பொது மாநாடு
மனமாற்றத்தில் மார்மன் புஸ்தகத்தின் வல்லமை
ஏப்ரல் 2020 பொது மாநாடு


மனமாற்றத்தில் மார்மன் புஸ்தகத்தின் வல்லமை

மார்மன் புஸ்தகம் ஆவிக்குரிய போஷிப்பைக் கொடுத்து, ஒரு செயல்திட்டம் கொடுத்து, நம்மை பரிசுத்த ஆவியோடு இணைக்கிறது.

ஒரு அண்மை சரீர பரிசோதனை அறிக்கையை பரிசீலித்த பிறகு, நான் சில வாழ்க்கை அனுசரிப்புகளைச் செய்ய வேண்டுமென அறிந்தேன். எனக்கு உதவி செய்ய என் மருத்துவர் ஒரு உணவு மற்றும் உடற்பயிற்சி திட்டத்தை குறித்தார், அதை பின்பற்ற நான் தெரிந்துகொண்டால் என்னை ஒரு ஆரோக்கியமிக்க மனிதனாக மாற்றும்.

நாம் ஒவ்வொருவரும் ஆவிக்குரிய சோதனை மேற்கொண்டால், நம்மைப் பற்றி நாம் என்ன கற்போம்? நமது ஆவிக்குரிய மருத்துவர் என்ன அனுசரிப்புகளைக் குறிப்பிடுவார்? நாம் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி ஆக என்ன செய்வது மற்றும் நமக்கு என்ன தெரியும் என நாம் அறிவது முக்கியம்.

இயேசு கிறிஸ்து ஒரு சிறந்த மருத்துவர்.1 அவரது பாவநிவர்த்தி மூலம் அவர் நமது காயங்களைக் கட்டுகிறார், நமது ஊனங்களை தம்மீது எடுத்துக் கொள்கிறார், நமது உடைந்த இருதயங்களை குணமாக்குகிறார்.2 அவரது கிருபை மூலம் நமது பெலவீனம் பலமாகும்.3 அவர் பற்றி கற்று, அவரது வார்த்தைகளைக் கேட்டு, ஆவரது ஆவியின் சாந்த குணத்தின்படி நடந்து, 5அவரைப் பின்பற்ற நம்மை அழைக்கிறார்.4 மனமாற்றத்தின் இந்த வாழ்நாள் முறையில் நமக்கு உதவ அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்,6, அது நம்மை மாற்றி நித்திய மகிழ்ச்சி கொண்டுவருகிறது.7

மனமாற்றத்தில் உதவ வல்லமைமிக்க கருவியாக இரட்சகர் நமக்கு மார்மன் புஸ்தகத்தைக் கொடுத்திருக்கிறார். மார்மன் புஸ்தகம் ஆவிக்குரிய போஷிப்பைக் கொடுத்து, ஒரு செயல்திட்டம் கொடுத்து, நம்மை பரிசுத்த ஆவியோடு இணைக்கிறது. நமக்காக எழுதப்பட்டு,8 தேவ வார்த்தையை உள்ளடக்கி, 9 தெளிவாக நமது அடையாளத்தையும், நோக்கத்தையும், இலக்கையும் நமக்கு சொல்கிறது.10 வேதாகமத்துடன் மார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்து பற்றி சாட்சியளித்து,11 நாம் எப்படி சத்தியத்தை அறிந்து அவரைப்போலாக முடியும் என போதிக்கிறது.

படம்
சகோதரர் சா போலோ

இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, சகோதரர் சா போலோவுக்கு 58 வயது. நான் அவரை சந்தித்தபோது, பல ஆண்டுகள் அவர் கிளைத்தலைவராக சேவை செய்திருந்தார். மார்மன் புஸ்தகம் அவரது உள்ளூர் பாஷையாகிய பர்மீஸில் கிடைக்காததால் அவர் ஒருபோதும் மார்மன் புஸ்தகத்தை படித்திருக்கவில்லை என நான் அறிந்தேன். அதை வாசித்திருக்காமல் அப்புஸ்தகம் உண்மையானது என எப்படி அறிந்தார் என அவரை நான் கேட்டபோது, மார்மன் புஸ்தகக் கதைகள் விளக்கங்களைத் தேடி படப்புத்தகத்தில் ஒவ்வொரு நாளும் ஆங்கில வார்த்தைகளை மொழிபெயர்க்க அகராதியை பயன்படுத்தி, அவர் கற்றவற்றை கவனமாக குறிப்பு எடுத்து படித்ததாக அவர் பதிலளித்தார். அவர் விளக்கினார், “நான் படித்த ஒவ்வொரு முறையும், நான் கற்றவை குறித்து ஜெபிப்பேன், நான் சமாதானமும் சந்தோஷமும் உணர்வேன், என் மனம் தெளிவாகும், என் இருதயம் மிருதுவாகும். அது உண்மையானது என பரிசுத்த ஆவியானவர் சாட்சியளிப்பதை நான் உணர்ந்தேன். மார்மன் புஸ்தகம் தேவ வார்த்தை என நான் அறிகிறேன்.”

