பொது மாநாடு
ஒன்றாகப் பின்னப்பட்ட இருதயங்கள்
ஏப்ரல் 2021 பொது மாநாடு


ஒன்றாகப் பின்னப்பட்ட இருதயங்கள்

அக்கறையுடனும், இரக்கத்துடனும், தயவுடனும், நீங்களே நீட்டிக்கும்போது, கீழே தொங்கும் கரங்களை உயர்த்துவீர்கள், இருதயங்களைக் குணமாக்குவீர்கள் என்று நான் வாக்களிக்கிறேன்.

முன்னுரை

ஒரு மரத்திலிருந்து விழும் ஆப்பிள் போன்ற எளிமையான நிகழ்வுகளால் சில நேரங்களில் குறிப்பிடத்தக்க அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வாறு உணர்த்தப்படுகின்றன என்பது பரவசப்படுத்துகிறது அல்லவா?

இன்று, முயல்களின் மாதிரி குழு காரணமாக நிகழ்ந்த ஒரு கண்டுபிடிப்பை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

1970களில், இருதய ஆரோக்கியத்தில் உணவின் தாக்கத்தை ஆராய ஒரு பரிசோதனையை ஆராய்ச்சியாளர்கள் அமைத்தனர். பல மாதங்களுக்கு மேலாக, அவர்கள் முயல்களின் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட குழுவிற்கு அதிக கொழுப்புள்ள உணவைக் கொடுத்து, அவைகளின் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் கொழுப்பின் அளவைக் கண்காணித்தனர்.

எதிர்பார்த்தபடி, பல முயல்கள் தமனிகளின் உட்புறத்தில் கொழுப்பு படிவுகள் உருவாவதைக் காட்டின. இன்னும் இதுமட்டுமல்ல! ஆராய்ச்சியாளர்கள் சிறிது அர்த்தமுள்ள ஒன்றைக் கண்டுபிடித்தனர். அனைத்து முயல்களிலும் கட்டமைப்பு இருந்தபோதிலும், ஒரு குழுவுக்கு ஆச்சரியப்படும் விதமாக மற்றவைகளை விட 60 சதவீதம் குறைவாக இருந்தது. அவர்கள் இரண்டு வெவ்வேறு முயல்களின் குழுக்களைப் பார்ப்பது போல் தோன்றியது.

விஞ்ஞானிகளுக்கு, இது போன்ற முடிவுகள் தூக்கத்தை இழக்கப் பண்ண, காரணமாயிருக்கலாம். இது எப்படி இருக்க முடியும்? நியூசிலாந்திலிருந்து வந்த முயல்கள் ஒரே மாதிரியான மரபணுவுடையவாயிருந்து, அனைத்தும் ஒரே இனமாக இருந்தன. அவைகள் ஒவ்வொன்றும் ஒரே சமமான அளவு உணவைப் பெற்றிருந்தன.

இதற்கு என்ன அர்த்தமாயிருக்கமுடியும்?

இந்த விளைவுகள் ஆய்வை செல்லாததாக்கினதா? சோதனை வடிவமைப்பில் குறைபாடுகள் இருந்தனவா?

இந்த எதிர்பாராத முடிவைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் போராடினார்கள்!

இறுதியில், அவர்கள் தங்கள் கவனத்தை ஆராய்ச்சி பணியாளர்களிடம் திருப்பினர். முடிவுகளை பாதிக்க ஆராய்ச்சியாளர்கள் ஏதாவது செய்திருக்க முடியுமா? அவர்கள் இதைப் பின்தொடர்ந்தபோது, குறைவான கொழுப்பு படிவுகள் கொண்ட ஒவ்வொரு முயலும், ஒரு ஆராய்ச்சியாளரின் பராமரிப்பில் இருந்ததைக் கண்டுபிடித்தனர். ஒவ்வொருவரும் கொடுத்த அதே உணவையே அவளும் முயல்களுக்கு கொடுத்தாள். ஆனால் ஒரு விஞ்ஞானி அறிக்கையளித்ததைப்போல, அவள் ஒரு அசாதாரண வகையான தயவும் அக்கறையுமுள்ளவளாயிருந்தாள். முயல்களுக்கு அவள் உணவளித்தபோது, “அவைகளுடன் அவள் பேசினாள், கட்டிப்பிடித்தாள், செல்லமாக நடத்தினாள். … ‘அவளால் அதை தவிர்க்க முடியவில்லை. அவள் இருந்தபடி இருந்தாள்.’”1

படம்
அன்பான ஆய்வாளர் முயலுடன்

வெறுமனே முயல்களுக்கு உணவளிப்பதை விட அதிகமாக அவள் செய்தாள். அவைகளிடம் அவள் அன்பு காட்டினாள்!

