேலையில் நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு பங்கேற்க முடியும்? ஆவிக்குரிய வல்லமையில் எவ்வாறு வளர்வதென்பதை தலைவர் நெல்சன் நமக்கு போதித்தார். இயேசுவே கிறிஸ்து என்ற வளர்ந்துகொண்டிருக்கும் நமது விசுவாசத்தால் மனந்திரும்புதலை ஒரு மகிழ்ச்சியான வாய்ப்பாக நாம் எடுத்துக்கொள்ளும்போது, பரலோக பிதா நமது ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்கிறார் என நாம் புரிந்துகொள்ளும்போது, நம்பும்போது, கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும், அதன்படி வாழவும் நாம் முயற்சிக்கும்போது, தொடர்ந்துவரும் வெளிப்படுத்தலைப் பெற நமது வல்லமையில் நாம் வளருவோம். பரிசுத்த ஆவி நமது நிரந்தர துணையாக மாறமுடியும். நம்மைச் சுற்றியுள்ள உலகம் இருளானாலும் ஒளியின் உணர்வு நம்முடன் தங்குகிறது.

அத்தகைய ஆவிக்குரிய வல்லமையில் எவ்வாறு வளர்வதென்பதற்கு ஜோசப் ஸ்மித் ஒரு எடுத்துக்காட்டு. தேவனிடமிருந்து வெளிப்படுத்தலுக்கு விசுவாசத்தின் ஜெபம் ஒரு திறவுகோல் என்பதை அவர் நமக்குக் காட்டினார். அவருடைய ஜெபங்களுக்கு பிதாவாகிய தேவன் பதிலளிக்கிறார் என்று நம்பி விசுவாசத்தில் அவர் ஜெபித்தார். அவருடைய பாவங்களுக்காக அவர் உணர்ந்த குற்ற உணர்விலிருந்து இயேசு கிறிஸ்து மூலமாக மட்டுமே அவர் விடுவிக்கப்படமுடியுமென்பதை நம்பியதில் விசுவாசத்தில் அவர் ஜெபித்தார். அந்த மன்னிப்பைப் பெற இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபையைக் கண்டுபிடிக்கவேண்டும் என நம்பியதில் விசுவாசத்தில் அவர் ஜெபித்தார்.

அவருடைய தீர்க்கதரிசன ஊழியம் முழுவதிலும், தொடர்ந்த வெளிப்படுத்தலைப்பெற விசுவாசத்தின் ஜெபங்களை ஜோசப் ஸ்மித் பயன்படுத்தினார். இன்றைய மற்றும் இன்னமும் வரப்போகிற சவால்களை நாம் எதிர்கொள்ளும்போது, இதே மாதிரியை நாமும் பயிற்சி செய்யவேண்டும். தலைவர் பிரிகாம் யங் சொன்னார், ஒவ்வொரு மூச்சும் தேவன் அவருடைய ஜனங்களை வழிகாட்டுவதற்காக, வழிநடத்துவதற்காக கிட்டத்தட்ட ஒரு பிரார்த்தனையாக இருப்பதை விட, பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு வேறு எந்த வழியையும் நான் அறியவில்லை.”5

திருவிருந்து ஜெபங்களிலிருந்து பின்வரும் இந்த வார்த்தைகள், பின்னர் நமது அன்றாட வாழ்க்கையை விளக்கவேண்டும்: “எப்போதும் அவரை நினைவுகூருங்கள்.” “அவரை” என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது அடுத்த வார்த்தைகளான “அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்பது அவரை நினைவுகூருதல் என்றால் நமக்கு என்ன என்று பரிந்துரைக்கிறது.6 எப்போதும் இயேசு கிறிஸ்துவை நாம் நினைவுகூரும்போது, “நான் என்ன செய்யவேண்டுமென அவர் விரும்புகிறார்?” என அமைதியான ஜெபத்தில் நாம் கேட்கக்கூடும்

இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தில் ஏறெடுக்கப்படும் அத்தகைய ஜெபம் இந்த கடைசி ஊழியக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. அதன் தொடர்ந்த அவிழ்ப்பில் நம் ஒவ்வொருவருக்கும் அது பங்கின் முக்கியமானதாயிருக்கும். அத்தகைய ஜெபத்தின் அற்புதமான எடுத்துக்காட்டுகளை உங்களைப்போலவே நானும் கண்டுபிடித்தேன்.