சகோதரர் சா போலோ போல, நமது சூழ்நிலைகளின்படி, நாம் ஒவ்வொருவரும் மார்மன் புஸ்தகம் படிக்க முடியும். நமது இருதயங்களில் அதன் போதனைகளை நம்பி சிந்திக்க வாஞ்சை கொண்டால், அப்போதனைகள் உண்மையானவையா என விசுவாசத்தோடு நாம் தேவனிடத்தில் கேட்கலாம்.12 அறியும்படியான நமது வாஞ்சையில் நாம் உண்மையாக இருந்தால், செயல்பட உண்மையான எண்ணம் பெற்றால், பரிசுத்த ஆவியானவர் மூலம் நமது இருதயங்களில் அவர் நமக்கு பதிலளிப்பார். பரிசுத்த ஆவியின் வல்லமையால், எல்லாவற்றின் சத்தியத்தை நாம் அறிவோம்.13 மார்மன் புஸ்தகம் பற்றி தெய்வீக சாட்சி நாம் பெறும்போது, அதே வல்லமையால் இயேசு கிறிஸ்து உலகத்தின் இரட்சகர் எனவும், ஜோசப் ஸ்மித் அவரது தீர்க்கதரிசி எனவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை எனவும் நாம் அறிவோம்.14

ஒரு இளைஞனாக என் ஊழிய சேவையைத் தொடங்கி ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் நான் ஏறினேன். மிகத் தனிமையாக உணர்ந்து, போதுமானவனாயில்லாமல் ஆனால் சேவைசெய்ய ஒப்புக்கொடுத்து, நான் நம்பியது உண்மை என மறுஉறுதி எனக்கு கண்டிப்பாக தேவைப்பட்டது. நான் ஜெபித்து நேர்மையாக என் வேதங்களை வாசித்தேன், ஆனால் விமானம் சென்றபோது என் சுய சந்தேகம் அதிகமாகியது, என் சரீர நிலை கெட்டுப்போனது. பல மணி நேரங்கள் நான் போராடிக்கொண்டிருந்த பிறகு, ஒரு விமானப்பணியாளர் வந்து, என் இருக்கைக்கு பக்கத்தில் நின்றார். நான் வாசித்துக்கொண்டிருந்த மார்மன் புஸ்தகத்தை என் கரத்திலிருந்து வாங்கினார். அவர் அட்டையைப் பார்த்து “இது ஒரு மகத்தான புஸ்தகம்!” என்று சொல்லி புஸ்தகத்தை திரும்பவும் என்னிடம் கொடுத்துவிட்டு நடந்தார். நான் அவரை திரும்பவும் ஒருபோதும் பார்க்கவில்லை.

அவரது வார்த்தைகள் என் காதுகளில் எதிரொலிக்கும்போது, நான் என் இருதயத்தில் தனியாக கேட்டு உணர்ந்தேன், “நான் இங்கிருக்கிறேன், நீ எங்கே இருக்கிறாய் என நான் அறிவேன். உன்னால் முடிந்த சிறப்பானதைச் செய், நான் மீதியைப் பார்த்துக் கொள்கிறேன்.” பசிபிக் கடலுக்கு மேலே அந்த விமானத்தில் என் மார்மன் புஸ்தக படிப்பு மூலமும், பரிசுத்த ஆவியின் தூண்டுதல் மூலமும் நான் யார் என இரட்சகர் அறிவார் மற்றும் சுவிசேஷம் உண்மையானது என்ற தனிப்பட்ட சாட்சியை நான் பெற்றேன்.

மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் போதித்தார்: “சுவிசேஷம் உண்மையானது என அறிவது சாட்சியின் சாராம்சம். சுவிசேஷத்துக்கு தொடர்ந்து உண்மையாயிருப்பது மனமாற்றத்தின் சாராம்சம்.”15 “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயிருப்பது” மனமாற்றத்துக்கு தேவைப்படுகிறது.16 நமக்கான கர்த்தரின் செயல் திட்டம்—கிறிஸ்துவின் கோட்பாடு—மார்மன் புஸ்தகத்தில் மிகத் தெளிவாக போதிக்கப்பட்டிருக்கிறது.17 அதில் அடங்குவது:

  • முதலாவது, இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தைப் பிரயோகித்து அவரை நம்பி, அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளுதல் மற்றும் அவர் நமக்கு உதவுவார் என அறிதல்.18

  • இரண்டாவது, நமது குறைபாடுகள் குறித்து தினமும் மனந்திரும்புதல் மற்றும் அவர் நம்மை மன்னிக்கும்போது, சந்தோஷமும் சமாதானமும் அனுபவித்தல்.19 மனந்திரும்புதலுக்கு பிறரை மன்னிப்பது தேவைப்படுகிறது20 மற்றும் நாம் முன்னோக்கி செல்ல உதவுகிறது. நாம் மனந்திரும்பும்போதெல்லாம் நம்மை மன்னிப்பதாக இரட்சகர் வாக்களித்திருக்கிறார்.21

  • மூன்றாவதாக, ஞானஸ்நானம் போன்ற நியமங்கள் மூலம் தேவனுடன் உடன்படிக்கை செய்து காத்துக்கொள்ளுதல். இது அவரிடத்தில் வழிநடத்துகிற உடன்படிக்கையின் பாதையில் நம்மை வைக்கும்.22

  • நான்காவது, பரிசுத்த ஆவியின் வரத்தைப்பெறுதல். பரிசுத்தப்படுத்துகிற, ஆறுலளிக்கிற, நம்மை வழிநடத்துகிற தொடர்ந்த தோழமையை இந்த வரம் அனுமதிக்கிறது.23

  • ஐந்தாவது, கிறிஸ்துவின் வார்த்தையை தினமும் ருசித்து ஸ்திரமாக முன்னோக்கிச் சென்று இறுதிபரியந்தம் நிலைத்திருப்பது. 24 மார்மன் புஸ்தகத்தை ருசிக்கும்போதும், அதன் போதனைகளை பற்றிப் பிடித்துக் கொள்ளும்போதும், நாம் சோதனைகளை மேற்கொண்டு நமது வாழ்நாள் முழுவதும் வழிகாட்டுதலும் பாதுகாப்பும் பெறுகிறோம்.25

நமது வாழ்க்கையில் கிறிஸ்துவின் கோட்பாட்டை தொடர்ந்து பிரயோகிப்பதால், மாற்றத்தை உருவாக்குகிற இயங்காமையையும், செயலைக் கெடுக்கும் பயத்தையும் நாம் மேற்கொள்கிறோம். நாம் தனிப்பட்ட வெளிப்படுத்தல் பெறுவோம், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் நீங்கள் செய்ய வேண்டிய சகல காரியங்களையும் உங்களுக்கு காண்பித்து, 26 “கிறிஸ்துவின் வார்த்தைகள் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் உங்களுக்கு தெரிவிக்கும்.” 27

20 வருடங்களாக, சகோதரர் ஹுவாங் ஜங்காங் சாராயம், சிகரெட் மற்றும் வற்புறுத்தும் சூதாட்டத்தோடு போராடினார். இயேசு கிறிஸ்து மற்றும் அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்துக்கு அறிமுகம் செய்யப்பட்ட போது, அவரது இளம் குடும்பத்துக்காக சகோதரர் ஹுவாங் மாறும் வாஞ்சை பெற்றார். அவரது மிகப் பெரிய சவால் புகை பிடித்தல். ஒரு பயங்கர தொடர் புகைபிடிப்பவர், அதை விட்டுவிட அநேக தடவைகள் வெற்றிகிட்டாமல் முயன்றார். ஒரு நாள் மார்மன் புஸ்தகத்திலிருந்து இந்த வார்த்தைகள், அவரது மனதில் தங்கியது: “உண்மையான இருதயத்தோடும் முழு நோக்கத்தோடும்.”28 முந்தய முயற்சிகளில் அவர் தோற்றாலும், பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவிடமிருந்து உதவியுடன், ஒருவேளை தான் மாற முடியும் என உணர்ந்தார்.