முதல் பார்வையில், இது வியத்தகு வேறுபாட்டிற்கான காரணமாக இருக்கக்கூடும் என்பதற்கு சாத்தியமில்லை எனத் தோன்றியது, ஆனால் ஆராய்ச்சி குழுவால் வேறு எந்த சாத்தியத்தையும் காண முடியவில்லை.

எனவே, இந்த முறை ஒவ்வொரு பிற தன்மைகளுக்கும் கடினமான கட்டுப்படுத்தலுடன் அவர்கள் சோதனையை மீண்டும் செய்தனர். இறுதி முடிவுகளை அவர்கள் பகுப்பாய்வு செய்தபோது, அதேதான் நடந்தது! அன்பான ஆராய்ச்சியாளரின் பராமரிப்பின் கீழ் உள்ள முயல்களுக்கு கணிசமாக அதிக ஆரோக்கிய விளைவுகள் இருந்தன.

இந்த ஆய்வின் விளைவுகளை விஞ்ஞானம் என்ற புகழ்பெற்ற இதழில் விஞ்ஞானிகள் வெளியிட்டனர்2.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் மருத்துவ சமுதாயத்தில் இன்னமும் ஆதிக்கம் செலுத்துகின்றன என தோன்றுகிறது. அந்த சோதனையிலிருந்து எடுக்கப்பட்ட, தி ராபிட் எபெக்ட் என்ற தலைப்புள்ள ஒரு புத்தகத்தை சமீபத்திய ஆண்டுகளில் டாக்டர் கெல் கார்டிங் வெளியிட்டார். அவருடைய முடிவு: “ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையிலுள்ள ஒரு முயலை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் பேசுங்கள். அதைத் தூக்குங்கள். அதனிடம் அன்பாயிருங்கள். அந்த உறவு ஒரு வேறுபாட்டை உண்டாக்குகிறது. … இறுதியில், “நம் ஆரோக்கியத்தை மிகவும் அர்த்தமுள்ள வழிகளில் எது பாதிக்கும் என்பது, நாம் ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்கிறோம், நாம் எப்படி வாழ்கிறோம், மனிதனாக இருப்பதன் அர்த்தத்தைப்பற்றி நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதோடு தொடர்புடையது,” என அவர் முடிக்கிறார்.3

ஒரு மதச்சார்பற்ற உலகில், விஞ்ஞானத்தை சுவிசேஷ சத்தியங்களுடன் இணைக்கும் பாலங்கள் சில சமயங்களில் மிகக் குறைவாகவும் அதிக கால இடைவெளியில் இருப்பதாக தோன்றுகின்றன. ஆயினும் கிறிஸ்தவர்களாக, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, பிற்காலப் பரிசுத்தவான்களாக, இந்த விஞ்ஞான ஆய்வின் முடிவுகள், அதிர்ச்சியூட்டுவதை விட மிக உள்ளுணர்வு அளிப்பனவாகத் தோன்றக்கூடும். என்னைப் பொறுத்தவரை, அடிப்படையாக, சுவிசேஷத்தின் கொள்கையை குணப்படுத்தி, இது கருணையின் அஸ்திபாரத்தில் மற்றொரு செங்கலை வைக்கிறது, இது இருதயங்களை உணர்ச்சி ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும், இங்கே நிரூபிக்கப்பட்டபடி, உடல் ரீதியாகவும் குணப்படுத்தும்.

