பொது மாநாடு
தேவனுடைய நற்குணத்தையும் மகத்துவத்தையும் கருத்தில்கொள்ளவும்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


தேவனுடைய நற்குணத்தையும் மகத்துவத்தையும் கருத்தில்கொள்ளவும்

பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மகத்துவத்தையும், அவர்கள் நமக்காக செய்தவற்றையும் ஒவ்வொரு நாளும் நினைவுகூர நான் உங்களை அழைக்கிறேன்.

தேவனுடைய மகத்துவத்தை நினைவுகூரவும், தனிப்பட்டவர்களாக, குடும்பங்களாக, ஜனங்களாக, குறிப்பாக கடினமான நேரங்களிலும்கூட, அவர் நமக்குச் செய்தவைகளைக் கருத்தில்கொள்ளவும் தீர்க்கதரிசிகள் காலம் முழுவதும் நம்மை ஊக்குவித்திருக்கிறார்கள்.1 வேதங்கள் முழுவதிலும் இந்த வழிநடத்துதல் காணப்படுகிறது, ஆனால், மார்மன் புஸ்தகத்தில் இது கவனிக்கத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. “இது கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு எவ்விதமான மகத்தான காரியங்களைச் செய்தார் என்பதை, இஸ்ரவேல் வீட்டாரில் மீதியிருப்பவர்களுக்கு காட்டுவது”2 மார்மன் புஸ்தகத்தின் நோக்கங்களில் ஒன்றாயிருக்கிறது என தலைப்புப் பக்கம் விவரிக்கிறது. மரோனியின் வேண்டுகோளுடன் மார்மன் புஸ்தகம் முடிவடைகிறது: “இதோ, நீங்கள் இவைகளை வாசித்து, அதினிமித்தம் கர்த்தர் மனுபுத்திரருக்கு ஆதாமின் சிருஷ்டிப்பு தொடங்கி, நீங்கள் இவைகளைப் பெறும் சமயம் வரைக்குமாய், கர்த்தர் எவ்வளவு இரக்கமுள்ளவராய் இருந்திருக்கிறார் என்று மனுபுத்திரர் வாசிக்க வேண்டுமென்பது தேவ சித்தமாயிருந்தால், அதை நீங்கள் வாசித்து உங்கள் இருதயங்களில் தியானிக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.”3

தேவனின் நற்குணத்தைப் பிரதிபலிக்க தீர்க்கதரிசிகளிடமிருந்து வந்த வேண்டுகோள்களின் நிலைத்தன்மை வியக்க வைக்கிறது. 4 நமது பரலோக பிதா மற்றும் அவருடைய நேசகுமாரனின் நற்குணத்தை நாம் நினைவுகூர அவர் விரும்புகிறார், இது அவர்களுடைய சொந்த திருப்திக்காக அல்ல, ஆனால் நம்மீது அவர்களுடைய தாராள மனப்பான்மையை இத்தகைய நினைவுகூருதலின் செல்வாக்குக்காகவே. அவர்களுடைய கருணையை கருத்தில்கொள்வதால் நமது பார்வையும், புரிந்துகொள்ளுதலும் விரிவடைகிறது. அவர்களுடைய இரக்கங்களைப் பிரதிபலிப்பதில், நாம் அதிக தாழ்மையுள்ளவர்களாக, ஜெபிப்பவர்களாக, உறுதியுள்ளவர்களாகிறோம்.

தாராளத்திற்கும் இரக்கத்துக்கும் நன்றியுணர்வாயிருப்பது எவ்வாறு நம்மை மாற்ற முடியுமென்பதை ஒரு முன்னாள் நோயாளியின் கடுமையான அனுபவம் காட்டுகிறது. 1987ல் இருதய மாற்று தேவையாயிருந்த ஒரு விசேஷமான மனிதனான தாமஸ் நீல்சனுடன் எனக்கு பரிச்சயமானது. 63 வயதான அவர் லோகன், யூட்டா, அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்துவந்தார். இரண்டாம் உலகப்போரில் இராணுவ சேவையைத் தொடர்ந்து, லோகன் யூட்டா ஆலயத்தில் அவர் டோனா வில்கீஸை மணமுடித்தார். அவர் ஒரு ஆற்றலமிக்க, வெற்றிகரமான செங்கல் கட்டுபவரானார். பினவரும் ஆண்டுகளில் பள்ளி விடுமுறைகளில், விசேஷமாக, தனது மூத்த பேரப் பிள்ளையான ஜோனத்தானுடன் வேலை செய்வதை அவர் விரும்பினார். டாம் தன்னை அதிகமாக ஜோனத்தானில் கண்டதால் இருவரும் ஒரு சிறப்பான பிணைப்பை உருவாக்கினார்கள்.