முழுநேர ஊழியக்காரர்கள் தங்கள் விசுவாசத்தை அவருடையதோடு சேர்த்து, அதிக ஜெப நேரங்கள் மற்றும் தேவ வார்த்தையை படிப்பதுடன் செயல்படுத்தும் தலையீடுகளுடன் செயல் திட்டத்தைக் கொடுத்தனர். உண்மை மற்றும் முழு நோக்கத்துடன், சகோதரர் ஹுவாங் மார்மன் புஸ்தகம் படித்தல் போன்ற அவர் விருத்திசெய்ய விரும்பிய புதிய பழக்கங்களில் அதிகம் கவனம் செலுத்திய போது, விசுவாசமிக்க தீர்மானத்தோடு கண்டார், அவர் இழக்க வேண்டிய பழக்கங்களில் குறைவாக கவனம் செலுத்தினார்.

15 வருடங்களுக்கு முன்பு அவரது அனுபவத்தை நினைத்து, அவர் குறிப்பிட்டார், “நான் எப்போது புகைபிடிப்பதை விட்டேன் என நினைவிலில்லை, ஆனால் கர்த்தரின் ஆவியை அழைக்க நான் செய்ய வேண்டிய எனக்குத் தெரிந்த காரியங்களை நான் செய்ய தினமும் கடினமாக முயன்றபோதும், அதை தொடர்ந்து செய்த போதும், சிகரெட்டுகளிடம் நான் ஈர்க்கப்படவில்லை, மற்றும் அன்றிலிருந்து பிடிக்கவுமில்லை.” மார்மன் புஸ்தக போதனைகளை பயன்படுத்தியதன் மூலம், சகோதரர் ஹுவாங்கின் வாழ்க்கை மாற்றப்பட்டிருக்கிறது, அவர் சிறந்த கணவராகவும் தகப்பனாகவும் ஆகியிருக்கிறார்.

படம்
ஹுவாங் ஜுங்காங் குடும்பம்

தலைவர் ரசல் எம்.நெல்சன் வாக்களித்தார்: “என் அருமை சகோதர சகோதரிகளே, மார்மன் புஸ்தகத்தை ஜெபத்தோடு தினமும், நீங்கள் படிக்கும்போதுஒவ்வொரு நாளும் நீங்கள் சிறந்த தீர்மானங்களை எடுப்பீர்கள். நீங்கள் தியானிப்பதை சிந்தித்துப் பார்க்கும்போது, வானத்தின் பலகணிகள் திறக்கும், உங்கள் சொந்த கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் கிடைக்கும், உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் வரும் என்று நான் வாக்களிக்கிறேன். மார்மன் புஸ்தகத்தில் தினமும் உங்களை நீங்களே மூழ்கடித்தீர்கள் என்றால், பற்றிப்பிடிக்கும் கொள்ளை நோயான இனக்கவர்ச்சி ஆபாசங்களின் மனதை மறக்கச் செய்யும் போதைகள் உட்பட அந்தந்த நாட்களின் தீமைகளுக்கு எதிராக தற்காக்கப்படுவீர்கள்”29

அன்பு நண்பர்களே, மார்மன் புஸ்தகம் தேவ வார்த்தை, நாம் அதைப் படித்தால் அவரிடம் நெருங்கிச் செல்வோம்.30 இந்த வார்த்தைகளை நாம் பரீட்சித்துப் பார்த்தால், அதன் உண்மைத்தன்மை பற்றி நாம் சாட்சி பெறுவோம் 31. அதன் போதனைகளின்படி நாம் தொடர்ந்து வாழ்ந்தால், “தீமை செய்ய நமக்கு வாஞ்சை இருக்காது.”32 நமது இருதயங்களும் முகரூபமும் தன்மையும் நாம் இரட்சகர் போல் ஆக மாற்றப்படும்.33 இயேசுவே கிறிஸ்து, நமது இரட்சகர், மீட்பர் மற்றும் நண்பர் என என் உறுதிான சாட்சியை நான் பகிர்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.