ஒன்றாகப் பின்னப்பட்ட இருதயங்கள்

“போதகரே, எந்தக் கற்பனை பிரதானமானது?” எனக் கேட்கப்பட்டபோது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன்முழு இருதயத்தோடும் அன்பு கூருவாயாக,” என்றும் அதைத் தொடர்ந்து “உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” என இரட்சகர் பதிலளித்தார்4 நமது பரலோக கடமையை இரட்சகரின் பதில் வலுப்படுத்துகிறது. “ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் பண்ணாமல் ஆனால் [நாம்] ஒருவருக்கொருவர் ஒற்றுமையிலும் அன்பிலும் [நம்முடைய] உள்ளங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்க எதிர்பார்க்க வேண்டும்” 5 என ஒரு பூர்வகால தீர்க்கதரிசி கட்டளையிட்டான். “செல்வாக்கின் வல்லமை … மென்மையாகவும், தயவாலும், … சாந்தத்தாலும், … கபடமில்லாமல் … பராமரிக்கப்படவேண்டும்;6 என நாம் மேலும் போதிக்கப்பட்டிருக்கிறோம்.

வயதுவந்தோர், இளைஞர்கள், பிள்ளைகள் என்ற அனைத்து பிற்காலப் பரிசுத்தவான்களுக்கும் இந்த கொள்கை உலகளாவிய பயன்பாட்டிலிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

இதை மனதில் கொண்டு, ஆரம்ப வகுப்பு வயது பிள்ளைகளான உங்களிடம் ஒரு கணம் நேரடியாக நான் பேசுவேன்.

தயவுள்ளவராக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் ஏற்கனவே புரிந்துகொண்டீர்கள். உங்கள் ஆரம்ப வகுப்பு பாடல்களில் ஒன்றான “நான் இயேசுவைப் போல இருக்க முயற்சிக்கிறேன்” சேர்ந்திசை, கற்பிப்பதாவது:

இயேசு உங்களை நேசிக்கிறதைப்போல, ஒருவருக்கொருவரை நேசியுங்கள்.

உங்களால் செய்யமுடிந்த எல்லாவற்றிலும் இரக்கம் காட்ட முயலுங்கள்.

செயலிலும் சிந்தனையிலும் மென்மையாயும் அன்புள்ளவராயுமிருங்கள்.

ஏனெனில் இந்தக் காரியங்களையே இயேசு போதித்தார்.7

இன்னும் கூட, உங்களுக்கு சில நேரங்களில் கடினமான நேரம் இருக்கலாம். தென் கொரியாவைச் சேர்ந்த மிஞ்சன் கிம் என்ற ஆரம்பவகுப்பு சிறுவனைப்பற்றிய உங்களுக்கு உதவக்கூடிய கதை இங்கே இருக்கிறது. ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவனுடைய குடும்பம் சபையில் சேர்ந்தார்கள்.

படம்
மின்சான் கிம்

“ஒரு நாள் பள்ளியில், என் வகுப்பு தோழர்களில் சிலர் மற்றொரு மாணவனை பட்டப்பெயர்களை வைத்து கேலி செய்தனர். இது வேடிக்கையாகக் காணப்பட்டது, எனவே சில வாரங்களுக்கு நான் அவர்களுடன் சேர்ந்தேன்.

“பல வாரங்களுக்குப் பிறகு, அவன் கவலைப்படவில்லை என்று பாசாங்கு செய்தாலும், எங்கள் வார்த்தைகளால் அவன் காயமடைந்தான், ஒவ்வொரு இரவும் அவன் அழுததாக அந்தப் பையன் என்னிடம் சொன்னான். அவன் என்னிடம் கூறியபோது கிட்டத்தட்ட நான் அழுதேன். நான் மிகவும் வருத்தப்பட்டு, அவனுக்கு உதவ விரும்பினேன். அடுத்த நாள் நான் அவனிடம் சென்று, அவனது தோளில் என் கையை வைத்து மன்னிப்புக் கேட்டேன், ‘நான் உன்னை கேலி செய்ததற்கு வருந்துகிறேன்’ என்றேன். அவன் என் வார்த்தைகளுக்கு தலையசைத்தான், அவனது கண்களில் கண்ணீர் நிரம்பியது.

“ஆனால் மற்ற பிள்ளைகள் இன்னும் அவனை கேலி செய்து கொண்டிருந்தார்கள். பின்னர், சரியானதைத் தேர்ந்தெடு என்று நான் ஆரம்ப வகுப்பில் கற்றுக்கொண்டதை நினைவுகூர்ந்தேன். எனவே, நிறுத்தும்படி நான் என் வகுப்புத் தோழர்களைக் கேட்டேன். அவர்களில் அநேகர் மாறாமலிருக்க தீர்மானித்தார்கள், அவர்கள் என்னிடம் கோபமாயிருந்தார்கள். ஆனால் பிற சிறுவர்களில் ஒருவன் அவன் வருந்துவதாகக் கூறினான், நாங்கள் மூவரும் நல்ல நண்பர்களானோம்.