ஒரு நன்கொடை இருதயத்திற்காக விரக்தியுடன் டாம் காத்திருந்தார். குறிப்பாக, அவர் ஒரு பொறுமையுள்ள மனிதன் அல்ல. அவர் எப்போதுமே, கடினஉழைப்பு மற்றும் உறுதியான தீர்மானத்துடன் இலக்குகளை அமைப்பதிலும், அடைவதிலும் சாத்தியமுள்ளவராயிருந்தார். இந்த நடைமுறையை வேகப்படுத்த நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என உயிர் நிறுத்தி வைக்கப்பட்டு, இருதய செயலிழப்பில் போராடிக்கொண்டிருந்த டாம் சிலசமயங்களில் என்னிடம் கேட்டார். ஒரு நன்கொடையாளர் இருதயத்தை விரைவில் அவருக்கு கிடைக்கச் செய்ய, நான் தொடரக்கூடிய வழிகளை நகைச்சுவையாக, அவர் பரிந்துரைத்தார்,

ஒரு மகிழ்ச்சியான, இருந்தும் பயங்கரமான நாளில், ஒரு சிறந்த நன்கொடையாளர் இருதயம் டாமுக்குக் கிடைத்தது. அளவும் இரத்தப் பிரிவும் பொருத்தமாயிருந்தது, நன்கொடையாளர் 16 வயது நிரம்பிய வாலிபன். நன்கொடையாளரின் இருதயத்திற்கு சொந்தக்காரர் டாமின் மிக அன்பான பேரன் ஜோனத்தான். முன்னதாக அந்நாளில், ஜோனத்தான் ஓட்டிக்கொண்டிருந்த கார், கடந்து சென்றுகொண்டிருந்த ஒரு இரயில் மோதி அவன் படுகாயமடைந்தான்.

மருத்துவமனையில் டாமையும் டோனாவையும் நான் சந்தித்தபோது அவர்கள் கலக்கமடைந்திருந்தனர். தங்களுடைய பேரப் பையனின் இருதயத்தை பொருத்துவதால் டாமின் வாழ்க்கையை அதிகரிக்கலாம் என்பதை அறிந்திருந்து அவர்களின் மனநிலையை கற்பனை செய்வது மிகக்கடினம். முதலாவதாக, தங்களுடைய மகளும் மருமகனுமான ஜோனத்தானின் துக்கத்திலிருக்கும் பெற்றோரிடமிருந்து இருதயத்தைப் பெற்றுக்கொள்ள அவர்கள் மறுத்தனர். ஜோனத்தான் மூளைச்சாவடைந்தான் என டாமும் டோனாவும் அறிந்திருந்தாலும், டாமுக்காக, ஒரு நன்கொடை இருதயத்திற்காக அவர்களுடைய ஜெபம் ஜோனத்தானின் விபத்துக்கு காரணமாயிருக்கவில்லை என அவர்கள் புரிந்து கொண்டார்கள். இல்லை, அவருக்குத் தேவையான நேரத்தில், ஜோனத்தானின் இருதயம் டாமை ஆசீர்வதித்த ஒரு வரமாயிருந்தது. இந்த துயரத்திலிருந்து ஏதாவது நல்லது வரக்கூடும் என்பதை அவர்கள் உணர்ந்து, தொடர தீர்மானித்தனர்.

மாற்று நடைமுறைகள் சிறப்பாக நடந்தேறியது. அதன் பின்னர் டாம் ஒரு வித்தியாசமான மனிதரானார். ஆரோக்கியத்தின் முன்னேற்றம் அல்லது நன்றியுணர்வுக்கும் அப்பால் மாற்றம் உண்டானது. ஜோனத்தானை, அவருடைய மகளை, மருமகனை, அவர் பெற்ற வரத்தை மற்றும் அந்த வரம் எதற்கு உட்பட்டதென ஒவ்வொரு நாள் காலையிலும் அவர் நினைப்பார் என அவர் என்னிடம் கூறினார். அவரது உள்ளார்ந்த நல்ல நகைச்சுவையும் மனநிலையும் இன்னும் வெளிப்படையாகத் தெரிந்திருந்தாலும், டாம் மிகவும் புனிதமானவர், சிந்தனைமிக்கவர், கனிவானவர் என்பதை நான் கவனித்தேன்.

மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கூடுதலாக 13 ஆண்டுகள் டாம் வாழ்ந்தார், இல்லையெனில் அவ்வளவு ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கமுடியாது. தாராளத்துடனும் அன்புடனும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையை தொட அவரை இந்த ஆண்டுகள் அனுமதித்ததாக அவருடைய இரங்கல் உரைத்தது. அவர் ஒரு தனிப்பட்ட பயன்படுபவராக இருந்தார், நம்பிக்கைக்கும் உறுதிப்பாட்டிருக்கும் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார்.

டாமைப்போலவே நாம் ஒவ்வொருவரும் வரங்களைப் பெற்றிருக்கிறோம், இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் மூலமாக வருகிற மீட்பையும் சேர்த்து, நமது பரலோக பிதா மற்றும் நேசகுமாரனிடமிருந்து வருகிற வரங்களை நமக்கே பயன்படுத்தமுடியாது.5 இந்த உலகத்தில் நாம் ஜீவனைப் பெறுகிறோம், நாம் அதை தேர்ந்தெடுத்தால், இனிவரும் வாழ்க்கையில் நாம் சரீர ஜீவனை, நித்திய இரட்சிப்பையும் மேன்மையடைதலையும் பெறுவோம், இவை யாவும் பரலோக பிதாவாலும் இயேசு கிறிஸ்துவாலுமே.

நாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு முறையும் பயனடைகிறோம் அல்லது இந்த வரங்களைப்பற்றி சிந்திக்கும்போது, கொடுப்பவர்களின் தியாகம், தாராளம் மற்றும் இரக்கத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கொடுப்பவர்கள்மீது மரியாதை, நம்மை நன்றியுணர்வுகளாக்குவதைவிட மேலானதாக்குகிறது. அவர்களுடைய வரங்களைப்பற்றி சிந்திப்பது நம்மை மாற்றமுடியும், மாற்றவேண்டும்.

ஆல்மா இளையவனின் மாற்றம் ஒரு விசேஷித்தது. ஆல்மா, “தேவனுக்கு விரோதமாய் கலகம் செய்துகொண்டு சென்றபோது”6 ஒரு தூதன் தோன்றினான். “இடிமுழக்கத்தின் சத்தத்தோடு”7 சபையை துன்புறுத்தவதற்காகவும், “ஜனங்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு போவதற்காகவும்”8 ஆல்மாவை தூதன் கடிந்துகொண்டான். இந்த புத்திமதிகளையும் தூதன் சேர்த்தான்: “நீ போய் உன் பிதாக்களின் சிறையிருப்பை நினைவுகூருவாயாக … ,[தேவன்] அவர்களுக்கு எவ்வளவு மகத்துவமான காரியங்களைச் செய்திருக்கிறார் என்பதையும் நினைவுகூருவாயாக”9. எல்லா சாத்தியமான புத்திமதிகளிலும், இதைத்தான் தூதன் வலியுறுத்தினான்.

ஆல்மா மனந்திரும்பி நினைவுகூர்ந்தான். பின்னர், தூதனின் புத்திமதியை அவனுடைய குமாரனாகிய ஏலமனுடன் அவன் பகிர்ந்து கொண்டான். “நமது பிதாக்களின் சிறையிருப்பை நினைவுகூருவதில், இதுவரைக்கும் நீங்கள் செய்துவந்ததுபோல, செய்யவேண்டுமென நான் விரும்புகிறேன், ஏனெனில் அவர்கள் அடிமைத்தனத்திலிருந்தார்கள். ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவரால் மாத்திரமேயொழிய, வேறொருவராலும் அவர்களை விடுவிக்க முடியவில்லை. அவர் மெய்யாகவே அவர்களை அவர்களுடைய உபத்திரவங்களிலிருந்து விடுவித்தார்”10 என ஆல்மா ஆலோசனையளித்தான். “நான் அவரில் என் நம்பிக்கையை வைக்கிறேன்”11 என ஆல்மா சாதாரணமாகச் சொன்னான். அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையும், “சகலவிதமான சோதனைகளிலும், சங்கடங்களின்போது” ஆதரவையும் நினைவுகூருதலில் தேவனையும் அவருடைய வாக்குத்தத்தத்தின் உறுதியையும் நாம் அறிய வருகிறோம் என்பதை ஆல்மா புரிந்துகொண்டான்.12