முதலாவதாக, ஜோசப் ஸ்மித். எதை அவர் செய்வேண்டுமென கர்த்தர் விரும்புகிறாரென குழந்தையைப்போன்ற விசுவாசத்துடன் அவர் கேட்டார். அவருடைய பதில் உலக வரலாற்றை மாற்றியது.

ஜெபிக்க ஜோசப் ஸ்மித் முழங்கால்படியிட்டபோது, சாத்தானின் தாக்குதலுக்கு ஜோசப்பின் பதிலிலிருந்து எனக்கு, ஒரு முக்கியமான பாடம் வருகிறது.

நாம் ஜெபிக்கக்கூடாது என நாம் உணரும்படிச் செய்ய சாத்தானும் அவனுடைய வேலைக்காரர்களும் முயற்சி செய்கிறார்களென அனுபவங்களிலிருந்து நான் அறிகிறேன். அவரைக் கட்டிப்போட முயற்சித்த வல்லமையிலிருந்து விடுதலைபெற தேவனை அழைக்க அவருடைய எல்லா சக்திகளையும் ஜோசப் ஸ்மித் வெளிக்கொண்டபோது, நிவாரணத்திற்கான அவருடைய ஜெபம் பதிலளிக்கப்பட்டது, பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் தோன்றினார்கள்.

ஜோசப்பின் ஜெபம் மிகமுக்கியமானதாயிருந்ததால், மறுஸ்தாபிதத்தின் ஆரம்பத்தைத் தடுக்க சாத்தானின் முயற்சி மிகக் கடினமாயிருந்தது. நடந்துகொண்டிருக்கும் மறுஸ்தாபிதத்தில் செய்வதற்கு உங்களுக்கும் எனக்கும் சிறிய பங்குகளே இருக்கின்றன. இருந்தும் மறுஸ்தாபிதத்தின் எதிரி, ஜெபிப்பதிலிருந்து நம்மை நிறுத்த முயற்சிப்பான். ஜோசப்பின் விசுவாசத்தின் எடுத்துக்காட்டும் அவருடைய தீர்மானமும், நமது தீர்மானத்தில் நம்மை பெல்ப்படுத்த முடியும் தீர்க்கதரிசி ஜோசப்புக்காக பரலோக பிதாவுக்கு நன்றி செலுத்துதல் ஏன் என்னுடைய ஜெபங்களில் அடங்கியிருப்பதற்கான அநேக காரணங்களில் இது ஒன்று.

தொடர்ந்துகொண்டிருக்கும் மறுஸ்தாபிதத்தில், என்னுடைய பங்கைச் செய்ய நான் ஜெபிக்க முயற்சி செய்யும்போது என்னுடைய விசுவாசத்தின் ஜெபத்திற்கு மார்மன் புஸ்தகத்தின் ஏனோஸ் மற்றொரு மாதிரி. உங்களுடைய பங்கு எதுவாயிருந்தாலும், நீங்கள் அவரை ஒரு தனிப்பட்ட சரிப்படுத்துபவராக எடுத்துக்கொள்ளமுடியும்.

ஜோசப்பைப்போலவே ஏனோஸூம் விசுவாசத்தில் ஜெபித்தான். இந்த வழியில் அவனுடைய அனுபவத்தை அவன் விவரித்தான்:

“என் ஆத்துமா பசியுற்றது; என்னை உண்டாக்கினவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு என்னுடைய சொந்த ஆத்துமாவிற்காக அவரிடத்தில் ஊக்கமான ஜெபத்திலும் வேண்டுதலிலும் கூக்குரலிட்டேன்; நாள் முழுவதும் அவரிடத்தில் கூக்குரலிட்டேன்; ஆம், இரவு வந்தபோது வானங்களை எட்டும்படியாய், என் சத்தத்தை இன்னும் அதிகமாய் உயர்த்தினேன்.

“அங்கே ஒரு சத்தம் எனக்கு உண்டாகி: ஏனோஸே, உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன. நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், என்றது.

“தேவன் பொய்யுரைக்கமாட்டார், என ஏனோஸாகிய நான், அறிவேன்; ஆகையால், என் குற்ற உணர்ச்சி என்னிலிருந்து துடைக்கப்பட்டது.