“ஒரு சிலர் இன்னும் அவனைக் கேலி செய்திருந்தாலும், நாங்கள் அவனுக்கிருந்ததால் அவன் நன்றாக உணர்ந்தான்.

“தேவையிலிருந்த நண்பனுக்கு உதவுவதன் மூலம் நான் சரியானதைத் தேர்ந்தெடுத்தேன்.”8

படம்
மின்சான் கிம்மின் உருவப்படம்

நீங்கள் இயேசுவைப் போல ஆக முயற்சிக்க இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அல்லவா?

இப்போது, இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும், உங்களுக்கு வயதாகும்போது, மற்றவர்களை கேலி செய்வது மிகவும் ஆபத்தானதாக உருவாகலாம். ஆர்வம், மனச்சோர்வு மற்றும் மோசமானவை பெரும்பாலும் துன்புறுத்துதலுக்கு துணைபோகின்றன. “துன்புறுத்துதல் ஒரு புதிய கருத்து அல்ல, சமூக ஊடகங்களும் தொழில்நுட்பமும் துன்புறுத்துதலை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வந்துள்ளன. இது மிகவும் நிரந்தரமான, எப்போதும் இருக்கும் அச்சுறுத்தலாக, இணைய துன்புறுத்துதலாக மாறுகிறது.”9

உங்கள் தலைமுறையை காயப்படுத்த சத்துரு இதைப் பயன்படுத்துகிறான் என்பது தெளிவாகிறது. உங்கள் இணைய பயன்பாட்டில், சுற்றுப்புறங்கள், பள்ளிகள், குழுமங்கள் மற்றும் வகுப்புகளில் இதற்கு இடமில்லை. தயவுசெய்து இந்த இடங்களை தயவாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் செயலற்ற முறையில் கவனித்தால் அல்லது பங்கேற்றால், முன்பு மூப்பர் டியட்டர் எஃப். உக்டர்ப் வழங்கியதை விட சிறந்த ஆலோசனை எதுவும் எனக்குத் தெரியாது.

“வெறுத்தல், புறண் பேசுதல், புறக்கணித்தல், கேலி செய்தல், மனக்கசப்பு வைத்திருத்தல் அல்லது தீங்கு விளைவிக்க விரும்புதல் போன்றவற்றிற்கு வரும்போது, தயவுசெய்து பின்வருவனவற்றைப் பயன்படுத்துங்கள்:

“இதை நிறுத்துங்கள்!”10

இதை நீங்கள் கேட்டீர்களா? அதை நிறுத்துங்கள்! அக்கறையுடனும், இரக்கத்துடனும், டிஜிட்டல் முறையில் கூட நீங்களே நீட்டிக்கும்போது, கீழே தொங்கும் கரங்களை உயர்த்துவீர்கள், இருதயங்களைக் குணமாக்குவீர்கள் என்று நான் வாக்களிக்கிறேன்.

ஆரம்ப வகுப்பு பிள்ளைகள் மற்றும் இளைஞர்களுடன் பேசிய நான், இப்போது எனது கருத்துக்களை சபையின் வயதுவந்தவர்களுக்கு திருப்புகிறேன். ஒரு தொனியை அமைப்பதற்கும், தயவு, சேர்த்தல் மற்றும் நாகரிகத்தின் முன்மாதிரிகளாக இருப்பதற்கும், நாம் சொல்வதிலும் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதிலும் வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு கிறிஸ்துவைப் போன்ற நடத்தைகளை கற்பிப்பதற்கும் நமக்கு ஒரு முதன்மையான பொறுப்பு உள்ளது. அரசியல், சமூக வர்க்கம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வேறுபாட்டையும் நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்தை நாம் கவனிக்கும்போது இது மிகவும் முக்கியமானது.