நம்மில் சிலருக்கு ஆல்மாவைப்போன்ற அனுபவமிருக்கிறது, இருந்தும் நமது மாற்றம் சமமான மகத்துவமானது. பழங்காலத்தில் இரட்சகர் உறுதியளித்தார்:

“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

“உங்களிடத்தில் என் ஆவியை வைப்பேன். …

“… நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.”13

மனமாற்றம் எவ்வாறு ஆரம்பமாகிறதென நேபியர்களுக்கு உயிர்த்தெழுந்த இரட்சகர் கூறினார். இப்படி அவர் சொன்னபோது, பரலோக பிதாவின் திட்டத்தின் முக்கிய அம்சத்தை அவர் அடையாளம்கண்டார்.

“நான் சிலுவையில் உயர்த்தப்படவும், நான் சிலுவையின்மேல் உயர்த்தப்பட்ட பின்பு, நான் எல்லா மனுஷரையும் என்னிடத்தில் இழுக்கும்படியாகவும். …

“இதற்காகவே நான் உயர்த்தப்பட்டிருக்கிறேன். ஆதலால் பிதாவின் வல்லமையினாலே எல்லா மனுஷரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்வேன்.”14

இரட்சகரிடத்தில் ஈர்க்கப்படுவதற்கு உங்களுக்கு எது தேவையாயிருக்கும்? அவருடைய பிதாவின் சித்தத்திற்கு இயேசு கிறிஸ்துவின் அடிபணிதலா, மரணத்தின்மேல் அவருடைய வெற்றி, உங்களுடைய பாவங்களையும் தவறுகளையும் அவர் அவர்மீது எடுத்துக்கொண்டதா, உங்களுக்காக பரிந்துபேச பிதாவின் வல்லமையை அவர் பெற்றதுவா, உங்களுக்காக அவருடைய இறுதியான மீட்பா?15 அவரண்டை உங்களை ஈர்க்க இந்தக் காரியங்கள் போதாதா? அவை எனக்குப் போதும். இயேசு கிறிஸ்து “[உங்களையும் என்னையும்] குணப்படுத்த நம்பிக்கையுடனும் விருப்பத்துடனும், மன்னிக்கவும், சுத்தப்படுத்தவும், பெலப்படுத்தவும், சுத்திகரிக்கவும், பரிசுத்தப்படுத்தவும், திறந்த கரங்களுடன் நின்றுகொண்டிருக்கிறார்”16

இந்தக் காரியங்கள் நமக்கு ஒரு புது இருதயத்தைக் கொடுத்து, பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்ற தேர்ந்தெடுக்க நம்மை உணர்த்தவேண்டும். இருப்பினும், புது இருதயங்கள் “அலைந்துதிரியும் நிலைக்குள்ளாகலாம், . . தேவனுடைய அன்பை விட்டகலும் நிலைக்குள்ளாகலாம்.”17 இந்தப் மனப்போக்கை எதிர்த்துப் போராட, நாம் பெற்றுக்கொண்ட வரங்களைப்பற்றியும், அவைகள் எதற்கு உட்பட்டிருக்கிறதென்பதைப்பற்றியும் நாம் ஒவ்வொரு நாளும் சிந்திக்கவேண்டும். பென்யமீன் இராஜா ஆலோசனையளித்தான், “தேவனுடைய மகத்துவத்தையும், உங்களின்மீது அவர் வைத்திருக்கிற நன்மையையும் நீடிய பொறுமையையும் எப்போதும் நினைவில் வைத்து நீங்கள் நினைவுகூரவேண்டும் என விரும்புகிறேன்.”18 நாம் அப்படிச் செய்தால் விசேஷித்த பரலோக ஆசீர்வாதங்களுக்கு நாம் தகுதியுள்ளவர்களோவோம்.