“நான்: கர்த்தாவே, அது எப்படி நடந்தது? என்றேன்,

“அவர் என்னை நோக்கி: நீ முன்னே கேட்டும் கண்டுமிராத, கிறிஸ்துவிலே விசுவாசித்ததினிமித்தமே. அவர் மாம்சத்திலே தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு அநேக வருஷங்கள் கடந்து செல்லும்; ஆகையால் போ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, என்றார்.”7

இந்த வார்த்தைகளில் என்னை ஆசீர்வதித்த பாடம்: “நீ முன்னே கேட்டும் கண்டுமிராத, கிறிஸ்துவிலே விசுவாசித்ததினிமித்தமே.”

ஜெபிக்கவும், சாத்தானின் வல்லமையிலிருந்து விடுபடவும் தோப்பிற்குள் செல்ல கிறிஸ்துவில் ஜோசப்புக்கு விசுவாசமிருந்தது. அவர் இன்னமும் பிதாவையும் குமாரனையும் கண்டதில்லை, ஆனால் தன்னுடைய இருதயத்தின் முழு சக்தியுடனும் விசுவாசத்தில் அவர் ஜெபித்தார்.

ஏனோஸின் அனுபவம் அதே விலையேறப்பெற்ற பாடத்தை எனக்குப் போதித்தது. நான் குடும்பத்துடன் விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது பிதாவுடன் எனக்காகப் பரிந்துபேசுபவராக இரட்சகர் எனக்கிருக்கிறார், என்னுடைய ஜெபங்கள் பரலோகத்தை அடைகிறதென நான் உணரமுடியும். பதில்கள் வந்தன. அவர்கள் பெற்ற ஆசீர்வாதங்கள்: கடினமான நேரங்களிலும் அங்கே சமாதானமும் சந்தோஷமும் உண்டு.

பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் புதிதான அங்கத்தினராக, மூப்பர் டேவிட் பி.ஹெய்ட்டுடன் நான் முழங்காலில் ஜெபித்ததை நான் நினைவுகூருகிறேன். நான் இப்போது அனுபவிக்கும் சவால்களுடன் இப்போது எனக்கிருக்கும் வயதில் அவரிருந்தார். அவர் ஜெபித்தபோதுள்ள அவரது குரலை நான் நினைவுகூருகிறேன். நோக்குவதற்கு நான் என் கண்களைத் திறக்கவில்லை, ஆனால் அவர் புன்னகைத்துக் கொண்டிருந்ததாக எனக்குத் தோன்றியது. அவருடைய குரலில் சந்தோஷத்துடன் அவர் பரலோக பிதாவுடன் பேசினார்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என அவர் சொன்னபோது, அவருடைய சந்தோஷத்தை என்னுடைய மனதில் நான் கேட்டேன். பரலோக பிதாவிடம் அவர் ஜெபித்த செய்தியை, அந்த நேரத்தில் இரட்சகர் உறுதிப்படுத்தியதாக மூப்பர் ஹெயிட் உணர்ந்தாரா என எனக்குத் தோன்றியது. ஒரு புன்னகையுடன் அது பெறப்பட்டதென்பதில் நான் நிச்சயமாயிருந்தேன்.

நமது இரட்சகராக, இயேசு கிறிஸ்துவிலும், நம்முடைய பரலோக பிதாவாக, நம்முடைய பிதாவிலும் நம்முடைய விசுவாசத்தை வளர்க்கும்போது, அற்புதமான தொடர்ச்சியான மறுஸ்தாபிதத்திற்கு நம்முடைய முக்கிய பங்களிப்பைச் செய்வதற்கான நம்முடைய திறன் அதிகரிக்கும். நாம் விசுவாசத்தில் ஜெபிக்கும்போது, அவருடைய இரண்டாம் வருகைக்காக உலகத்தை அவர் ஆயத்தப்படுத்தும்போது, கர்த்தருடைய பணியில் நாம் ஒரு முக்கிய பங்காய் மாறுகிறோம். நாம் செய்யவேண்டுமென நம் ஒவ்வொருவரையும் அவர் அழைத்திருக்கிற பணியைச் செய்வதில் நாம் அனைவரும் சந்தோஷத்தைக் காண நான் ஜெபிக்கிறேன்.

இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். இது அவருடைய சபை, பூமியில் அவருடைய ராஜ்யம். ஜோசப் ஸ்மித் மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசி. இன்று, தலைவர் ரசல் எம்.நெல்சன் பூமியில் கர்த்தருடைய தீர்க்கதரிசி. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஆசாரியத்துவத்தின் அனைத்து திறவுகோல்களையும் அவர் தரித்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.