பிற்காலப் பரிசுத்தவான்கள் ஒருவருக்கொருவர் தயவு காட்டுவது மட்டுமல்லாமல், நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தயவு காட்ட வேண்டும் என்றும் தலைவர் எம். ரசல் பல்லார்ட், கற்பித்திருக்கிறார். அவர் சொன்னார்: “மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை கவனிக்காது அவர்களை வெளியேற்றுவதன் மூலம் அவர்களை புண்படுத்துவதை நான் எப்போதாவது கேள்விப்படுகிறேன். இது குறிப்பாக நமது உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கும் சமூகங்களில் ஏற்படலாம். அவர்கள் அக்கம் பக்கத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட பிள்ளையுடன் விளையாட முடியாது, ஏனெனில் அவனுடைய அல்லது அவளுடைய குடும்பம் நமது சபையைச் சேர்ந்ததல்ல என பிள்ளைகளிடம் சொல்கிற குறுகிய எண்ணம் கொண்ட பெற்றோர்களைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வகையான நடத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஏற்புடையதில்லை. நமது சபையின் எந்தவொரு உறுப்பினரும் ஏன் இந்த வகையான விஷயங்களை நடக்க அனுமதிக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த சபையின் உறுப்பினர்கள் அன்பானவர்களாகவும், கனிவானவர்களாகவும், சகிப்புத்தன்மை உள்ளவர்களாகவும், மற்ற நண்பர்களின் அயலாரிடமும் அன்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதைக் ஊக்குவிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்டதில்லை.”11

சேர்ப்பது ஒற்றுமைக்கு சாதகமான வழிமுறையாகும் என்றும், விலக்குவது என்பது பிளவுக்கு வழிவகுக்கிறது என்றும் நாம் கற்பிக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, தேவனின் பிள்ளைகள் தங்கள் இனத்தின் அடிப்படையில் எவ்வாறு தவறாக நடத்தப்படுகிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது நாம் திகைக்கிறோம். கறுப்பின, ஆசிய, லத்தீன் அல்லது வேறு எந்த குழுவினருக்கும் எதிரான சமீபத்திய தாக்குதல்களைக் கேட்டு நாங்கள் மனம் உடைந்தோம். தப்பெண்ணம், இன பதற்றம் அல்லது வன்முறை ஒருபோதும் நம் சுற்றுப்புறங்களில், சமூகங்களில் அல்லது சபைக்குள் எந்த இடத்தையும் கொண்டிருக்கக்கூடாது.

நாம் ஒவ்வொருவரும், நம் வயதைப் பொருட்படுத்தாமல், நம்முடைய சிறந்தவர்களாக இருக்க முயற்சிப்போம்.

உங்கள் சத்துருவை சிநேகியுங்கள்

அன்பு, மரியாதை மற்றும் தயவை நீங்கள் காட்ட முயற்சிக்கும்போது, மற்றவர்களின் மோசமான தேர்ந்தெடுப்புகளால் சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் காயப்படுவீர்கள் அல்லது எதிர்மறையாக பாதிக்கப்படுவீர்கள். பின்னர் நாம் என்ன செய்வது? “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் … உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்”12 என்ற கர்த்தருடைய எச்சரிக்கையை நாம் பின்பற்றுகிறோம்.

நமது பாதையில் வைக்கப்பட்டுள்ள உபத்திரவங்களை மேற்கொள்ள நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்கிறோம். கர்த்தருடைய கை நம் சூழ்நிலைகளை மாற்றும் என்று ஜெபிக்கிற எல்லா நேரங்களிலும் முடிவுபரியந்தம் நிலைத்திருக்க முயற்சி செய்கிறோம். நமக்கு உதவ அவர் எங்கள் பாதையில் வைத்திருப்பவர்களுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம்.

படம்
குயின்சி, இலினாயில் அற்புதம்

நமது ஆரம்பகால சபை வரலாற்றிலுள்ள ஒரு எடுத்துக்காட்டினால் நான் அசைக்கப்பட்டேன். 1838 ன் குளிர்காலத்தில், மிசௌரி மாநிலத்தில் பிற்காலப் பரிசுத்தவான்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக விரட்டப்பட்டபோது, ஜோசப் ஸ்மித் மற்றும் பிற சபைத் தலைவர்கள் லிபர்ட்டி சிறையில் சிறை வைக்கப்பட்டனர். பரிசுத்தவான்கள் ஆதரவற்றவர்களாகவும், நட்பற்றவர்களாகவும், குளிர் மற்றும் பொருட்களின் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இல்லினாயின் குயின்சியில் வசிப்பவர்கள் தங்கள் அவலநிலையைக் கண்டு இரக்கத்தோடும் நட்போடும் அணுகினர்.