தேவனுடைய நன்மையையும் இரக்கத்தையும் நினைத்துப்பார்த்தல், ஆவிக்குரியபிரகாரமாக அதிகமாய் ஏற்றுக்கொள்பவராக ஆக நமக்கு உதவுகிறது. இதையொட்டி, பரிசுத்த ஆவியின் வல்லமையால் சகல காரியங்களின் சத்தியத்தை அறியவருவதற்கு அதிகரித்த ஆவிக்குரிய உணர்திறன் நம்மை அனுமதிக்கிறது. 19 மார்மன் புஸ்தகத்தின் சத்தியத்தைப்பற்றிய ஒரு சாட்சி, இயேசுவே கிறிஸ்துவென்றும், நமது தனிப்பட்ட இரட்சகர், மீட்பரென்றும், பிற்காலங்களில் அவருடைய சுவிசேஷம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ளுதலும் இதில் அடங்கும்.20

நமது பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மகத்துவத்தையும் அவர் நமக்காக செய்தவற்றையும் நாம் நினைவுகூரும்போது, ஜோனத்தானின் இருதயத்தை சாதாரணமாக கருதிய டாமைப்போல நாம் சாதாரணமாக கருதமாட்டோம். அவருக்கு நீடித்த ஆயுளைக் கொடுத்த துயரத்தை டாம் ஒவ்வொரு நாளும் ஒரு மகிழ்ச்சியான பக்தியான வழியில் நினைவுகூர்ந்தார். நாம் இரட்சிக்கப்படுவோம், மேன்மையடைவோம் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், இரட்சிப்பும் மேன்மையடைதலும் ஒரு பெரிய கிரயத்தில் வந்ததென்பதை நாம் நினைவுகூரவேண்டும்.21 இயேசு கிறிஸ்து இல்லாமல் நாம் அழிந்துவிடுவோம் என்பதை நாம் உணரும்போது பயபக்தியுடன் நாம் மகிழ்ச்சியாயிருக்கலாம் ஆனால், பரலோக பிதா கொடுக்க முடிகிற மிகப்பெரிய வரத்தை அவருடன் நாம் பெறமுடியும். 22 உண்மையாக, “இந்த உலகத்தில் நித்திய ஜீவனுக்கான” வாக்களிப்பை அனுபவிக்க இந்த பயபக்தி நம்மை அனுமதிக்கிறது மற்றும் இறுதியாக, வரப்போகிற உலகத்தில் “நித்திய ஜீவனையும் … நித்திய மகிமையையும்கூட” பெறுவோம்.23

நமது பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் நற்குணத்தை நாம் கருத்தில்கொள்ளும்போது, அவர்கள்மீது நமக்குள்ள நம்பிக்கை அதிகரிக்கிறது. தேவன் நமது பிதாவென்றும் நாம் அவருடைய பிள்ளைகளென்றும் நாம் அறியும்போது, நமது ஜெபங்கள் மாறுகின்றன. அவருடைய சித்தத்தை மாற்ற நாம் நாடுவதில்லை, ஆனால், அவருடைய சித்தத்துடன் நம்முடையதை இணைக்கவும், அவற்றைக் கேட்பதற்கு நிபந்தனை விதிக்கப்பட்ட அவர் வழங்க விரும்பும் ஆசீர்வாதங்களை நமக்காகப் பாதுகாப்பதற்கும் நாடுகிறோம்.24 நாம் மிகவும் சாந்தகுணமுள்ளவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், உறுதியானவர்களாகவும், கிறிஸ்துவைப் போலவும் இருக்க ஏங்குகிறோம்.25 இந்த மாற்றங்கள் கூடுதலான பரலோக ஆசீர்வாதங்களுக்கு நம்மை தகுதிப்படுத்துகிறது.

இயேசு கிறிஸ்துவிடமிருந்து வருகிற ஒவ்வொரு நல்ல காரியத்தையும் நாம் ஏற்றுக்கொள்வதால், மற்றவர்களிடம் நமது விசுவாசத்தை அதிக ஆற்றலுடன் நாம் தெரிவிக்க முடியும்.26 சாத்தியமற்றது என்று தோன்றும் பணிகள் மற்றும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது நமக்கு தைரியம் இருக்கும். 27 இரட்சகரைப் பின்பற்ற நாம் செய்த உடன்படிக்கைகளை கைக்கொள்வதற்கான நமது தீர்மானத்தை நாம் பெலப்படுத்துவோம்.28 நாம் தேவனுடைய அன்பால் நிரப்பப்படுவோம், தீர்க்காமல் தேவையிலிருப்பவர்களுக்கு உதவ விரும்புவோம், நமது பிள்ளைகளை நேசிப்போம், நீதியில் அவர்களை வளர்ப்போம், நமது பாவங்களுக்கான மீட்பை தக்க வைப்போம், எப்போதும் களிகூருவோம். 29 தேவனுடைய நற்குணத்தையும் இரக்கத்தையும் நினைவுகூருதலில் இவைகள் விசேஷித்த கனிகள்.