குயின்சியில் வசிக்கும் வாண்டில் மேஸ், தற்காலிக கூடாரங்களில் மிசிசிப்பி ஆற்றின் குறுக்கே பரிசுத்தவான்களைப் பார்த்தபோது பின்னர் நினைவு கூர்ந்தார்: “காற்றிலிருந்து பாதுகாக்க சிலருக்கு ஒரு சிறிய தங்குமிடம் செய்ய துணிகள் கொடுக்கப்பட்டிருந்தன, … பிள்ளைகள் காற்று வீசிய நெருப்பைச் சுற்றி நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தனர் அது அவர்களுக்கு அதிகம் உதவவில்லை. ஏழை பரிசுத்தவான்கள் பயங்கரமாக துன்பப்பட்டுக்கொண்டிருந்தனர்.”13

பரிசுத்தவான்களின் அவலநிலையைப் பார்த்து, குயின்சி குடியிருப்பாளர்கள் ஒன்று திரண்டு உதவி வழங்கினர், சிலர் தங்கள் புதிய நண்பர்களை ஆற்றின் குறுக்கே கடக்கவும் உதவுகிறார்கள். மேஸ் தொடர்ந்தார்: “[அவர்கள்] தாராளமாக நன்கொடை அளித்தனர்; புறக்கணிக்கப்பட்ட இந்த ஏழைகளுக்கு மிகவும் தேவையான, பன்றி இறைச்சி, … சர்க்கரை, … காலணிகள் மற்றும் உடைகள், எது மிகவும் தாராளமாக இருக்கக்கூடும் என வணிகர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள்…”14 வெகு காலத்திற்கு முன்பே, அகதிகள் குயின்சி குடியிருப்பாளர்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தனர், அவர்கள் வீடுகளைத் திறந்து, தங்கள் தனிப்பட்ட ஆதாரங்களை தனிப்பட்ட தியாகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.15

குயின்சியில் வசித்தவர்களின் இரக்கத்தின் தாராள மனப்பான்மையின் காரணமாகவே அநேக பிற்காலப் பரிசுத்தவான்கள் கடுமையான குளிர்காலத்தில் இருந்து தப்பித்தனர். இந்த பூமியின் தூதர்கள் தங்கள் இருதயங்களையும் வீடுகளையும் திறந்து, உயிர் காக்கும் ஊட்டச்சத்து, அரவணைப்பு, மற்றும், ஒருவேளை மிக முக்கியமாக, துன்பப்படுகிற பரிசுத்தவான்களுக்கு நட்பின் கரம் நீட்டினார்கள். குயின்சியில் அவர்கள் தங்கியிருப்பது ஒப்பீட்டளவில் குறுகியதாக இருந்தபோதிலும், பரிசுத்தவான்கள் தங்கள் அன்புக்குரிய அண்டை வீட்டாருக்கு நன்றி செலுத்துவதின் கடனை ஒருபோதும் மறக்கவில்லை, மேலும் குயின்சி “அடைக்கல நகரம்” என்று அறியப்பட்டது.16

விமர்சன, எதிர்மறை, சராசரி உற்சாகமான செயல்களால் துயரங்களும் துன்பங்களும் நம்மீது வரும்போது, கிறிஸ்துவை நம்புவதற்கு நாம் தேர்ந்தெடுக்கலாம். “திடன் கொள்ளுங்கள் ஏனெனில் நான் உங்களை வழிநடத்துவேன்”17 மற்றும் அவர் உன் உபத்திரவங்களை உனது ஆதாயத்திற்கென அர்ப்பணிப்பார்18 என்ற இந்த நம்பிக்கை அவருடைய அழைப்பிலிருந்தும் வாக்களிப்பிலிருந்தும் வருகிறது.

நல்ல மேய்ப்பன்

நாம் எங்கிருந்து தொடங்கினோம் என்று முடிவு செய்வோம்: ஒரு இரக்கமுள்ள பராமரிப்பாளர், ஒரு போஷிக்கும் ஆவியுடன் இரக்கத்தில் தன்னையே நீட்டி, எதிர்பாராத ஒரு விளைவாக, அவளுக்கு காரியதரிசனம் இருந்த விலங்குகளின் இதயங்களை குணப்படுத்துகிறது. ஏன்? ஏனென்றால் அவள் எப்படி இருந்தாள் என்பதுதான்!

நம்முடைய சுவிசேஷ உருப்பெருக்கியின் வழியே பார்க்கும்போது, நாமும் ஒரு இரக்கமுள்ள பராமரிப்பாளரின் கண்காணிப்பின் கீழ் இருப்பதை அடையாளம் காண்கிறோம், அவர் கருணையுடனும், போஷிப்பின் மனப்பான்மையுடனும் தன்னை கொடுக்கிறார். நல்ல மேய்ப்பன் நம் ஒவ்வொருவரையும் பேர்பேராக அறிவார், “நம்மீது தனிப்பட்ட அக்கறை கொண்டவர்.”19 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சொன்னார்: “நானே நல்ல மேய்ப்பன் நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்.”20

படம்
காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடித்தல்

இந்த பரிசுத்த ஈஸ்டர் வார இறுதியில், “கர்த்தர் என் மேய்ப்பர்”21, என்பதையும், நாம் ஒவ்வொருவரும் அவரால் அவருடைய அன்பான கண்காணிப்பின் கீழ் அறியப்படுகிறோம் என்பதையும் அறிந்து கொள்வதில் நான் சமாதானத்தைக் காண்கிறேன். வாழ்க்கையின் காற்று மற்றும் மழைக்காலங்கள், நோய் மற்றும் காயங்களை நாம் எதிர்கொள்ளும்போது, நமது மேய்ப்பரான, நமது பராமரிப்பாளரான கர்த்தர் அன்புடனும் தயவுடனும் நம்மை போஷிப்பார். அவர் நம் இருதயங்களைக் குணமாக்கி நமது ஆத்துமாக்களை மீட்டெடுப்பார்.

இதைக் குறித்தும், இயேசு கிறிஸ்து நம்முடைய இரட்சகர், மீட்பர் என்றும் நான் சாட்சி அளிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.

குறிப்புகள்

  1. Kelli Harding, The Rabbit Effect (2019), xxiii–xxiv பார்க்கவும்.

  2. Robert M. Nerem, Murina J. Levesque, and J. Frederick Cornhill, “Social Environment as a Factor in Diet-Induced Atherosclerosis,” Science, vol. 208, no. 4451 (June 27, 1980), 1475–76 பார்க்கவும்.

  3. Harding, The Rabbit Effect, xxiv, xxv.

  4. மத்தேயு 22:36-39 பார்க்கவும்.

  5. மோசியா 18:21; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  6. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:41–42.

  7. “I’m Trying to Be like Jesus,” Children’s Songbook, 79.

  8. Adapted from Minchan K., “The Apology,” Friend, Jan. 2020, 35.

  9. Frances Dalomba, “Social Media: The Good, the Bad, and the Ugly,” Lifespan, lifespan.org.

  10. Dieter F. Uchtdorf, “The Merciful Obtain Mercy,” Liahona, May 2012, 75.

  11. M. Russell Ballard, “Doctrine of Inclusion,” Liahona, Jan. 2002, 41.

  12. லூக்கா 06:27–28.

  13. Wandle Mace autobiography, circa 1890, typescript, 32–33, Church History Library, Salt Lake City.

  14. Wandle Mace autobiography, 33; spelling and capitalization standardized.

  15. Richard E. Bennett, “‘Quincy—the Home of Our Adoption’: A Study of the Mormons in Quincy, Illinois, 1838–40,” Mormon Historical Studies, vol. 2, no. 1 (Spring 2001), 110–11 பார்க்கவும்.

  16. Susan Easton Black, “Quincy–A City of Refuge,” Mormon Historical Studies, vol. 2, no. 1 (Spring 2001), 83–94 பார்க்கவும்.

  17. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 78:18.

  18. 2 நேபி 2:2 பார்க்கவும்.

  19. James E. Talmage, Jesus the Christ (1916), 417 பார்க்கவும்.

  20. யோவான் 10:14, 15.

  21. சங்கீதம் 23:1.