மாறாக இரட்சகர் எச்சரித்தார், “சகல காரியங்களிலும் அவரது ஈடுபாட்டை அறிக்கையிடாதவர்களை தவிர, தேவனை மனுஷன் நிந்திக்க எதையும் செய்யமுடியாது அல்லது யாருக்கு எதிராகவும் அவரது கோபம் மூளாதிருக்கும்.”30 நாம் அவரை மறக்கும்போது தேவன் அவமதிக்கப்படுவார் என நான் நினைக்கவில்லை. மாறாக, அவர் அதிக ஏமாற்றமடைந்தார் என நான் நினைக்கிறேன். அவரையும் அவருடைய நற்குணத்தையும் நினைவுகூருவதால் அவருக்கு நெருக்கமாக இழுக்கப்படுவதற்கான வாய்ப்புகளை நாமே இழந்துவிட்டோமென அவர் அறிகிறார். பின்னர், அவர் நமக்கு நெருக்கமாக வருவதையும் அவர் வாக்குத்தத்தம் செய்த குறிப்பிட்ட ஆசீர்வாதங்களையும் நாம் இழக்கிறோம்.31

பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மகத்துவத்தையும், அவர்கள் நமக்காக செய்தவற்றையும் ஒவ்வொரு நாளும் நினைவுகூர நான் உங்களை அழைக்கிறேன். அவர்களின் நற்குணத்தை நீங்கள் கருத்தில் கொள்வது உங்கள் அலைந்து திரியும் இருதயத்தை அவர்களிடம் இன்னும் உறுதியாக பிணைக்கட்டும்.32 அவர்களுடைய மனதுருக்கத்தைப்பற்றி தியானியுங்கள், கூடுதலான ஆவிக்குரிய உணர்திறன் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், மேலும் கிறிஸ்துவைப் போல ஆகிவிடுவீர்கள். அவர்களுடைய பச்சாதாபத்தை சிந்தித்துப்பார்த்தல், “முடிவற்ற மகிழ்ச்சியுள்ள நிலையிலே தேவனோடு வாசம் செய்ய” “பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படும்வரையும் இறுதிபரியந்தமும் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பார்களாயிருக்க” உங்களுக்குதவும்.33

நமது பரலோக பிதா அவருடைய நேச குமாரனை குறிப்பிட்டுச் சொன்னார், “அவருக்குச் செவிகொடுங்கள்!”34 அந்த வார்த்தைகளில் நீங்கள் செயல்படும்போது, உங்களால் மறுஸ்தாபிதம் செய்ய முடியாததை மறுஸ்தாபிதம் செய்ய இரட்சகர் விரும்புகிறார், உங்களால் குணப்படுத்த முடியாத காயங்களை அவர் குணமாக்க விரும்புகிறார், சரிசெய்ய முடியாத வகையில் உடைக்கப்பட்டதை சரிசெய்ய அவர் விரும்புகிறார்,35 உங்கள்மேல் சுமத்தப்பட்ட எந்த அநீதியையும் அவர் ஈடுசெய்கிறார், 36 உடைந்த இருதயங்களை நிரந்தரமாக சரி செய்ய அவர் விரும்புகிறார்.37

நமது பிதாவிடமிருந்தும் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் வருகிற வரங்களைப் பெற்றுக்கொள்வதை நான் சிந்தித்தபோது, பரலோக பிதாவின் அனைத்து பிள்ளைகளிடத்திலும் அவர்களுடைய எல்லையற்ற அன்பையும் அவர்களுடைய புரிந்துகொள்ளமுடியாத இரக்கத்தையும் நான் அறிந்துகொண்டேன்.38 இந்த அறிவு என்னை மாற்றியது, இது உங்களையும் மாற்றும். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.